இடுகைகள்

பிரிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடும்பங்களை நெருக்கடிக்குள்ளாக்கி பிரிக்கும் பிரிட்டிஷ் அரசின் விசா கொள்கை!

படம்
  இங்கிலாந்து அரசு, நாட்டில் உள்ள குடிமகன்கள் வெளிநாட்டில் உள்ளவர்களை காதலித்து மணக்க புதிய கட்டுப்பாடு ஒன்றை உருவாகியுள்ளது. இதன்படி, வெளிநாட்டில் உள்ளவர் இங்கிலாந்தில் வந்து குடும்பத்துடன் வாழ வேண்டுமெனில் 48,500 டாலர்கள் வருமானம் தேவை. அப்போதுதான் குடும்ப விசாவை அரசு வழங்கும்.  அரசின் புதிய விதிமுறை காரணமாக வேறு நாட்டினரை காதலித்து மணந்தவர்கள், பிரச்னைக்கு உள்ளாகியுள்ளனர். அரசின் வரம்பிற்குட்பட்ட ஆண்டு வருமானத்தை ஒருவர் பெற்றிருப்பது கடினம். ஆண்டுக்கான தொகை என்று கூறினால் கூட அதை கணவர் அல்லது மனைவி சம்பாதித்து கூடவே குழந்தைகளையும் வளர்ப்பது கடினமான காரியம். அரசின் நெருக்கடி காரணமாக வறுமை நிலையில் உள்ளவர்கள் பலரும் தங்கள் மனைவி அல்லது கணவரை வெளிநாட்டில் தங்கவைக்க வேண்டியுள்ளது. அல்லது பிரிந்திருக்க வேண்டியுள்ளது.  ஒன்றாக இருப்பவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது. அரசு கூறும் தொகையை கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால் மட்டுமே ஒன்றாக சேர்ந்திருக்கவேண்டிய நிலை. இதில், அவர்கள் எப்படி குழந்தை பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ முடியும்? பெரும்பகுதி வாழ்க்கை அலுவலகத்தில் அல்லது

லவ் அலாரத்தை ஆன் செய்து லவ் மேப்பை அப்டேட் செய்யலாம் - நீங்க ரெடியா?

படம்
  தம்பதிகளுக்கு இடையே மௌனமான பிரிவு உருவாகிறதா? – தீர்வு என்ன? காதலிக்கும்போது ஒருவரைப் பற்றிய பிடித்தது, பிடிக்காதது, என தெரிந்துகொள்பவர்கள் மணமானபிறகு பல்வேறு விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து காதலை பின்தள்ளிவிடுகிறார்கள். இதற்கு, பெற்றோரைக் கவனிப்பது, குழந்தைகளை வளர்ப்பது என ஏராளமான காரணங்களைக் கூறுகிறார்கள். உண்மையில், கணவன், மனைவி என இருவரும் சற்று முயற்சி எடுத்தால் அவர்களின் மனதிலுள்ள லவ் அலாரத்தை ஒலிக்க வைக்க முடியும். இதற்கு இருவரும் ஒரே சமயத்தில் தங்களை சற்றே மாற்றிக்கொண்டு முன்னே அடியெடுத்து வைக்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம்…. காதலர்களாக இருந்து கணவன் மனைவியாக மாறியவர்கள் கூட காதல் என்பதை முழுக்க ஒழித்துவிட்டு ஏதோ பிள்ளைகளுக்காக ஒரே வீட்டில் ஒரே படுக்கை அறையில் வாழ்வதாக சூழல் மாறிவருகிறது. இதற்கு பரபரப்பான வாழ்க்கை முறை காரணம் என்று மட்டும் காரணம் சொல்லி தப்பிவிட முடியாது. இந்த பரபரப்பிலும் அவரவருக்கு பிடித்த விஷயங்களை விடாமல் செய்துகொண்டுதானே இருக்கிறோம். பிறகு, காதலில் மட்டும் ஏன் பஞ்சம், பற்றாக்குறை ஏற்படுகிறது? மணமாகி தேனிலவு காலம் முடிந்தபிறகு கணவன், மனைவி இருவரும்

குடும்ப வாழ்க்கை சோகத்தால், காதலியின் காதலுக்கு நோ சொல்லும் எழுத்தாளக் காதலன் - T&F

படம்
              ட்யூஸ்டேஸ் அண்ட் ஃப்ரைடேஸ் தரன்வீர் சிங் வாரத்தில் இரு நாட்கள் டேட்டிங் செல்லும் எழுத்தாளரும், வழக்குரைஞரும் தங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள காதலை உணர்ந்தார்களா என்பதுதான் கதை.  இந்த கதையை முக்கியமானதாக கருதுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. பெண்கள்தான் காதலை இதில் முதலில் ஏற்றுக்கொண்டு அதனை ஆண்களிடம் தெரிவிக்கிறார்கள். அதற்கு பதிலாக ஆண்கள் பெண்களை தங்களுடைய வீட்டிற்கு வரவேற்கவில்லை. பெண்களின் இடத்திற்கே வந்து வசிக்கிறார்கள். மும்பையில் வசிக்கும் சியா வழக்குரைஞர். அவர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். தனது நிறுவனத்தில் வாடிக்கையாளரான நடிகருடன் கூட டேட்டிங் செல்கிறார். ஆனாலும் கூட இதயத்திற்கு நெருக்கமாக அந்த உறவு அமையவில்லை. அனைத்து உறவுகளிலும் கறாரான விதிமுறைகளை கையாளும் பழக்கம் கொண்டவர். அதன்மூலம் தான் காயப்படக்கூடாது என்பதாக நினைக்கிறார்.  நடிகருடனான பிரேக் நடந்த பிறகு அடுத்த காதலை நிச்சயம் தான் சந்திக்கும் பிற ஆண்களுடன் வைத்துக்கொள்ளலாம். நிறுவன வாடிக்கையாளர்களுடன் செய்யக்கூடாது என உறுதியாக நினைக்கிறார். ஆனால் சியாவிற்கு அடுத்த காதலும் லண்டனில் இருந்து வரும் எழுத்தாளர் வரு

வங்கிகளின் வகைகள் என்ன, அதன் தகுதி, திறன்கள்!

படம்
          பணம் கையாளப்பழகுவோம் வங்கிகளின் புதிய பிரிவுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாரம்பரியமான வங்கிகள் மட்டுமன்றி , நவீன காலத்திற்கேற்ப நிதி வங்கிகள் , சிறிய வங்கிகள் தொடங்கப்பட்டு வருகின்றன . இவ்வகை நிறுவனங்கள் பாதுகாப்பான சூழலில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றன .     நிதி வங்கி வாடிக்கையாளர்களிடம் ரூ .1 லட்சம் அளவுக்ககு மிகாமல் டெபாசிட் பெறலாம் . ஏடிஎம் , டெபிட் கார்டுகளை வழங்கலாம் . கிரடிட் வழங்க முடியாது . கடன்களை வழங்க முடியாது . நிதி வங்கிகள் மியூசுவல் பண்ட் மற்றும் காப்பீடு தொடர்பான சேவைகளை வழங்குகிறார்கள் . சிறு வங்கிகள் இவை சிறு , குறு தொழில்நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ரூ .25 லட்சம் வரை கடன்களை வழங்குகின்றன . முறைப்படுத்தாத துறை சார்ந்து சிறு வங்கிகள் செயல்படுகின்றன . வணிகப் பிரதிநிதி   இவர் வங்கி சார்ந்து அதன் பிரதிநிதியாக செயல்படுபவர் . தொலைதூர கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்களை தேடிச்சென்று அவர்களுக்கு தேவையான வங்கிச் சேவைகளை வழங்குவார் . பிரதிநிதியின் பணிகள் வங்கிக்கணக்கு தொடங்க உதவுவது

அரிதினும் அரிய ரத்தம்! - எப்பிரிவு தெரியுமா?

படம்
அரிதினும் அரிய ரத்த வகைகள்! ரத்த வகைகளை பொதுவாக நீங்களே அறிவீர்கள். ஏ, பி, ஓ, ஏ பாசிட்டிவ், பி பாசிட்டிவ்,  நெகட்டிவ் என குறிப்பிடுவார்கள். இதனைக் கூற இதிலுள்ள ஆன்டிஜென் விஷயங்கள்தான் காரணம். ரத்த செல்களின் மேல் கோட்டிங்காக இருப்பதுதான் ஆன்டிஜென்கள். இதில் ஏ,பி முதன்மையானவை. இதில் ரீசஸ் டி எனும் ஆன்டிஜென் அதிகம், குறைவு என்பது மட்டுமே கணக்கில் கொண்டு ரத்த வகை பிரிக்கிறார்கள். உலகளவில் 35 ரத்த குரூப்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை வகை இருந்தால், அதனைச் சொன்னால் நோயாளிக்கு கூடுதலாக காய்ச்சல் இரண்டு டிகிரி எகிற வாய்ப்பிருக்கிறது. எனவே சுருக்கமாக அ,ஆ போல ஏ,பி,ஓ என்று குறிப்பிடுகின்றனர். நூற்றுக்கணக்கான ஆன்டிஜென்கள் நம் ரத்தத்தில் உண்டு. அதில் நாம் 35 வகைகளை மட்டுமே ரத்தப்பிரிவாக வரிசைப்படுத்தியுள்ளோம். உங்களது ரத்தப்பிரிவிலுள்ள ஆன்டிஜென், உலகிலுள்ள 99 சதவீத மனிதர்களிடையே இல்லாமல் இருந்தால் நீங்கள்தான் அடுத்த ஸ்பைடர்மேன். ஆம். அரிதினும் அரியவர். ரீனல்(Rhnull ) எனும் ரத்தப்பிரிவு உலகிலேயே அரிதானது. காரணம் இந்த ரத்தப்பிரிவுக்கு ரத்தம் அளிக்க உலகிலேயே ஒன்பது பேர்தான் தயாரா