இடுகைகள்

வறட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மசூதியை மாற்றிய மழைநீர் சேகரிப்பு!

படம்
தண்ணீர் பஞ்சம் என்பது இப்போதைக்கு தமிழ்நாட்டிற்கு இல்லை. ஆனாலும் கூட நீராதாரங்களை காப்பாற்றி வைப்பது எதிர்காலத்திற்கான முக்கியமான தேவை. அப்படியில்லாதபோது மழைப்பொழிவு குறைந்தகாலத்தில் பஞ்ச பருவத்தில் படாதபாடு படும் நிலை ஏற்படும். கோவையில் உள்ள முஸ்லீம்கள் அதனை உணர்ந்து நீரை சேகரிக்க தொடங்கியுள்ளனர். கோவையில் உள்ள 135க்கும் மேற்பட்ட மசூதிகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளன. இப்போது அங்கு உருவாக்கப்பட்டுள்ளன ஆழ்துளை கிணறுகளில் நீர் வரத்து கூடியுள்ளது. தொழுகைக்கு முன்னர் முஸ்லீம்கள் தங்கள் முகம், கை, கால்களை கழுவிக்கொள்வது வழக்கம். இதனை வுசு என்கின்றனர். இதற்காக செலவிடும் நீரையும் நிலத்திற்கு திருப்பிவிட்டிருக்கின்றனர். கூடவே மழைநீர் சேகரிப்பையும் செய்து வருகிறார்கள். இப்படி செய்வதற்கு காரணமான சம்பவம், 2016-17இல் நடைபெற்றது. அப்போது மசூதிகளில் இருந்த ஆழ்துளை கிணறுகள் வறண்டுபோய்விட்டன. நீருக்காக லாரி டேங்கர்களை நாடினர். இதற்கு தினசரி 8 ஆயிரம் ரூபாய் செலவானது. பிறகுதான் வுசு ஐடியா அத்தர் ஜமாத் தலைவர் ஷா நாவாஸூக்கு வந்திருக்கிறது. சிறுதுளி தன்னார்வ தொண்ட

நுட்பமான கதாபாத்திர விவரிப்புகளைக் கொண்ட நகுலனின் கதைகள்! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.   எங்கள் நாளிதழுக்கான பதிப்பக வேலைகளை செய்து வருகிறேன். கூட்டுறவு வங்கி பற்றிய தகவல்களை சேகரித்து எழுதி வருகிறேன். ஐந்து வாரங்களில் மினி தொடராக எழுதியதை தொகுத்து பத்து அத்தியாயங்களாக மாற்றியுள்ளேன். தினசரி இதழுக்கான இலக்கணம், பதிப்பக நூலுக்கான இலக்கணம் என்பதை ஒன்றாக வைத்துக்கொள்வதா, தனியாக உருவாக்கிக்கொள்வதா என்பதில் குழப்பம் உள்ளது. வறட்சியான மொழியில் எழுதி நூல்களை எப்படி விற்பனை செய்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இப்படியே நூல்களை தொகுத்தால் இன்னும் சில தொடர்களை விரிவாக்கலாம். ஆனால் அதன் வடிவங்களை நிறைய மாற்றவேண்டும்.  மயிலாப்பூர் காரணீஸ்வர் கோயில் அருகே எப்போதும் தட்டடைதான் வாங்குவேன். ஆனால் இன்று அங்கு முத்து மாரியம்மன் என்ற பழைய புத்தக கடையைப் பார்த்தேன். நகுலன் கதைகள் - காவ்யா பிரசுரம் வைத்திருந்தார் கடைக்காரர். விலையைக் கேட்டதற்கு காவ்யா ஓனரே கண்முன் நிற்பது போல நூலை புரட்டிப் பார்த்துவிட்டு நாற்பது ரூபாய் என்றார். அவரது உடல்மொழி இருக்கிறதே அபாரம்....  நகுலனின் கதைகளை முன்னர் திரு

சிலிகாவை சாப்பிட்டால் என்னாகும்?

படம்
சிலிகா பாக்கெட்டுகள் (க்யூரியாசிட்டி) மாத்திரைகள் தன்மை மாறிவிடாமல் இருக்க அதில் சில வேதிப்பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளை போட்டு இருப்பார்கள்.அதுதான் சிலிகா. இந்த சிலிகா பாக்கெட்டுகளை பீட்சாவுக்கு கொடுக்கும் மிளகு  போல நினைத்து தின்றால் என்னாகும்? தொண்டை வறண்டுவிடும். கண்களில் ஈரப்பதம் குறையும். வயிற்றில் கல்யாண பாத்திர வாடகைக் கடை போல சத்தங்கள் எழும். தன் எடையை விட நாற்பது மடங்கு அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது சிலிகா. பாக்கெட்டில் இருப்பது சிலிகா டை ஆக்சைடு. அதில் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. மாத்திரைகளின் ஈரத்தை குறைத்து அதன் தன்மை மாறாமல் வைத்திருக்கும் சிலிகாவை திரும்ப பயன்படுத்த 300 டிகிரி பாரன்ஹீட்டுக்கு சூடுபடுத்தவேண்டும்.  நம் உடலிலுள்ள அத்தனை நீரையும் சிலிகா உறிஞ்ச 58 ஆயிரம் சிலிகா பாக்கெட்டுகளை பயன்படுத்த வேண்டும். நன்றி: க்யூரியாசிட்டி.