இடுகைகள்

சைக்கோடைரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலைக்கணக்குகளை எழுதி வைக்கும் பழக்கமுண்டா?

படம்
  கொல்லப்பட்டவர்களின் ஈமச்சடங்கு பொதுவாக சினிமாவில்தான் இதுபோன்ற கிளிஷே காட்சிகளைப் பார்க்கமுடியும். இப்படியெல்லாம் காட்சிகளை வைத்தால்தான் பார்ப்பவர்களுக்கு நெஞ்சு முழுக்க அமிலம் பரவும், வில்லனை பழிவாங்கும் ஆவல் பெருகும். உண்மையில் மிகச்சிலர் மட்டுமே இறந்தவர்களின் ஈமச்சடங்களுக்கு, கல்லறைகளுக்கு என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்று வருகிறார்கள்.  அதுகூட அவர்களின் சந்தோஷத்திற்காகத்தான். நீ என்னால் கொல்லப்பட்டாய், இப்போது குழியில் வைத்து மூடப்போகிறார்கள். ஆனால் உயிருடன் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி சந்தோஷப்படும் ஆகிருதிகள் சீரியல் கொலைகாரர்கள். மற்றபடி கொலை  நடந்த இடம் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே அவர்களை அங்கு பார்க்க முடியும். திரும்ப அதே இடத்திற்கு வந்து நினைவு நரம்புகளை மீட்டுவது சினிமாவில் வேண்டுமானால் பார்க்க நன்றாக இருக்கும். நிஜத்தில் அப்படி நடக்காது.  கொலைக்கணக்கு நோட்டு போட்டு அதனை எழுதி வைக்குமளவு சீரியல் கொலைகார ர்கள் நேர்த்தியானவர்கள் கிடையாது. பெரும்பாலான ஐடியாக்களையே சினிமா, நூல்களிலிருந்து காப்பி அடிக்கும் ஆட்கள், தங்களை மாட்டிக்கொள்ள வைக்கும்படி ஆதாரங்களை அவர்களே உர