இடுகைகள்

ஜான்சன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இருளர் குழந்தைகளை படிக்க வைக்க அரும்பாடுபடும் ஆசிரியர்!

படம்
  கிருஷ்ணகிரியிலிருந்து அறுபது கிலோமீட்டர்களைக் கடந்தால் கேளமங்களம் கிராமத்தை அடையலாம்.இங்கு, மலை மீது அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்பது பிள்ளைகள் படிக்கிறார்கள். இங்கு ஆசிரியராக இருந்தவர், அதிக தூரம் பயணித்து வந்து மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை சித்திரவதையாக நினைத்து பணிமாறுதல் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். இதனால், ஓராசிரியர் பள்ளியாக செயல்பட்ட தொடக்கப்பள்ளியை அப்படியே விட்டுவிட முடியாது அல்லவா? அப்படித்தான் ஓசூரிலிருந்து டி ஜான்சன் என்ற ஆசிரியர் இங்கு மாறுதல் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஆசிரியராக பொறுப்பேற்றவர், இன்றுவரை அங்கிருந்து கிளம்புவதற்கான வழியைத் தேடாதது ஆச்சரியம். பள்ளியில் படிக்கும் இருளர் குழந்தைகளுக்கு கல்வியை சிறப்பாக சொல்லித் தரவே முயன்றார். ஜான்சன், ஓசூரைச் சேர்ந்தவர். அங்கிருந்து இரு நாட்களுக்கு சோறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார். ஒருமுறை வந்துவிட்டால், பிறகு அந்த வாரம் முழுக்க ஊருக்கு செல்லமாட்டார். அங்கேயே தங்கி பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு வகுப்பறையில் தங்கிக் கொள்கிறார். பிறகு, வார விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்.

தெரசா மேக்கு விடைகொடுக்கும் நேரம் !

படம்
போரிஸ் ஜான்சன் அடுத்த இங்கிலாந்து பிரதமராகிறார். இப்போதே அவரை இங்கிலாந்தின் அடுத்த டிரம்ப் என்று ஒரு கூட்டமும், மற்றொரு கூட்டம் அவர்தான் அடுத்த சர்ச்சில் என்றும் பேசிக்கொண்டிருக்கிறது. தெரசா மேக்கு இது பிரிவு உபசார நேரம். இன்னும் சிறிது நேரத்தில் டௌனிங் தெருவில் தன் கணவர் பிலிப்புடன் விருந்தில் பங்கேற்று தன்னுடன் பணியாற்றிய அலுவலக ஊழியர்களுக்கு விடை சொல்லுவார். இது தெரசா மேவின் இறுதி சொற்பொழிவுக்கு முன்னாடி நடைபெறும். இவர் பக்கிங்காம் பேலஸ் சென்று ராணி முன்னே தன் பதவியை விட்டு விலகியதைக் கூறுவார். மந்திரிசபையை ஜான்சன் மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. அடுத்து பிரெக்ஸிட் திட்டத்தை அனைவரும் ஏற்கச் செய்யும் பெரும் பொறுப்பு இவரின் தோள் மீது ஏறுகிறது. தெரசா மே, ராணியின் முன் பதவி விலகுவதோடு போரிஸ் ஜான்சன் பதவியேற்பதையும் பார்க்கும் அவலம் வேறு உள்ளது. இது பழங்கால நெறிமுறைப்படி நடைபெறும் சடங்கு. தெரசா மே பதவி விலகினாலும் அவர் மூன்றாண்டுகளாக பிரதமராக பதவி வகித்திருக்கிறார். பிரிட்டனின் வரலாற்றில் இரண்டாவது பெண்மணி இவர். நன்றி: சிஎன்என்