இடுகைகள்

ஜே கிருஷ்ணமூர்த்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கையின் அழகு - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் விக்டர் காமெஸி ஒருவர் அமரத்துவம் கொண்ட களங்கமற்ற புனிதம் என்ற ஒன்றை அடையாளம் கண்டார் என்றால் அவர் உலகிலுள்ள வேதனைகளை புரிந்துகொண்டார் என்று பொருள். வேதனை என்பது தனிப்பட்ட ஒருவரின் அதாவது உங்களுடையது மட்டுமல்ல. உலகம் முழுக்க உள்ள வேதனை பற்றியது. இது உணர்ச்சிகரமான, காதல் உணர்வு கொண்டதாக இல்லை. நம்முடன்தான் இருக்கிறது. வேதனையுடன் வாழ்வதில் உள்ள சிக்கல், அதிலிருந்து தப்பித்து ஓடாமல் இருப்பதுதான். நீங்கள் தப்பித்து ஓடாமல் இருந்தால், வேதனையை எதிர்கொள்ள அதிக ஆற்றல் தேவை. வேதனையைப் புரிந்துகொண்டால் நீங்கள் அதனால் பாதிக்கப்பட மாட்டீர்கள். இந்த முறையில் தியானம் செய்து அமரத்துவமும், புனிதமுமான தீர்வை அடையாளம் காண்பீர்கள். சானென் 3 ஆகஸ்ட் 1975   கடவுள், உண்மையை தேடுவது நிச்சயமாக முழுமையாக சிறந்ததுதான். நன்மைக்கான வேண்டுதல், அவமானம், கண்டுபிடிப்புகள், மனதின் பல்வேறு தந்திரங்களைக் கடந்து தேட வேண்டும். இதன் அர்த்தம் இவற்றைக் கடந்த பின்னும்   உள்ள தன்மைதான். அதுதான் உண்மையான மதம். நீங்கள் தோண்டியுள்ள நீச்சல் குளத்தை கைவிட்டு ஆற்றின் போக்கில் பயணித்து செல்

கதவைத் தட்டும் வாழ்க்கை! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  பின்டிரெஸ்ட்/பிகேன்ஸ் நீங்கள் கதவு, ஜன்னல், ஆகியவற்றை மூடிவைத்துவிட்டு வீட்டுக்குள் வாழ்ந்தால் பாதுகாப்பாக, ஆபத்தின்றி இருக்கலாம் ஆனால் வாழ்க்கை என்பது அப்படியானதல்ல. வாழ்க்கை, மூடிய கதவுகள், ஜன்னல்கள் மீது முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. அப்படி முட்டி திறந்தால் நீங்கள் இப்போது பார்ப்பதை விட விரிவான காட்சியைக் காணலாம். ஆனால் உங்கள் மனதில் உள்ள பயத்தால் ஜன்னல்களை அடைத்து வைத்திருக்கிறீர்கள். இதனால் வாழ்க்கை உங்கள் கதவை தட்டும் சத்தம் அதிகமாக கேட்க தொடங்குகிறது. வாழ்க்கை பற்றிய வெளிப்புற பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டால், அது உங்களை நோக்கி வந்து வெளித் தள்ளுவதற்கு தொடங்கும். வாரணாசி 16 டிசம்பர் 1952 தி கலெக்டட் வொர்க்ஸ் வால். 7   உங்களை மாற்றுவது எது?   நெருக்கடி, தலையில் விழும் அடி, சோகம், கண்ணீர் இவை எல்லாமே ஒரு நெருக்கடிக்கு அடுத்த நெருக்கடி என தொடர்ந்து நடக்கும்போது ஏற்படுபவைதான்.   நீங்கள் வேதனையால் இடைவிடாமல் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எதுவுமே மாறப்போவதில்லை. காரணம், நீங்கள் மாற்றத்திற்கு இன்னொருவரை நம்பியிருக்கிறீர்கள். யாருமே, பிரச்னையை நான் கண்டுபிடித்து த

இதுவே சரியான நேரம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார்   ரோபோக்கள் மேம்படுத்தப்படும்போது, மனிதர்கள் தினசரி இரண்டு மணி நேரம் வேலை   செய்தால் போதுமானது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை உருவாகும். அப்போது மனிதர்கள் என்ன செய்வார்கள்? பொழுதுபோக்கு துறையால் ஈர்க்கப்படுவார்களா? அல்லது   அந்த துறையில் உள்ள விஷயங்களை கவனித்து சோதித்துப் பார்ப்பார்களா? இவைதான் மனிதர்களுக்கான   இரண்டு வாய்ப்புகளாக   உள்ளன. சானன் 21 ஜூலை 1981 தி நெட்வார்க் ஆஃப் தாட்   நீங்கள் கொண்டிருக்கும் வரைமுறையிலான திறன்கள் மற்றும் பரிசுகள் ஆபத்தான நண்பர்களாக உள்ளன. அவை உங்களுக்கு புரியாத தன்மையையும், சோகத்தையும் கொண்டு வருவதில்தான் நிறைவுபெறுகின்றன. உங்களது உணவு, உடை, பாவனை, மகிழ்ச்சி ஆகியவை மெல்ல சோர்வுற்றவராக மாற்றுகிறது. உங்களது மனது உணர்ச்சிகளற்றதாக, விஷயங்களை புரிந்துகொள்ளும் திறனை விரைவில் இழப்பதாக உள்ளது. சக்திவாய்ந்த மனம் நிறைய செயல்பாடுகளை செய்கிறது. குறிப்பாக, உரையாடுகிறது. நடனமாடுகிறது. இதற்கென அதற்கு காரணங்கள்,முடிவு, விழிப்புணர்வு ஆகியவை உள்ளன. இதன் வழியாக அமைதி, தெளிவு கிடைக்கிறது. தி வேர்ல்ட் வித் இன் தன்னை அ

மனிதர்கள் தங்களை மறக்க நினைப்பது ஏன்? ஜே கிருஷ்ணமூர்த்தி

  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் – விக்டர் காமெஸி இரவு கிளப்புகளில், பொழுதுபோக்கு பூங்காக்களில், பயணத்தில் செல்வச்செழிப்பானவர்கள் தங்களை மறக்க நினைக்கிறார்கள்.   சற்று தந்திரமானவர்கள், தங்களை மறக்க புதிய நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.   முட்டாள்கள், தங்களை மறக்க மக்கள் கூட்டத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களின் ஆன்மிக குரு, அவர்களுக்கு எப்படி, என்ன செய்யவேண்டுமென கூறுகிறார். பேராசை கொண்டவர்கள் தங்களை மறக்க ஏதாவது ஒரு செயலை செய்துகொண்டிருக்கிறார்கள்.   நாம் அனைவருமே முதிர்ச்சியானவர்களாக வயதானவர்களாக மாறிக்கொண்டே நம்மை நாமே மறக்க முயல்கிறோம். வாரணாசி 22 ஜனவரி 1954 லீவிங் ஸ்கூல்- என்டரிங் லைஃப்                அமைதியில்லாத மனம், தொடர்ச்சியாக தனது உணர்வு மற்றும் செயல்பாட்டை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால், அது நிரம்பியதாக அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக தோன்றும். பல்வேறு உணர்ச்சிகள், கடந்து செல்லும் ஆர்வங்கள், கிசுகிசு ஆகியவை மனதை நிரப்புகின்றன. பிறர் சார்ந்த விஷயங்களே ஒருவரின் மனதை அதிகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. வார, மாதம இதழ்கள், நாளிதழ்களில் கிசுகிசு பத்திகள், கொ

புலனுணர்வு சார்ந்த வாழ்க்கை அர்த்தம் இல்லாதது, வெறுமையானது - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  மனிதர்கள் வாழ்வதற்கான பொருள்தான் என்ன? நீங்கள் இதற்கான பதிலைத் தேடாமல் இருக்கலாம். அதை புறக்கணிக்கலாம். இருபது அல்லது முப்பது ஆண்டுகளை செலவழித்து இயற்பியல், தத்துவம், சமூகவியல், உளவியல் என பலவேறு துறை சார்ந்த விஷயங்களைக் கற்கலாம். ஆனால், ஒருநாளை அல்லது ஒரு மணிநேரத்தைப் பயன்படுத்தி நீங்கள் யார், எதற்காக இங்கு வாழ்கிறீர்கள் என்று யோசித்துப் பார்க்க விரும்புவதில்லை. ஐஐடி பாம்பே 7 பிப்ரவரி 1984 வொய் ஆர் யூ பீயிங் எஜூகேட்டட்?   நாம் நமது வாழ்க்கையை வீணடித்துக்கொண்டு இருக்கிறோமா? பல்வேறு தொழில் சார்ந்த துறைகளில் ஒட்டுமொத்த ஆற்றலையும் சிதறடித்துக்கொண்டு இருக்கிறோம் என்ற அர்த்தத்தில் இதைக் கூறுகிறேன். நம் முழு இருப்பையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோமா?   நான் நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும். அதுதான் பெரிய சந்தோஷம். அல்லது உங்களுக்கு உள்ள திறமை என்பது ஒரு பரிசு. அதை ஆன்மிக வாழ்க்கைக்கு பயன்படுத்துவது ஆபத்தானது. எனவே, அதை குறிப்பிட்ட துறையில் பயன்படுத்தலாம் என நினைக்கிறீர்கள்.   குறிப்பிட்ட துறையில் திறமையைப் பயன்படுத்துவது என்பது துண்டுகளாக ஒருவரின் ஆற்றலை சிதறடிப்பது. எனவே நீங்கள்

இயற்கையோடு கொள்ளும் தொடர்பை இழக்கக்கூடாது - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி கூறிய கருத்துகள் பூமியில் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.   ஆனால் அவர்களுக்கு இடையில் எதற்கு இத்தனை முரண்பாடுகள், பிரச்னைகள் உருவாகின்றன? இதற்கு எளிதான காரணங்களாக அதிக மக்கள்தொகை, அறநெறி வீழ்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து மக்களின் நேரடி தகவல் தொடர்பு குறைந்துபோனது   என்று குறிப்பிடலாம். உண்மையில் இப்படி முரண்பாடுகள் ஏற்பட அடிப்படைக் காரணங்கள் என்ன? பாரம்பரியமாக நன்மைகள், கருணை, உயிர்களைக் கொல்லாமை, இரக்கமின்றி   நடந்துக்கொள்ளாமை ஆகியவற்றை போதித்த நாடு எங்கே தவறாகிப்போனது. அதன் செயல்பாட்டில் எங்கே தவறு நடந்தது? பாம்பே – ஜனவரி 1968 மீட்டிங் லைஃப்   தொன்மைக் காலத்தில் பேராசை, அதிகாரம் ஆகியவற்றில் சிக்காமல் சுதந்திரமாக மக்கள் குழுவினர் வாழ்ந்தனர். பேராசை, அவநம்பிக்கை ஆகியவற்றில் அகப்படாமல் வாழ்ந்த மக்கள் குழுவினரால், ஆன்மிகம், அறம் ஆகியவை வீழ்ச்சியடையாமல் பிழைத்தன.   இந்த மக்கள் குழு, பெரிதாகும்போது சமூகத்திற்கும் அதேயளவில் பாதுகாப்பு கிடைத்தது. இப்படி பாதுகாப்பு கிடைத்து தப்பித்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகில் ஏற்படும

நவீன உலகில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தனிநபர்களே காரணம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி ஜே கிருஷ்ணமூர்த்தி உலகில் மோசமான நெருக்கடி நிலை, ஏதேனும் சில செயல்பாடுகளால், வாய்ப்பால் ஏற்படுவதில்லை. அதை உருவாக்குவது மக்கள் கூட்டத்தில் உள்ள தனிநபர்களான ஓவ்வொருவரும்தான். பொறாமை, வேட்கை, பேராசை, அதிகார ஆசை, பிறரைக் கட்டுப்படுத்துதல், போட்டி,, இரக்கமில்லாத தன்மை, உடனடியாக பலன்கள் கிடைக்கவேண்டுமென நினைத்தல் ஆகியவற்றை தினசரி வாழ்க்கையில் நாம் செய்கிறோம். உலகில் உருவாகும் அபாயத்திற்கும் குழப்பத்திற்கும் வேறு யாரோ காரணமல்ல. நாம்தான் காரணம்.   அதாவது நீங்களும், நானும்தான்.   ஒன்றை ஆழமாக கவனிக்காமல், சிந்திக்காமல், ஏதேனும் பேராசையை நோக்கி ஓடுவது, உணர்வுகளின் தேவையை மட்டுமே தீர்மானிப்பது, காரணமாக ஆழமான பேரழிவு நேருகிறது.   இந்த மோசமான நிலைக்கு நெருக்கடிக்கு நீங்கள்தான் பொறுப்பு. வேறு எந்த குழுவோ, தனிநபரோ காரணமல்ல. நீங்கள் மட்டுமே காரணம். Madras The cpllected works vol .5october 1947 the collected works 4 நவீன உலகம் என்றால் என்ன? பல்வேறு நுட்பங்களாலும், பெரிய நிறுவனங்களின் திறனாலும் உலகம் உருவாகியுள்ளது. இங்கு, தொழில்நுட்ப மேம்பாட்டுடன் மனிதர்களின் தேவையை பற்றா

மனிதர்களால் உருவாக்கப்படுவதே உண்மையான நெருக்கடி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி, தத்துவவியலாளர் உண்மையான நெருக்கடி ஜே கிருஷ்ணமூர்த்தி காப்புரிமை (ஆங்கில மூலம்) – கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் இந்தியா வரலாறு முழுவதும் பார்த்தால், அதில் மனிதர்கள் உருவாக்கிய பேரழிவுகள் நம்மை ஆச்சரியத்திலும் அதேசமயம் அதிர்ச்சியிலும் ஆழ்த்தும்படி அமைந்துள்ளது. பல்வேறு வல்லுநர்கள் கூறிய கணிப்புகள், அறிவுஜீவிகளின் கருத்துகள் என அனைத்தையும் கடந்து   உருவாகும் பல்வேறு மோசமான சூழல்கள் மனிதர்களை ஆதரவில்லாத நிலையில் தள்ளியிருக்கின்றன. நெருக்கடியான நிலை, பொய் ஆகியவற்றுக்கு இடையே வாழ்க்கை அமைந்துள்ளது. நாம், இந்த வாழ்க்கையை வாழவே பெருமளவு ஆற்றலையும், காலத்தையும் செலவழிக்கிறோம். ஆனால், வாழ்க்கை பற்றிய உண்மையான தேடல், மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான காரணம் பற்றி யோசிப்பதில்லை. இப்படி வாழும் வாழ்க்கையால் உலகில் பெரும் நெருக்கடி நேருமா இல்லையா என்பது பற்றி நாம் எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை. உண்மையில் அப்படி கேள்வி கேட்டால் கூட அந்த சூழ்நிலையை நேரடியாக எதிர்கொள்ள பயப்படுகிறோம். அடுத்து நீங்கள் வாசிக்கப்போவது ஜே கிருஷ்ணமூர்த்தி 1934-1985 வரையிலான காலகட்டத்தில் பேசிய உரை, எழ

முழுமையானவராக வாழ்ந்தால் புறவயமான பாதுகாப்பைத் தேடவேண்டியதில்லை - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  கே.நீங்கள் ஒருபோதும் ஏழையின் வாழ்க்கையை வாழ்ந்தவரில்லை. மறைமுகமாக பணக்கார நண்பர்களின் ஆதரவு, இருந்து வந்துள்ளது. ஆனால் மக்கள் தம் வாழ்க்கையில் அனைத்து வித பாதுகாப்புகளையும் விட்டு விட வேண்டுமென்று பேசி வருகிறீர்கள். ஏற்கெனவே இங்கு பலகோடி மக்கள் அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்கள். நீங்கள் வறுமையான சூழலை அனுபவிக்காதவர், அதேநேரம் , புறவயமான பாதுகாப்பின்மையை அனுபவிக்காதவர். எப்படி இதுபோல பாதுகாப்பை கைவிடவேண்டுமென கூறுகிறீர்கள்? பதில். இந்த கேள்வி தொடர்ச்சியாக என்னிடம் கேட்கப்பட்டு வருவதுதான். நான் இதற்கு முன்னமே பதில் அளித்திருந்தாலும், மீண்டும் பதில் கூறுகிறேன். நான் இங்கு பாதுகாப்பு என்று கூறுவது, மனம் உருவாக்கும்   இசைவான சொகுசான சூழல்களைத்தான். புறவயமான பாதுகாப்பு என்பது, மனிதர்கள் உயிரோடு வாழ ஓரளவுக்கு உதவுகிறது. அதை நான் மறுக்கவில்லை. இந்த இடத்தில் இரண்டையும் ஒன்றாக்கி குழப்பிக்கொள்ளவில்லை. நீங்கள், இப்போது உடல் மட்டுமல்லாமல் மனம் பற்றிய பாதுகாப்பையும் பேசுகிறீர்கள். இதன் வழியாக உறுதியான தன்மை உருவாகிறது. பாதுகாப்பு பற்றி தவறாக புரிந்துகொண்டால், அதைப்

மனப்பூர்வமாகத் தேடினால் சுதந்திரத்தைப் பெறலாம்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி எப்படி தேர்ந்தெடுப்பது -2 உங்கள் வாழ்க்கை என்பது தேர்வுகளாக அமைந்துள்ளது. உங்களின் தேர்வு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருவதால் அதை நீங்கள் விரும்புகிறீர்கள்.  இந்த தேர்வு, உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த நாள் இந்த தேர்வு உங்களுக்கு பிடிக்காமல் போய்விடலாம். எனவே, நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயங்களை உடனே கைவிட்டுவிட்டு வேறு விஷயங்களுக்கு நகர்ந்துவிடலாம். ஆகவே,  உங்களது தேர்வு என்பது உணர்வுநிலையைச் சேர்ந்தது. நீங்கள் அதை சுயநினைவு சார்ந்தும் இருநிலைப்பாடுகள் சார்ந்தே எடுக்கிறீர்கள். ஆனால் எடுக்கும் தேர்வு நிலைப்பாடு, எதிர்மறையாக அமைகிறது. எதிர்மறையாகச் செல்லும் தேர்வுகள் பற்றி நீங்கள் கவனமுடன் இருந்தால்,  உண்மை எதுவென அடையாளம் கண்டுகொள்ளலாம். உண்மையை அடையாளம் காண்பதற்கான ஆர்வம், வேட்கை இல்லை என்பதால் உணர்வு நிலை சார்ந்து எதிர்மறையான தேர்வுகளே கிடைக்கின்றன. இந்த நிலையில் மனம் முழுக்க எதிர்மறை தேர்வுகளிலிருந்து எளிதாக விடுதலையாவதில்லை. இச்சூழலில், விழிப்புணர்வாக, செழிப்பான நிலையில் மனம் இருக்காது. ஒருவரின் எதிர்மறைத் தேர்வுகளில் சுதந்திரம் இருப்பது, சாதனை என்று க

முன்முடிவுகளை களைந்தால்தான் புத்தாண்டு புதியதாக இருக்கும் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி புதிதாக தொடங்கலாமா? புதிய ஆண்டிற்கான தொடக்கம் இது. புதிய ஆண்டு என்றால் அதற்கான அர்த்தம் என்னவென்றபுரிந்துகொள்கிறோம்? புதியது, முழுக்கவே புதியது, இதுவரை நடைபெறாத ஆண்டா? புதியது என பேசிக்கொள்கிறோம் என்றால் சூரியனுக்கு கீழ் உருவாகும் புதிய   ஒன்றா?   புத்தாண்டு, மகிழ்ச்சியான புத்தாண்டு என ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைக் கூறுகிறோம். உண்மையிலேயே புதிய ஆண்டு என்பது மகிழ்ச்சியானதாக நமக்கு அமையுமா?   புத்தாண்டு, புதியதாக அமையுமா அல்லது பழைய மாதிரியே வடிவத்தில் பழகியதாக ஆண்டுதோறும் நடக்கிறதா, இருக்குமா? அதே பழைய சடங்குகள், பழைய கலாசாரம், பழைய பழக்க வழக்கங்கள், இதுவரை என்ன செய்துகொண்டிருந்தோமோ அதை அப்படியே செய்துகொண்டிருப்போமா?   அதே பழைய விஷயங்களை புதிய ஆண்டிலும் செய்துகொண்டிருப்போமா? புதிதாக ஏதேனும் இருக்குமா? புதிதாக நாம் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்குமா? நீங்கள் இதுபோன்ற கேள்வியைத்தான் பின்தொடர்ந்து செல்லவேண்டும். வாழ்க்கையின் அனைத்து நாட்களிலும் இதுவரை செய்யாத விஷயங்களை செய்யவேண்டும்.   புதிய செயல்களை செய்யும்போது மூளை அதன் முன்முடிவுகள், தீர்ப்புகள், கருத்துகள்,

மனதில் வெறுமை நிலை உருவாவது எப்படி? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி எப்படி முடிவெடுப்பது? நீங்கள் தேர்வுகளின் அடிப்படையில் வாழ்கிறீர்கள். நீங்கள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் எதற்காக ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்ன தேவை, எந்த விசை உங்களை தேர்ந்தெடுக்க உந்துகிறது? நான் ஒருவரை இப்படி உந்தும் விசையை, ஒருவரின் உள்ளே உள்ள வெறுமை நிலை அல்லது தனிமை   என்று கூறுவேன். இந்த முழுமை இல்லாத நிலை ஒருவரை தேர்ந்தெடுக்க தூண்டுகிறது. இப்போது கேள்வி, வெறுமை நிலையை எப்படி நிரப்புவது என்பதல்ல. அதற்கு பதிலாக வெறுமை நிலையை எது உருவாக்குகிறது என்பதுதான். தேர்வுகளின் செயல்பாட்டால் வெறுமை நிலை உருவாகிறது , செயலின் முடிவில் என்ன கிடைக்கிறது என்பதை நோக்கி செல்வதால் வெறுமை உருவாகிறது என்கிறேன். வெறுமை நிலை உண்டாகும்போது, ஒரு கேள்வி உருவாகிறது, எப்படி இந்த வெறுமை நிலையை நிரப்புவது, தனிமை நிலையை, நிறைவுறாத நிலையை அழிப்பது எப்படி?   என்னைப் பொறுத்தவரை வெறுமை நிலையை நிரப்புவது என்பது ஒரு பதில் கிடைக்கும் கேள்வியாகவே தெரியவில்லை. ஏனெனில் வெறுமையை எதனாலும் நிரப்பவே முடியாது.   ஆனால் பெரும்பாலான மக்களை அதை நிரப்பவே முயன்று வருகிறார்கள். இ

வாழ்ந்து அனுபவித்தலே உண்மையை புரிந்துகொள்வதற்கான வழி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  வரையறுக்கப்படாதபடி வாழ்க்கையை நிஜத்தில் வாழ்தல் நம்மில் பெரும்பாலானோர் உண்மையான வாழ்க்கை இருப்பதாக நம்புகிறார்கள். அதை அழியாத ஒன்றாக நினைக்கிறார்கள். ஒருவர் , வாழ்க்கையில் அழியாத தன்மை கொண்ட விஷயங்களை உணர்வது அரிதிலும் அரிதாகவே வாழ்க்கையில் நடைபெறுகிறது. என்னைப் பொறுத்தவரை நிஜம் என்பது, கடவுளாக இருக்கலாம். அதை அமரத்துவம், அழியாத தன்மை   அல்லது வேறு எந்த பெயர்களைக் கொண்டும் குறிப்பிடலாம். உயிர்வாழக் கூடிய புதுமைத்திறன் கொண்ட விஷயங்களை வரையறை செய்து குறிப்பிட முடியாது. நிஜ வாழ்க்கை என்பது இந்த வரையறைகளைக் கடந்தது. உண்மையை நீங்கள் வரையறை செய்து கூறினால்,அது நிலையானதாக இருக்காது. வார்த்தைகளைப் பயன்படுத்தி உருவாக்கும் மாயமாகவே இருக்கும். பிறர் கூறும் வார்த்தைகளின் அடிப்படையில் காதலை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. காதலை நீங்கள் அனுபவித்தால்தான் அதை உணர முடியும். உப்பின் சுவையை அறிய, நீங்கள் அதை சுவைத்துப் பார்க்கவேண்டும். நாம் பெரும்பாலான நேரம், உண்மையைத்   தேடி உணர்வதை விட அதைப் பற்றி குறிப்புகளை வரையறைகளையே விரும்புகிறோம்.   நான் அதை வரையறை செய்யப்போவதில்லை. வார்த்தைகளுக்குள்

நாம் வாழும் வாழ்க்கையில் பாதுகாப்பு கிடையாது - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி நாம் உண்மையைத் தேடவில்லை; ஆறுதலைத் தேடுகிறோம் மனம், இதயம் ஆகியவை பற்றி ஆராயத் தொடங்கினால் புதிய சிந்தனை, வாழ்க்கைத் தெளிவு, உணர்வு நிலை ஆகியவற்றைக் கண்டறியலாம். வாழ்க்கையை இந்த வகையில் மாறுபட்டதாக்கி அமைத்துக்கொள்ளலாம்.   நீங்கள் உண்மையில் உங்களுக்கு   மனதில் திருப்தி ஏற்படுத்தும் விளக்கங்களை தேடுகிறீர்கள். உங்களில் பெரும்பாலானோர் உண்மையைப் பற்றிய வரையறையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வரையறையைக் கண்டுபிடித்தவர்கள் தங்கள் வாழ்வை அழியாத பெருஞ்ஜோதியில் ஐக்கியமாக்கிக் கொள்ள முடியும். உங்கள் தேடுதலின் லட்சியம் உண்மைதான் என்றால்,   நீங்கள் தேடிக்கொண்டிருப்பது உண்மையல்ல. ஆறுதல் அல்லது சொகுசான வேறு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் தினசரி வாழ்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள், முரண்பாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைக்கிறீர்கள். உண்மையைத் தேடுவதில் உள்ள கஷ்டங்களைக் கடந்து பார்த்தால், நாம் பிறந்ததே உண்மையைத் தேடி அறிவதற்குத்தான் என புரிந்துகொள்ள முடியும்.   உண்மையைத் தேடுவதில் உள்ள சிரமங்கள், மனநிலையைக் குலைத்து தேடலை