இடுகைகள்

தடுப்பூசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய நாயினங்கள் பற்றி கவனிக்க கோரும் முக்கியமான நூல்! - இந்திய நாயினங்கள் - தியடோர் பாஸ்கரன்

படம்
  இந்திய  நாயினங்கள்  தியடோர் பாஸ்கரன்   காலச்சுவடு  மின்னூல்  இந்தியாவில்  உருவான 25  நாயினங்களை வரிசைக்கிரமமாக விவரித்து அதன் வரலாற்றைப் பேசும் நூல் இது. கூடுதலாக நாய்களால் ஏற்படும் ரேபீஸ் நோய்,அதற்கு செலவாகும்தொகை, தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் தலையிடும் விலங்கு நல சங்கங்களின் விவகாரம், பாதிக்கப்படும் மக்கள் என இறுதிப் பக்கங்களில் பேசியுள்ளதும் முக்கியமான விவகாரம்தான்.  கோம்பை,ராஜபாளையம், பஷ்மி, சடை  நாய்கள், இமாலயன் மஸ்டிஃப் என பல்வேறு  நாய்களின் உடல் அமைப்பு, தனித்திறன்களைப்  பற்றி நூலில் விவரித்துள்ளார் ஆசிரியர். ஏறத்தாழ நாய்களைப் பற்றிய ஆய்வு நூலாக உருவாகியுள்ளது. நாய் என்ற பெயர் வந்தது எப்படி, அதன் பொருள் என்ன, இலக்கியத்தில் நாயை குறிப்பிட்டுள்ளனரா என்று தொடங்கப்பட்டிருப்பது நூலின் நோக்கத்தை  தெளிவுபடுத்துகிறது. பல்வேறு நாய்களின் புகைப்படங்களை பார்த்து அடையாளம் கொள்ள முடியும். அப்படி பார்க்க முடியாத நாய்களை ஓவியமாக நூலில்  காட்டியுள்ளார் ஆசிரியர்.  இந்திய நாயினங்களைப்பற்றி கள ஆய்வுகளை இந்திய அரசு நிறுத்தியதை வருத்தத்தோடு பதிவு செய்யும் ஆசிரியர், இந்திய  நாய் சங்கம் நாய்களை க

பசுக்களைத் தாக்கி பால் சுரப்பைக் குறைத்து கொல்லும் எல்எஸ்டி நோய் - பாதுகாப்பது எப்படி?

படம்
            பசுக்களைக் காப்பாற்றுங்கள் - தலித்துகளுக்கு எதிரான கட்டுரை அல்ல கால்நடைகளை தாக்கும் வைரஸ் நோய்  வேகமாக வட இந்தியாவில் பரவி வருகிறது. அதன் பெயர் எல்எஸ்டி. போதை வஸ்தாது பெயர் என்பதால் அதே அளவுக்கு கிளுகிளுப்பாக இருக்கும் என நினைக்கவேண்டாம். இது பசுக்களை கொன்று வருகிற வைரஸ் ஏற்படுத்தும் நோயின் பெயர். லம்பி ஸ்கின் டிசீஸ் என்பதுதான் எல்எஸ்டிக்கான விளக்கம். கார்பிபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த வைரஸ் இந்நோயை ஏற்படுத்துகிறது. உணவு, நீர் ஆகியவற்றில் ஏற்படும் கலப்படம் மற்றும் பூச்சிகள், கொசு, உண்ணி ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய் கால்நடைகளுக்கு குறிப்பாக பசுக்களுக்கு பரவுகிறது. நோய் பரவி முதிர்ச்சி அடையும் காலம் 4 முதல் 14 நாட்கள். பசுக்களின் நிணநீர் கணுக்கள் வழியாக கிருமிகள் பரவி பசுக்களைப் பாதிக்கின்றன. அறிகுறிகள் என்னென்ன? உடல் வெப்பம் அதிகரிப்பு, சரியாக சாப்பிட முடியாது, பால் சுரப்பு குறைந்துவிடும், மூக்கில் நீர் வடிவது, எடை குறைவு ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், மகாராஷ்டிரா, உ.பி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தி அத

வெளியே வெயில், உள்ளே புழுக்கம்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
        இயற்கை நேசனின் அற்புத காட்சி அனுபவம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? சில நாட்களுக்கு முன்னர் வெயில் குறைந்தது போல தெரிந்தது .. இப்போது வெயில் மீண்டும் தன் இயல்பான நிலையில் சுட்டெரித்தது . ஒருமுறை சட்டை போட்டு மதியம் சாப்பிட் அறைக்கு சென்றாலே எனக்கு வியர்வையால் குளித்தது போல ஆகிவிடுகிறது . குங்குமம் தோழியில் வேலை பார்த்த அன்னம் அரசு இப்போது ஜூனியர் விகடன் இதழுக்கு ப் போய்விட்டார் . இந்த தகவலை நான் தாமதமாகவே தெரிந்துகொண்டேன் . நான் இந்த வாரமும் குங்குமம் இதழை வாங்கவில்லை . முன்பு போல அதன் கட்டுரைகள் சிறப்பாக இல்லை . உள்ளடக்க விஷயங்களில் தடுமாறுவது போல தோன்றியது . எங்கள் நாளிதழ் வேலைகளை ஓரளவுக்கு நிறைவு செய்துவிட்டேன் . ஜூலை மாதம் வரை எழுதிவைத்தாயிற்று . ஆகஸ்ட் மாத கட்டுரைகளை இனிமேல்தான் எழுதி தயாரித்து வைக்க வேண்டும் . இன்ஃபோகிராபி வேலைதான் அதிக நாட்களை இழுத்துக்கொள்ளும் என நினைக்கிறேன் . அதையும் அவ்வப்போது தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் . வனவாசி - விபூதிபூஷன் பந்தோபாத்யாய நாவலைப் படித்தேன் . கோவையிலுள்ள விடியல் பதிப்பக வெளியீடு . கல்கத்

சின்னம்மை ஒழித்த 42ஆவது ஆண்டு! - எட்வர்ட் ஜென்னரின் மகத்தான தடுப்பூசி கண்டுபிடிப்பு

படம்
  இன்று இரண்டு விஷயங்கள் உலகில் நடக்கின்றன. ஒன்று, நோய்த்தொற்றை தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஒரு பிரிவும், அதைப் போடக்கூடாது அப்படி போடுவதும் போடாததும் மக்களின் விருப்பம் எனவும் ஒரு பிரிவு பேசிக்கொண்டிருக்கிறது. எலன் மஸ்க் என்ன சொல்கிறார் என்றால், அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்தான். அதை ஊக்கப்படுத்தலாம். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறார். இந்த வகையில் இந்த விவாதத்திற்கு முக்கியமான காரணம், எட்வர்ட் ஜென்னர்.  இவர்தான் தடுப்பூசியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர். 1749ஆம் ஆண்டு மே 17 அன்று இங்கிலாந்தில் உள்ள பெர்க்கிலியில் பிறந்தார்.  இவரின் காலத்தில் சின்னம்மை பலருக்கும் அதிகரித்து அதற்கான சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் நிறையப் பேர் இறந்துகொண்டிருந்தனர். சுருக்கமாக சொல்வதென்றால், மக்கள் தொகையில் இருபது சதவீதம் பேர்.  ஜென்னர் தனது ஆராய்ச்சியில் ஒரு த த்துவத்தை உருவாக்கினார். ஒருவருக்கு சின்னம்மை வந்தும் கூட உயிர்பிழைத்து விட்டாரா? உடனே அவரைத் தேடிப் பிடித்து சோதித்தால் அவரது உடலில் நோய்க்கு எதிரான பொருட்கள் இருக்கும் என்று கூறினார். இந்த நேரத்தில

2021 முக்கியமான டேட்டாக்கள்!

படம்
டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும் பாராலிம்பிக்ஸிலும் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 7 முதல் 19 ஆகும். இதுதான் இந்தியாவில் ஆல்டைம் அதிக எண்ணிக்கை கூட. இந்த ஆண்டில் இந்திய நிறுவனங்கள் பங்கு வெளியீடு மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை திரட்டியுள்ளன. பத்தாண்டுகளில் இதுவே அதிக அளவு ஆகும். இலங்கை பாடகியான யோகானி தனது மணிகே மகே பாடலுக்கு 3 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளார். இலங்கை பாடகருக்கு இதுவே அதிகபட்ச பார்வையாகும். கடந்த செப் - ஜூலையில் 50 சதவீத எஸ்யூவி வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதற்குப்பிறகுதான் செடான், ஹாட்ச்பேக் கார்கள் எல்லாம். தலைவன் எஸ்யூவிதான். பயணிகள் அதிகம் பயணிப்பதற்கான வாகனத்தின் மீது மக்களுக்கு ஆர்வம் கூடியுள்ளது. ஸ்டேன்சாமி. கிறிஸ்தவர் என்பதால் தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் குற்றுயிராக ஆக்கப்பட்டவர். 84 வயதில் அவரை ஒன்றிய அரசு சிறைவைத்து சித்திரவதை செய்து கொன்றது. இந்த வயதில் தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளான வேதனையான பெருமை ஸ்டேன்சாமிக்கே சொந்தம். இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு என்ற பெருமையை இடதுசாரி அரசு கேரளத்தில் பெற்றுள்ளது. அங்

2021 இல் புழங்கி புதிய சொற்கள், வார்த்தைகள்!

படம்
cheugy குறிப்பிட்ட விஷயத்தை  அது அடிப்படையானது என்றாலும் புரிய வைக்க மெனக்கெடுவது. இது நவீனகால நாகரிகமாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. இந்த வார்த்தை டிக்டாக்கிலிருந்து வந்தது. ஜென் இசட் தலைமுறையினர் மில்லினியலை சுட்டிக்காட்ட இந்த வார்த்தையை பயன்படுத்தினர்.  என்எஃப்டி  NFT இது நான் ஃபன்ஜிபிள் டோக்கன். இப்போது உலகம் முழுக்க பரவிவரும் முறை இது. விர்ச்சுவலாக ஒருவர் நிர்வகிக்கும் சொத்து. இதனை ஒருவர் காசு கொடுத்து வாங்கலாம் விற்கலாம். இதனை காப்பி செய்ய முடியாது. சினிமா, பாடல், புகைப்படம் எதனையும் இந்த முறையில் டோக்கனாக மாற்றலாம். இது ஒரு டிஜிட்டல் டோக்கன் என்று புரிந்துகொள்ளுங்களேன்.  critical race theory மாணவர்கள் இனம், இனவெறி பற்றி படிப்பதைக் குறிக்கிறது. அறிவுசார்ந்த குழு, இனவெறி பற்றி அதன் விளைவுகளைப் பற்றி விவரிப்பதையும் இதனோடு சேர்த்துக்கொள்ளலாம்.  ரீஜென்சிகோர் Regencycore நெட்பிளிக்ஸின் பிரிட்ஜெர்டன் என்ற தொடரில் 19ஆம் நூற்றாண்டு புத்திசாலிகள், கவர்ச்சியான பெண்களைக் காட்டுவார்கள். அவர்கள் பின்பற்றிய நாகரிக விஷயங்கள் என்று புரிந்துகொள்ளலாம்.  murraya  ஆஸ்திரேலியா, ஆசியாவின் பருவகால மர

ஊசிமுனை இல்லாத டிஎன்ஏ தடுப்பூசி

படம்
  ஊசிமுனை இல்லாத  டிஎன்ஏ தடுப்பூசி ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸைடஸ் கெடில்லா நிறுவனமும், ஒன்றிய அரசும் இணைந்து முதல் டிஎன்ஏ தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்த ஊசியின் விலை ரூ.1900. இதை செலுத்தும் கருவியின் விலை ரூ.30 ஆயிரம்.  இதனை அமெரிக்க மருந்து நிறுவனமான பார்மா ஜெட் தயாரித்துள்ளது.  கூர்மையான முனை மூலம் மருந்து உடலினுள் செலுத்தப்படுகிறது. அதிக அழுத்தம் காரணமாக மருந்து உடலினுள் வேகமாக செல்லும். ஊசியே இல்லாத சிரிஞ்ச் கொண்ட கருவியால் 60 சதவீத மருந்தை சேமிக்க முடியும்  என்று கூறுகிறார்கள். இதில் 0.1 மி.லி மருந்து செலவானால் சாதாரண ஊசி மருந்து முறையில் 0.5 மி.லி மருந்து செலவாகிறது.  ஊசி வேண்டாங்க.. மாத்திரையே போதும் என பயந்து ஓடுபவர்களை புதிய முறை ஈர்க்கலாம்.  ஊசிமுனை இல்லாத இஞ்செக்டர் விலை அதிகமாக உள்ளது. இதனைக் குறைக்க பெருமளவு தடுப்பூசி போடும் திட்டத்தின் பட்ஜெட் அதிகரித்தால் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும்.  ஊசி இல்லாத இஞ்செக்டர் என்பது புதிய கண்டுபிடிப்பல்ல. இதனை 1866ஆம் ஆண்டு கண்டுபிடித்து  பதிவு செய்துவிட்டனர். போலியோ, டைபஸ், அம்மை ஆகிய நோய்களுக்கு இதனை பயன்படுத்தி வந்தனர்.  டிஎன்ஐஇ அரவிந

அலர்ஜிக்கான மருந்துகளும், இயற்கை மருத்துவ முறையும்!

படம்
  மாஸ்ட் செல் ஸ்டேபிலைசர்ஸ்  உடலில் வீக்கத்தை குறைத்து ஹிஸ்டாமைனின் சுரப்பைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கம். மூக்கில் அதிக சளி உருவாவதை தடுக்கவே பெரும்பாலும் பயன்படுகிறது. குரோமோலின், நெடோகுரோமில், லோடோஸாமினா ஆகியவை இந்த வகையைச் சேர்ந்த மருந்துகளாகும். இவற்றை மூக்கில் இன்ஹேலர் வழியாக உறிஞ்சலாம். அல்லது கண்ணில் மருந்தாக பயன்படுத்தலாம். மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை இரண்டு வாரம் பயன்படுத்தினால் போதும். பயன்களை பார்க்க முடியும். தூக்கம், அரிப்பு, கண்களில் கண்ணீர் அதிகம் வருவது, எரிச்சல் ஆகியவை இந்த மருந்தை பயன்படுத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளாகும்.  ஆன்டிலியோகோட்ரைன்ஸ் இந்த மருந்து மூச்சுக்குழாயில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. இந்த மருந்து ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அவர்களின் நுரையீரலில் உள்ள நீர்மத்தை குறைக்கிறது. இவை மூக்கில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.  புரோன்சோடிலேட்டர்ஸ் ஒருவருக்கு மூச்சு விடுவதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க உதவுகிற மருந்து இது. இதனை காப்பாற்றும் மருந்து என்று அழைக்கின்றனர். அறிகுறி தெரிந்தவுடனே

மலேரியாவுக்கு புதிய முறையில் தடுப்பூசி தயாரிப்பு!

படம்
  மலேரியாவுக்கு புது மருந்து வெயிலுள்ள ப்ரூட் ஸ்மூத்தி குடிப்பது நல்லது என எலைட் இதழ்களில் எழுதுவார்கள். படித்திருப்பீர்கள். ஆனால் உடல் நலனுக்கு கொசு ஸ்மூத்தி வந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆராய்ச்சிகள் அப்படித்தான் அறிகுறிகளைக் காட்டுகின்றன.  லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மலேரியாவால் பாதிக்கப்பட்ட கொசுக்களின் உடலிலிருந்து ஒட்டுண்ணிகளை எடுத்து அதனை சுத்திகரித்து தடுப்பூசியாக பயன்படுத்த முடியுமா என்பதை சோதித்து வருகின்றனர். இந்த முறையில் வேகமாக ஒட்டுண்ணிகளை சேகரித்து அதனை சுத்திகரித்து தரமான மலேரியா தடுப்பூசியாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளனர்.  பிளாஸ்மோடியம் என்பதுதான் மலேரிய ஒட்டுண்ணி. இதுதான் பெண் அனோபிலஸ் கொசுக்களின் உடலைத் தாக்கி அக்கொசு கடிக்கும் போது மனிதர்களின் உடலில் நோயை ஏற்படுத்துகிறது.  பிளாஸ்மோடியம் தற்போது மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்துகளை எதிர்கொள்ளும் சக்தியை பெற்றுவருகிறது. எதற்காக மலேரியாவுக்கென திடீர் ஆராய்ச்சி? மலேரியாவால் உலகமெங்கும் 4 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இதில் 61 சதவீதம் பேர் குழந்தைகள்தான். அதுவும் ஐந

தட்டச்சு செய்வதை விட தாளில் எழுதுவது மொழியை கற்க உதவுகிறது - நியூஸ் ஜங்ஷன்

படம்
நியூஸ் ஜங்ஷன்  ஆஹா! புதிய தலைமுறை! ஜார்க்கண்ட் மாநிலத்தில் அழிந்துவரும் பட்டியலின மக்களுக்காக புரோஜெக்ட் ஆகான்ஷா எனும் கல்வித்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. டாடா பவுண்டேஷனின் திட்டத்தால் இம்மாநிலத்தில் 220 பழங்குடி மாணவர்கள் உண்டு உறைவிடப் பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர். ”எங்களது கல்வித்திட்டம் மூலம் மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை  தேர்ந்தெடுக்க உதவுகிறோம்” என்கிறார் டாடா பவுண்டேஷனின் சமூக பொறுப்புணர்வு துறை தலைவர் சௌரப் ராய். https://www.newindianexpress.com/good-news/2021/aug/08/project-akansha-motivating-helping-out-pvtg-children-to-take-up-education-2342005.html காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த போராடும் வீரர்கள்! இடம் கிரீஸ், வடக்கு ஏதேன்ஸ்  https://www.reuters.com/news/picture/photos-of-the-week-idUSRTXFA4BO அப்படியா!? இரண்டுமே ஒன்றுதான்! கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை மாற்றி போட்டுக்கொண்டாலும் கூட நோய்த்தொற்றைத் தடுக்க முடியும் என ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி அறிக்கை கூறியுள்ளது. இதுதொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் 98 பேர்களிடம் ஆராய்ச்சி நடத்தி 18 பேர்களுக்கு முதல் டோஸ் கோவிஷீல்டும்,

பாகுபாடுகளை வெளிக்காட்டும் இமோஜி ஐகான்கள்! - புதிய இமோஜிகள் வெளியீடு

படம்
 செய்திஜாம்  ஆஹா! தேர்வில் வெற்றி! மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு தேர்வில், 99.95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகளில் ஆசிரியர்களால் நடத்தப்படும் தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்து தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ”15,75,806 மாணவர்கள் பத்தாவதில் இணைந்தனர். இவர்களில் 15, 75,752 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 4.65 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது” போர்டு தலைவர் தின்கர் பாடீல் தெரிவித்தார்.  https://www.thenewsminute.com/article/maharashtra-board-class-10-results-declared-9995-students-pass-152459 இனவெறி கூடாது இங்கிலாந்து கால்பந்து வீரர் மார்கஸ் ராஸ்போர்டுக்கு ஆதரவாக திரண்டு குரல் கொடுக்கும் ஆதரவாளர்கள் இடம் பிரிட்டன், மான்செஸ்டர் அப்படியா!? என்ன உயரம்! சீனாவைச் சேர்ந்த பேஸ்கட்பால் வீராங்கனை ஸாங் ஸியூ, தனது அபார உயரத்தாலும், திறனாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பதினைந்து வயதுக்குட்பட்ட தேசிய பேஸ்கட்பால் போட்டியில் ஸாங் பங்கேற்றார். ஏழு அடி நாலு அங்குல உயரத்தில் உள்ள ஸாங், போட்டியில் 45 புள்ளிகளை எடுத்து தனது அணியை

கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது!

படம்
                டாக்டர் எஸ் பாலசுப்பிரமணியன் லான்செட் இந்தியா டாஸ்க் போர்ஸ் குழு மூன்றாவது அலை கொரோனா தொற்று குழந்தைகளை தாக்கும் என்று கூறப்படுகிறதே ? பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் நான்கு சதவீதம் பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது . இந்த எண்ணிக்கை விரைவில் 12 சதவீதமாக உயரலாம் . பிற நாடுகளிலும் இதேபோன்ற நிலைதான் காணப்படுகிறது . ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் மீதான நோய் பாதிப்பு 9 சதவீதமும் , அமெரிக்காவில் பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 12. 4 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஐரோப்பாவில் நோயால் தாக்கப்பட்டவர்களின் வயது பதினைந்துக்கும் குறைவுதான் . இந்த தாக்குதலும் கூட முதல் , இரண்டாவது அலையில் ஏற்பட்டதுதான் . மூன்றாவது அலையில் இப்படி தாக்குதல் நடைபெறுமா என்று கூற முடியாது . தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தினால் வயது வந்தோருக்கும் குழந்தைகளுக்கும் பெரியளவு பாதிப்பு நேராது என்று கூறலாம் . படுக்கைகளும் வெண்டிலேட்டர்களும் அதிகம் தேவைப்படுமா ? முதல் மற்றும் இரண்டாவது அலையில் பெரியளவு குழந்தைகள் பாதிக்கப்படவில்லை . ஆனால் இரண்டாவது அல

நோய் எதி்ர்ப்பு சக்தி செயல்படுவதை அறிந்துகொள்ளுங்கள்!

படம்
                  நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுவது எப்படி ? வைரஸ் பாக்டீரியா , பூஞ்சை என அனைத்து நுண்ணுயிரிகளையும் எதிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்திதான் . தடுப்பூசி என்பது கூட நோய் எதிர்ப்பு சக்தி அமைப்புக்கு நோய் கிருமிகள் பற்றி அறிமுகப்படுத்தி வைப்பதுதான் . இதனால் மறுமுறை நோய்க்கிருமிகள் உடலில் தட்டுப்பட்டால் எளிதாக எதிர்கொள்ள முடியும் . உடலில் பரவி வரும் வியாதிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி செயல்படும் விதம் உள்ளது . இதனைப் புரிந்துகொண்டால் நோ்ய்களைப் பற்றி எளிதாக அறிந்துகொண்டு உடல்நலம் காக்கலா் . ம் . உடலிலும் உடலுக்கு வெளியிலும் ஏராளமான நுண்ணுயிரிகள் உள்ளன . இவற்றை எதிர்த்து தாக்கி உடலைக் காப்பது என்பது எளிதான பணியல்ல . இந்த நோய் எதிர்ப்பு பணியில் உடலிலுள்ள பல்வேறு பாகங்களும் செயலாற்றுகின்றன . குறிப்பாக தோல் முதல் வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகள் வரை நோய்த்தடுப்பில் உதவுகின்றன . ஆனால் இது நிலையாக இப்படித்தான் செயல்படும் என்று கூற முடியாது . நோய் எதிர்ப்பு சக்திக்கு உள்ள நினைவுத்திறன்தான் நோயை எதிர்க்க பெரும்பாலும் பயன்படுகிறது . தோல் பற்றி முன்னமே எழுதியது ப

பயாலஜிகல் ஈ தடுப்பூசியை குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்!

படம்
              டாக்டர் மரியா எலினா பாட்டசி பயாலஜிகல் ஈ தடுப்பூசிக்குழு நீங்கள் ஆராய்ச்சி செய்துவரும் பயாலஜிகல் ஈ தடுப்பூசி பற்றி கூறுங்களேன் . கடந்த ஆண்டு நாங்கள் கோவிட் -19 க்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் இறங்கினோம் . இந்தக்குழு ஆராய்ச்சியை வேகமாகவும் நுட்பமாகவும் செய்வதோடு இதற்கான சோதனைகளும் நடைபெறவுள்ளன . அரசிடம் சோதனை நடத்தவும் அதனை விரிவுபடுத்தவும் அனுமதி கிடைத்துள்ளது . உலகளவில் மருத்துவ சோதனை நடத்தவும் சிஇபிஐ போன்ற அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளோம் . முதல்கட்ட சோதனைகளுக்கான முடிவுகள் எப்போது கிடைக்கும் ? விரைவில் முதல் கட்ட சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் முடித்து முடிவுகளை வெளியிடுவார்கள் என நினைக்கிறேன் . மூன்றாவது கட்ட சோதனைக்கான அனுமதி பெற்றுள்ள நிலையில் அடுத்த வாரமே இதுபற்றிய தகவல்களை வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன் . மாறியுள்ள வைரசுக்கு எதிராக தடுப்பூசி எப்படி மேம்பட்டுள்ளது என்று கூறுங்கள் . நாங்கள் எங்கள் ஆய்வகத்தில் பயாலஜிகல் ஈ தடுப்பூசிக்காக இணைந்து பணியாற்றி வருகிறோம் . இந்த ஊசி , இப்போது மாறியுள்ள டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக சிறப்பா