இடுகைகள்

புலன் விசாரணை -2 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவை மோசடி செய்யும் தொழிலதிபரை பழிவாங்கும் காவல்துறை அதிகாரி!

படம்
          புலன் விசாரணை -2 பிரசாந்த் ஆர் கே செல்வமணி இந்தியாவின் கடல் பரப்பில் பெட்ரோல் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். மதிப்பு இரண்டு லட்சம் கோடி. ராகேஷ் கேத்தன் என்ற அதானி போன்ற மோசடி செய்யும் தொழிலதிபர், இந்த செய்தியைக் கேள்விப்பட்டு இந்திய பெட்ரோலிய நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுத்து ஆராய்ச்சி தகவல்களை வெளியே வராமல் பார்த்துக்கொள்கிறார். ஆராய்ச்சி செய்த இடத்தையும் வாங்கிவிடுகிறார். இதுபற்றிய தகவல் அறிந்த பொறியாளர்கள் குழுவை, டூர் அழைத்து சென்று வழியிலேயே படுகொலை செய்கிறார்கள். அதை விபத்துபோல செட்டப் செய்கிறார்கள். அதில் ஒரு இளம்பெண் மட்டும் தப்பித்து வந்து சென்னை மாநகரின் மத்தியில் மஞ்சள் சேலை கட்டி வந்து சாகும்போதும் கூட கவர்ச்சியாக வசீகரமாக செத்துப்போகிறார். அங்கு நாயகன் சபாநாயகம் இருக்கிறார். அவர் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்க நிறைய மர்மங்கள் வெளியே வருகின்றன. இதற்கு பதிலடியாக தனது ஒட்டுமொத்த குடும்பத்தை பலிகொடுக்கிறார். அதையெல்லாம் தாண்டி மண்ணையும், மக்களையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இறுதிக்காட்சி. கதை பெரிய பட்ஜெட்டில் நன்றாக எடுக்கப்பட வேண்டியது. ...