இடுகைகள்

மர்மம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரியல்கொலைகாரரா, கொலைகாரரின் மகனா? -பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள் !

படம்
  பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள்  தி லிஸ்டனர் சீன டிவி தொடர்  34 எபிசோடுகள்  சீன தொடர்களில் பிணவறை மருத்துவரைப் பற்றிய தொடர்கள் நிறைய உள்ளன. அவற்றில் அனைத்துமே தரமாக இருப்பதில்லை. கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து அதை அடிப்படையாக கொண்டு அறிக்கை தயாரிப்பதும், பிணத்தை கூராய்வு செய்து கொலை மர்மத்தை உள்ளபடியே கூறுவதும்தான் அவருடைய வேலை. சீன தொடர்களில் அவரே குற்றம், வன்முறை குழுவின் தலைவர் போல செயல்படுவார். விசாரணை செய்வார். குற்றவாளிகளை அடித்து துவைப்பார். இன்னும் என்னென்ன நாயகத்துவங்களை செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்வார். இந்த தொடர் இதே வகையில்தான் வருகிறது.  பிணவறை மருத்துவரான மிங் சுவான், மர்மமான ஆசாமி. அவர் எப்போத ஆய்வகத்தில் இருப்பார். வெளியில் போவார் என அவருடைய உதவியாளருக்கே தெரியாது. ஆனால் வழக்கு சம்பந்தமான விஷயங்களை துல்லியமாக தேடி ஆராய்ந்து வழக்கை வேறு கோணத்தில் அதை விசாரிப்பவர்களுக்கு காட்டி குற்றவாளியின் திசையை ஆருடம் சொல்லிவிடுவார். காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு வந்து ஆறு மணிக்கு வீடு செல்லும் ஆள் கிடையாது. மணமாகாதவர். அவருக்கு வளர்ப்பு தந்தை பே

பூமியிலுள்ள மர்மங்கள் பற்றி அறிய கேட்க வேண்டிய கேள்விகள்!

படம்
  பூமியைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. நேஷனல் கிராபிக் இதழ், டிகேபுக்ஸ் , ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்  வழியாக,  நிறைய விஷயங்கள் வெளியே தெரிய வந்தாலும் அறிய வேண்டிய பதில்கள் நிறைய உள்ளன. அப்படி சிலருக்கு தோன்றிய பூமி பற்றிய கேள்விகளும் பதில்களும் இதோ.... காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை மாற்றிக்கொள்ளுமா? இதற்கு எதிர்காலத்தில் உயிரியல் துறையில் நடைபெறும் ஆராய்ச்சிகள், மேம்பாடுகள்தான் பதில் சொல்லவேண்டும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை எப்படி மாற்றிக்கொள்ளும். அதற்கான கால வரம்பு என்ன என்பதை உடனே கூறுவது கடினம். இதை எதிர்காலத்தில்தான் ஆய்வு செய்து அறியவேண்டும்.  பேட்ரிக் வாலன்ஸ், முன்னாள் அறிவியல் ஆலோசகர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நுண்ணுயிரிகள் உதவுமா? நிலம், நீர், நமது வயிறு, கை, கால்கள் ஆகியவற்றில் ஏராளமான கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் உள்ளன. இவற்றில் நல்ல நுண்ணுயிரிகளை எடுத்து பயன்படுத்தினால் மரத்தின் வளர்ச்சியைக் கூட மும்மடங்கு அதிகரிக்க முடியும். மனிதர்களின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளை மேம்படுத்தினால் செ

சைக்கிளில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு கொல்லப்பட்ட மர்மம்! ஆம்பர் ஹாகர்மன்

படம்
  சிறுமி ஆம்பர் ஹாகர்மன் டெக்ஸாஸின் ஆர்லிங்க்டன் பகுதியில் இருந்த தாத்தாவின் வீட்டில் ஆம்பர் ஹாகர்மன் வாழ்ந்து வந்தார். வீட்டுக்கு அருகில், ஒன்பது வயது சிறுமியான ஆம்பர், தனது ஐந்து வயது சகோதரன் ரிக்கியுடன் சைக்கிளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தார். 1996ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று, கைவிடப்பட்ட வின் டிக்ஸி என்ற காய்கறிக்கடையின் பார்க்கிங் பகுதியில்தான் ஆம்பர் காணாமல் போனார். எப்போதும் போல அங்கு தனது சகோதரனுடன் சைக்கிளில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் அடையாளம் தெரியாத மனிதர் மூலம் கடத்தப்பட்டார். அப்படித்தான் அங்குள்ளவர்கள் காவல்துறையில் தகவல் சொன்னார்கள். கருப்பு நிற பிக் அப் காரில் வந்த மனிதர் ஆம்பரை சைக்கிளில் இருந்து கடத்திச்சென்றார் என வயதான தம்பதியினர் 911 என்ற எண்ணுக்கு டயல் செய்து தகவல் சொன்னார்கள். காவல்துறை அதிகாரிகள் வரும்போது, அங்கு ஆம்பரின் அடையாளம் ஏதுமில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு ஆம்பரின் இறந்துபோன உடல் கண்டெடுக்கப்பட்டது. நாயுடன் வாக்கிங் சென்றவர், கடத்தப்பட்ட இடத்திலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் இருந்த இடத்தில் ஆம்பரின் உடல் கிடப்பதை காவல்துறைக்கு தகவல்

அமெரிக்கர்களின் தூக்கத்தைக் கெடுத்து பீதிக்குள்ளாக்கிய ஸோடியாக் கொலைகாரன்!

படம்
  ஸோடியாக் கில்லர் இந்த பெயரை ஊடகங்களும், காவல்துறையினரும் மறக்கவே முடியாது. அந்தளவு அத்தனை பேரையும் பீதிக்குள்ளாக்கிய சீரியல் கொலைகாரர். அமெரிக்காவில் வடக்கு கலிஃபோர்னியாவில் 60, 70 களில் ஏராளமான கொலைகளை செய்தார். பெரும்பாலும் ஜோடிகளாக உள்ளவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு செல்வது ஸோடியாக் கொலைகாரரின் பாணி. பிறகு தனது கொலை பற்றி குறியீடாக கடிதம் எழுதி நகரின் முக்கிய பத்திரிகைகளுக்கு, காவல்நிலையத்திற்கு அனுப்பி வைப்பார். கணினியில் என்கிரிப்ஷன் டீகிரிப்ஷன் என்று கூறுவார்கள். குறியீடுகளை என்ன தகவல் என்று அறிந்துகொள்ள ஒருவர் அதை டீகிரிப்ஷன் செய்யவேண்டும். அதன்படி ஸோடியாக் கொலைகாரரின் செய்திகளை காவல்துறையினர், மக்களில் சில தன்னார்வலர்கள் டீ கிரிப்ஷன் செய்து குற்றங்களை புரிந்துகொள்ள முயன்றனர். 37 கொலைகளை செய்தாலும் 5 கொலைகளை மட்டுமே அவர் செய்தார் என காவல்துறையால் நிரூபிக்க முடிந்தது. ஸோடியாக் கொலைகாரரைப் பற்றி ஏராளமான திரைப்படங்கள், நூல்கள் வெளியாகியுள்ளன.’’ எனது இறப்பிற்கு பிறகு அடிமையாக இருக்க மனிதர்கள் தேவை, சிறுமிகளை கொல்வது எளிதானது, மக்களைக் கொல்வது பிடித்திருக்கிறது. அ

முப்பது ஆண்டுகளாக தேடப்படும் டீனேஜ் பெண்!

படம்
  தாரா காலிகோ நெடுஞ்சாலையில் காணாமல் போன டீனேஜ் பெண் – முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீளும் தேடல் 1988 ஆம் ஆண்டு, செப்டம்பர் 20ஆம் தேதி. தாரா காலிகோ என்ற பெண்ணுக்கு வயது பத்தொன்பதாகியிருந்த்து. தன் அம்மாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாக்மேன் பிளேயரை எடுத்துக்கொண்டு பாட்டு கேட்டபடியே வெளியே சென்றார். நியூ மெக்சிகோ பகுதியில் வாழ்ந்து வந்தவரான தாரா பிறகு சைக்கிளோடு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதோ   முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்னும் காவல்துறையினர் நம்பிக்கையை கைவிடவில்லை. குற்றவாளியை தேடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். தாரா சைக்கிளில் சென்று வந்த பகுதி பாலைவனத்தை ஒட்டிய நெடுஞ்சாலை. அவர் அடிக்கடி சைக்கிளில் முப்பதைந்து கி.மீ. தூரம் சென்று திரும்புவது வழக்கம். போகும்போது, ‘’நான் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு திரும்பலைன்னா, சைக்கிளுக்கு ஏதோ பிரச்னைனு புரிஞ்சுக்கிட்டு என்னை கூட்டிக்கிட்டு போறதுக்கு வந்துடுங்க’’ என்று   கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதை அவரது சகோதரி சரியாக நினைவில் கொண்டிருக்கிறார். அதுதான் தாரா பேசிய கடைசி வார்த்தைகள். முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகும் அவரைப்

ரிசார்ட்டில் நடைபெற்ற மர்மக் கொலை !

படம்
  குடும்ப உறவுகளால் ஏற்பட்ட கொலைகள் 1981ஆம் ஆண்டு அமெரிக்காவின் சியரா நெவாடா மலைப்பகுதியில் அமைந்துள்ள கெடி எனும் ரிசார்டில் படுகொலை நடந்தது. இதில், ஷூ சார்ப், அவரது   மகன் ஜானி, மகனின் தோழி டனா விங்கேட் ஆகியோர் கொல்லப்பட்டனர். உடல் அருகிலிலேயே கத்தி, சுத்தியல் கிடந்தன. கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் இருந்து பீறிட்ட ரத்தம் சுவரில், மேற்கூரையில் படிந்திருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல் கடுமையாக சிதைக்கப்பட்டிருந்தது. இவர்களைக் கட்ட எலக்ட்ரிக் வயர், டேப் பயன்பட்டிருந்தது. அடுத்த அறையில் மூன்று பிள்ளைகள் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.   அடுத்த வீட்டில் தனது தோழியின் வீட்டில் உறங்கிய ஷீலா, ரிசார்டிற்கு வந்து பார்க்கும்போது, நடந்த கொலையைப் பார்த்து அவருக்கு என்ன செய்வதென தெரியாமல் பயத்தில் உறைந்திருக்கிறார். பின்னர் உதவிகோரி அலறியிருக்கிறார். ரிசார்ட்டில் இருந்து   காணாமல் போன ஷீலாவின் சகோதரி டினா, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு   ஐம்பது கி.மீ. தொலைவில் மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டார். ரிசார்ட்டில் இருந்தவர்களில் பிழைத்தவர் ஷூ ஷார்ப்பின் மகள் ஷீலா மற்ற

26 ஆண்டுகால மர்மம் - சிறுமி ஜோன்பென்னட்டை கொன்றது யார்?

படம்
  ஜோன்பென்னட் கல்லறை ஜோன் பென்னட்டின் குடும்பம் குற்றவாளியைக் கண்டறிய முடியாத ஆறுவயது சிறுமியின் கொலை வழக்கு! 1996ஆம் ஆண்டு. அமெரிக்காவின் பௌல்டர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி. மொத்த நாடுமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்தது. கொலராடோ பௌல்டர் காவல்நிலைய அதிகாரிகள் என அனைவருமே விழா கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால் அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி அலைகழிக்கப்படும் என அவர்கள் அறியவில்லை. அடுத்தநாள் காவல்நிலையத்திற்கு அழைப்பு ஒன்று வந்தது. ஆறு வயது சிறுமி, அவளது வீட்டின் கீழ்தளத்தில் இறந்து கிடக்கிறாள் என்று. அதிகாரிகள் உடனே ரோந்து வண்டியை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு போனபோது இறந்துபோன சிறுமியின் பெயர் ஜோன்பெனட் ராம்ஸே என தெரிய வந்தது. அப்பாவித்தனமும், மலர்ந்த புன்னகையுமாக பேரழகியாக வளர்ந்து வரும் சாத்தியங்கள் கொண்டவள். அவள் வீட்டிலேயே அடித்தும், கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டு கிடந்தாள்.   சிறுமியின் அம்மா, பாட்ஸி, அழகுப்போட்டிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர். இவரது கணவர் ஜான் ராம்ஸே கணினி பழுது பார்க்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். ஜானுக்கு, பாட்ஸி இரண்டாவது மனை

தனது அப்பா சீரியல் கொலைகாரர் அல்ல என்று நிரூபிக்க போராடும் மகன்! தி கில்லர் இன்சைட் - ஜேடிராமா

படம்
  தி கில்லர் இன்சைட் - ஜே டிராமா தி கில்லர் இன்சைட் ஜே டிராமா 9 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்கொலைகாரர் எல்எல். டஜன் கொலைகளை செய்கிறார். காவல்துறை அவரை கைது செய்யும் முன்னரே, தற்கொலை செய்துகொள்கிறார். அத்தோடு அரசு அதிகாரிகள் அந்த பிரச்னையை முடித்துவிடச் சொல்கிறார்கள். வழக்கும் தீர்க்கப்படுகிறது. தற்போதைய காலத்தில் நகரில்   எல்எல் கொலைபாணியில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக சித்திரவதை செய்து கொள்ளப்படுகிறார். இந்த கொலை விசாரணை தொடர்பாக,   தொடர் கொலைகாரரின் மகன் இஜி  (ரியோசுகே யமடா)  விசாரிக்கப்படுகிறார். இதனால், பல்கலைக்கழகத்தில் மாணவரான அவரின் அடையாளம் தெரிந்த   மாணவர்கள் அவரை கேலி அவதூறு செய்கின்றனர்.   இஜியைப் பொறுத்தவரையில், அவரது அப்பா, குற்றவாளி அல்ல என நம்புகிறார். நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை. அல்லது   தொடர்கொலைகாரர் எல்எல்லை   பிடிக்கவேண்டும். உண்மையில் இந்த முயற்சியில்தான் இஜி தனக்கு ஆளுமை பிறழ்வு குறைபாடு இருக்கிறது என்பதை தோழி மூலம் அறிகிறார்.   அதன் விளைவாக, தெரிய வரும் பி1 குன் என்ற பாத்திரம், முற்றிலும் வேறு ஆளுமையைக் கொண்டிருக

இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிரான கல்தூண்கள் - ஸ்டோன்ஹென்ச்

படம்
  ஸ்டோன்ஹென்ச் அமைந்துள்ள இடம் வில்ட்ஷையர், இங்கிலாந்து சிறப்பு கலாசார இடம் நிலவுக்கே சென்றாலும் தேயாத செருப்பெல்லாம் வேண்டாம். கொஞ்சம் நல்ல பிராண்ட் செருப்பை வாங்கிப் போட்டுக்கொண்டு செல்லுங்கள். மழை பெய்தால் வழுக்கிவிடும் ஜாக்கிரதை. பார்க்க தமிழ்நாட்டின் கிராமங்களில் அமைந்துள்ள சுமைதாங்கிக் கற்கள் போலவே இருக்கும். சுமைதாங்கி கற்களை யார் அமைத்தார்கள் என்பது ஊர்காரர்களுக்குத் தெரியும். ஏனெனில் கர்ப்பிணியாக இருந்து குழந்தை பெறும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக இறக்கும் பெண்ணின் நினைவுக்காக சுமைதாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன. இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹென்ச் என்னும் இவ்வகை கற்கள் யாரால், எதற்காக அமைக்கப்பட்டன என்று தெரியாது. கேள்விகளுக்கு பதில் தெரியாது என்று நிறைய இருந்தாலும் கூட இந்த கல் தூண்களுக்கு பெருமைக்கு குறைவில்லை. புதிரான கல் தூண்கள் அமைக்கப்பட்ட காலம் 3,500 ஆக இருக்கலாம். ஆண்டுதோறும் இதை பார்க்கவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இதில் உள்ள சில கற்களுக்கு பெயர்கள் கூட வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கற்களின் பெயர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆல்டர், சினிஸ்டர

சிவன் கோவிலை புனரமைக்கும் இரட்டைத் தலை நாகம் - நந்தி ரகசியம் - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
நந்தி ரகசியம்  இந்திரா சௌந்தர்ராஜன் மின்னூல்  இறைவனை நம்பினால் இன்னல் நீங்கும். அதற்கு மனித முயற்சியும் சிறிது தேவை என்பதை நூலாசிரியர் கூறுகிறார். கதையும், அதற்கான சம்பவங்களும் வலுவாக இல்லை என்பதே நாவலின் பெரும் பலவீனம்.  நாவலை படிப்பதை விட நூலில் உள்ள கோவில் அமைவிடம், ஏன் கோவில் குறிப்பிட்ட கன்னி மூலையில் அமைக்கப்படுகிறது என்ற தகவல்கள் துணுக்குகளாக வாசிக்க நன்றாக இருக்கின்றன.  ஊர் பெரிய மனிதர் உடையார். அவர் சிந்தாமணி என்ற பெண்ணை உடலுறவுக்கென காதலியாக சேர்த்துக்கொள்கிறார். இதனால் அவரை திருமணம் செய்த மனைவி திரௌபதி கணவனை விட்டு விலகுகிறாள். அதே ஊரில் தனது மனநிலை சரியில்லாத மகனுடன் தங்கியிருக்கிறாள். ஒருநாள் உடையார் இறந்துவிட, காதலி அழுதுக்கொண்டிருக்க ஊர் பெரியவர்களில் ஒருவர் உடையாருக்கு உரிய மனைவி என்பவள் திரௌபதிதான்.அவளைக் கூப்பிட்டால்தானே உடலுக்கான காரியங்களை செய்ய முடியும் என சொல்லுகிறார். இந்த நேரத்தில் சொத்து தொடர்பான வாக்குவாதம் தொடங்குகிறது. உடையாரின் வழக்குரைஞர் வாதிராஜ், அனைத்து சொத்துகளும் காதலியான சிந்தாமணிக்கு சொந்தம் என்று எழுதிய உயிலைக் காட்டுகிறார். கூடவே கட்டாந்தரையாக கிட

பூமியின் அடித்தட்டு மர்மம்!

படம்
  பூமியின் அடித்தட்டு மர்மம்! பூமியின் கீழ்ப்புறபகுதியில் நிறைய மர்மங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும் நாம் அறிந்தது, குறைவான தகவல்களைத்தான். புவியோடு பகுதி, மூடகப் பகுதியைக் (Mantle) கடந்து கண்டத்தட்டுகள், வெளிப்புற, உட்புற கருவப் பகுதிகளில் (Outer, inner core ) அழுத்தமும் வெப்பமும் அதிகம். பூமியின் கீழே 5 ஆயிரம் கி.மீ. ஆழத்திற்கு செல்லும்போது, அங்குள்ள உட்கருவத்தில்  இரும்பு, நிக்கல் உருண்டையான வடிவத்தில் உள்ளது என்பதே ஆய்வாளர்களின் எண்ணமாக இருந்தது.  நேச்சர் இதழில் வெளியாகியுள்ள அறிவியல் அறிக்கையில், உட்கருவத்தில் திட, திரவம் என இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையில் (Super ionic state) பொருட்கள் உள்ளன என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆய்வுக்காக, நிலநடுக்க அலைகளைப் (Seismic waves) பயன்படுத்தியுள்ளனர்.  புவி அடுக்குகளுக்கு இடையில் நிலநடுக்க அலைகள் வெவ்வேறு அலைநீளத்தில் செலுத்தப்பட்டு, அதில் உள்ள வேதியியல் பொருட்களை அறிய முயன்றனர். இதற்கு முன்னர் செய்த ஆய்வில், ஷியர் அலைகளை (Shear waves)  பயன்படுத்தினர். இதில் கிடைத்த  தகவல்களை வைத்து, புவியின் உள் கருவத்த

புத்தகம் புதுசு - சாபம் கொண்ட வைரத்தின் கதை

படம்
  தி கிங் ஹூ டர்ன்டு இன்டு எ செர்பன்ட் அண்ட் அதர் திரில்லிங் டேல்ஸ்  ஆஃப் ராயல்டி ஃபிரம் இண்டியன் மித்தாலஜி சுதா மாதவன் ஹாசெட் 399 நூலில் மொத்தம் 15 ஆர்வமூட்டும் கதைகள் உள்ளன. நூலில் உள்ள ஓவியங்கள் அழகாக உள்ளன. இதில் வரலாற்றில் உள்ள மன்னர்கள் இடம்பெற்றுள்ளனர்.  லேடிஸ் டெய்லர் பிரியா ஹஜேலா ஹார்ப்பர் கோலின்ஸ்  399 பெண்களுக்கான உடைகளை உருவாக்கி தைப்பவர் குருதேவ். பிரிவினைக்கு பிறகான காலத்தில் நடைபெறும் கதை. அப்போது, குருதேவ் பாகிஸ்தானின் கிழக்குப்புறம் பிழைக்க செல்கிறார். அங்கு சென்று தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறார் என்பதே இந்த நாவலின் கதை.  தி டெத் ஆஃப் கீர்த்தி கடக்கியா மீட்டி ஷெராப் ஷா ப்ளூம்ஸ்பரி இந்தியா 499 இது ஒரு மர்ம நாவல். ரதி ஜாவேரியின் தோழி சஞ்சனா. இவள் தனது முதல் குழந்தையை பெற்றெடுக்கவிருக்கிறாள். சஞ்சனா அப்போதுதான் தனது தந்தையை இழந்திருக்கிற நேரமும் அதுதான். சஞ்சனாவை பயமுறுத்தும் விஷயங்களை நடைபெற, அவளுக்கு உதவியாக ரதி வந்து மர்மங்களை கண்டறிகிறாள். இதுதான் கதை.  ஆஸ்மா ஐ நூர் - தி கர்ஸ்டு ஜூவல் சுதிப்தா சென் குப்தா ரூபா 395 ஆஸ்மா ஐ நூர் என்பது பிரிட்டிஷ் கால இந்தியாவி

வாசிக்க வேண்டிய சிறுவர் கதைகள்!

படம்
  கிராண்ட்பா ஃபிராங்க் கிரேட் பிக் பக்கெட் லிஸ்ட் ஜென்னி பியர்சன் ஓவியம் டேவிட் ஓ கானல் அஸ்பார்ன் புக்ஸ் ஃபிராங்கிற்கு அவரது பாட்டியிடமிருந்து பணம் கிடைக்கிறது. அதுவும் அவன் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு.... ஆனால் அதைப் பெற நிறைய விதிகள், நிபந்தனைகள் உள்ளன. கூடவே புதிய தாத்தாவும் வருகிறார். பணத்தை பிராங்க் எப்படி செலவு செய்தான், அதனால் அவனுக்கு மகிழ்ச்சி கிடைத்ததா என்பதே கதை.  ஹவ் டு டிரெய்ன் யுவர் டாட் கேரி பால்சன் மேக்மில்லன்  பனிரெண்டு வயது சிறுமி கார்ல், தனது அப்பாவை எப்படி தனக்கேற்றபடி பயிற்சி கொடுத்து மாற்றுகிறாள் என்பதே நூலின் கதை. கார்லின் அப்பா, அவளுக்கு எடுத்து தரும் துணி கூட பழையதாகவும் குப்பையில் இருந்து எடுத்து வந்தது போலவும் இருக்கிறது. அப்பாவின் இப்படிப்பட்ட செயலால், தான் நண்பர்கள் மத்தியில் அவமானப்படுவதாக கார்ல் நினைக்கிறாள். இதனை எப்படி மாற்றுகிறாள் என்பதே கதை.  கிரேட்டா அண்ட் தி கோஸ்ட் ஹன்டர்ஸ்  சாம் கோப்லேண்ட் ஓவியம், சாரா ஹோம் கிரேட்டாவிற்கு திடீரென பேய்களைப் பார்க்கும் சக்தி கிடைக்கிறது. அவளது பூர்வீக வீட்டில் தனது தாத்தாவைக் கூட பார்க்கிறாள். இந்த சக்தியை வை