இடுகைகள்

சி.மோகன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேட்டையாடுதல் எனும் ஆதி உணர்வு- கடிதங்கள்

படம்
  ஓநாய்குலச்சின்னம் தமிழில் சி.மோகன் அன்புத்தோழர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நன்றாக இருக்கிறீர்களா? நான் இப்போது எங்கள் இதழில் வெளியாகும் சிறப்பிதழுக்காக வேலை செய்து வருகிறேன். நெற்பயிருக்கான சிறப்பிதழ். உதவி ஆசிரியர்களை நிருபர்களாக மாற்ற நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகிறது. எப்படி சாத்தியமோ? ஓநாய் குலச்சின்னம் நாவலைப் படித்து வருகிறேன். இன்னும் இருநூறு பக்கங்கள் மிச்சமுள்ளன. நாடோடியாக வாழும் மங்கோலியர்களின் வாழ்க்கைப்பதிவு இது. ஓநாய்கள் முக்கியான பாத்திரங்களாக வரும் வேட்டை இலக்கியம் இது. சி.மோகனின் அற்புதமாக மொழிபெயர்ப்பு காலம் கடந்தும் நிற்கும் என நினைக்கிறேன்.  2020 பெரும் போராட்டங்களுடன்தான் தொடங்குகிறது. விளைவு எப்படி இருக்குமோ? பொருட்களின் விலை ஏற்றம் மக்களின் மனதில் சொல்ல முடியாத கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  ஜல்லிக்கட்டு - ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கிய படம் பார்த்தேன். கறிக்கடைக்காக கட்டப்பட்டிருக்கும் மாடு ஒன்று தப்பித்துவிடுகிறது. காட்டின் உள்ளே ஓடிவிட அதனை வேட்டையாட மனிதர்கள் ஆவேசத்துடன் கிளம்புகிறார்கள். மாட்டை வேட்டையாடினார்களா இல்லையா என்பதுதான் கதை. வேட்டையாடுதல்

மூதாதையர்களின் கனவில் வாழும் ஓநாய்கள்! - ஓநாய் குலச்சின்னம்

படம்
ஓநாய் குலச்சின்னம் ( Wolf Totem ) ஜியாங் ரோங் ( Lü Jiamin ) தமிழில் - சி.மோகன் அதிர்வு பதிப்பகம் பக்கம் 707 மாவோவின் சீர்த்திருத்த கொள்கைகள் எப்படி மங்கோலிய நாடோடி மக்களின் வாழ்க்கை அழித்தன, அவர்களின் இயற்கை சார்ந்த வாழ்க்கை எப்படி வளர்ச்சி என்ற ஒற்றை சொல்லுக்கு பலியானது என்பதை இந்நாவல் விவரிக்கிறது. இதில் வரும் ஜென் சென் என்ற இளைஞர், நகரிலிருந்து கால்நடை வளர்ப்புக்காக கிராமப் பகுதிக்கு அனுப்பப்படுகிறார். அவர் மட்டுமல்ல, ஏராளமான நகரப்புற மாணவர்கள் அங்கு பல்வேறு பயிற்சிகளுக்காக வந்திருக்கின்றனர். ஆனாலும் பலரும் அந்த சூழ்நிலையை சகித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். விரும்பி அல்ல. இதில் வேறுபடுவது ஜென் மட்டுமே. அவன் மட்டுமே அந்த மேய்ச்சல் நிலம் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையை புரிந்துகொள்ள முயல்கிறான். அதன் வழியாக ஓநாய்கள் அவன் வாழ்வில் நுழைகின்றன. மொழிபெயர்ப்பாளர் சி.மோகன் அவற்றின் வாழ்வு வழியே மங்கோலியர்கள் டெஞ்ஞர் எனும் கடவுளை எப்படி காண்கிறார்கள் என்பதை அவன் அறிந்து வியக்கிறான். ஏறத்தாழ பில்ஜி தன் முதிய வயதில் தான் கற்ற அனைத்தையும் வேட்டை நுணுக்கங்களையும் க