இடுகைகள்

ஆண் குழந்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண் குழந்தைகளின் உருவாக்கத்தைத் தவிர்க்கும் ஜப்பான் ஆராய்ச்சி!

படம்
பிறக்கும் குழந்தைகளை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்! செய்தி: மரபணுக்களை மருத்துவர்கள் கணித்து, ஆண், பெண் குழந்தைகளைத் தீர்மானிக்கும் திறனைப் பெற்றுள்ளனர்.இது சமூகத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜப்பானில் உள்ள ஹிரோசிமா பல்கலைக்கழகத்தில் மசயுகி சிமடா  தலைமையிலான ஆராய்ச்சிக்குழுவினரின் ஆராய்ச்சி இதுவே. ஆணின் விந்தணுக்களில் எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்கள் உண்டு. இவற்றில் எக்ஸ் குரோமோசோம்கள் கருப்பைக்குள் செல்வதைத் தாமதப்படுத்தினால் பெண் குழந்தைகளின் பிறப்பைத் தடுக்கலாம். இதன் விளைவாக, ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த ஆராய்ச்சிதான் மருத்துவ வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. விந்தணுக்களில் சராசரியாக ஐநூறுக்கும் மேற்பட்ட மரபணுக்கள் உள்ளன. விந்தணு செல்களை கருப்பைக்குள் நடத்திச்செல்வது இதன் அடித்தளத்திலுள்ள பதினெட்டு புரதங்கள் ஆகும். இவற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, குழந்தைகளின் பிறப்பை மாற்றலாம் என்பது புதிய கண்டுபிடிப்பு. “இந்த கண்டுபிடிப்பு  சமூகத்தின் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனை ஒருவர் தன

மக்கள்தொகை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறதா?

படம்
மக்கள்தொகை கட்டுப்பாடு! பிரதமர் மக்கள்தொகை கட்டுப்பாடு பற்றிய தன் கவலையை சுதந்திர தினத்தன்று வெளியிட்டார். இதைப்பற்றி நாளிதழில் படிக்கும்போது, அருகிலிருந்தவர்கள் நாடோடி மனிதர்கள் எப்படி இத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் என விவாதித்துக்கொண்டிருந்தனர். உண்மையில் அவர்களது பேச்சில் இருந்தது பேராசையா, பொறாமையா என்று தெரியவில்லை. எதுவாக இருந்துவிட்டுப் போகட்டும். உண்மையில் பேட்டி பச்சாவோ திட்டத்தை இந்தியர்கள் கைவிட்டு ஆண் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். மக்கள் தொகை வளர்ச்சி என்பது 2001-2011 வரையில் 1.64 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2011 சென்சஸ் படி குறிப்பிடப்பட்ட அறிக்கை. உலகவங்கியின் அறிக்கைப்படி 2001 முதல் 2018 வரை 1.04 என மக்கள் தொகை குறைந்தே வந்திருக்கிறது. பொருளாதார அறிக்கை 2018-19 படி, பனிரெண்டு மாநிலங்களில் மக்கள்தொகை சதவீதம் 1 எனவே உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உ.பி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம் குறைந்து காணப்படுகிறது. தகவல்கள் வட இந்தியாவில்தான் மக்கள்தொகை சதவீதம் அதிகம் என காட்டுகிறது. இந்