இஎம்எஸ் (1909-1998)
இஎம்எஸ் (1909-1998) கேரளாவின் மலப்புரத்தில் பிறந்த மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சியை தென்னிந்தியாவில் பெயர் தெரிய வைத்த மனிதர், எலம்குலம் மணக்கால் சங்கரன் நம்பூதிரிபாடு. கேரளாவின் முதல் முதலமைச்சராக பதவியேற்ற ஆளுமை. பரமேஸ்வரன் நம்பூதிரிபாடு, விஷ்ணுதாதா அந்தர்ஜனம் தம்பதிக்கு நான்காவது மகனாக பிறந்தவர் கல்வி கற்றது திருச்சியில். இந்து அடிப்படைவாதி என காந்தியை விமர்சித்த இஎம்எஸ், தன் இளமையிலேயே ரிக்வேதத்தை கரைத்து குடித்து மூளையின் நியூரான்களில் ஏற்றிக்கொண்ட படிப்பாளி. கிலாபத் இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் ஆகியவற்றில் அர்ப்பணிப்போடு கலந்துகொண்டவருக்கு பிடித்த இதழ், மாத்ருபூமி. 1921 ஆம் ஆண்டு மாப்ளா கலக நிகழ்வுகள் ஏற்பட்டபோது இஎம்எஸ்ஸின் வீடு அப்பகுதியை ஒட்டியிருந்ததால் அங்கிருந்து வெளியேறும் சூழல் உருவானது. சட்டமறுப்பு இயக்கத்தை விட கிலாபத் இயக்கம் கேரளாவில் முன்னிலை பெற்றதற்கு காரணம், முஸ்லீம்கள் எண்ணிக்கைதான். இதனால் அவர்களுக்கு எதிரான எண்ணம் உயர்ஜாதி இந்துகளிடம் உருவானது. பின்னர் இது கலவரமாக வெடித்தது. தான் இறக்கும்வரை முஸ்லீம்களின் மாப்ளா கலகம் இந்து நிலவுடையாள