இடுகைகள்

மகசசே விருது 2018 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனநல நோயாளிகளை தேடி சிகிச்சை தரும் மருத்துவர் வாட்வானி!

படம்
உளவியல் பணிக்கு மகசசே கௌரவம்! –- ரோனி மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்பாக பணி செய்து வரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மரு.பரத் வாட்வானிக்கு அண்மையில் ராமன் மகசேசே விருது கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலுள்ள சாரதா ஃபவுண்டேஷன் மையம் மூலம் தோராயமாக 7 ஆயிரம் பேர்களுக்கு மேல் உளவியல் மருத்துவம் அளித்து அவர்களின் குடும்பத்தோடு அவர்களை சேர்த்து வைத்து வாழ்வை புதுப்பித்துள்ளது உளவியல் மருத்துவர் பரத் வாட்வானியின் அரும்பணி. “பனிரெண்டாவது வயதிலேயே எனது தந்தையை நான் இழந்துவிட்டேன். அந்நிலையில் கல்வியிலும் சுமாராகவே இருந்தேன்” என எளிமையாக புன்னகைத்தபடி பேசுகிறார் மரு.பரத் வாட்வானி. மனநிலை பாதிக்கப்பட்டு சாக்கடை நீரை அள்ளிக்குடித்தபடி இருந்த இளைஞரை சாலையில் பார்த்து அதிர்ந்து போனார் பரத். உடனே இளைஞரை தன் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து ஆந்திராவிலுள்ள அவரின் தந்தையிடம் ஒப்படைத்த நிகழ்வே உளவியல் மையத்தை தனியாக தொடங்க முக்கியக் காரணம். 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாரதா ஃபவுண்டேஷன் மட்டுமே இன்றுவரை இந்தியாவில் மனநல நோயாளி