இடுகைகள்

குடல் புற்றுநோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடல் புற்றுநோயை வென்ற பிறகு ஐஏஎஸ் அதிகாரி ஆடிய இரண்டாம் சுற்று! - இரண்டாம் சுற்று - ஆர். பாலகிருஷ்ணன்

படம்
  இரண்டாம் சுற்று -ஆர்.பாலகிருஷ்ணன் இரண்டாம் சுற்று ஆர். பாலகிருஷ்ணன் எஸ்ஆர்வி பதிப்பகம் இந்த நூலை எஸ்ஆர்வி பள்ளியின் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதன் பெயர் இரண்டாம் சுற்று என்பதற்கு முக்கியமான காரணம் உள்ளது. எழுத்தாளர், குடலில் புற்றுநோய் வந்து குணமான பிறகு நூலை எழுதியிருக்கிறார்.  ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் சிறகுக்குள் வானம் போலவே இந்த நூலும் முக்கியமானது. மாணவர்களுக்கான நூல்தான். ஆனால் இம்முறை பணி சார்ந்த பல்வேறு ஆழமான அனுபவங்களை வாசகர்கள் படிக்க முடியும். நூலின் வடிவம் கட்டுரை, கவிதை என்று அமைந்துள்ளது.  இதில் ஒடிசா மாநிலத்திற்கு தேர்வாகி செல்வது, அங்கு தொலைதூர கிராமத்திற்கு செல்வதும், வளர்ச்சிப்பணிகளைப் பற்றிச்சொல்வது சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நவடா என்ற கிராமத்திற்கு அரசு அதிகாரிகளே செல்லாதபோது, வளர்ச்சிப் பணிக்காக ஆர். பி அங்கு செல்கிறார். இதன் விளைவாக அந்த கிராமத்தினருக்கு கவனம் கிடைக்கிறது. பிந்தைய ஆண்டுகளில் வளர்ச்சிப் பணி காரணமாக மீண்டும், கிராமத்தின் பெயரை உச்சரிக்கிறார்கள். அந்த கிராமத்தினருக்கும் அரசின் திட்டங்கள் மெல்ல சென்று சேருகின்றன.  சாலைத்திட்டங்கள், குடிநீர் வ