இடுகைகள்

புரதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரபணு தடுத்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியும்!

படம்
  இயற்கையாகவே சிலருக்கு உடல் பழனி படிக்கட்டு போல கட்டாக இருக்கும். திருமணமானபிறகு, செல்வச்செழிப்பில் பூரித்தால் உடல் சற்று பூசினாற்போல மாறி குனுக் மினுக் என மாறுவார்கள். ஆனால் சிலர் வெளியேற்றம் நாவலில் வரும் குற்றாலிங்கம் போல வேளைக்கு இருபத்தைந்து இட்லிகளை உள்ளே இறக்கினாலும் உடலில் வேறுபாடே தெரியாது. பரம ரோகியாக இருந்தாலும்கூட யோகி போல வெளியே தெரிவார்கள். அத்தனைக்கும் காரணம் என்ன? மரபணுக்கள்தான்.  சிலருக்கு அடிப்படையான உடற்பயிற்சி செய்து நாற்றம் பிடித்த சோயா சங்சை ஊறவைத்து தின்றாலே உடல், கீரை சாப்பிட்ட பாப்பாய் போல கட்டாக அமைந்துவிடும். ஆனால் இன்னும் சிலர் என்னென்னமோ உடற்பயிற்சி செய்தாலும் கூட உடலில் சுண்டைக்காய் அளவு மாறுதல் மட்டுமே தெரியும். இதற்கெல்லாம் காரணம் நாம் செய்த வினை அம்புட்டு பலமாக இருக்குதோ என நினைத்து கவலை கொள்ள வேண்டியதில்லை. மரபணு காரணமாக சில பிரச்னைகள் வந்தாலும் கூட நம்மால் முடிந்த பிரயத்தனங்களை செய்தால் போதும் உடல் எடை குறைவதோடு உடல் கட்டமைப்பும் பலம் பெறும்.  சோத்துக்கு பஞ்சமில்லாதவர்கள்தான் உடற்பயிற்சி பற்றி யோசிக்கவேண்டும். உடல் எடை என்றாலே அவர் கண்டிப்பாக பசி, பட

இடைவேளை விட்டுத் தொடரும் உண்ணாவிரதம் - உடல் எடையை கணிசமாக குறைக்கிறது!

படம்
  உடல் எடையைக் குறைக்கும் உண்ணாவிரதம் ஒருவர் மூன்று வேளை உணவு உண்டாலும் மாதம் ஒருமுறை மூன்று வேளை உணவுகளில் ஒருவேளையை தியாகம் செய்து உண்ணாவிரதம் கடைபிடிக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் பயன்கள், உடலிலுள்ள நச்சுகள் வெளியேறுவது, அடுத்து உடலின் செரிமான மண்டலம் சீராவது. ஒருவர் முழுநாளும் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் அது சற்று கடுமையானது. அதற்கென பயிற்சி செய்து அதைக் கடைபிடிக்கலாம். இன்டர்மிட்டர் ஃபாஸ்ட் எனப்படும் உண்ணாவிரதம் பதினாறு மணிநேரம் தொடங்கி சில நாட்கள் வரை நீள்கிறது. இதில் உணவு என்பது முழுமையாக நீக்கப்படுவதில்லை. அதற்குப் பதில் திரவ ஆகாரங்கள், பழங்கள் ஆகியவற்றை உண்ணலாம். பிறகு உண்ணாவிரதத்தைத் தொடரலாம். மூன்று வேளை உணவுண்டு பழகியவர்களுக்கு இந்த முறை ஏற்றது.   அமெரிக்கர்கள் மத்தியில் இன்டர்மிட்டன் ஃபாஸ்ட் தீவிரமாகி வருகிறது. வெறுமனே டிரெண்டிங் என்பதாக அல்ல. அதில் பயனும் கிடைக்கிறது. எந்த டயட்டைக் கடைபிடித்தாலும் இடைவேளை விட்டுத் தொடரும்  உண்ணாவிரதம் மூலம் அவர்களுக்கு எடை குறைகிறது என்று கூறுகிறார்கள்.  நீரிழிவு நோயாளிகளுக்கும் இன்டர்மிட்டன் ஃபாஸ்ட் உதவுகிறது என்பது ஆச்சரியமான சமாச்ச

விஷம் கொண்ட தாவரங்கள்- விஷத்தை எப்படி பக்குவப்படுத்தி உண்பது?

படம்
  விஷம் கொண்ட காய்கறிகள் நாம் உண்ணும் நிறைய காய்கறிகள் விஷத்தன்மை கொண்டவைதான். அதாவது மனிதர்களின் செயல்பாடு இல்லாமலேயே இயற்கையாகவே தன்னை பாதுகாத்துக் கொள்ளும் விஷம் உண்டு. இவற்றை இன்றுவரை மனிதர்கள் விஷம் என்ன விட்டுவிடவிலை. அதை பதப்படுத்தி பக்குவப்படுத்தி மருந்துகள், உணவு, வாசனை திரவியங்கள் என பல்வேறு வகையில் பயன்படுத்தி வருகிறார்கள். இதைப்பற்றி பார்ப்போம் வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகள் விஷத்தன்மை கொண்ட கொட்டைகளை சாப்பிட்டு வந்தனர். இரண்டு கொட்டைகளே ஒரு விலங்கை கொல்ல போதும். இப்படி விஷம் கொண்ட தாவர விதைகளை சைகாட்ஸ் என்று பெயர். இதிலுள்ள விஷம் சைகாசின் என அழைக்கப்படுகிறது. குடலில் சென்று செரிமானம் ஆகும்போது விஷம் வெளிப்பட்டு குடல் செல்களை தாக்குகிறது. பிறகு கல்லீரலையும் பாதிக்கிறது. குடல் எரிச்சல், கல்லீரல் செல்கள் இறப்பு, கல்லீரல் செயலிழப்பு ஆகியவற்றால் மனிதர்களுக்கு இறப்பு நேர்கிறது. பழங்குடிகள் இதை அறிந்துதான் விஷம் வாய்ந்த விதைகளை நீரில் அலசி நிலத்தில் துளையிட்டு அதை ஒரு வாரம் அல்லது சில மாதங்கள் வைத்திருந்து எடுத்து உலர்த்தி பிறகு உண்கிறார்கள். இந்த செயல்முறையில் தாவரத

சிக்கலான புரதங்கள் பற்றிய ஆராய்ச்சி செய்தவர்! - ஃபெலிக்ஸ் ஹாப்பே செய்லர்

படம்
  ஃபெலிக்ஸ் ஹாப்பே செய்லர் (Felix hoppe-seyler  1825-1895) ஃபெலிக்ஸ் உயிரி வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆகிய துறைகளை தோற்றுவித்த ஆய்வாளர்களில் ஒருவர் என கருதுகின்றனர். இவர், ஜெர்மனியின் ஃபிரெபர்க் நகரில் பிறந்தார். ஒன்பது வயதில் பெற்றோரை இழந்தார்.  ஃபெலிக்ஸின் உறவினரான மருத்துவர் செய்லரால்  தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். 1850ஆம் ஆண்டு பெர்லின் நகரில் படித்து தேர்ச்சி பெற்று மருத்துவரானார்.  1860ஆம் ஆண்டு பெர்லின் நகரில்  உதவி பேராசிரியராக பணியாற்றினார். 1862ஆம் ஆண்டு, இவர் மனித உடலில் உள்ள ஹீமோகுளோபின் பற்றி ஆராய்ந்தார். இதன் வழியாக தாவரங்களில் உள்ள குளோரோபில் வேதிப்பொருள் மூலம் நடைபெறும் ஒளிச்சேர்க்கை பற்றிய முக்கியமான ஆய்வை செய்தார்.  புரோட்டெய்ட்ஸ் (Proteids) எனும் சிக்கலான புரதங்கள் பற்றிய ஃபெலிக்ஸின் ஆராய்ச்சி முக்கியமானது. 1877ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் பிசியாலஜிகல் கெமிஸ்ட்ரி என்ற இதழைத் தொடங்கி, 1895ஆம் ஆண்டு காலமாகும்வரை அதன் ஆசிரியராக செயல்பட்டார்.   https://www.encyclopedia.com/science/dictionaries-thesauruses-pictures-and-press-releases/hoppe-seyler-felix   

காற்றிலுள்ள மீத்தேனைப் பயன்படுத்தி புரத உணவுகள்!

படம்
  எழில் சுப்பையன், ஸ்ட்ரிங் பயோ மீத்தேன் மூலம் உணவு தயாரிக்கலாம்! 2013ஆம் ஆண்டு எழில் சுப்பையன், அவரது கணவர் வினோத் குமார்  ஆகியோர் இணைந்து ஸ்ட்ரிங் பயோ என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். பெங்களூருவில் செயல்படும் இந்த நிறுவனம் மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தி, புரத உணவை உற்பத்தி செய்து வருகிறது. ஆசியாவிலேயே பதப்படுத்தும் முறையில் மீத்தேன் மூலம் புரதங்களை  உற்பத்தி செய்யும் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஸ்ட்ரிங் பயோ தான்.  ”எப்படி சர்க்கரையை ஈஸ்டாக மாற்றி மதுவை தயாரிக்கிறார்களோ அதை முறையைத் தான்  பின்பற்றுகிறோம். இதில் சற்றே மாறுபாடாக, நாங்கள் பயன்படுத்தும் பாக்டீரியா நுண்ணுயிரிகள் மீத்தேனை உண்டு அதனை புரதமாக மாற்றுகின்றன” என்றார் ஸ்ட்ரிங் பயோ துணை நிறுவனரான எழில் சுப்பையன். மீத்தேனை இயற்கை எரிவாயு, உணவுக்கழிவுகளிலிருந்து பெறுகின்றனர். மீத்தேனிலிருந்து உருவாக்கும் புரதத்தை, விலங்குகளுக்கான உணவாக மாற்றி விற்று வருகிறது ஸ்ட்ரிங் பயோ நிறுவனம்.  ”நாங்கள் குறைந்தளவு நீர், நிலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி விலங்குகளுக்கான உணவை உற்பத்தி செய்கிறோம். பிற தாவர, விலங்கு இறைச்சி வகைகளை விட பதப்படுத்தும் முறையில்

புரதச்சத்தை உடலுக்கு பெறும் ஒரே வழி - கறி சாப்பிடுவதுதான்!

படம்
                        finger licking good -Meat இப்படி நிறையப் பேர் சொல்லுவார்கள். புரத தேவைக்கு ஒரே எளிதான வழி இறைச்சி என பலரும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.  ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை. காய்கறிகள், பிற தானியங்கள் என பல்வேறு உணவுப்பொருட்களிலும் புரதம் உள்ளது. இறைச்சியை பட்டினி கிடந்தவர்கள் சாப்பிடுவது போல சாப்பிட்டால், உடல் கெட்டுவிடும். இதயம்., நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் உறுதியாக ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆதிக்காலத்தில் நாம் இறைச்சியைத்தான் சாப்பிட்டோம் என ஐந்துவீட்டு சாமி துணை பக்தர்கள் கொந்தளிக்கலாம். ஆனால் அன்று உணவுக்கு வேட்டையாடி சாப்பிடும் தேவை இருந்தது. பயிர் விளைவித்து சாப்பிடும் புத்தி உருவாகவில்லை. அப்படி ஒரு ஒப்பீட்டை எடுத்தாலும் கூட இன்று ஆண்டுக்கு ஒருவர் சாப்பிடும் இறைச்சி அளவு அதிகம். புரதம். விலை குறைவு என நிறைய காரணங்களை லாஜிக்காக சொல்லலாம். இதனை நாம் மறுக்கவில்லை. இறைச்சியில் எளிதாக நுண்ணுயிரிகள் தொற்றிக்கொள்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு எளிதாக வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இறைச்சிக்கு மாற்றாக என்ன சாப்பிடுவது? அவகாடோ, தேங்காய், பருப்பு வகை

ஆய்வகத்தில் தயாரிக்கலாம் பாலை....

படம்
  பால் மற்றும் முட்டை ஆகிய உணவுப்பொருட்களை ஆய்வகத்தில் தயாரித்து விற்பனை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.   அமெரிக்காவிலுள்ள பர்ஃபெக்ட் டே என்ற நிறுவனத்தைத் தொடங்கிய உயிரி பொறியாளர் ரியான் பாண்டியா, சோயாவிலிருந்து பால் பொருட்களைத் தயாரித்து வருகிறார். இந்த பாலில் எதிர்பார்க்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இப்போது வரை க்ரீம் சீஸை தயாரிக்க முடியாவிட்டாலும் ஐஸ்க்ரீமை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்த வகையில் விலங்குகளுக்கு மாற்றாக தாவரங்களின் புரதங்களிலிருந்து உணவுப்பொருட்களைத் தயாரிப்பது புதிதல்ல. ரியானின் நிறுவனத்தைப் போலவே அங்கு வேறு பல நிறுவனங்களும் பால் பொருட்களைத் தயாரித்து வருகின்றன.  இதில் புதுமையான விஷயம்,நொதிக்க வைக்கும் முறையில்  நுண்ணுயிரிகளிடமிருந்து குறிப்பிட்ட வேதிப்பொருளை பெற்று அதிலிருந்து பால் போன்ற பொருட்களை தயாரிக்கும் முயற்சிதான்.  இதனை புதிய முறை என்று கூறமுடியாது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரொட்டி, யோகர்ட், சீஸ், மதுபானங்கள் நொதிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.  தொண்ணூறுகளில் அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு(F

குளூட்டேன் - ஒவ்வாமைக்கு மூல காரணமா?

படம்
gluten குளூட்டேன் இன்று குளூட்டன் இல்லாத உணவுப்பொருட்களை மக்கள் தேடத் தொடங்கியுள்ளனர். குளூட்டேன் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதன்விளைவாக குளூட்டேன் இல்லாத பிரெட், பாஸ்தா உள்ளிட்டவற்றையும் பிற பொருட்களை மக்கள் தேடி வருகின்றனர். மரபணுரீதியாக ஏற்படும் பிரச்னைகளால் ஒவ்வாமை இன்று பெருமளவு தலைதூக்கி வருகிறது. குளூட்டேன் என்பது கோதுமையில் காணப்படும் சங்கிலி அமைப்பிலான ஓர் புரதம். வெறும் கோதுமையை வாயிலிட்டு மென்றால் சூயிங்கம் போல திரண்டு வரும். இந்த தன்மைக்கு குளூட்டேன்தான் காரணம்.  பிரெட் தயாரிப்பில், குளூட்டேன் முக்கியமான பகுதிப்பொருள். அதன் நெகிழ்வான தன்மைக்கு குளூட்டேன் உதவுகிறது. கோதுமை மாவில் நீரைச் சேர்த்து குளூட்டேனை நீக்க முடியும். நேரடியாக கோதுமையிலிருந்து குளூட்டேனை நீக்குவது சாத்தியம் அல்ல. குளூட்டேன் இல்லாத உணவு காய்கறிகள், பழங்கள், இறைச்சி ஆகியவற்றில் குளூட்டேன் இல்லை. இன்று குளூட்டேன் நீக்கப்பட்ட நிறைய உணவுப்பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் விலை பிற பொருட்களை விட விலை சற்று கூடுதலாக இருக்கும். ஒவ்வாமை ஏற்படுவதன் முக்கியக் காரண

பசிக்கும் உணவுக்கும் என்ன தொடர்பு?

படம்
pixabay பசியும் ஆசையும்! நமக்கு பசி ஏற்படுவது அவசியமான தேவை. தூக்கம், பசி என்ற இரண்டுமே உடலின் அடிப்படைத் தேவை. உடலுறவு போன்றவை பிற ஆசைகள். உடலின் ஆற்றல் குறையும்போது இரண்டு விஷயங்கள் நமக்கு ஏற்படும். ஒன்று பசி, மற்றொன்று தூக்கம். பசி எப்படி தோன்றுகிறது? வயிற்றிலுள்ள குடல்பகுதி, கொழுப்பு சேகரிக்கும் பகுதி, மூளை, கண்கள், வாய் ஆகியவற்றால் பசி உருவாகிறது. கட்டுப்படுத்தப்படுகிறது. மதிய நேரத்தில் நிலாச்சோறு உணவகத்தைப் பார்த்தவுடனே எப்படி பசிக்கிறது? நீங்கள் அந்த உணவகத்தைப் பார்க்கிறீர்கள். அங்கு வடை, போண்டா தட்டில் இருக்கிறது. பல்வேறு நிறங்களில் உள்ள உணவுகளை அங்குள்ள மக்கள் வேகமாக அள்ளி சாப்பிடுகிறார்கள். இதைப்பார்க்கும் கண்கள் மூளைக்கு சிக்னல் கொடுக்க, மூளை வயிற்றை சோதனையிட்டால் அங்கு உணவு இருக்கிறதா என்பது தெரிந்துவிடும். உடனே வயிற்றில் சத்தம் கேட்கத்தொடங்க, வாயில் உமிழ்நீர் சுரக்கத் தொடங்குகிறது. நீர்  உடலில் எளிதாக உட்கிரகிக்கப்படுகிறது. தாகத்தைப் போக்குகிறது. உடலைக் குளிர்விக்கிறது. ஃபைபர்  பல்வேறு தானியங்களில் நிறைந்துள்ளது. செரிக்க கடினமானது. எனவே வயிற்றை நிறைத

சிறந்த புரத உணவுப் பவுடர்கள்!

படம்
ஜிம்முக்கு போனபிறகும், சிக்கன், மட்டன் என உணவுகளாக தின்றால் உடம்பு தேறாது. அதற்கு பதிலாக நல்ல நிறுவனங்களாக பார்த்து புரத பவுடர்களை வாங்கி உடற்பயிற்சியை முடித்தபிறகு குடிக்கவேண்டும். இதன்மூலம் தசைக்கிழிவுகள் விரைவில் குணமாகும். உடல் சோர்வு இருக்காது. தசை வளர்ச்சி வேகமாக இருக்கும். இதற்காக சில புரத உணவு பவுடர்களை உங்களுக்காக கூறுகிறோம். கேஓஎஸ் தாவர  புரத உணவு பவுடர் இதில் இறைச்சி தொடர்பான எந்த அம்சங்களும் கிடையாது. தாவர பருப்பு, கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் புரதங்களை சேர்த்து பவுடராக்கி உள்ளனர். பால், குளூட்டேன் உள்ளிட்ட அலர்ஜி விஷயங்கள் இதில் கிடையாது. ஆனால் பருப்பு வகைகளை அடிப்படையாக கொண்ட புரத பவுடர் என்பதால் கவனமாக சாப்பிடுங்கள். அலர்ஜி அறிகுறி தெரிந்தால், உடனே சாப்பிடுவதை நிறுத்துவது உடல்நலனைக் காக்கும். சாக்லெட், வெனிலா சுவைகளில் கிடைக்கும் இந்த நிறுவன பவுடர் புகழ்பெற்ற ஒன்று. காரணம், இந்த பவுடரின் இனிய சுவை. எளிதாக செரிமானம் ஆகும் தன்மையும் இதன் பிளஸ் பாய்ன்ட். ஐஎஸ்ஓப்யூர் ஜீரோ கார்ப் புரத உணவு பவுடர் எனக்கு மாஸ் வேண்டாம். வேப்பமரத்து வேர் உடலில் பா

வாக்கிங் செல்லும்போது வாயில் எச்சில் சுரப்பது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி ஓடும்போது அதிக எச்சில் சுரப்பது ஏன்? குளிர்ந்த சூழலில் ரீபோக் ஷூ மாட்டிக்கொண்டு ஓடினால் உங்களுக்கு வாயில் எச்சில் அதிகம் சுரக்கும். ஆனால் அதுவே வெயில் நேரத்தில் மாராத்தான் ஓடினால் எச்சில் சுரக்காது. மூக்கு வழியாக மூச்சு விடாமல் வாய் வழியாக மூச்சு விட்டால் எச்சில் சுரப்பு அதிகரிக்கும். உடல் தன் தேவைக்கான நீரை பெற தாமதம் ஆனால் எச்சில் சுரப்புக்கு நீரை செலவழிப்பதை நிறுத்திவிடும், ஏனெனில் உடலின் பிற உறுப்புகளுக்கு நீர் வேண்டுமே? உடற்பயிற்சிகள் தீவிரமாகச்செய்யும்போது எம்யுசி5பி (MUC5B ) புரதம் சுரக்கிறது. இது இயல்பாகவே உடலின் எச்சில் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் எச்சிலின் அடர்த்தியை அதிகரிக்கப்பதும் இதுதான். நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்

சுருள் சுருளான முடிக்கு காரணம் என்ன?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி முடி எப்படி சிலருக்கு மட்டும் சுருள் சுருளாக இருக்கிறது? உங்கள் கோரைப்புல் முடியைக்கூட நேச்சுரல் அல்லது க்ரீன் டிரெண்ட்ஸில் கொடுத்தால் கர்லிங் ஹேராக மாற்றிக்கொள்ள முடியும். இந்த நேரத்தில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள். அறிவியல்பூர்வமாக பார்த்தால் பதில் சிம்பிள் - மரபணுக்களின் மேஜிக்தான் அனைத்தும். புரத மூலக்கூறுகள்  செய்யும் வேதி சமாச்சார விளைவுகள்தான் சுருள் சுருளான முடிக்கு காரணம். உங்களுக்கு இருந்தால் உங்கள் மனைவி, காதலி பிடித்து இழுத்து விளையாடுவார்கள். இதையெல்லாம் சந்தோஷமாக அனுபவிப்பதை விட்டுவிட்டு ஏராளமாக கேள்விகளை கேட்டு நின்றால் எப்படி? நன்றி - பிபிசி

புரோட்டின் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது நல்லதா?

படம்
புரோட்டின் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா? சாதாரண ஐஸ்க்ரீமில் கொழுப்பு அதிகம் இருக்குமென்றால், இதில் புரோட்டீன் சார்ந்த பொருட்கள் அதிகமாக இருக்கும். மற்றபடி அனைத்தும் ஒன்றுதான். செயற்கை இனிப்பூட்டி ஸ்டெவியா என்பதை ஐஸ்க்ரீம் தயாரிப்பாளர்கள் சேர்ப்பாளர்கள். விலை குறைவு, சுவையோ சுவை என்பதால்தான் இந்த சுவையூட்டியை பயன்படுத்துகிறார்கள். 473 மில்லி ஐஸ்க்ரீமில் புரோட்டினின் சதவீதம் 20 ஆக இருக்கும். சர்க்கரையின் கலோரிகளை இதில் குறைத்திருப்பார்கள். வே புரோட்டின் இந்த ஐஸ்க்ரீம்களில் சேர்க்கப்படும் முக்கியமான பகுதிப்பொருள். உடற்பயிற்சியை தீவிரமாக செய்பவர்களுக்கு இந்த ஐஸ்க்ரீம் சுவாரசியமான நொறுக்குத்தீனியாக இருக்கும். புரதம் எளிதாக செரிமானம் ஆகாது. விற்பனைக்காக இதில் சர்க்கரை கூடுதலாக சேர்ப்பதும் உண்டு. பிற ஊட்டச்சத்துக்கள் இதில் கிடையாது. மேலும் அதிகம் சாப்பிடத் தூண்டும் ஆபத்தும் இதில் உண்டு. இதனை வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்பது உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு நல்ல செய்தி. நன்றி: ஹெல்த்லைன்

கார்ன் எண்ணெய் நல்லதா?

படம்
பூர்ணா கம்பெனி தவிட்டு எண்ணெய்யுடன் சோள எண்ணெய் வணிகத்தையும் செய்து வருகிறது. சூரியகாந்தி எண்ணெய்க்கு இது போட்டியா என்று பார்த்தால் இது தனி வியாபாரமாகவே நடந்து வருகிறது. உண்மையில் சோள எண்ணெய்யில் என்ன இருக்கிறது. புரதம், மாவுச்சத்து கிடையாது. ஒரு டீஸ்பூனில் (15 மி.லி) கலோரி, விட்டமின் இ, கொழுப்பு ஆகியவை உள்ளன. சோப்பு,ஷாம்பூ, பெட்ரோல், டீசல் எஞ்சின்களில் எரிபொருளாக, தொழில்துறையில் தூய்மைப்படுத்தும் பொருளாகவும் பயன்படுகிறது. பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கப்படும் சோள எண்ணெய் வீடுகளில் சமைக்கவே அதிகம் பயன்படுகிறது. சமையலில் வறுக்க இதனைப் பயன்படுத்தலாம். கொதிநிலை அதிகம் என்பதால் இதற்கு உதவுகிறது. விட்டமின் இ, லினோலெய்க் அமிலம், பைட்டோஸ்ட்ரோல் ஆகிய விஷயங்கள் இருப்பதால் இதயநலம் காப்பதற்கான எண்ணெய் பட்டியலில் சோள எண்ணெய்க்கும் இடம் உண்டு. ஓமேகா 6 ரக கொழுப்பு அதிகம் என்பதால் இதனை அதிகம் பயன்படுத்தக்கூடாது. அது எதிரிடையான விளைவுகளை ஏற்படுத்தும். நூறு சதவீத கொழுப்பு கொண்ட எண்ணெய். மருத்துவர்கள் சோள எண்ணெய்க்குப் பதிலாக ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யைப