இடுகைகள்

செர்னோபில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற மோசமான விபத்துகள்

படம்
  பிரிட்டனில் நடைபெற்ற சுரங்க விபத்து   மோசமான சுரங்க விபத்து என்பது பிரிட்டனில் நடந்த ஆண்டு 1966. இங்கு அபெர்ஃபான் என்ற கிராமப் பகுதியில் சுரங்கம் ஒன்று தோண்டப்பட்டு செயல்பட்டு வந்தது. சுரங்க வேலைக்காக வந்த மக்கள் அங்கேயே தங்கத் தொடங்கினர். இதனால் அங்கு மக்கள்தொகையும் அதிகரித்து வந்தது. சுரங்கம் தோண்டுபவர்கள் அதில் உருவாகும் கழிவை முறையாக அப்புறப்படுத்தவேண்டும். ஆனால் பெரும்பாலும் அதற்கு தனியாக வேறு செலவழிக்க வேண்டுமாக என அங்கேயே அருகில் உள்ள இடங்களிலேயே கழித்துக் கட்டுவது வழக்கம். அப்படித்தான். இந்த சுரங்கத்தில் உருவான கழிவுகளையும் கிராமத்தில் குவித்து வைத்தனர். அது பெரிய பிரச்னையாகவெல்லாம் இல்லை. அதுவும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 1966 வரைதான். அப்போதுதான் அங்கு 17 மி.மீ மழை பெய்திருந்தது. இதனால் நிலம் மென்மையாக குழைந்துபோய் கிடந்தது. கழிவுகள் உயரமாக குவித்து வைக்கப்பட்டிருந்ததால் அவை அப்படியே கீழே பள்ளமாக இருந்த கிராமத்தை நோக்கி வரத் தொடங்கின. இப்படி வந்த சுரங்க கழிவுகளின் மேகம் மணிக்கு 21 மைல். பள்ளி, மருத்துவமனை, 18 வீடுகள் என அனைத்தையும் சுரங்க கழிவுகள் மேலே விழுந்து உடைத்த

இயற்கைச்சூழலைக் கெடுத்த செர்னோபில் அணுஉலை பேரிடர்!

படம்
  செர்னோபில் பேரிடர்  செர்னோபில் பேரிடரைப் பலரும் எப்போதேனும் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் அணுஉலை பற்றி பேசும்போது முக்கியமாக இதனை சூழலியலாளர்கள் கூறுவார்கள். அந்தளவு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவம் இது.  1986ஆம்ஆண்டு ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணுஉலை பாதிப்பு ஏற்பட்டது. சோவியத் யூனியனின் பிரிப்யாட் என்ற நகரில் அமைந்திருந்த அணுஉலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது.  அணு உலையில் அமைந்திருந்த ரியாக்டரை சோதித்து வந்தனர். அதில், நீர் மூலம் இயங்கும் டர்பனை இயக்கி ரியாக்டரின் வெப்பத்தைக் படிப்படியாக குறைக்க முயன்றனர். ஆனால் அப்போது திடீரென மின்சாரம் நின்றுபோனது. இந்த இடத்தை மூடிய ஆபரேட்டர்கள் அணு உலையின் தொடர் சங்கிலியாக நடக்கும் செயல்பாடுகளை கவனிக்க வில்லை. இதன் காரணமாக அங்கு தீபிடித்தது. இதன் விளைவாக கதிரியக்க தனிமங்கள் சூழலில் கசியத் தொடங்கின. இதன் விளைவாக காற்றை சுவாசித்த நூறு பேர் உடனடியாக இறந்தனர். மீதியுள்ளவர்கள் பலருக்கும் வாழ்நாள் முழுக்க தொடரும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.  அரசுக்கு தகவல் கிடைத்ததும், அங்கு சுற்றுப்புறத்தில் வாழ்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்ப

செர்னோபில் அணுஉலைக் கசிவு விபத்து!

படம்
செர்னோபில் அணு உலைக்கசிவு பிரச்னை தற்போது தீர்ந்துவிட்டதா? ஹெச்பிஓ டிவியில் வெளியான செர்னோபில் பிரச்னை பற்றி ஆவணப்படம், அப்பிரச்னையைப் பற்றி பலரையும் பேச வைத்திருக்கிறது. ரஷ்யாவை குற்றவாளியாக்கினாலும் ரஷ்ய ஊடகங்களிலும் முக்கியமான ஆவணப்படமாக இதனைப் பற்றி பேசி வருகிறார்கள். குறிப்பாக, உக்ரைனின் செர்னோபிலில் நடந்த அணுஉலைக் கசிவு குறித்த படம், உலகமெங்கும் அதுகுறித்த விவாதங்களை இன்று ஏற்படுத்தி வருகிறது. 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று, செர்னோபிலிலுள்ள ரியாக்டரில் பாதிப்பு ஏற்பட்டது. இன்றுவரையும் அணு உலை எதிர்ப்பாளர்கள் உதாரணமாக காட்டும் அளவு கொடூரமாக இருந்தது இந்த விபத்து. கதிர்வீச்சு பாதிப்பால் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் இன்றுவரை அந்த அணு உலை அருகிலுள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. இங்குள்ள ஐந்து சதுர கிலோமீட்டர்களிலுள்ள பைன் மரங்கள், கதிர்வீச்சினால் சிவப்பிலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாறியுள்ளன. நேரடியாக மனிதர்கள் பாதிக்கப்பட்டதோடு, உளவியல் ரீதியாகவும் பாதிப்பின் அளவுகள் உள்ளன. செய்தி - சயின்ஸ் போகஸ்

செர்னோபில் செல்லலாமா?

படம்
செர்னோபில் அணு உலை கசிவு, அதன் பாதிப்புகள் இன்றையவரைக்கும் உண்டு. மேலும் அங்கு இதற்கான சுற்றுலா திட்டங்களும் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மனிதர் 3 மில்லிவெர்ட்ஸ் கதிர்வீச்சு பிரச்னைகளைச் சந்திக்கின்றனர் என்று அமெரிக்கன் கதிர்வீச்சு கல்லூரி அறிக்கை தகவல் சொல்லுகிறது. கதிர்வீச்சின் அளவு 1-20 எம்எஸ்விக்கும் குறைவாக மனிதர்கள் செல்கிறது. 50-200 அளவு என்பது மனிதர்களின் மரபணுக்களைப் பாதிக்கிறது. 200-1000 அளவு மாறும்போது, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படும். 2000 எனும் அளவுக்கு கதிர்வீச்சு அதிகரிக்கும்போது கதிர்வீச்சு தொடர்பான நோய்கள் வரும். 10 ஆயிரம் அளவு என வரும்போது இறப்பு நேருகிறது. செர்னோபில்  அணுஉலையில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களை ஆராய்ந்தபோது, அவர்களின் உடலில் 8 ஆயிரம் - 16 ஆயிரம் கதிர்வீச்சு அளவு இருந்தது. இதன்படி 134 ஆட்கள் கடுமையான கதிர்வீச்சு பாதிப்பு இருந்தது. 2018 ஆம் ஆண்டு 60 ஆயிரம் பார்வையாளர்கள் உக்ரைனின் செர்னோபில் அணுஉலைக்கு வந்தனர். மேலும், இங்கு வரும் பார்வையாளர்கள் எதையும் தொட, உட்கார, கேமரா பொருட்களைப் பயன்படுத்த தடை உள்ளது.  நன்றி: லிவ்