இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாடநூல்களில் ஜனநாயகத்தன்மை குறைகிறது! - கர்நாடக அரசு பாடநூல்களில் ஏற்படும் புதிய மாற்றம்

படம்
  எழுத்தாளர் தேவனூர் மகாதேவா கர்நாடகத்தில் உள்ள 10ஆம் வகுப்பு பாட நூல்களில் சில எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டு புதிய எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். எப்போதும்போல இதை எப்படி நீக்கலாம், அவருடையதை எப்படி சேர்க்கலாம் என விவாதங்கள் கிளம்பியுள்ளன. இப்போது கன்னடம் மற்றும் சமூக அறிவியல் நூல்களில் இடம்பெற்ற எழுத்தாளர்களைப் பார்ப்போம்.  எழுத்தாளர்களின் படைப்புகளுக்கான மதிப்பீட்டு கமிட்டி தலைவர் எழுத்தாளர் ரோகித் சக்ரதீர்த்தா.  பானன்ஜே கோவிந்தாச்சார்யா (சுகான்சனா உபதேஷா) சமஸ்கிருத கல்வியாளர். இவர் 2020ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார். 13ஆம் நூற்றாண்டு த த்துவ அறிஞர் ஸ்ரீ மாதவாச்சாரியாவின் பல்வேறு படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். சமஸ்கிருத இலக்கிய படைப்புகளை மொழியாக்கம்செய்து கன்னட இலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். இந்த வகையில் 150 நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் கன்னடர்கள், துளுவர்கள் ஆகிய இனக்குழுக்களுக்கு இடையில் பிரபலமானவை. புராணங்களை பேசுவது, எழுதுவது ஆகியவற்றில் கைதேர்ந்த எழுத்தாளுமை.  சதாவதானி கணேஷ் (ஷ்ரேஷ்ட பாரதிய சின்டனேகலு) இவர் சமஸ்கிருத கவிஞர், கல்வியாளர்

காமத்தைக் கொண்டாடும் நுண்கதைகள்! - 69 நுண்கதைகள் - சி.சரவணகார்த்திகேயன்

படம்
  69 நுண்கதைகள் சி.சரவணகார்த்திகேயன் உயிர்மை பதிப்பகம் ரூ.80 சி.சரவணகார்த்திகேயன் ஒரு மாதத்தில் எழுதப்பட்ட கதைகள் என எழுதிய ஆசிரியர் குறிப்பிடுகிறார். 69 என்பது காகத்தின் கலவி நிலை என பின்னட்டைக் குறிப்பு சொல்லுகிறது. இதெல்லாவற்றையும் தாண்டி இந்த நூலை வாங்க வைப்பது முன்னட்டையில் உள்ள அழகான ஓவியங்கள்தான். பார்த்தவுடனே ஈர்க்கும்படி செய்திருக்கிறார்கள்.  60 கதைகள் இருக்கின்றன. அனைத்துமே நுட்பமாக காமம், காதல், மனதிற்குள் ஒளித்து வைத்துள்ள சில ரகசியங்கள், பாலினத்தின் மீதான மாறாத ஈர்ப்பு ஆகியவற்றை குறியீடாக சில சமயங்களில் நேரடியாகவே வெளிப்படுத்துகிற ஒருபக்க கதைகள்.  சரவண கார்த்திகேயன் எழுதிய கதைகள் சிறியவை என்றாலும் இதில் எங்கேயும் தேவையில்லாமல் கதையை  இழுத்துவிடுகிற தன்மை இல்லை. எல்லாமே இழுத்து பின்னப்பட்ட வலைப்பின்னல்களைக் கொண்ட நாற்காலி போல கச்சிதமாக உள்ளது.  இதில், குறிகளை வெட்டும் லட்சியத்தைக் கொண்ட மனிதரின் கதை சிறப்பாக உள்ளது. கணவரை விவகாரத்து செய்யும் பெண் நீதிமன்றத்தில் சொல்லும் உரையாடல்களாக விரியும் கதை, காமத்தில் நிறைவு கொள்ளாத மனம் பிறருக்கு ஏற்படுத்தும் அசௌகரியத்தைப் பற்றி பேசுக

இலவச மென்பொருட்கள் - டெய்ல்ஸ் 5.0, எரேசர் ப்ரீ, க்யூ டையர்

படம்
  இலவச மென்பொருட்கள் பிரைவசி எரேசர் ப்ரீ 5.23 சி கிளீனர் பயன்டுத்தியிருப்பீர்கள். வேலைகள் எல்லாம் அதேபோலத்தான். வித்தியாசம் எளிமையான அதன் செயல்பாடுதான். கணினியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை அழிக்கிறது. ஹார்ட் டிஸ்கை தூய்மையாக வைக்கிறது. குக்கீகளை கூட எதை அழிக்கலாம் விட்டுவிடலாம் என்ற ஆப்சன்கள் இருக்கிறது. கூடுதலாக புரோகிராம் அன்இன்ஸ்டாலரும் உள்ளது. வேகமாக புரோகிராம்களை அன்இன்ஸ்டால் செய்கிறது. மற்றது பர்ஸ் கனமாக இருந்தால் காசு கொடுத்து மென்பொருள் வாங்கினால் கூடுதல் விஷயங்களைச் செய்யலாம்.   விண்டோஸ் 7, 8.1, 10, 11 வர்ஷன்களில் பயன்படுத்தலாம்.  க்யூ டையர் 10.73 ஃபைல் எக்ஸ்ப்ளோரர் பணிதான். முதலில் இயக்கியவுடன் இடியாப்பத்திற்குள் இட்லி, பொங்கல் இருப்பது போல தோன்றும். விரைவில் அந்த மயக்கம் களைந்து கணியம் சீனிவாசன் போல நுட்ப வல்லுவத்துவத்தை பெற முடியும். கொஞ்சம் நிதானம் தேவை. மற்றபடி பயன்படுத்தி புரிந்துவிட்டால் இந்த மென்பொருள் உங்களை வெகுவாக ஈர்க்கும்.  விண்டோசில் மட்டும் பயன்படுத்தும் மென்பொருள்தான் இதுவும்.  டெய்ல்ஸ் 5.0 எட்டு ஜி.பி இருக்கும் யூஎஸ்பியை அமேசானில் ஆர்டர் செய்து வாங்கினால் தான

அமெரிக்காவிற்கு சாகச பயணமாக இடம்பெயர்ந்த வங்கதேச மனிதரின் கதை!

படம்
  விவேக் பால்ட் ஆவணத் திரைப்பட இயக்குநர் இன் சர்ச் ஆஃப் பெங்காலி ஹர்லேம் என்ற படத்தை அண்மையில் உருவாக்கியுள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எப்படி அமெரிக்காவிற்கு வந்து பிழைக்கிறார் என்பதை சொல்லும் படம். படத்தின் உதவி இயக்குநரான அலாவுதீன் உல்லா என்பவரின் தந்தை பற்றிய கதை இது.  அகதி ஒருவரைப் பற்றிய கதையை எப்படி எடுத்தீர்கள்? 1999ஆம் ஆண்டு அலாவுதீனின் தனிக்குரல் நிகழ்ச்சியைப் பார்த்தேன். நிகழ்ச்சிக்குப் பிறகு என்னை சந்தித்த அலாவுதீன், தனது தந்தை பற்றிய கதையை சொல்லி அதை படமாக்க கேட்டார். அந்த கதை இதுவரை நான் அறிந்த விஷயங்களை மாற்றிப்போட்டது. 1965ஆம் ஆண்டு வரையில் கூட அமெரிக்காவில் வெளிநாட்டினர் வந்து குடியேற முடியாத நிலையை சட்டம் உருவாக்கியிருந்தது. ஆன்டி ஆசியன் இமிகிரேஷன் என்பதுதான் அதன் பெயர். ஆனால் 1920ஆம் ஆண்டில் அலாவுதீனின் தந்தை அமெரிக்காவிற்கு வந்து புவர்டோ ரிகோ பகுதியைச் சேர்ந்த பெண்ணை மணந்து வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமான கதைதான். இப்படி இடம்பெயர்ந்த மனிதர்களைப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் இதுவரையில் இல்லை.  இவர் இப்படி அமெரிக்கா சென்றது விதிவிலக்கான செயல் என நினைக்கிறீர்களா? கல்கத்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்!

படம்
  பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளை வீணாக்கியிருக்கிறது. இதனை எப்படி புரிந்துகொள்ளலாம். தொழில், கல்வி, நம் வாழ்க்கை, இதுவரை போட்டிருந்து திட்டங்கள் என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதிகம் அடி வாங்கியது, சமூக வாழ்க்கையை தொலைத்த குழந்தைகள்தான். இதில் வேறு மூடநம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் நோயைப் பற்றிய அச்சத்தை அறிவியல் மூலமாக தீர்க்காமல், கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள், பிரார்த்தனை செய்யுங்கள் என கூறிக்கொண்டிருந்தன.  இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். பள்ளி சென்றுகொண்டிருந்த, பள்ளி செல்லவேண்டிய பிள்ளைகள் அனைத்துமே இன்று சமூக வாழ்வை தொலைத்து தனியாக உள்ளனர்.  மும்பையில் மூன்றாவது வகுப்பு படிக்கும் மாணவி அவள். மாஸ்க்கை கழற்றச்சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் கழற்றவில்லை. ஆசிரியருக்கோ, நோய் பயமில்லை என்று சொல்லி தொண்டை தண்ணீர் வற்றியதுதான் மிச்சம். அவர் அந்த மாணவியின் முகத்தை பார்த்தே 600 நாட்களுக்கு மேலாகிறது. அதே மாணவி நடன வகுப்பில்  கலந்துகொண்டாள். அப்போது சக மாணவனின் கையை பிடித்ததுதான் தாமதம். உடனே போய் சானிடைசர் போட்டு கையை சுத்தப்படுத்தினாள். சுகாதாரம் பற்றிய பதற்றம்

வெப்ப அலைகளைக் கட்டுப்படுத்த பசுமை தொழில்நுட்பங்கள் தேவை!

படம்
  பெஞ்சமின் ஜெய்ட்சிக் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்.  அதிகரித்து வரும் வெப்பம் மனிதர்களின் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? 2015ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்பு நிறைய மரணங்களை ஏற்படுத்தியது. மக்களின் மரணம் உண்மையில் வேதனையானது. ஆனால் வெப்ப அலை பற்றி குறைத்து மதிப்பிட்டதுதான் இப்பட்டிப்பட்ட சிக்கலுக்கு காரணம். இதயம் தொடர்பான பாதிப்பு கொண்டவர்கள், ஆஸ்துமா, நுரையீல் சார்ந்த நோய்கள், குறைபாடு கொண்டவர்களுக்கு வெப்ப அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுபற்றி பாதிப்பை நாம் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அப்படி செய்யும்போதுதான் பாதிப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும்.  வெப்ப அலைகளால் ஏதும் பின்விளைவுகள் ஏற்படுகிறதா? கண்டிப்பாக. வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஆவியாதலின் அளவும் கூடும். இதனால் நகரங்களில் வாழும் மக்கள் புழுக்கத்தால் தவிப்பார்கள். வெப்ப அலையால் வியர்வை பெருகும். தாவரங்கள், மண் ஆகியவையும் ஈரப்பதத்தை இழக்கும். வறண்ட நிலப்பரப்பு அதிக வெப்பத்தை வெளியேற்றும். வெப்ப பாதிப்பை வெப்ப அலை மேலும் அதிகரிக்கும்.  இப்போதுள்ள வெப்ப அலைக பாதிப்பை உலகளவில் எப்படி வ

மாற்றுத்திறனாளி பெண்ணைக் கொல்லத் துரத்தும் புத்திசாலி சைக்கோ! - மிட்நைட் 2021 - கொரிய திரைப்படம்

படம்
  மிட்நைட் தென்கொரிய திரைப்படம் திரில்லர் சொகுசு வேனில் சைக்கோ கொலைகாரன் ஒருவன் சுற்றுகிறான். அவன் ஒரு பெண்ணை கொலை செய்ய முயற்சிக்கிறான். அடிபட்டு கிடப்பவளை வாய் பேசமுடியாத காது கேளாத பெண் பார்த்து உதவுகிறாள். இதனால் கொலைகாரன், அவளையும் அவளது அம்மாவையும் கொல்லத் துரத்துகிறான். அவள் அந்த கொலைகாரனிடமிருந்து தப்பித்தாளா இல்லையா என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி.  படத்தில் வரும் சைக்கோ கொலைகாரர் (வி ஹா ஜூன்), வாய் பேச முடியாத பெண் (ஜின் கி ஜூன் ) என இருவருமே சிறப்பாக நடத்திருக்கிறார்கள். அதிலும் இறுதிக்காட்சியில்  திக்கித்திணறி பேச்சிலும், செய்கையிலும் தனது கனவு பற்றி விவரித்து தன்னை உயிரோடு விட்டுவிடும்படி கெஞ்சும் காட்சி. அடுத்து, தன்னைக் காப்பாற்ற கத்திகுத்துபட்ட பெண்ணின் அண்ணனிடம் (பார்க் ஹூன்) உதவி கோரி, இறுதியில் அவன் சுயநலமாக தனது தங்கைக்காக வாய் பேச முடியாத பெண்ணை கைவிடும்போது விரக்தியாகி அழும் காட்சி.  வள்ளுவர் கோட்டத்திலிருந்து போரூர் வரை பல்வேறு சந்து பொந்துகளில் புகுந்து வெளியேறி வேகம் குறையாமல் ஓடிக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? இப்படி ஓடும் தடகள காட்சியை பதினைந்து நிமிடங

கங்கை ஆற்றால் நிலமிழந்த மக்கள் - கண்டுகொள்ளாத மாநில, மத்திய அரசுகள்!

படம்
கங்கை ஆற்றால் அரிக்கப்படும் நிலம்!  கடல், ஆறு ஆகியவற்றால் நிலப்பரப்பு அரிக்கப்பட்டு வருவது காலம்தோறும்  நடந்துவருகிறது. மேற்கு வங்கத்தின், மால்டா, முர்ஷிதாபாத், நாடியா ஆகிய மாவட்டங்களில் 400 சதுர கி.மீ. நிலப்பரப்பு அரிக்கப்பட்டுள்ளது. இதை மாநில அரசின் ஆய்வே, வெளிப்படுத்தியுள்ளது. கங்கை ஆறு மூலமாக நிலப்பரப்பு அரிக்கப்படுவது புதிதாக நடக்கவில்லை. அறுபது ஆண்டுகளாக நடந்த  மண் அரிப்பு, பெருமளவு நிலப்பரப்பை சிதைத்துள்ளது. மண் அரிப்பின் பாதிப்பால், பல லட்சம் மக்களின் வீடுகள் அழிந்துவிட்டன. இதோடு அவர்களின் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஃபராக்கா தடுப்பணை மேற்கு வங்கத்தில் கட்டப்பட்டு இருந்தாலும் கூட கங்கையின் சீற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மால்டாவிலிருந்த மசூதி, பள்ளிக்கட்டடம் உள்ளிட்டவை கங்கை ஆற்று நீரால் சிதைந்தன. இப்படி நடந்த சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசு என இரண்டுமே எந்த உதவியையும் செய்யவில்லை. ”ஆண்டுக்கு 73 கோடியே 60 லட்சம் டன்கள் வண்டல் மண் கங்கை ஆற்றில் படிகிறது. அதனை புனரமைத்தாலே பாதிப்புகள் குறையும். இதில் 32 கோடியே 80 லட்சம் டன் வண்ட

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கார்பனை மரங்களால் உட்கிரகிக்க முடியாது!

படம்
  காடுகளால் உள்ளிழுக்கப்படும் கார்பன் அளவு! உலக நாடுகள் அனைத்துமே கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தொழில்துறை சார்ந்த கார்பன் வெளியீட்டைக் குறைப்பதோடு, மாசடைந்த காற்றிலிருந்து பசுமை இல்ல வாயுக்களை தனியாக பிரிப்பதும் முக்கியமானது. இதற்காக மரங்கள் உதவுகின்றன. ஒளிச்சேர்கை செயல்பாடு மூலமாக தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட்டை உள்ளிழுக்கின்றன. ஒளிச்சேர்க்கை செயல்பாடு வழியாக,கார்பன் எந்தளவு உள்ளிழுக்கப்படுகிறது, அதனால் கார்பன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதா என்பது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.  சூழலில் கார்பன் டை ஆக்சைட் நிரம்பியிருப்பது தாவரங்களுக்கு முக்கியம். அப்போதுதான், அதன் ஒளிச்சேர்க்கை நடைபெற முடியும். மனிதர்களின் செயல்பாட்டால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைட் அதிகரிப்பதும், அதனை தாவரங்கள் அதிகளவு உள்ளிழுக்கின்றன. இதற்கு, கார்பன் ஃபெர்டிலைசேஷன் (Carbon Fertilization)என்று பெயர்.  வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட் அளவு அதிகரிப்பது, தாவரத்தின் வளர்ச்சி வேகத்தை பாதிக்கிறது. வளர்ச்சி காலம் அதிகரிப்பதால், வளிமண்டலத்தில் க

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை சேர்த்து சாதித்த பிராந்திய கட்சிகள்!

படம்
  தேர்தல் பத்திரங்களில் நிதி சேர்த்த அரசியல் கட்சிகள்! 2020-2021ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற தொகையை ஐந்து பிராந்திய கட்சிகள் வெளியிட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக முன்னிலை வகிக்கிறது. இந்த கட்சி, 2020-21  காலகட்டத்தில் மட்டும் 218.5  கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர தொகை பற்றி  ஜனநாயக சீர்த்திருத்த கூட்டமைப்பு ஏடிஆர் செய்தி வெளியிட்டுள்ளது.  திமுக -218.5 கோடி தெலுங்குதேச கட்சி - 54.8 கோடி அதிமுக -42.4 கோடி ஐக்கிய ஜனதாதளம் - 24.3 கோடி தெலங்கான ராஷ்டிர சமிதி -22.3 கோடி   மொத்தமாக இந்த கட்சிகள் பெற்ற தொகை 434.3  கோடி. இது கட்சிகளின் மொத்த வருமானத்தில் 83 சதவீதமாகும். தன்னார்வ நிதியாக கட்சிகள் பெற்றுள்ள தொகை 250.60 கோடி. வருமானத்தில் இதன் அளவு 47.34 சதவீதம். பிற வழியில் பெற்ற நிதி சதவீதம் 23.9 சதவீதம்.  மொத்தமுள்ள 31 கட்சிகளில் 5 கட்சிகள் மட்டும்தான் நிதி பற்றிய தகவலை வெளியே கூறியுள்ளன. 17 பிராந்தியக் கட்சிகள் தமது நிதியை செலவிடாமல் வைத்திருப்பதையும் கூறியுள்ளன.  டைம்ஸ் ஆப் இந்தியா  

வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வேதிப்பொருள்! - கன்னபீடியால் எனும் சிபிடி

படம்
  கன்னபீடியால் - மேல்தட்டு வீரர்களுக்கான ரெகவரி மருந்து! 2018ஆம் ஆண்டு ஆன்டி டோபிங் ஏஜன்சி, கன்னபீடியாலை தனது தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் இருந்து நீக்கியது. இதனை மேல்தட்டு வர்க்க பணக்கார வீரர்கள் வலிநிவாரணியாக பயன்படுத்தி வந்தனர்.  இதனை சுருக்கமாக சிபிடி என்று அழைப்பார்கள். சிபிடி - கன்னபீடியால். உடலில் சற்று வேகமாக வேலை செய்து உடல் சோர்வை குறைப்பதோடு வலி, வீக்கம் நீக்கி நல்ல தூக்கத்தை உடலுக்கு கொடுக்கிறது. மனப்பதற்றம் நீக்குகிறது.  கஞ்சா தாவரத்திலிருந்து நூற்றுக்கும் அதிகமான வேதிப்பொருட்களை தயாரித்து வருகின்றனர். அதில் சிபிடியும் ஒன்று. மனிதர்களுக்கு இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை. எலிகளை வைத்து செய்த சோதனையில் மேற்சொன்ன நிறைய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. சிபிடி துறை 2025ஆம் ஆண்டில் ஒரு பில்லியன்  பவுண்டுகளாக உயரும் என எதிர்பார்க்கின்றனர்.  நீங்கள் அதிகளவு சிபிடியை உடலில் எடுத்துக்கொள்ளும்போது மூளையில் உள்ள நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் சமநிலை அடைகின்றன. இதன் விளைவாக பதற்றம் தொடர்பான பிரச்னைகள் தீர்கின்றன என்று ஊட்டச்சத்து வல்லுநர் ஜெஸ்

ஒப்பந்தமுறை விவசாயத்தில் கிடைக்கும் லாபம்!

படம்
  விவசாயத்தோடு கைகோக்கும் தொழில்நுட்பம்! 2013ஆம் ஆண்டு ஹரியாணாவின் குர்கானில் பார்த்து வந்த தகவல் தொழில்நுட்ப பணியை விட்டு விலகினார் சச்சின் காலே. அவரது குடும்பத்தினர் அடுத்து என்ன செய்யப்போகிறாய்? என்று கேட்டனர்.  அப்போது சச்சினுக்கு, அவரின் தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது. நீ ஏன் பிறருக்காக உழைக்கவேண்டும். உனக்காக உழைக்கலாமே என்ற வாசகத்தை நினைவில் கொண்டு, ”விவசாயம் செய்யப்போகிறேன்” என்றார்.   விரைவிலேயே தனது சத்தீஸ்கர் மாநிலத்திற்கு திரும்பினார். சச்சினின் குடும்பத்திற்கு சொந்தமாக  24 ஏக்கர் நிலம் இருந்தது. விவசாயம் செய்த முதல் ஆண்டில் நஷ்டம் ஏற்பட்டது. அதில் ஏற்பட்ட தவறுகளை விரைவில் சரிசெய்துகொண்டார். பருவகாலங்களில் நெற்பயிர்,  பிற காலங்களில் காய்கறிகளையும் பயிரிட்டு வென்றார். தனது விவசாய முறைகளைப் பற்றி விவசாயிகளுக்கு கூற  2014ஆம் ஆண்டு இன்னோவேட்டிவ் அக்ரிலைஃப் சொல்யூஷன்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார்.  சச்சின் காலே, ஒப்பந்த முறை விவசாயத்தை பற்றி ஆய்வு செய்து, அதைப்பற்றி விவசாயிகளுக்கு பிரசாரம் செய்து வருகிறார். சச்சினின் செயல்பாட்டால், தற்போது விவசாயிகளின் நிலங்களில் ஆண்டு முழுவதும

மாணவர்களிடையே தேய்ந்து வரும் எழுதும் பழக்கம்! - விளைவு என்ன?

படம்
  தேயும் எழுதும் பழக்கம்! பெருந்தொற்று காலகட்டம் மாணவர்களின் கல்வியை பின்னோக்கி நகர்த்தியது. கூடவே, எழுதும் பழக்கத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாக, மீண்டும் எழுதுவதற்கு பயிற்சி தேவைப்படும் நிலையில் மாணவர்கள் உள்ளனர். ஸ்மார்ட்போன், கணினி, டேப்லெட், பல்வேறு ஆப்கள் என யாருக்குமே பேனாவை பிடித்து எழுதும் அவசியம் இல்லை. பள்ளிகளில்மட்டும் தான் மாணவர்கள் பல்வேறு எழுத்து வேலைகளை செய்கிறார்கள். பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் மாணவர்களின் மனநிலை பற்றி பலரும் கவலைப்பட்டனர். ஆனால், இரண்டு ஆண்டுகள் எதையும் எழுதாமல் இருக்கும் மாணவர்கள் பள்ளி தொடங்கியதும் எப்படி எழுதுவார்கள் என இப்போதுதான் பெற்றோர் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்காக டில்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் எழுத்துப் பயிற்சிக்கான மையங்கள் உருவாகி வருகின்றன. மும்பையில் கையெழுத்துப் பயிற்சி அளித்து வருகிறார் குன்சால் கலா. இவரது வகுப்பில், 5 ஆயிரம் பேர்களுக்கு மேல் பயிற்சியளித்துள்ளார். எழுதுவதில் சுணங்கினால் எழுத்து தேர்வுகளை நேரத்திற்கு எழுத முடியாது என்பதே பெற்றோரின் கவலை. மாணவர்கள் பலருக்கும் பேனா, பென்சிலை சரியாக விரல்களில் பிடிப்பதே மறந்

நான் வளர்ந்து வந்த கதையை தமிழ் இயக்குநர்கள் திரைப்படமாக எடுத்தனர்! - அனுராக் காஷ்யப், இந்தி சினிமா இயக்குநர்

படம்
  கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் படம் 2012ஆம் ஆண்டு கான் படவிழாவில் திரையிடப்பட்டது. இந்திய சினிமாவுக்கு இது பெரிய கௌரவமான நிலை. இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் இதுபற்றி பேசியபோது,  கான் படவிழா அனுபவம் எப்படியிருந்தது? 2010இல் தட் கேர்ள் இன் யெல்லா பூட்ஸ் என்ற படத்தை வணிகப்படமாகவே நான் எடுத்தேன்.  2013இல் தி லன்ச் பாக்ஸ் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. எனக்கு கான் திரைப்பட விழாவில் படத்தை திரையிடுவது முக்கியமாகப் படவில்லை. மார்கோ முல்லர் தான் வாசிப்பூர் படத்தை நான் பார்க்கவேண்டும் என கட்டாயப்படுத்தினார். அவர்களுக்கு அந்தப்படம் பிடித்திருந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  கான் படவிழாவில் படத்தை திரையிட்டபோது உங்கள் அனுபவம் எப்படியிருந்தது.  எனக்கு பதற்றமாக இருந்தது. நான் தியேட்டரிலிருந்து வெளியேறி வெளியே தான் ஐந்து மணிநேரம் இருந்தேன். அப்போது அங்கே குடிக்கத் தொடங்கியிருந்தேன். திரைப்பட விழாவில் விற்கவென நான் உருவாக்கிய படம் யெல்லோ பூட்ஸ் தான். படத்திற்கான வரவேற்பு நன்றாகவே இருந்தது. படத்தின் இடையே பத்து நிமிட இடைவேளைதான் இருந்தது. நடிகர்களை பார்வையாளர்கள் தெருவிலேயே நிறுத்திவிட்டனர்

இளைஞர்கள் அரசியலைப் புரிந்துகொள்ள உதவும் அமைப்பு! -YPP

படம்
  தமிழ்நாட்டில் அரசியல் என்பது அனைத்து இடங்களிலும் உண்டு. தேவையில்லாத கலவரங்களை தடுக்க சில டீக்கடைகளில் அரசியல் பேசக்கூடாது என கண்டிப்பாக சொல்லியிருப்பார்கள். ஆனால் இன்று நிறைய இடங்களில் இளைஞர்கள் அரசியல் பார்வை கொண்ட இயக்கங்களை கட்டி எழுப்பி வருகிறார்கள். அப்படி ஒன்றுதான் யங் பீப்பிள்ஸ் ஃபார் பாலிடிக்ஸ் .  அண்மையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  மேற்சொன்ன இளைஞர் இயக்கத்தின் மாநாடு நடைபெற்றது. நூலகத்தில் இப்படியொரு நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல்முறை. ஒய்பிபி இயக்கம், பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகளை வழங்க கௌரவித்தது. விருது பெற்றவர்களும் இந்த வகையில் முதல் முறையாக விருதுகளை பெறுவதலால் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.  பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளில் இருந்து வந்தவர்களை விருதுகளைப் பெற்றனர். ஒய்பிபி இயக்கம், இப்படிப்பட்ட பின்புலம் கொண்ட இடத்திலிருந்து தலைவர்களாக உருவானவர்களை கௌரவிக்கின்றனர். ஒய்பிபி இயக்கத்தின் நிறுவனர், ராதிகா கணேஷ். எங்களது இயக்க உறுப்பினர்கள் அனைவருமே பன்முகத்தன்மை கொண்ட இனக்குழுவிலிருந்து வந்தவர்கள்தான். நிறைய விஷயங்களை முதல்முறை என்று கூறுவதற்கான வ

வெற்றிபெற்ற தருணத்தை மறக்கமுடியாது! - நிகாட் ஜரீன், குத்துச்சண்டை வீரர்

படம்
  வெற்றி பெற்ற தருணம்.... நிகாட் ஜரீன் உலக சாம்பியன் பட்டம் பெற்ற குத்துச்சண்டை வீரர் நிகாட் ஜரீன், குத்துச்சண்டை வீரர் வெற்றிபெற்ற பிறகு என்ன செய்தீர்கள்? நான் அந்த இரவு முழுக்க தூங்கவில்லை. என் குடும்பம், மனதிற்கு பிடித்தமானவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். போனில் வந்த பல்வேறு குறுஞ்செய்திகளை வாசித்துக்கொண்டு இருந்தேன்.  உங்களது பயணம் துருக்கியில் 2011ஆம் ஆண்டு தொடங்கியது. முதலில் ஜூனியர், யூத், இப்போது சீனியர் என பட்டங்களை வென்றிருக்கிறீர்கள். இந்த பதினொரு ஆண்டுப் பயணம் எப்படியிருந்தது? நிறைய ஏற்ற இறக்கங்கள் வெற்றி தோல்விகள் இந்த காலகட்டத்தில் இருந்தது. நான் தங்கமெடலை வென்றபோது நான் சந்தித்த சவால்கள், கஷ்டங்கள் தகுதியானவைதான் என்று தோன்றியது. எனக்கு நேர்ந்த சம்பவங்கள்தான் என்னை வலிமையானவளாக ஆக்கியது.  போராட்டம் சவால்களைப் பற்றி சொன்னீர்கள். அதனால்தான் ரெஃப்ரி உங்கள் கையை உயர்த்தியதும் அந்தளவு உணர்ச்சியை வெளிக்கொட்டினீர்களா? இதுவரை நீங்கள் இப்படி இருந்ததே இல்லை? எனது கை உயர்த்தப்பட்ட நொடியில் நான் உலகின் மிக மகிழ்ச்சியான மனிதராக மாறியிருந்தேன். ஆனால் அதேசமயம் இந்த வெற்றிக்காக எனது போரா

இந்தியர்கள் அன்பான தொடுதலை அறியாதவர்கள்! - அய்லி சேகட்டி

படம்
  அய்லி சேகட்டி காதல் உறவுக்கான பயிற்சியாளர்  நீங்கள் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்தானே? இந்தியாவுக்கு வருவதற்கு என்ன காரணம்? இங்கு நீங்கள் காதல் உறவுக்கான பயிற்சியையும் வழங்குகிறீர்கள் நான் பின்லாந்து, இத்தாலி, லண்டனில் வாழ்ந்துள்ளேன். எனது பதினெட்டு வயதிலேயே லண்டனுக்கு சென்றுவிட்டேன். பிறகுதான் இந்திய தத்துவங்கள் மீது ஆர்வம் பிறந்தது. மதரீதியான படிப்புகளை படிப்பையும், இந்தி மொழியையும் கற்றேன். பிறகுதான் 2007இல் மும்பைக்கு சென்றேன். பிராண்டுகள் மற்றும் வாடிக்கையாளர் மனநிலை பற்றிய ஆராய்ச்சி செய்தேன். கூடவே, சோமாட்டிகா எனும் படிப்பைப் படித்தேன். சைக்கோதெரபி, விபாசனா ஆகியவற்றைப் பற்றி ஆழமாக கற்றேன். இதற்குப் பிறகு எனக்கு மணமானது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மணவாழ்க்கை கெட்டுப்போனது. எனவே, நான் எங்கள் வாழ்க்கையை பிறருக்கு முன் வைக்கத் தொடங்கினேன். அப்படித்தான் காதல் உறவு பயிற்சியாளராக மாறினேன்.  2012இல் உலகம் முழுக்க டேட்டிங் ஆப்களின் மீதான மோகம் பெருகத் தொடங்கியது. நானும் பிஏ இந்தி படிப்பை கைவிட்டு பாலுறவு மற்றும் காதல் உறவு பற்றிய ஆராய்ச்சிக்கு மாறினேன்.  இந்தியர்கள் தங்கள் உறவில் எந்த

வெளிநாட்டில் தேடிய வணிக வாய்ப்புகளும், சவால்களும்!

ஹூவெய் நிறுவனத்தின் உரிமையாளர்கள் என இருப்பது ரென் கிடையாது. ரிலையன்ஸின் திருபாய் அம்பானி போன்ற டெக்னிக்தான். ஊழியர்கள் தான் உரிமையாளர்கள். மொத்தம் 1 லட்சம் பேர். அவர்களின் பெயர்களைக் கூட பொறித்து வைத்திருக்கிறார். 1987ஆம் ஆண்டு ஐந்து நண்பர்கள் ஹூவெய் நிறுவனத்திற்கு முதலீடு செய்தனர். பிறகு 2000ஆம் ஆண்டிற்குள் தங்களது முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டனர்.    அமெரிக்காவில் முக்கியமான நிறுவனம் ஏடி அண்ட் டி. இந்த நிறுவனத்தின் பெல் லேப்ஸில் ஆய்வு செய்து ஏராளமான காப்புரிமைகளை பெற்று வந்தனர். இவர்களின் துணை நிறுவனமாக லூசென்ட் டெக்னாலஜி என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கப்ப்பட்டது. 1996ஆம் ஆண்டு தொடங்கிய  இந்த நிறுவனம், 2006ஆம் ஆண்டு தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது. இத்தனைக்கும் எம்ஐடியின் சிறந்த நிறுவனத்திற்கான விருதை இரு ஆண்டுகள் தொடர்ச்சியாக பெற்ற நிறுவனம் தான் லூசென்ட் டெக்னாலஜி.   பின்னாளில் சரிவை தடுத்து நிறுத்த அல்காடெல்லுடன் லூசென்ட் டெக்னாலஜி சேர்க்கப்பட்டது. ஆனாலும் பயனில்லை. நஷ்டப்பட்டு திவாலாகும் வங்கியை, நன்றாக இயங்கும் வங்கியோடு சேர்த்தால் அது சிறந்த ராஜதந்திரமாகுமா என்ன? அப்ப

நோக்கத்தை தொலைத்தால் அவ்ளோதான்!

படம்
  ஐரோப்பிய பாணி ஹூவெய் அலுவலகம், டாங்குவான் நகரம், சீனா 2019 படி படம் - LA Times தொழிலைத் தொடங்குபவர்கள் யாராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தொழில் முதலீடு என்பது பல்வேறு வாய்ப்புகளைக் காட்டும். இதில் சரியாக மனதை கட்டுப்படுத்தி செயல்படாதபோது சூதாட்டத்தில் இந்த முறை இந்தமுறை என அனைத்து பணத்தையும் சூதாடி தொலைப்பது போன்ற சூழல்தான் உருவாகும்.   இதைப்பற்றி ரென், நான் லாஸ் வேகாஸ் நகருக்கு செல்வேன். சூதாட்ட கிளப்புகளுக்கு சென்றால் கூட அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கவே செல்வேன். நான் சூதாடியது கிடையாது. அப்படி மனம் விரும்பினாலும் அதை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என்று சொன்னார்.   சீனாவில் யூடிஸ்டார்காம் என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் இருந்தது. அப்போது ஜப்பானில் நடைமுறையில் இருந்த பிஹெச்எஸ் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு சேவை வழங்கியது.சீனாவில் பிஹெச்எஸ் தொழில்நுட்பம் புதிது, போட்டி  நிறுவனங்கள் இல்லை ஆகிய காரணங்களால் நன்றாக இயங்கியது. ஆனால் ஆராய்ச்சி, புதுமை இல்லாத காரணத்தால் கிடைத்த லாபம் காலப்போக்கில் குறைந்து பத்தாண்டுகளுக்குள் நிறுவனம் நஷ்டத்தில் வீழ்ந்து மூடப்பட

நலத்திட்ட உதவிகள்தான் சிறந்த அரசியல் ஆயுதம்! - பிரசாந்த் கிஷோர், தேர்தல் திட்ட வல்லுநர்

படம்
  பிரசாந்த் கிஷோர்  தேர்தல் திட்ட வல்லுநர் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் எது? - ஆம் ஆத்மி அல்லது ஃபிளிப்கார்ட்? ஃபிளிப்கார்ட் பாஜகவின் சிறந்த சொத்து எது? அமைப்பு பலம் தான்.  பாஜகவின் பலவீனம் என்ன? மோடியை மட்டுமே நம்பியிருப்பது அரசியல் அல்லது கொள்கை இதில் நீங்கள் அதிகம் விரும்புவது எது? கொள்கை தான். அரசியல்  என்பது அதன் பிறகு வருவதுதான்.  காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன? அதன் பாரம்பரியம்.  அதன் பலவீனம்? செயலற்ற தன்மை  அடையாள அரசியல் அல்லது நலத்திட்டங்கள் இவற்றில் எது சிறந்த அரசியல் ஆயுதம்? நலத்திட்ட உதவிகள்தான்.  2024ஆம் ஆண்டு எந்த கட்சி இந்தியாவை வழிநடத்தும் என நினைக்கிறீர்கள்? அதை மக்கள் தீர்மானிக்க விட்டுவிடலாம்.  அரசியல் வல்லுநர்களில் யாரேனும் ஒருவர். அவர் வாழலாம் அல்லது மரணித்தும் இருக்கலாம். உங்களின் முன்மாதிரி ஒருவரைக் கூற முடியுமா? இந்தியாவில் அப்படி யாரும் இல்லை. வெளிநாடுகளில் அப்படி இருந்தாலும் எனக்கு யாரையும் தெரியாது. அப்படி அரசியல் வல்லுநர்களைப் பற்றி நான் படித்ததும் கேள்விப்பட்டதும் கிடையாது.  நீங்கள் மதிக்கும் இந்திய அரசியல்வாதி, அவர் இன்று உயிருடன் இருக்கலாம் அல்லது இல்லாமலு

நேருவின் சோசலிச கொள்கையும், சோவியத் யூனியனும்! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 நேருவும், அவரின் சோவியத் சோசலிச உறவும்.  இன்று இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நிர்வாக திறனின்மைக்கு கூட மறைந்த முன்னாள் பிரதமர் நேரு குற்றம்சாட்டப்பட்டு வருகிறார். அவர் அக்காலத்தில் கடைபிடித்த கலப்பு பொருளாதாரம், சோசலிச கொள்கைகள், பெரும் தொழிற்சாலைகள் ஆகியவை அனைத்தும் இன்றைய கால கண்ணோட்டத்துடன் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. உண்மையில் நேரு சோவியத்தின் சோசலிச கொள்கைகளை முழுமையாக அப்படியே அமல்படுத்தினாரா என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கியமான நோக்கம்.  சோவியத் யூனியன்தான் சோசலிச தலைமையகம். அங்கு 1917ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சி, அதற்குப் பிறகு அங்கிருந்து உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் பல்வேறு நாடுகளில் புரட்சிக்கான காரணங்களை தேடக் காரணமாக அமைந்தன. சோசலிசம் என்பது நாடுகளுக்கு ஏற்றது போல பல்வேறு வடிவங்களுக்கு மாற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. உதாரணத்திற்கு சீனா. அங்கும் சோசலிச கொள்கைகள் உள்ளன. முதலாளித்துவத்தை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கு சர்வாதிகாரம் செய்து வருகிறது.  ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை அவர் பெரிதாக முக்கியமாக நினைக்கவில்லை. 1926-27 காலகட்டத்

உலக நாடுகளை அச்சுறுத்திய காசநோய் வரலாறு!

படம்
  பான்டம் பிளேக் வித்யா கிருஷ்ணன் பெங்குவின் ஹவுஸ்  பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக நாடுகளை அச்சுறுத்திய காசநோய் எப்படி பரவியது, லட்சக்கணக்கான மக்களைக் கொன்றது என்பதைப் பற்றி எழுதியுள்ளார் வித்யா. நியூயார்க்கின் குடிசைகள் தொடங்கி நியூயார்க் வரை காசநோய் பாதிப்பு இருந்தது. கைவைத்திய மருந்துகள் முதல் ஆங்கிலமருத்துவ ஆராய்ச்சிகள் வரை காசநோயை அழிக்கும் பல்வேறு முயற்சிகளை நூல் ஆசிரியர் கூறுகிறார்.  வயலெட்ஸ் கியூங் சூக் சின் ஹாசெட் 699 1970ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெறும் கதை. சான், தனியாக வாழ்ந்து வரும் நபர். அவருக்கு நாமே என்ற என்ற பெண் ஸ்னேகிதி கிடைக்கிறார். சானுக்கு அவளை மிகவும் பிடித்துப்போகிறது. ஆனால் திடீரென ஒருநாள் மாலை அவளை நாமே நிராகரிக்கிறாள். பெண்ணின் மனம், ஆசை, சமூகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள் என நிறைய விஷயங்களை நூலில் கியூங் பேசுகிறார்.  மேட் இன் ஃப்யூச்சர் பிரசாந்த் குமார் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  ரூ.499 மார்க்கெட்டிங் தொடர்பான நூல் இது. இதில் எதிர்காலத்தில் மார்க்கெட்டிங்கை எப்படி செய்வது என பல்வேறு ஆலோசனைகளை சொல்லுகிறார் பிரசாந்த் குமார். ஊடகம், எழுத்து, பல்வேறு செல்வாக்கு ச