இடுகைகள்

அபாயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடலில் ஏற்படும் அபாய மாற்றங்களால் உலக நாடுகள் மூழ்கும் அபாயம்!

படம்
    நேரடியாகவும் மறைமுகமாகவும் கடல் ஏராளமான பாதிப்புகளை அடைந்து வருகிறது. கடல் வெப்பமடைவதற்கு முக்கியமான காரணங்கள், சூரிய வெப்பம், மேகங்கள், நீர் ஆவியாகும் செயல்முறை, பசுமை இல்ல வாயுக்கள் வெப்பத்தை கடத்தி பிறகு பூமிக்கு கடத்துவது ஆகியவையாகும். மேற்சொன்ன காரணங்கள் மூலம் வெப்ப அலை உருவாகி கடல் மட்டம் மெல்ல உயர்கிறது. கடலிலுள்ள பவளப்பாறைகள் மெல்ல அழியத் தொடங்குகின்றன. மீன்கள் வெப்பம் காரணமாக துருவப் பகுதிகளுக்கு நகரத் தொடங்கியுள்ளன. கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் அதிகளவு உள்ளிழுக்கப்பட்டால், அமிலத்தன்மை அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில் கடல் உயிரினங்கள் அழியத் தொடங்குகின்றன. கடல்மட்டம் உயர்வதால் மாலத்தீவுகள் (இந்தியப் பெருங்கடல்), கிரிபதி (பசிஃபிக் கடல்) ஆகிய தீவுகள் மெல்ல மூழ்கத் தொடங்கியுள்ளன. 2100க்குள் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்தால் தீவுகளில் உள்ள கடற்கரையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் ஈர்த்துக்கொள்கிறது. இதன் விளைவாக, கடலின் பிஹெச் அளவு மாறி, அமிலத்தன்மை கொண்டதாகிறது. இதன் காரணமாக சில கடல் வாழ்

வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடிக்க முயலும் புதிய ஆராய்ச்சி!

படம்
                வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி ! விண்வெளியிலுள்ள வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி நவீனமடைந்து வருகிறது . 1960 ஆம் ஆண்டு ரேடியோ வானியலாளர் ஃபிராங்க் டிரேக் , விண்வெளியிலிருந்து வரும் சிக்னல்களில் மாறுதல்களை கண்டார் . அவர் பணியாற்றும் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள தொலைநோக்கி ஆய்வகத்தில் , 26 மீட்டர் அளவிலான தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது . இது , எபிசிலான் எரிசிலானி என்ற விண்மீனை கண்காணித்து வந்தது . அப்போது திடீரென அதன் கருவிகளில் சிக்னல்களை பெறும் வேகம் அதிகரித்தது . வேற்றுகிரகத்திலிருந்து உயிரினங்கள் பூமியைத் தொடர்புகொள்கின்றன என டிரேக் நினைத்தார் . சில நாட்கள் கழித்து தொலைநோக்கியில் முன்னர் கிடைத்தது போன்ற சிக்னல்கள் கிடைத்தன . பிறகுதான் அது ஆகாய விமானம் ஒன்றிலிருந்து பெறப்பட்டவை என தெரிய வந்தது . வானியலாளர் டிரேக் எபிசிலான் எரிசிலானி மற்றும் தாவ் செடி என்ற இரு விண்மீன்களை கண்காணிப்பதில் சுணங்கவேயில்லை . செவ்வாய் கோளை ஆராய்தற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் போலவே , வேற்றுகிரகவாசிகளின் புத்திசாலித்தனத்தை அறியும்

மருத்துவத்திற்கு பயன்படும் நைட்ரோகிளிசரின்!

படம்
மிஸ்டர் ரோனி நைட்ரோ கிளிசரின் ஆபத்தான பொருளா? நைட்ரோகிளிசரின் பெரும்பாலும் வெடிகுண்டுகள் தயாரிப்பில் பயன்படுகிறது. பெரும்பாலும் டிஎன்டி டிரைநைட்ரோடிலுன் எனும் வெடிபொருளைப் போலவே ஆபத்தானது. ஆனால் இதன் பாதிப்பு என்பது இதில் சேரும் பகுதிப்பொருட்களால் உருவாகிறது. இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியைக் குறைக்க நைட்ரோகிளிசரினை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நைட்ரஜன் அணுக்கள் நேரடியாக ஆக்சிஜன் அணுக்களை சந்தித்து வினைபுரியும்போது அங்கே புழுதி மட்டும்தான் மிச்சமிருக்கும். அத்தனையும் தரைமட்டாகிவிடும் அளவு அத்தனை பொருட்களையும் தகர்த்துவிடும் சக்தி கொண்ட பொருள் இது. இன்று நோபல் பரிசுக்காக நினைவுகூரப்படும் ஆல்பிரட் நோபல் நைட்ரோகிளிசரினைக் கண்டுபிடித்து பெரும் பணம் ஈட்டினார். 2 அரிய விஷத்தால் கொல்லப்பட்ட நிகழ்ச்சி ஏதேனும் கூறுங்கள். 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்ஸாண்டர் லிட்னென்கோ மீது விஷத்தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை ஆராய்ந்த மருத்துவர்கள் அவர் மீது பொலோனியம் என்ற விஷத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். அதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? இது

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவையா பூனை, நாய்கள்?

படம்
giphy மிஸ்டர் ரோனி சூழலைக் கெடுக்கும் வளர்ப்பு பிராணிகள்! ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான். ஏனெனில் மத்திம சைசில் உள்ள நாய், எஸ்யூவி கார் வெளியிடும் அளவுக்கு கார்பன் வாயுக்களை வெளியிடுகிறது.இது பூமிக்கு ஏற்புடையதல்ல. பூனைகள், நாய்கள் மனிதர்களுக்கு அடங்கி நடப்பது போல தெரிந்தாலும். அது உண்மையல்ல. அவைகளுக்குத் தான் நாம் சேவை செய்கிறோம். அவை, பல்வேறு காட்டு விலங்குகளை வேட்டையாடுவதையும் பெடிகிரி சாப்பிட்டுக்கொண்டே செய்கின்றன. இப்பாதிப்பு இங்கிலாந்தில் அதிகம். இதன் பொருள் நீங்கள் வளர்ப்பு பிராணிகளை வளர்க்க கூடாது என்பதல்ல. அதன் உணவுக்கான ஏற்பாடுகளை எதிர்காலத்தில் சரியாக வடிவமைத்துக்கொள்ள வேண்டும் இல்லையெனில் சிக்கல்தான். நன்றி - பிபிசி 

ஆயுள் அதிகரிக்க சில டிப்ஸ்கள்!

படம்
ஆயுளை அதிகரிக்கும் பழக்கங்கள் உடனே ஆபீஸ் போவதை நிறுத்திவிடலாமா என்று கேட்காதீர்கள். அதை நிறுத்தினால் சோறு கிடைக்காது. அதை தவிர்த்து பிற விஷயங்களை செய்யவேண்டியதைத்தான் சொல்லுகிறோம். கேளுங்கள். வியர்வைக் குளியல் ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்ட குளியல் அறையைத்தான் மேன்ஷனில் கட்டுகிறார்கள். துண்டைக் கதவில் போட்டுவிட்டு ஜட்டியுடன் அப்படியே உட்கார்ந்துவிடுங்கள். குபீரென வெப்பத்தில் வியர்க்கும். ஆம் . பிளான் அதுதான். நன்கு வியர்த்தால் உடலின் அழுக்குகள் கழிவுகள் வெளியேறிவிடும். பிறகு ஹமாம் போடாமலேயே குளிக்கலாம். ஆயுளும் அதிகரிக்கும் என ஜமா இன்டர்னல் மெடிசின் இதழ் 2015 இல் அறிக்கை வெளியிட்டது. ஏறத்தாழ 2000 பின்லாந்து ஆட்களிடம் செய்த ஆய்வு அறிக்கை முடிவு இது. வியர்வையால் இதயத்துடிப்பு அதிகரிப்பதை எளிய உடற்பயிற்சி என்கிறார்கள் ஆய்வாளர்கள். தியானம் வேதாத்ரி தொடங்கி கைலாசா நித்தியானந்தா வரையிலும் சொல்வது இந்த ஒன்றைத்தான். நமக்கு கண்ணை மூடினால் தியானத்தை தவிர அத்தனையும் வருகிறது என்பதால் இதை எங்கே சென்று முறையிட. விடுங்கள். அப்படி செய்தால், சிறிதுநேரம் மூளை, மனது ஆகியவற்றின் கொதிப்புக

உலகிலேயே ஆபத்தான மன அழுத்தம் தரும் வேலைகள் இவைதான்

மன அழுத்தம் தரும் வேலைகள் அனைத்து வேலைகளும் இன்று மன அழுத்தம் உருவாக்குவதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. மாடர்ன் டைம்ஸில் சார்லி சாப்ளின் தொழில் வளர்ச்சியை பகடி செய்திருப்பார். அதுபோலவே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. பணியாளர்கள் வேலை பற்றிய உறுதியின்மையை சட்டங்கள் மூலம் ஏற்படுத்தி வருகிறது. அதோடு இரவிலும் பணியாற்றலாம் என்று தொழிலதிபர்களுக்கு பேராசை ஏற்படுத்துகிறது. பென்சன் போன்ற வசதிகளையும், அரசின் பொறுப்பையும் மறுத்து வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பதற்றம் கூடி இதயத்தின் லப்டப் அடுத்த சீட் நண்பருக்கும் கேட்குமளவு பிரச்னை ஆகிறது. கேரியர்காஸ்ட் வலைத்தளம் மன அழுத்தம் தரும் வேலைகளை பட்டியலிட்டுள்ளது. அவற்றில் சில வேலைகளைப் பார்ப்போம். விமான பைலட் உயரமான இடத்தில் வேலை என்றாலும், இயந்திரத்தில் ஒரு நட், போல்டு கழன்றாலும் சாம்பல் கூட கிடைக்காது. ஆனாலும் சம்பளம் ரிஸ்குக்கு ஏற்றபடி ஜாஸ்தியாக தருகிறார்கள். ஒரு லட்சம் டாலர்கள் சம்பளம் தருகிறார்கள். ஹேர் ஸ்டைலிஸ்ட் ஊர்நாட்டில் அம்பட்டன், பண்டிதர் என்பார்கள். விதம் விதம

டீக்கப்பில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள்!

படம்
மெக்கில் பல்கலைக்கழகம் நாம் பயன்படுத்தும் டீ பேக்குகளில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகள் உள்ளதாக ஆராய்ச்சிகள் வெளியாகியுள்ளன. டீ பேக்குகளில் பதினாறு மைக்ரோகிராம் இருப்பதுதான் இன்று சர்ச்சையாகி உள்ளது. இதில் மட்டும்தான் என்றில்லை. முன்பே மீன், தேன், பீர் போன்றவற்றில் பிளாஸ்டிக் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்திருந்தனர். தற்போது தேயிலையின் முறை. டீபேக்குகளில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்குகள் உங்களைக் கொன்றுவிடும் என்று இதற்கு அர்த்தம் இல்லை. ஆனால் அவை உயிரினங்களின் சமநிலையில் பாதிப்பை ஏற்படும்தும் என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான நதாலி டுஃபென்ஜி. டீ பேக்குகளில் சிலிகான் பேக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சிலிகான் செய்யப்பயன்படுத்தும் வேதிப்பொருட்கள்தான் உடலை குலைக்கின்றன. பாலி எத்திலின் டெரப்திலின் எனும் பொருள் இது. 2017 ஆம் ஆண்டு இந்தியா பயன்படுத்தும் டீ பேக்குகளின் எண்ணிக்கை 6 லட்சமாக உள்ளது. இதற்கடுத்து சீனா, துருக்கி ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையில் டீ குடிக்கின்றனர். இந்தியாவில் இதுதொடர்பான தகவல்கள் இன்னும் முறையாக சேகரிக்கப்படவில்லை. நன்றி: டவுன் டு எர்த்

புகைத்தால் இறப்பு - சீனா வேபிங் பென்ஸ் காரணமா?

படம்
நிகோடின் கொண்ட இ சிகரெட்டுகள் அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளன. இவை அங்கு 2007 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன. இன்று பல லட்சம் பேர் இதனை அங்கு புகைத்து வருகின்றனர். இ சிகரெட்டுகளில் நிகோடின் திரவ வடிவில் இருக்கும். பேட்டரி மூலம் அந்த திரவம் மெல்ல புகையாகும். அது சிகரெட் புகைப்பது போன்ற உணர்வைத் தரும். தற்போது இ சிகரெட்டுகளைப் பிடிப்பவர்கள் நுரையீரல் பாதிப்புற்று இறந்து வருகின்றனர். விஸ்கான்சின், இலினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் ஐந்துபேர் இ சிகரெட் பிடித்து இறந்துள்ளனர். இதனால் அந்தந்த மாநில நிர்வாகங்கள் சிகரெட் பிடிக்காதீர்கள் என்று கூறியுள்ளது. 33 மாநிலங்களைச் சேர்ந்த 450 பேர் இசிகரெட்டால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இ சிகரெட்டில் நிகோடின், மரிஜூவானா, டிஹெச்சி, பூச்சிக்கொல்லி, நச்சு ஆகியவை காணப்பட்டுள்ளன. அரசு 140க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து சோதித்து வருகிறது. நிகோடினுடன் விட்டமின் இ அசிட்டேட் சேர்ந்துள்ளது ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. புரப்பலைன் கிளைக்கால் மற்றும் கிளிசரால் ஆகியவை விட்டமின் இ அசிட்டேட்டிற்கு அடுத்தபடியாக சந்தே