இடுகைகள்

நூல்விமர்சனக்கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூல் விமர்சனம் :1984 சீக்கியர்கள் படுகொலை

படம்
1984 சீக்கியர்கள் படுகொலை ஜெ.ராம்கி கிழக்கு அக்டோபர் 30 அன்று இந்திராகாந்தி பாதுகாவலர்களால் சுடப்பட்டார். அடுத்த நாள் இந்திராகாந்தியின் உடல் அஞ்சலி செலுத்தப்படும்போது தொடங்கிய சீக்கியர்களின் மீதான திட்டமிட்ட தாக்குதல்களால் மேற்கு டெல்லியிலுள்ள திலக் விகார் காலனி முழுக்க விதவைகளாக சீக்கியப்பெண்கள் நிறையும் அளவு கொடூரமானதாக மாறியது. ராஜீவ்காந்தி அரசு திட்டமிட்டு நிகழ்த்திய படுகொலையில் அதிகம் பலியானது டெல்லியில் வாழ்ந்த லாபனா எனும் தலித் சீக்கியர்கள்தான். இது பெரியளவு பஞ்சாபின் ஜாட் சீக்கியர்களை பாதிக்கவில்லை என்றாலும் சீக்கியர்களின் மீதான பயம் இ்ந்திராகாந்தி இறந்தபோது பெருமளவு உருவானது உண்மை. அத்தருணத்தில் நேர்மையாக செயல்பட்ட கவாய் உள்ளிட்ட டெல்லி போலீஸ் ஜெனரல், பின்னாளில் அரசினால் பழிவாங்கப்பட்டது காங்கிரஸ் அரசுக்கு களங்கம். அக்டோபர் 31,நவம்பர்1, நவம்பர் 2  என மூன்றுநாட்களில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் அதிகம். அரசின் கணக்கு 2,733 மட்டுமே. கொள்ளை, தாக்குதல் என பாதிக்கப்பட்ட சீக்கிய மக்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் மேல் என ராம்கி விவரிக

நூல்முகம் - வின்சென்ட் காபோ, ரிச்சர்ட் மஹாதேவ்(2)

படம்
                                                                                                                                                                                                      6 நான் தமிழ் சினிமா பார்ப்பதில்லை  சுதேசமித்திரன் பாதரசம் வெளியீடு இந்நூல் திரைப்படம் குறித்த ஜெ.பிஸ்மியின் களவுத்தொழிற்சாலை நூலை ஒத்ததே. சுதேசமித்திரன் திரைப்படத்தின் தன்மை, அதன் தட்டையான வடிவம், திரைக்கதை, திரைப்பட அரசியல், திரைப்படத்தின் நீளம் என பல்வேறு விஷயங்களை பார்வையாளர் புறமிருந்து ஆதங்கத்தோடு பேசுகிறார்.  படங்களை பெரிதும் விரும்புகின்ற எளிய சராசரி சினிமா விரும்பியின் மனப்புழுக்கங்கள்தான் இவை இதை வாசிக்கும் எவரும் உணர முடியும். படங்கள் தம் மண்சார்ந்த தன்மையை இழந்தது காலத்தின் கட்டாயம்தான். உலகமயமாக்கலின் கால கட்டத்தில் மொழி, கலாச்சாரம், உணவு எல்லாவற்றையும் வணிகமாக்கும் நிறுவனங்கள் கலை குறித்த சிந்தனையில்லாமல் அனைத்தையும் உறிஞ்சி செரித்து செழுமையாகின்றன. பிற மொழி நாட்டு திரைப்படங்களைப் பார்த்து படமெடுத்து தமிழ்ப்பட

நூல்முகம் - வின்சென்ட் காபோ ரிச்சர்ட் மஹாதேவ்(1)

படம்
                                                                                                                                             1 கிரேட் டிக்டேட்டர்  சர்வாதிகாரி திரைக்கதை தமிழில்: விஸ்வாமித்திரன் கருத்துப்பட்டறை வெளியீடு சர்வாதிகாரி திரைக்கதையை படிக்கும் முன் சார்லி சாப்ளினின் சுய சரிதத்தை ஒருமுறை படித்துவிடுவது அவரது படங்களை, அவரை புரிந்துகொள்ள உதவியாய் இருக்கக்கூடும். சர்வாதிகாரி திரைப்படம் எங்கே முக்கியத்துவம் பெறுகிறது என்றால் அது எடுக்கப்பட்ட காலத்தைப் பொறுத்துத்தான்.    ஹிட்லர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலே அவரை கடுமையாக பகடி செய்த இப்படைப்பு லாப, நஷ்ட கணக்குகளைத் தாண்டி கவனம் ஈர்க்க காரணம் சாப்ளினின் நேர்மைதான் காரணம் என்பேன். நிஜம் இதைவிட கோரமாக இருந்தது.  முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் யூதன் ஒருவரின் வாழ்க்கையோடு அரசு அதிகாரிகள் அந்நாட்டின் சர்வாதிகாரி அடினாய்டு ஹிங்கல் கட்டளைகளை செயல்படுத்தக் காட்டும் மூர்க்கத்தனம் என காட்சிகள் விரிகின்றன. முதலில் போர்களை பகடி செய்யும் காட்சிகளில் யூதராக ஒரு சாப்ளின் நடி