இடுகைகள்

வினோத் பாலுச்சாமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரெஞ்சுக்கலைஞர் கேட்ட கடனும், மஞ்சள் நிற அறையும்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  மதிப்பிற்குரிய வினோத் அவர்களுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று தாங்கள் அறிமுகப்படுத்திய ஆப்த தோழர் ஆலிவர் போன் செய்து பேசினார். செஞ்சி கோட்டையில் எடுத்த புகைப்படத்திற்கு சொன்னபடி 200 ரூபாயும் கூடுதலாக அவருக்காக நூறு சேர்த்து 300 அனுப்பினேன். அவர் சொன்னபடி புகைப்படத்தை அனுப்பியே வைக்கவில்லை. மேலும் அழைத்தாலும் போனை எடுக்கவில்லை. பிக்சல் குறைந்த புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதோடு சரி.  பிறகு ஒரு நாள் இரவில் போன் செய்தார். அவரது பயோடேட்டாவை ஆங்கிலத்தில் எழுதி தரச் சொன்னார். அதற்கு நிறைய இலக்கண அறிவோடு சமகால வார்த்தைகளையும் பயன்படுத்தவேண்டும். எனவே, என்னால் ஆகாது என்று சொல்லிவிட்டேன். பிறகும் விடாமல் பேசியவர் திருவண்ணாமலைக்கு அடுத்து எப்போது வருவாய் என இழுத்து இழுத்தி பேசியவர். 500 ரூபாய் பணம் கேட்டார். நான் உடனே இல்லை என்று சொல்லிவிட்டேன்.  முன்னர் நீங்கள் சொன்னபடி, திருவண்ணாமலை வந்துவிட்டு உடனே சென்னைக்கு திரும்புவதுதான் சரியான திட்டமாக இருக்க முடியும். தினசரி மதுவைக் குடிப்பது, நமது ஊரைப் பொறுத்தவரை குடிநோயை உருவாக்கும் என நம்புகிறேன். ஆலிவர் அண்ணா அதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.

தனிப்பட்ட நேரத்தை பறிகொடுத்தேன்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  மதிப்பிற்குரிய வினோத் அவர்களுக்கு, வணக்கம்.  எங்கள் நாளிதழ் அச்சு பதிப்பு வெளியாகத் தொடங்கிவிட்டது. கட்டுரைகள் முன்னமே எழுதிவிட்டேன். சிலவற்றை மட்டுமே புதிதாக எழுத வேண்டும். நேற்று பக்கத்து அறைக்காரரான சீனிவாசனுக்கு ஆன்லைனில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க முயன்றேன். ஆனால் இறுதி நேரத்தில் பிழைச்செய்தி வந்துவிட்டது. இரவு நேரத்தில் செய்த இந்த வெட்டி வேலையால் எனது எழுத்து வேலை தடைபட்டது. வேறு வழியில்லை. நீங்கள் இன்டர்நெட் கஃபேக்கு சென்று செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன்.  நேற்று ஒருமணிநேரத்திற்கு மேல் இதற்காகவே செலவானது. இந்த நேரத்தில் சீனிவாசனுக்கு பிடிக்காத ரங்கன் என்பவரும் அவருடைய போனுக்கு பிரச்னை என வந்து பக்கத்தில் நின்றுவிட்டார். கடுப்பேற்றுவதுதான் நோக்கம். வேறென்ன?  சுப்ரதோ பக்ஷி எழுதிய நூலை மெல்ல வாசித்து வருகிறேன். நூலை எளிமையாக படிக்கும் வகையில் எழுதியுள்ளது ஆறுதலாக உள்ளது. மாலை முதல் வயிற்றுவலி தொடங்கிவிட்டது. மதியத்தில் சீனிவாசன் கொடுத்த உளுந்து வடை ஒன்றை தின்றுவிட்டேன். இரவில் எதையும் சாப்பிடமுடியவில்லை.  அமேசான் நிறுவனம் நடத்தி வந்த வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் விரைவில் மூட

தேவனின் நீரோட்டம் போன்ற எழுத்து கொடுத்த ஆச்சரியம்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று முழுக்க அறையில்தான் இருந்தேன். நீரெல்லாம் கங்கை - கடித நூலை எழுதி தொகுத்து அமேசானில் வெளியிட்டேன். உங்களிடம் உள்ள கடிதங்களை மறுமுறை வரும்போது பெற்றுக்கொள்கிறேன். நான் வடிவமைத்த அட்டைப்படத்தை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்.  ஃபேஸ்புக்கில் உள்ள உங்களது படங்களை எனது பிளாக்கில் பயன்படுத்தியுள்ளேன். இதற்கான தொகையை பிறகு தீர்ப்பேன். மிஸ்டர் வேதாந்தம் - தேவன் நாவலைப் படித்தேன். 44 வயதில் இறந்துபோன தேவனின் எழுத்து நீரோட்டம் போல செல்கிறது. கதை தஞ்சாவூரில் தொடங்கி, கும்பகோணம் சென்று பிறகு சென்னையில் மையம் கொள்கிறது.  தேசிகாச்சாரி என்பவரின் மகன் வேதாந்தத்தின் வாழ்க்கைப்பாடுதான் கதை. அரவிந்த் குப்தா அவர்களின் வலைத்தளத்தை அண்மையில் பார்வையிட்டேன். அதில் ஏராளமான நூல்கள் உள்ளன. ஆச்சரியமாக இருந்தது.  போனில் தரவிறக்கி வைத்திருந்த மின்னல் முரளி மலையாளப்படத்தை பார்த்தேன். பட்ஜெட்டில் சூப்பர் ஹீரோ படத்தை இயல்பான முறையில் எடுக்க முயன்றிருக்கிறார்கள். ஷிபு பாத்திரத்தில் நடித்த குரு சோமசுந்தரம்தான் ஈர்க்கிறார். ஜெய்ஷன், ஷிபு என இரு நபர்களுக்கு கி

பங்குச்சந்தையும் அகண்டா திரைப்படமும்! - வினோத் பாலுச்சாமி - கடிதங்கள்

படம்
  புகைப்படக் கலைஞர் வினோத் அவர்களுக்கு, வணக்கம்.  குடியரசு தினத்தன்று நாளிதழ் விடுமுறை என்பதால், சற்றே ஆசுவாசம் கிடைத்துள்ளது. இன்று வடபழனியிலுள்ள அறைக்கு சென்று மோகன்ராஜ் அண்ணாவைப் பார்த்தேன். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சாப்பிட்டுவிட்டு வந்தேன். அவர், இப்போது ஷேர் மார்க்கெட்டில் ஏதோ முதலீடு செய்து அது பற்றி படித்துக்கொண்டிருக்கிறார். முதலில் பேசும் அனைத்து விஷயங்களையும் ஷேக்ஸ்பியர் பற்றி இணைத்துப் பேசுவார். இப்போது பங்குச்சந்தையோடு இணைத்துக்கொண்டிருக்கிறார். இதில் வெற்றியடைந்தால் அவரது பொறியியல் படித்த மனைவி, குழந்தை ஆகியோர் சென்னை வருவார்கள் என நினைக்கிறேன்.  ஃபாரம் மால் போய் ஜாலியாக சுற்றிவிட்டு வந்தோம். அண்ணன் ஆர்கானிக்காக மாறிவிட்டார். எங்கு சென்றாலும், கல் உப்பு, பனம் கற்கண்டு என வாங்கிக் குவிக்கிறார். நான் மிகச்சில பொருட்களையே வாங்கினேன். தன்மீட்சி - ஜெயமோகன் நூலை படித்தேன். எழுத்து, கருத்தியல், பொது மனநிலை, கல்வி, தொழில், செயலூக்கம் என பல்வேறு விஷயங்களை நூலில் ஜெயமோகன் பேசியிருக்கிறார். அவரது வலைத்தளத்தில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்புதான்

கட்டற்ற உணர்ச்சியால் பாதிக்கப்படும் எழுத்தாளர்கள்! - வினோத் பாலுச்சாமி - கடிதங்கள்

படம்
  வினோத் அண்ணாவுக்கு,  வணக்கம். நேற்று ஆலிவர் அண்ணாவோடு பேசினேன். அவர் தனக்குத்தானே கண்ணாடியில் பேசுவது போன்ற மனநிலையில் இருந்தார். தொடர்ச்சியாக எனக்கு எந்த வாய்ப்புமே தராமல் ஏதேதோ பேசினார். நான் அவருக்கு இன்ஸ்டால் செய்து தந்த டேட்டிங் ஆப்பை அழித்துவிட்டாராம். தனது தொழிலைப் பார்க்கப் போகிறாராம். அவர் சிங்காரப்பேட்டை போனார் என்று சொன்னேன் இல்லையா? அங்கு ஏதோ மந்திரித்து விட்டார்கள் போல.   தொடர்ச்சியாக அவரின் பழக்கப்படி இரண்டு இரவுகள் ஆல்கஹாலை வாய்க்குள் சரித்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறேன். 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் தான் கோழிக்கறி சாப்பிட்டேன். அதுவும் உடல் எப்படி எதிர்வினை தருகிறதோ என்ற பதற்றத்தில்தான். இதனை மெல்ல உடலுக்கு பழக்கிக்கொள்ள நினைத்தேன். ஆனால் அது நினைத்தபடி வேலைக்காகவில்லை. நான் அலுவலகத்திற்கு நடந்து செல்வதால் பருப்பு, கீரையைப் பயன்படுத்தி வந்தேன். ஆனால் மெல்ல அதுமட்டுமே போதாது என்று புரிந்தது. செஞ்சியின் ராணி கோட்டை, ராஜா கோட்டை ஏறியபோது எனது உடல் தடுமாறத் தொடங்கியது. மெல்ல கால்கள், தொடை, கணுக்கால் என அனைத்துமே நடுங்கத் தொடங்கியிருந்தது.  சாத

பிராண சங்கடம் தந்த கோழிக்கறி உணவு! வினோத் பாலுச்சாமி - கடிதங்கள்

படம்
  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமா? உணவு பற்றி வருத்தமாக பேசினீர்கள். திருவண்ணாமலை வருவது எனது விருப்பம்தான், முடிந்தால் வாய்ப்பு கிடைத்தால் உங்களைப் பார்க்கிறேன் என்று சொல்லியிருந்தேன். உங்களை அலைகழிக்கவேண்டாம் என்று நானே குவாவாடிஸ் வருவதாக சொல்லி அப்படியே வந்தேன். உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும் என்று எனக்குத் தெரியும். அடுத்தமுறை தங்குவதற்கு வேறு ஏற்பாடுகள் செய்துகொள்ளலாம் என நினைக்கிறேன். ஒருவரைப் பற்றிய விஷயங்களை அவரில்லாதபோது அவரின் நண்பரிடம் கூட சொல்லக்கூடாது என நினைக்கிறேன். இது எப்போதுமே எனக்கு பிரச்னையாகவே முடிந்துள்ளது. அன்று இரவில் சாப்பிட்ட கோழிக்கறி  உணவு, நானே விரும்பி ஆலிவர் அண்ணாவை சமைக்க சொன்னதுதான். கறிக்கான முழுச்செலவும் என்னுடையதுதான். இதனை நான் உங்களுக்கு சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம். நிச்சயமாக நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தோன்றியது. எனவே, இதை சொல்லவில்லை. ஏனெனில் போனமுறை உங்கள் வீட்டுக்கு வந்தேன். சாப்பிட்டேன். ஆனால் இம்முறை நிறைய நடைமுறை சிக்கல்களால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை.  லஷ்மி அக்காவுக்கும் உடல் சரியில்லாத நிலை பெரும் தர்மசங்கடம

பதற்றம் ஏற்படுத்திய இளம்பெண்ணின் ஷார்ட்ஸ்! - வினோத் பாலுச்சாமி - கடிதங்கள்

படம்
  அன்புக்குரிய வினோத் அண்ணாவுக்கு,  வணக்கம்.  நலமா?  இன்று ராயப்பேட்டை முழுக்க ரத்தத்தின் ரத்தங்கள் நிறைந்துவிட்டனர். மழையிலும் கூட இந்த ஆட்களின் கூச்சலும் ரவுசும் குறையவில்லை. கரைவேட்டிக்காரர்கள் கொட்டும் மழையிலும் ஜபர்தஸ்தாக ஆர்பிஎல் வங்கி கீழ்த்தளத்தில் நின்று சில நொடிக்கு ஒருமுறை சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.  இன்று ஆச்சரியமாக பள்ளி கால தோழர் ராஜ்குமார் போனில் அழைத்தார். இவர் மேட்ரை சின்னியம்பாளையம் எனும் ஊரில் வாழ்ந்து வந்தவர். எங்கள் அம்மாயி ஊருக்கு போகும் வழியில் உள்ள பாறைநிலம் அது. துணி வெளுப்பாளர்கள் வகுப்பைச் சேர்ந்தவர். குடும்பஸ்தரான இவர் எதற்கு திடீரென என்னை அழைத்தார் என்று எனக்கு புரியவில்லை.  தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள அழைத்திருக்கிறார். பேசினார். பேச்சு எப்படி சென்றது என்றால் மயிலாப்பூரிலுள்ள குறுகலான தெருக்களிலிருந்து விரிந்த தெருக்களுக்கு போவதுபோலத்தான்.  மனைவி, மாதவிலக்கு, தம்பியின் வேலை, திருமணம், அவர் பெற்ற அரசு வேலை, குடும்ப கலாசாரம், சென்னைப் பெண்களின் டீஷர்ட் ஷார்ட் கலாசாரம் என சென்றது. இவர் பேசும்போது மழை பெய்துகொண்டு இருந்தது. 45 நி

தலைக்கு மேலே கூரை இல்லை! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புக்குரிய வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமா?  உங்களின் நிலைமை அறியாமல் தங்குவதற்கு இடம் கேட்டு சங்கடப்படுத்தியதற்கு மன்னிப்பு கோருகிறேன். நான் மனதில் உள்ளதை உடனே சொல்லிவிட்டேன். இனிமேல் நான் திருவண்ணாமலை வந்தால் விடுதியில் தங்கிக்கொள்கிறேன். தங்களைப் பார்க்கும் வாய்ப்பு திகைந்தால் பார்க்கிறேன். இதனை தங்களது பணிச்சூழலைப் பொறுத்து முடிவு செய்துகொள்ளலாம். சென்னையில் இப்போதைக்கு நிறைய வேலைகள் இருப்பதால், ஒருநாளுக்கு மேல் தங்க முடியாது. குறைந்த விலை கொண்ட பட்ஜெட் விடுதியை நீங்கள் பரிந்துரை செய்தால் நன்றாக இருக்கும். எனக்கு திருவண்ணாமலை மனதை ரிலாக்ஸ் செய்வதற்கான இடம். ஆனால் உங்களுக்கு அதுதான் வாழிடமே. இரண்டிற்குமான வேறுபாட்டை உணரவில்லை. இனிமேல் தவறு நேராது.  கடிதம் எழுதுவது பற்றி இணையதளம் ஏதாவது இருக்கிறதா என தேடினேன். chitthi exchange,Mumbai chapter என பல்வேறு கடிதம் எழுதும் வலைத்தளங்கள் இருப்பதை இந்து நாளிதழில் எழுதியிருந்தனர். இது ஆச்சரியமான செய்தி.  மயிலை காபி என்ற கடையில் டீ  குடித்தேன். குங்குமத்தில் வேலை செய்யும் நண்பர் சக்தி அங்கு கூட்டிப்போனார். ஒரு டீ 25க்கு விற்கிறார்கள். கா

பெருமைக்காக மனிதர்களைக் கூட விற்கலாம்! - கடிதங்கள்- வினோத் பாலுச்சாமி

படம்
  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமா? பனியின் குளிர் அதிகாலையில் எழ விடுவதில்லை. இந்த சூழலிலும் கூட பக்கத்து அறையிலுள்ள ஐயர், ஹோமங்களை செய்ய நேரமே எழுந்து குளித்துவிட்டு சென்றுவிடுகிறார். நேற்று அலுவலகத்திற்கு, கிரைம் கதை எழுத்தாளர் ஒருவர் வந்திருந்தார்.  வரும்போதே கையிலுள்ள பிளாஸ்டிக் டப்பாவில் சாக்லெட்டுகளை வைத்திருந்தார். ஏதோ வினோதமாக பட்டது. எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் மீனா என்ற பெண்மணிதான் அவரை அழைத்திருந்தார். வந்த  டக்இன் எழுத்தாளர் சேரில் நன்கு அழுத்தி உட்கார்ந்து கொண்டார்.  தன் முகத்தில் உள்ள மாஸ்கை கழற்றும் முன்னரே சாக்லெட்டை விநியோகிக்க சொன்னார். சாக்லெட்டை பெற்றவன், சரி, அவருக்கு மகள் வயிற்று பேரன், பேத்தி பிறந்திருப்பார்கள் போல என நினைத்தேன். பிறகு உதவி ஆசிரியரான மீனா எங்கள் அருகில் வந்து பெயர், போன் நம்பரை பெற்றார். எதற்கு, சும்மாதான் என்றார். பிறகுதான் சாக்லெட் அங்கிள், எழுதும் வாய்ப்புக்காக வாட்ஸ்அப் வழியே செய்தி அனுப்பினார் என சக உதவி ஆசிரியர்கள் பேசிக் கொண்டனர். சாக்லெட் எதற்கு என இப்போது தெரிந்துவிட்டது அல்லவா?  இந்த மீனா என்கிற லூசு பெண்மணிக்கு தனது பெ

தனிமைதான் குடிக்கு முக்கியமான காரணமா? - கடிதங்கள் - வினோத் பாலுச்சாமி

படம்
  அன்புள்ள  வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமா? இந்த வாரம் வடபழனியில் உள்ள ஃபாரம் மாலுக்கு போனோம். நானும் மோகன்ராஜ் அண்ணாவும்தான் கூட்டணி. அங்குள்ள ஸ்பார் மார்க்கெட்டில் புத்தாண்டு டைரிகளை குவித்து வைத்துவிட்டனர். நான் டைரியை வாங்கவில்லை. வாங்கி எழுதுவதில்லை. பிறகு வாங்கி என்ன செய்வது என கர்ச்சீஃப், நோட்பேட் ஆகியவற்றை வாங்கினேன். அறையில் சமையல் செய்வது இல்லை. எனவே, பொருட்களை கெட்டுப்போகும் முன்னரே, அலுவலக சகா ஒருவருக்கு இலவசமாக கொடுத்துவிட்டேன். அவர் திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷனில் தங்கி அலுவலகம் வருகிறார்.  கொலைகுத்தாக வாசிப்பு வட்டம் நடத்தி என்னை மாட்டிவிட்ட நண்பர், வெட்கம், கூச்சமே இல்லாமல் விழா எப்படி என போன் செய்து கேள்வி கேட்டார்.  கொடுமை என்பதுதான் எனது மனக்குரல்.  ஆனால் என்ன செய்வது? மனதை மாற்றிக்கொண்டு பிரமாதம் என பொய்யை சொல்லிவிட்டேன். மனமகிழ்ந்து போய்விட்டார் அந்த நண்பர்.  முஸ்லீம்களின் வாழ்க்கையை மட்டுமே எடுத்து பேசிக்கொண்டிருப்பதில் வாசகர் வட்டம் என்று சொல்லி பொதுவான ஆட்களை வரச்சொல்லுவதில் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது? வாசிப்பு வட்டத்தை மசூதிக்குள்ளேயே நடத்திக்கொள்ளலாமே

பள்ளிக்கு செய்யும் நன்றிக்கடன்! - கடிதங்கள் - வினோத் பாலுச்சாமி

படம்
கடிதங்கள்  வினோத் பாலுச்சாமி அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் மழை வருவது போலவே சூழல் உள்ளது. நாள் தங்கியுள்ள அறை முழுவதும் மழை ஈரத்தால் நனைந்துவிட்டது. இதனால், அறையின் சுவர்களில் பூஞ்சைகள் கரும்பச்சை நிற பூக்களாய் பூக்கத் தொடங்கிவிட்டது. அருகர்களின் பாதை - ஜெயமோகன் இன்றுதான் படித்து முடித்தேன். சமணர்களின் வாழ்க்கை , வரலாறு, உணவு, தர்மச்சாலை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். ஆரியர், பாஜக, தேசியவாதம் தவிர்த்த பிற விஷயங்கள் நன்றாக உள்ளன.  எங்கள் இதழின் தயாரிப்பு இன்னும் தொடங்கவில்லை. பல்வேறு சூழல்களால் வேலை தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. வேலையை செய்வதற்குள் எனக்கு இன்னொரு வயது கூடிவிடுமோ என்று பயமாக உள்ளது. நான் தங்களுக்கு அனுப்பி வைத்த ஜென் கதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன். நான் பரிசாக முதல்முறையாக உங்களுக்குத்தான்  நூலை அனுப்பி வைத்திருக்கிறேன். இப்படி அனுப்புவது பற்றி முதலில் நம்பிக்கை வரவேயில்லை.  குளங்களை தூர்வாரிய செல்ல பெருமாள் பற்றிய செய்தியை ஆனந்த விகடனில் படித்தேன். நல்லவேளை, அவர் தனது பணிக்கு ஊக்கம் தந்தது குக்கூ அமைப்புத

என்னைத் தான் மாற்றிக்கொள்ள வேண்டும்! -- வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.12.2021 அன்புள்ள வினோத் அண்ணனுக்கு வணக்கம்.  இன்று வானம் மேகமூட்டமாக இருக்கிறது. மனமும் அப்படித்தான் இருக்கிறது. திருவண்ணாமலை வர நினைத்தேன். சூழல் இசைவாக இல்லை. சிவனின் அனுகிரகம் கிடைத்தால்தான் அங்கு வர முடியும் என நினைக்கிறேன். புஷ்பக விமானம் என்று தெலுங்குப் படம் பார்த்தேன்.  தாமோதர் என்பவர் இயக்கி ஓடிடியில் வெளியான படம். திருமணமாகி சில நாட்களில் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுவிடுகிறாள். மனைவி போனதை வெளியில் சொல்ல முடியாமல் அரசு பள்ளி ஆசிரியரான கணவர் என்னென்ன விஷயங்களைச் செய்கிறார் என்பதே கதை.  படத்தின் கதை, அதிலுள்ள விஷயம் என்று பார்த்தால் சீரியசான விஷயம்தான். ஆனால் இயக்குநர் நகைச்சுவையை படம் நெடுக சேர்த்திருப்பதால் படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனந்த் தேவரகொண்டா சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக குறும்பட நடிகையாக வந்து போலி மனைவியாக நடித்து கலக்கியிருக்கிறார் ஷான்வி மேகனா.  இன்று காலையில் வானம் மேகமூட்டமாக இருந்தது. இப்போது மழை பெய்துகொண்டு இருக்கிறது. மோகன் ராஜ் அண்ணா போன் செய்தார். மழை பெய்கிறது அடுத்தவாரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.  அன்பரசு  12.12.2021

ஆத்மாவை பற்றி படரும் குரல்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
3.12.2021  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு , வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்போதுதான் வெயில் காய்கிறது. அறையின் சுவரின் பூஞ்சை வேகமாக பரவிவருகிறது. நான் வைத்திருந்த சமையல் பொருட்கள் ஈரத்தால் பூஞ்சை உருவாகி வீணாகிவிட்டன. இதனால் பொருட்களை வைக்க பிளாஸ்டிக் டப்பாக்களைத்தான் சேட்டா கடையில் வாங்கி வர வேண்டும். இப்போதுள்ள பாட்டில்களும் டீக்கடையில் விலையின்றி பெற்று வந்தவைதான்.  டெல் மீ வொய் என்ற குழந்தைகள் நூலை வாங்கினேன். இதுவும் முன்னர் நான் வேலை செய்த முத்தாரம் போன்ற இதழ்தான். மலையாள மனோரமா குழுமத்தின் தரமான தயாரிப்பு. பொது அறிவுத்தகவல்களைக் கொண்டது. இந்த மாத இதழ் பெண் சாதனையாளர்களை மையமாக கொண்டுள்ளது. ரூ.40க்கு வாங்கினேன்.  நாளிதழ் ஆசிரியருக்கு மகள் வயிற்றுப் பேரன் பிறந்துள்ளான். மனம் கொள்ளாத மகிழ்ச்சியும், முகத்தில் இதுவரை பார்த்திராத சிரிப்புமாக இனிப்பைக் கொண்டு வந்து கொடுத்தார். உடனே சக உதவி ஆசிரியரும் ஒன்றிய அரசின் விருது பெற்ற எழுத்தாளருமான பி.பி சார் பிரியாணி என அடிபோட்டு இருக்கிறார்.  அன்பரசு 3.12.2021 ------------------------------------------------------

பேரிடரின்போது வெளியே வரும் நமது பொறுப்புணர்வு - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வினோத் பாலுச்சாமி vinodh balusamy மழை பெய்தால் வெளியே வரும் நம் பொறுப்புணர்வு!  புகைப்படம் - வினோத் பாலுச்சாமி  26.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு வணக்கம்.  நலமா?  இந்த கடிதம் எழுதும்போது மயிலாப்பூர் மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை ஆகிய இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் எளிதாக வடியமாட்டேன் என்கிறது. இத்தனைக்கும் ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு கி.மீ. சென்றால் கடல் வந்துவிடும். நிலைமையைப் புரிந்துகொண்ட பணியாளர்கள் பாதாளச்சாக்கடை அடைப்புகளை குச்சி வைத்து எடுத்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். வேலையை முடித்தவர்கள் வேறு இடங்களுக்கு போகும்போது நீரை காலால் கையால் வீசியபடியும், செல்ஃபி எடுத்து வரலாற்றில் தனக்கான இடத்தை பதிவு செய்தபடியும் சென்றனர்.  ராதாகிருஷ்ணன் சாலை வழியாகவே நான் ராயப்பேட்டை அஜந்தா அருகிலுள்ள நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று வருகிறேன். இதை விட தினசரி சட்டமன்றத்திற்கு விடியல் முதல்வர் செல்லும் சாலையும் இதுதான். இங்கேயே இப்படிப்பட்ட நிலைமை. நான் நடந்துசெல்லும்போது தேங்கிய நீரில் தனது வீட்டிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து எறிந்தார். துப்புறவு பணியாளர்

பலவந்தப்படுத்தினால் பாசம் வருமா? - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வினோத் பாலுச்சாமி/Vinodh Balusamy லினக்ஸிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது!  29.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று லேப்டாப் திடீரென பிரச்னை செய்தது. இதுவரை எழுதித் தொகுத்து வைத்த நூல்கள் எதையும் திருத்த முடியவில்லை. லிப்ரே ஆபீஸ் ரைட்டர் கோப்பில், கர்சர் தானாகவே எழுதிய வரிகளை அழித்துக்கொண்டே சென்றது. இதை தடுத்து நிறுத்த அடிக்கடி எஸ்கேப் பட்டனை அழுத்திக்கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் முடியல சாமி என்று ஆகிவிட்டது. லினக்ஸிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என நினைத்து, கணினியை அணைத்துவிட்டேன்.  ஜோம்பிலேண்ட் - டபுள்டேப் என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன். வணிகரீதியான படம். எப்போதும் போல ஜோம்பிகளின் மண்டையை சிதறடித்துக் கொல்லும் படம்தான். உங்களுக்கும் கோபத்தில் யாரையாவது அடித்துக் கொல்லும் உக்கிரம் இருந்தால், படத்தைப் பார்க்கலாம். தமிழ் டப்தான். உறுதியாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.  ஷோபாடே எழுதிய கட்டுரைகளில் பணம், அதன் மதிப்பு, கடன் வாங்குவது பற்றி படித்தேன். அதற்கு மேல் அதில் மனம் செல்லவில்லை. படம் பார்க்கத் தொடங்கி விட்டேன். இன்று வானில் சூரியனே வரவில்லை. இணையம் தான் எனத

புனைவு ஏற்படுத்திய வலி! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
எ மிராக்கிள் - துருக்கி தொடர் தமிழில்   புனைவு ஏற்படுத்திய வலி!  25.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம் நலமாக இருக்கிறீர்களா? அலுவலகம் விட்டு தங்கியிருக்கும் அறைக்கு வரும்போது மழை பிடித்துக்கொண்டது. இப்போது வரை பெய்துகொண்டே இருக்கிறது. அதன் பின்னணி இசையுடன்தான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.  இன்றுதான் எ மிராக்கிள் என்ற துருக்கி தொடரின் இறுதி அத்தியாயத்தைப் பார்த்தேன். இந்த தொடர், தென்கொரியாவில் வெளியான குட் டாக்டர் என்ற டிவி தொடரைத் தழுவியது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவக்கல்வி கற்ற இளைஞர், அறுவை சிகிச்சை வல்லுநராக மாற முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை.  ஆட்டிசம் பாதிப்பு, இவர்களை எப்படி கையாள்வது, பெற்றோர் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும், இவர்களின் அறிவுத்திறன், பிறருடன் உரையாடும்போது இவர்களை புரிந்துகொள்வது எப்படி என நிறைய விஷயங்களை காட்சிகளுக்கு இடையில் புரிந்துகொள்ளும்படி அமைத்திருக்கிறார்கள். உங்களுக்கு இதுபோன்ற டிவி தொடர்களில் விருப்பமிருக்காது. முழுக்க வெளிவயமானவர். உள்வயமான எனக்கு கொரியத் தொடரை ரீமேக் செய்த துருக்கி தொடர் பிடித்திருந்தது. டாக்டர் அலி வெஃபா என்

இருமல் கூடுகிறது! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  pixabay அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? சமூக வலைத்தளங்கள் இல்லாமல் வாழ்வது பற்றி கணினி வல்லுநர் ஜாரோன் லேனியர் சில நூல்களை எழுதியிருக்கிறார். இதனை எனது சீட்டுக்கு அருகில் உட்கார்ந்து என்னை கிண்டல் செய்துகொண்டிருக்கும்  ஓவியர் குழந்தை முருகன் கூறினார். தரவிறக்கிய இந்த நூல்களை விரைவில் படிக்க வேண்டும்.  சளி வந்தால் மூச்சுக்குழலில் உராயும்படி ஆக்ரோஷமாக மாறிவிடுகிறது. வேறுவழியின்றி அதனை வேகமாக வெளியேற்ற டாபர் ஹனிடஸ் வாங்கி குடித்தேன். நூறுமில்லி மருந்து ரூ.99க்கு விற்கிறார்கள். அலுவலகத்தில் வேலை பெரிதாக இல்லை. திங்கட்கிழமை இதழுக்கான வேலையை மட்டும் செய்தால் போதும். எழுத்தாளர் ஷோபா டே எழுதிய கட்டுரை நூலை படித்து வருகிறேன். தினசரி பத்து பக்கம் என்ற கணக்கில்தான் படிக்க முடிகிறது. இப்போதைக்கு அவ்வளவுதான்.  நன்றி சந்திப்போம் அன்பரசு  2.11.2021

வான் ஒளியும் மண் இருளும் கொண்ட நூல் ! யாத்ரீகனின் பாதை - வினோத் பாலுச்சாமி- ஒளிப்பட பயணக்கதை

படம்
      பழங்குடி இனச்சிறுவன் புகைப்படம்- வினோத்           யாத்ரீகனின் பாதை வினோத் பாலுச்சாமி ப. 150 விலை ரூ. 500 மதுரை காரியாப்பட்டியைச் சேர்ந்தவர் வினோத். விகடனின் மாணவர் பத்திரிக்கையாளராக  செயல்பட்டவர். தற்போது திருவண்ணாமலையில் வாழ்கிறார். அவர் எழுதியுள்ள நூல்தான் யாத்ரீகனின் பாதை. அவர் தேர்ந்த எழுத்தாளர் அல்ல என்பதை ஆசிரியர் உரையில் நிரூபித்துவிட்டார். எனவே அவர் தனது மன உணர்வுகளை எந்தளவு வெளிப்படுத்தியுள்ளார் என்பதை மட்டுமே பார்த்து இந்த நூலை பார்த்து படித்து ரசிக்கலாம்.  தனது ஆதர்ச வழிகாட்டி பீட்டர் ஜெயராஜ் உடன் (தொப்பி அணிந்தவர்) ஏறத்தாழ இதில் எழுதியுள்ள புகைப்படம் அருகிலுள்ள எழுத்துகள் யாவுமே நமக்கு டைரிக்குறிப்புகள் போலத்தான் படுகிறது. இதன் அர்த்தம், அவை அதே தரத்தில் உள்ளன என்பதல்ல. சுய அனுபவத் தொனியில் எழுதப்பட்டாலும், புகைப்படத்தின் உணர்வுகளை வாசிப்பவர்களின் மனத்திற்கு கடத்துவதில் நூல் மகத்தான வெற்றி கண்டிருக்கிறது. சில அத்தியாயங்களில் நாம் மனதில் நினைத்து்க்கொள்ள பல வாக்கியங்கள் உள்ளன. அறிமுகமில்லாமல் ரபீந்திரனை சந்திக்கச்செல்வது, அச்சூழ்நிலையில் எளிதாக மனிதர்கள் பிற