பாம்புகளால் இரையை மென்று தின்ன முடியாது? ஏன் தெரியுமா?
பதில் சொல்லுங்க ப்ரோ ? வின்சென்ட் காபோ பாம்புகள் தாம் பிடிக்கும் இரையின் சுவை உணரமுடியுமா ? நிச்சயமாக . அவற்றின் வாசனை அறியும் திறன் அதிகம் . தனது நாக்கின் மூலம் பல்வேறு வாசனைகளை அறிந்துதான் இரையை வேட்டையாடுகிறது . நாக்கு மேலண்ணம் மூலம் கசப்பான சுவைகளை எளிதாக அறிய முடியும் . இந்த தன்மை கூட அவை நச்சு நிரம்பிய உயிரினங்களை வேட்டையாடி உண்டுவிடக்கூடாது என்பதற்காக இயற்கை தந்த கொடை . மற்றபடி அதன் முக்கியமான பலம் , வாசனையை அறிந்து இரையை வேட்டையாடுவது , தனக்கான இணையை அறிவது ஆகியவைதான் . பாம்புகள் சாப்பிடும்போது எப்படி சுவாசிக்கின்றன ? பாம்புகள் உணவை மென்று சாப்பிடுவதில்லை . அப்படியே விழுங்கிவிடுகின்றன . இச்சூழ்நிலையில் அவை மூக்கு , அல்லது வாய் மூலம் சுவாசிக்கின்றன . இரையை முழுமையாக விழு்ங்குவது என்பது நெடுநேரம் நடக்கும் செயல்முறை . வாய்க்கும் நாக்குக்கும் இடையில் உள்ள கிளாட்டிஸ் என்ற அமைப்பு வாய் மூலம் சுவாசிக்கி நகர்ந்து கொடுக்கிறது . பாம்புகளால் கடிக்க முடிந்தால் ஏன் இரையை மென்று தின்ன முடியாதுழ அதன் வாய் அமைப்பு அப்படி அமைந்துள்ளது . முன்புறம்