இடுகைகள்

வேதாந்தா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலிருந்து சொட்டும் குருதி! - நொறுங்கிய குடியரசு- அருந்ததிராய்

படம்
                நொறுங்கிய குடியரசு அருந்ததிராய் தமிழில் க . பூர்ணச்சந்திரன் காலச்சுவடு பழங்குடி மக்களை மத்திய அரசு எப்படி நடத்துகிறது என்பதை நூலாசிரியர் ஏராளமான செய்திக்கட்டுரைகள் , நூல்கள் மற்றும் தனது நேரடியாக களத்திற்கு சென்று வந்த அனுபவம் மூலம் விளக்குகிறார் . 194 பக்கங்களை கொண்ட நூலை வாசிப்பவர்கள் யாரும் இதிலுள்ள அவல நகைச்சுவையை ரசிக்காமல் நூலை படிக்க முடியாது . படித்தவுடனே புன்னகைத்துவிட்டு அடுத்த நொடியே அதன் பொருள் உணர்ந்து வருத்தமும் படுவோம் . அந்தளவு தண்டகாரண்ய வனத்தில் நடக்கும் பல்வேறு கனிம வளங்கள் அகழ்ந்தெடுப்பு பணி பற்றிய புள்ளிவிவரங்களை நூலாசிரியர் முன் வைத்துள்ளார் . மன்மோகன்சிங் எப்படி மத்திய அரசில் அங்கம் வகிக்கும்படி சூழல் நேர்ந்தது , அவர் பிரதமரானவுடன் கனிம வளங்கள் அகழ்ந்தெடுக்கும் பணி வேகமெடுத்தது என பல்வேறு செய்திகளை முன்வைத்து பேசப்பட்டிருக்கிறது . அச்சமயம் உள்துறை அமைச்சர் பேசிய பேச்சுகளை எப்படி ஆழமாக புரிந்துகொள்வது என கூறப்பட்டுள்ள பகுதி முக்கியமானது . ஊடகங்கள் எப்படி அரசுக்கு ஆதரவாக பழங்குடி மக்களுக்கு ஆதரவாக போராடும் மாவோ

வான் ஒளியும் மண் இருளும் கொண்ட நூல் ! யாத்ரீகனின் பாதை - வினோத் பாலுச்சாமி- ஒளிப்பட பயணக்கதை

படம்
      பழங்குடி இனச்சிறுவன் புகைப்படம்- வினோத்           யாத்ரீகனின் பாதை வினோத் பாலுச்சாமி ப. 150 விலை ரூ. 500 மதுரை காரியாப்பட்டியைச் சேர்ந்தவர் வினோத். விகடனின் மாணவர் பத்திரிக்கையாளராக  செயல்பட்டவர். தற்போது திருவண்ணாமலையில் வாழ்கிறார். அவர் எழுதியுள்ள நூல்தான் யாத்ரீகனின் பாதை. அவர் தேர்ந்த எழுத்தாளர் அல்ல என்பதை ஆசிரியர் உரையில் நிரூபித்துவிட்டார். எனவே அவர் தனது மன உணர்வுகளை எந்தளவு வெளிப்படுத்தியுள்ளார் என்பதை மட்டுமே பார்த்து இந்த நூலை பார்த்து படித்து ரசிக்கலாம்.  தனது ஆதர்ச வழிகாட்டி பீட்டர் ஜெயராஜ் உடன் (தொப்பி அணிந்தவர்) ஏறத்தாழ இதில் எழுதியுள்ள புகைப்படம் அருகிலுள்ள எழுத்துகள் யாவுமே நமக்கு டைரிக்குறிப்புகள் போலத்தான் படுகிறது. இதன் அர்த்தம், அவை அதே தரத்தில் உள்ளன என்பதல்ல. சுய அனுபவத் தொனியில் எழுதப்பட்டாலும், புகைப்படத்தின் உணர்வுகளை வாசிப்பவர்களின் மனத்திற்கு கடத்துவதில் நூல் மகத்தான வெற்றி கண்டிருக்கிறது. சில அத்தியாயங்களில் நாம் மனதில் நினைத்து்க்கொள்ள பல வாக்கியங்கள் உள்ளன. அறிமுகமில்லாமல் ரபீந்திரனை சந்திக்கச்செல்வது, அச்சூழ்நிலையில் எளிதாக மனிதர்கள் பிற