இடுகைகள்

மனநல குறைபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீட்டின் தரைக்கு கீழே தோண்டப்பட்ட குகை - ஜெயமோகனின் குகை குறு நாவல்!

 குகை - ஜெயமோகன் குறுநாவல் இக்கதையில் வரும் மனநல குறைபாடு கொண்டவர், புதிதாக வாங்கிய வீடு ஒன்றின் கீழே குகை வழிப்பாதை செல்வதைக் கண்டறிகிறார். அந்த வழிப்பாதையின் மர்மத்தைக் கண்டுபிடித்து என்ன செய்தார் என்பதே குறுநாவலின் மையம். நாவலை நடத்திச்செல்ல பெரிய பாத்திரங்களின் தேவை இல்லை. இதில் மூன்று பாத்திரங்கள் வருகின்றன. அம்மா, மகன், மருமகள் என மூன்றே பாத்திரங்கள்தான். கதை உண்மை சம்பவம் ஒன்றிலிருந்து உருவானது. ஆனால், அதை சாகச கதையாக எழுத்து திறமையால் மாற்றியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். கதையை சொல்பவராக வரும் மகன், மனநல குறைபாடு கொண்டவர். அவருக்கு திருமணமாகிவிட்டிருக்கிறது. ஆனால், மனைவியோடு பேச்சு முறிந்து ஆறுமாதகாலமாகிறது என்றொரு தகவல் கூறப்படுகிறது. இப்படியான மனநல குறைபாடு கொண்டவருக்கு எப்படி மணமாகியிருக்க கூடும். கதையை முழுதாக படித்தால், அவருக்கு சிறுவயது முதற்கொண்டு மனநல குறைபாடு உள்ளதை அறியலாம். மனநல குறைபாடு கொண்ட கணவன், வேலைக்கு செல்லும் நவநாகரிக மனைவி கதை என்பதை தனியாகவே எழுத முடியும். கதைக்கு அது பெரிய முக்கியத்துவம் தரும் விவகாரம் இல்லை. அப்படி பார்த்தால் மனைவி என்ற பாத்திரமே க...

மனநல குறைபாடுகளுக்கும், கிரியேட்டிவிட்டுக்கும் என்ன தொடர்பு?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி வான்காவுக்கு என்ன வகையான உளவியல் குறைபாடு? டச்சு ஓவியர் வின்சென்ட் வான்கா பற்றி அறிந்திருப்பீர்கள். வாழும்போது பெரிதாக வரைந்த ஓவியங்கள் விற்கப்படவில்லை. வறுமையில் வாழ்ந்தவர் , தன்னைத்தானே கொன்றுகொள்ள முயன்று 37 வயதில் வெற்றியடைந்தார். அவரது மனநிலை என்ன, பிரச்னை என்ன என்பதை ஆய்வாளர்கள் அவர் எழுதிய கடிதங்கள் வழியாக புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.  வான்கா, அப்சின்த் என்ற ஆல்கஹால் பானத்தை அருந்தி வந்தார். இதனால் மனநிலையில் திடீரென்ற உற்சாகம், ஆர்வம் ஏற்பட்டுவந்தது. அவருக்கு வலிப்பு, பைபோலார் டிஸார்டர் குறைபாடு இருக்கலாம் என உளவியலாளர்கள் கருதுகிறார்கள். வான்காவின் சகோதரிக்கு ஸிசொபெரெனியா குறைபாடு இருந்தது. அவர் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக வைக்கப்பட்ட வரலாறும் உள்ளது.  மனநல குறைபாடுகளுக்கும், கிரியேட்டிவிட்டுக்கும் என்ன தொடர்பு? புதுமைத்திறன் கொண்ட மனிதர்களுக்கு மனநல குறைபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை வைத்து தொடர்பை உளவியலாளர்கள் உருவாக்கி பார்க்கிறார்கள். பொதுவாக எழுத்தாளர்களுக்கு மனநிலை சட்டென மாறுவது, மன அழுத்தம் கொள்வது, ...

ஒருவரின் புத்திசாலித்தனம் மரபணு அல்லது கல்வி மூலம் தீர்மானிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய ஆய்வு!

படம்
  ஒருவர் பிறக்கும்போது மேதாவியாக இருக்கிறாரா, பிறந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டு வஸ்தாது ஆகிறாரா என்ற பஞ்சாயத்து இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. 1900களில் மேதாவிகளாக இருந்த லியானார்டோ டாவின்சி, பீத்தோவன் பற்றி மக்கள் பல்வேறு கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். புத்திசாலித்தனம் ரத்தம் மூலம் உருவாகி வளருகிறதா, அல்லது பிறந்து சூழ்நிலையில் உள்ள அம்சங்கள் மூலம் கல்வியால் அறிவு பிரகாசிக்கிறதா என்று முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருந்தனர். அரிஸ்டாட்டில், மேதாவித்தனமும்,கிறுக்குத்தனமும் ஒன்றுக்குள் ஒன்று என்று கருத்து கூறினா். இதெல்லாம் மரபணு சார்ந்தவை, ஒன்றுடன் ஒன்று கலந்தவை என எழுதினார்.  ஜெர்மனியைச் சேர்ந்த உளவியலாளர் ஹான்ஸ் ஐசென்ஸ்க், மேதாவித்தனம், கிறுக்குத்தனம் ஆகியவற்றை ஆராயாமல், முழு மனிதனை எந்த விஷயம் உருவாக்குகிறது என்பதில் மனதை செலுத்தினார். ஒருவரின் அறிவுத்திறன் 165 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்தால் அவரை மேதாவி என அறிவியல் அழைக்கிறது. இதேபோல ஒருவர் செய்யும் செயல்களில் மனநல குறைபாடுகளின் அறிகுறிகள் தெரிந்தால் அவரை மன நோயாளி என முத்திரை குத்தி சிகிச்சை செய்கின்றனர். ஹான்ஸ் உருவ...

சீரியல் கொலைகாரனிடமிருந்து தங்கையைக் காக்க போராடும் மனநல குறைபாடு கொண்ட பெண்! - ஜட்ஜ்மென்டல் ஹை கியா?

படம்
  ஜட்ஜ்மென்டல் ஹை கியா ராஜ்குமார் ராவ், கங்கனா ரணாவத் இயக்கம் பிரகாஷ் கோவலமுடி கதை, திரைக்கதை, வசனம் – கனிகா தில்லான்   குடும்ப வன்முறை காரணமாக சிறுவயதில் இருந்தே மனநலக்குறைபாடு கொண்டவள் பாபி. தனது பாதிப்பினூடே சீரியல் கொலைகாரன் ஒருவனை எப்படி கண்டுபிடித்து அவனிடமிருந்து தன் தங்கையைக் காக்கிறாள் என்பதே மையக் கதை.   சைக்கோசிஸ் வந்த நோயாளியாக பாபி இருக்கிறாள். இவளை பைத்தியம் என்று பலரும் பேசினாலும் அவளது உலகத்தில் உள்ள பாத்திரங்களின் அடிப்படையில்   பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறாள். செய்யும் அதிரடி காரியங்களுக்காக நீதிமன்றம் விதிக்கும் அபராதம் கூட கட்டமுடியாத நிலை. நான் மனநல மையத்திற்கு போகிறேன். அதுதான் எனக்கு வசதியாக இருக்கும்   என்று செல்பவளை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? குடும்ப வன்முறை காரணமாக அவளது அப்பா, அம்மாவை அடித்து உதைத்து வசைபாடுகிறார். ஒருநாள் ஹோலி பண்டிகை அன்று இன்னொருவரோடு சேர்ந்து நடனம் ஆடினாள் என தனது மனைவியை பாபியின் அப்பா அடித்து உதைக்கிறார். அம்மா அடிபடுவதிலிருந்து காப்பாற்ற பாபி முயலும்போதுதான் பெற்றோர் மாடியிலிரு...