இடுகைகள்

இளவரசன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறக்கும் நிலையிலுள்ள இளவரசனை கொலை செய்ய முயலும் கூலிப்படையினர்!

படம்
    இல் மாஸ்டர் ஆப் பேக் கிளான் குன்மாங்கா.காம். பேக் என்ற இனக்குழுவில் பிறக்கும் மூத்த பிள்ளை, தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள முடியாத உடல்நலக்குறைபாடு ஏற்படுகிறது. பிறக்கும்போதே, ஆன்ம ஆற்றல் தடை என்பது உடலில் ஏற்பட்டுவிடுகிறது. இதனால், அவனுக்கு வரவேண்டிய குடும்ப தலைவர் பதவி தம்பிக்கு செல்கிறது. யிகாங், குடும்பத்தில் புறக்கணிக்கப்பட்டு சற்று தொலைவில் உள்ள வீட்டில் தங்க வைக்கப்படுகிறான். இழிவும் அவமானப்படுத்தல்களும் தினசரி நிகழ்ச்சியாகின்றன. இப்படியான சூழலில் அவனை படுகொலை செய்ய அன்னிய சக்திகள் முயல்கின்றன. அந்த முயற்சியில், அவன் அன்பு கொண்டிருந்த பணிப்பெண் சோ ஹ்வா இறந்துபோகிறாள். அது அவனது மனதை பாதிக்கிறது. நாயகன் யிகாங், தப்பி ஓடும்போது ஓரிடத்தில் நிலவறை போல ஓரிடம் உள்ளது. அங்கு உள்ள துருப்பிடித்த வாளை கையில் எடுக்கிறான். அதில் உள்ள ஆன்மா தூக்கம் கலைந்து எழுகிறது. அது வேறுயாருமல்ல. பேக் இனக்குழுவின் முன்னோடியான வாள்வீரர் ஒருவர்தான். அவரின் ஆன்மா, வாளோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர், நாயகன் யிகாங் உடலில் புகுந்து எதிரிகளை கொல்கிறார். இதனால், யிகாங் அவனது அப்பாவைப் பார்க்கும் வாய்ப்பு ...

இருளர் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை வழங்கும் ஆசிரியர் இளவரசன்! - அரியலூரில் புதிய முயற்சி

படம்
  இன்று தேர்வு எழுதுவதும் அதில் தேர்ச்சி பெறுவதும் கடந்து நினைத்த லட்சிய படிப்பை படிப்பதற்கான வேட்கை அதிகம் உள்ளது. இதற்கு தடையாக ஒன்றிய அரசு பல்வேறு அரசியல் விளையாட்டுகளை விளையாடி ஏராளமான நுழைவுத்தேர்வுகளை புரியாத மொழியில் வைத்து சவால்களை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் மாணவர்களை ஜெயிக்க வைக்க சிலர் தங்களையே தீக்குச்சியாக எரித்துக்கொண்டு உழைத்து வருகிறார்கள். அரியலூரின் ஓலையூர், பாப்பன் குளம் பகுதியில் 67 இருளர் குழந்தைகள் உள்ளனர். இவர்களைப் போன்றவர்கள் வறுமையை சமாளித்து பள்ளிப்படிப்பை தாண்டுவதே கடினம். அதிலும் வென்று கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதெல்லாம் மனோரமா இயர் புக்கில் வெளிவந்தாலும் ஆச்சரியமில்லை.  இவர்களுக்கு பயிற்றுவிக்க இளவரசன் முன்வந்து உதவி வருகிறார். தனியார் பள்ளி ஆசிரியரான இவர், மாலை நேரங்களில் இருளர் குழுந்தைகளுக்கு வகுப்புகளை எடுத்து வருகிறார். ஞாயிறு மட்டும் விடுமுறை. இப்பணியை கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்து வருகிறார்.  1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார் இளவரசன். இவரது கல்வி நிலையத்திற்கு பெயர் மகாத்மா காந்தி மாலைநேர படிப...