நூல் விமர்சனம் :1984 சீக்கியர்கள் படுகொலை
1984 சீக்கியர்கள் படுகொலை ஜெ.ராம்கி கிழக்கு அக்டோபர் 30 அன்று இந்திராகாந்தி பாதுகாவலர்களால் சுடப்பட்டார். அடுத்த நாள் இந்திராகாந்தியின் உடல் அஞ்சலி செலுத்தப்படும்போது தொடங்கிய சீக்கியர்களின் மீதான திட்டமிட்ட தாக்குதல்களால் மேற்கு டெல்லியிலுள்ள திலக் விகார் காலனி முழுக்க விதவைகளாக சீக்கியப்பெண்கள் நிறையும் அளவு கொடூரமானதாக மாறியது. ராஜீவ்காந்தி அரசு திட்டமிட்டு நிகழ்த்திய படுகொலையில் அதிகம் பலியானது டெல்லியில் வாழ்ந்த லாபனா எனும் தலித் சீக்கியர்கள்தான். இது பெரியளவு பஞ்சாபின் ஜாட் சீக்கியர்களை பாதிக்கவில்லை என்றாலும் சீக்கியர்களின் மீதான பயம் இ்ந்திராகாந்தி இறந்தபோது பெருமளவு உருவானது உண்மை. அத்தருணத்தில் நேர்மையாக செயல்பட்ட கவாய் உள்ளிட்ட டெல்லி போலீஸ் ஜெனரல், பின்னாளில் அரசினால் பழிவாங்கப்பட்டது காங்கிரஸ் அரசுக்கு களங்கம். அக்டோபர் 31,நவம்பர்1, நவம்பர் 2 என மூன்றுநாட்களில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் அதிகம். அரசின் கணக்கு 2,733 மட்டுமே. கொள்ளை, தாக்குதல் என பாதிக்கப்பட்ட சீக்கிய மக்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் மேல் என ராம்கி விவரிக