இடுகைகள்

ஜெய்ப்பூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரு நாய்களைப் பராமரிக்கும் மருந்துகடை உரிமையாளர்!

படம்
  ஜெய்ப்பூரைச் சேர்ந்த வீரென் சர்மா பற்றி உங்களுக்குத் தெரியுமா? இவர் கால்நடை, செல்லப்பிராணிகளுக்காக மருந்துக்கடை நடத்துகிறார். அதையும்கூட இவர் தொடங்கவில்லை. சர்மாவின் தாத்தா 1957இல் தொடங்கியதை அப்படியே பின்தொடர்கிறார். அப்போது எதற்கு நாம் இவரைப் பற்றி பேசுகிறோம்?  தெருவில் உள்ள நாய்க்குட்டிகளை காப்பாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறார். அதற்காகத்தான். 2000இல் நாய்க்குட்டிகளை வணிக ரீதியாக விற்கத் தொடங்கினார். முதலில் தெருவில் இருந்த நான்கு குட்டிகளை வீட்டுக்கு எடுத்து வந்தவர், உள்ளூரில் உள்ளவர்களுக்கு வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளுங்கள் என்ற சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். பிறகு பார்த்தால், அவரது மருந்துக்கடை முழுக்க நாய்களை தத்து எடுக்க நிறைய பேர் வந்துவிட்டனர். இப்படித்தான் தெருவில் இருக்கும் நாய்க்குட்டிகளை வளர்க்க நிறைய பேர்  உருவாகியிருக்கிறார்கள். இந்த வகையில் 2500 நாய்க்குட்டிகளுக்கு புதிய வளர்ப்பு பெற்றோர் கிடைத்துள்ளனர்.  பொதுமுடக்க காலத்தில் வாரம்தோறும் சனியன்று நூறு நாய்களுக்கு உணவளித்திருக்கிறார். இந்த எண்ணிக்கை மெல்ல அதிகரித்து 1200 நாய்களுக்கு சென்றிருக்கிறது. நா

இணையப் பாதுகாப்புக்கு அவுட்சோர்சிங் - ஜெய்ப்பூர் காவல்துறை சாதனை!

படம்
giphy இணைய பாதுகாப்பு தொடர்பான பந்தயத்தில் அரசு ஏறத்தாழ தோற்றுவிட்டது. அரசின் தடைகள் ஆபாச தளங்களை தடுத்தாலும், இணையம் மூலமாக நடைபெறும் மோசடிகளை இன்னும் தடுக்க முடியவில்லை. இதனால் அரசு உடனே என்ன யோசிக்கும்? அதேதான். தனது வேலைகளை உள்வாடகைக்கு விடும். தற்போது தனியார் நிறுவனங்களை இதற்காக பணியமர்த்த தொடங்கியிருக்கின்றன. 2015ஆம் ஆண்டில் 49,495 ஆயிரமாக இருந்த இணையக் குற்றங்கள் 2019ஆம் ஆண்டில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட 2017 தகவல்படி, இணையக்குற்றங்களில் முதலிடம் பிடிப்பது துறவி ஆதித்யநாத் ஆளும் புனித மாநிலமான உத்தரப்பிரதேசம்தான். அடுத்து மகாராஷ்டிரம், கர்நாடகம் என மாநிலங்கள் அணிவகுக்கின்றன. வோலன், ஏவிஎஸ் லேப்ஸ் ஆகிய இணைய நிறுவனங்களை அரசின் காவல்துறை அணுகி உதவிகளைக் கோரி வருகிறது. காரணம், அவர்களின் குற்ற வழக்குகளை துப்ப துலக்க திறன் இல்லாமைதான். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த காவல்துறை தனது சைபர்பிரிவு வழக்குகளை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்து வருகிறது.. நாட்டிலேயே இது முதன்முறையான முன்னோடி முயற்சி ஆகும். காவல்துறையி