இடுகைகள்

ஜூனியர் என்டிஆர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாரும் புரிந்துகொள்ள முடியாத வினோதமான அடியாள் - ஊசரவல்லி - டோனி

படம்
  ஊசரவல்லி - டோனி ஊசரவல்லி - டோனி  ஊசரவல்லி (தெலுங்கு) டோனி (ஜூனியர் என்டிஆர் ) இயக்குநர் - சுரேந்தர்ரெட்டி   ஊசரவல்லி படத்தில் வரும் டோனி பாத்திரத்தை யாருமே புரிந்துகொள்ள முடியாது. இதற்காகவே முரளி சர்மா, பிரபாஸ் சீனுவின் தொடக்க காட்சியை வைத்திருக்கிறார்கள். இதில் டோனி என்பவன் எறும்புக்கும் தீங்கு நினைக்காதவன். அதேசமயம் தனக்கு தேவைப்படும் விஷயம் கிடைக்க என்னவேண்டுமானாலும் செய்யக்கூடிய, அதற்கு தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளக்கூடியவனாக அறிமுகப்படுத்தி பேசுவார். படத்தின் தெலுங்கு தலைப்பின் பொருள் பச்சோந்தி. ஜூனியர் என்டிஆரின் சிறந்த அறிமுக காட்சிகளில் ஊசரவல்லியும் ஒன்று. டோனியைப் பொறுத்தவரை தனக்கு காரியம் ஆகுமென்றால் எப்படியென்றாலும் மாறக் கூடியவன். விதிகளை அழித்து மீண்டும் எழுதினாலும் அதையும் அழித்துவிட்டு தனக்கு பிடித்ததுபோல காரியங்களைச் செய்பவன். யாராலும் புரிந்துகொள்ள முடியாத   குணம் கொண்டவன். டோனி, கூலிக்கு பிறரை அடித்து மண்டையைப் பிளக்கும் அடியாள். மும்பையில் வாழ்ந்து வந்தவரின் தந்தையும் டான் அந்தஸ்தில் இருந்தவர

அமைதிதான் வேண்டும் - ரத்தம் தெறிக்க அகிம்சை படம் -அரவிந்த சமேத

படம்
அரவிந்த சமேத வீரராகவ (தெலுங்கு) திரிவிக்ரம் பிஎஸ் வினோத் தமன் எஸ் எஸ் தன் அப்பாவைக் கொன்ற எதிரிகளை அடக்கி ஊரில் அமைதி நிலைநாட்டுவதுதான் நாயகனின் லட்சியம். சாதித்தாரா என்பதுதான் கதை. சூப்பர்! கதை, கரம் மசாலாவிற்கானதுதான். ஆனால் திரிவிக்ரம் தன் பாணியில் அதைக் கையில் எடுத்து அக்கறையாக வசனங்களை எழுதி பாசத்தை நேசத்தை பார்க்கும் அனைவரின் மனதிலும் விதைத்துள்ளார். பாடலுக்கு மட்டும் வரும் நாயகின கதாபாத்திரத்தையும் வலுவாக உட்கார வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. குடும்பத்தில் வலுவாக பெண்கள் தாங்கி நிற்பதை படமெங்கும் உணர முடிகிறது. மற்றபடி நிலக்கிழார் பெருமை பேசும் படம்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அமைதிக்காக தன்னை தாழ்த்தி அமைதி சந்திப்பில் கைகளை உயர்த்துவது, தந்தை கண்ணெதிரே இறப்பதைப் பார்த்து நொறுங்கி மீள்வது என என்டிஆர் நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்பு. அடித்து நொறுக்கியுள்ளார். நானாக்கு பிரேமதா, ஜனதா காரேஜ் படத்திற்குப் பிறகு அவரது கேரியரில் இது சிறந்த படம்தான். ஐயையோ! முதல் காட்சியில் தெறிக்கும் ரத்தம்தான் இது தெலுங்குப்படம் என நினைவூட்டுகிறது. மற்றபடி