இடுகைகள்

சிந்தனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெற்றோர்கள் இல்லாமல் தனியாக கம்யூனிட்டியாக குழந்தைகள் வளர்ந்தால்....

படம்
  ரஷ்ய உளவியலாளர் லெவ் வைகோட்ஸ்கி, குழந்தைகள் பெற்றோருடன் இருக்கும்போது அனுபவித்த சம்பவங்களை, நிகழ்ச்சிகளை அறிய புரிந்துகொள்ள நினைத்தார். கலாசாரம், அந்தரங்க ரீதியாக, தனிநபர் ரீதியாக மனிதர்கள் உள்ளனர். நாம் நாமாக இருப்பது பிறரின் வழியாகத்தான் நடைபெறுகிறது என்று லெவ் கருதினார். குழந்தைகளைப் பார்த்துக்கொள்பவர்கள், குழந்தைகளின் மூதாதையர் ஆகியோரின் வழியாகவே குழந்தைகளின் அறிவு, மதிப்பீடு, தொழில்நுட்ப அறிவு வளருகிறது. ஒருவர் தன்னுடைய சிந்தனையை, கருத்தை சமூகத்தின் பல்வேறு சூழ்நிலைகளை சந்திப்பதன் வழியாக புரிந்துகொள்கிறார். தன்னை திருத்தி, மேம்படுத்திக்கொள்கிறார். லெவ், ஒருவரின் மனதில் ஒரே நேரத்தில் கற்றலும் கற்பித்தலும் நடைபெறுகிறது என்று கருதுகிறார். ஆசிரியர், மாணவர்களை வழிநடத்தி அவர்கள் புதிய திறன்களைக் கற்க உதவி அவர்களை சிறந்த திறமை கொண்டவர்களாக மாற்ற வேண்டும். லெவின் கருத்துகள் காரணமாக மாணவர்களை மையப்பொருளாக கொண்ட கல்விமுறை, பாடமுறை சார்ந்ததாக மாறியது. ஆசிரியர், மாணவர் என இருவரும் சேரந்து உழைத்து கற்பதாக கல்விமுறையில் இயல்புகள் மாறின.  lev vygotsky 2 bruno bettelhem 1964ஆம் ஆண்டு, பெட்டில்க

கும்பலின் அதிகார ஆதிக்கத்திற்கு தனிமனிதர்கள் கட்டுப்பட்டு கீழ்படிவது ஏன்?

படம்
  ஒரு தலைவனுக்கு தொண்டர்கள் கட்டுப்படுகிறார்கள். ஆனால் எதற்காக? தலைவனது வலிமை தொண்டர்களை விட அதிகம். அவனால் செய்யவேண்டிய முக்கிய வேலைகளை பிறருக்கு சொல்லவும் முடியும். அதை திறம்பட செய்துகாட்டவும் முடியும். தொலைநோக்கும், புத்திசாலித்தனமும், வலிமையும் கொண்டவர்களுக்கு எப்போதுமே பின்தொடரும் கூட்டம் உண்டு. இணையத்தில் மட்டுமல்ல நிஜத்திலும்தான். மனிதர்கள் எப்படி பிறருக்கு அடிபணிகிறார்கள் என்பதை உளவியலாளர் ஸ்டான்லி மில்கிராம் ஆராய்ந்தார். இதுபற்றி, பிஹேவியரல் ஸ்டடி ஆஃப் ஒபீடியன்ஸ் என்ற ஆய்வறிக்கையை எழுதி பிரசுரித்த ஆண்டு 1963. பெரும்பான்மையான மக்களுக்கு கட்டற்ற அதிகாரத்தை கையில் கொடுக்கும்போது, அவர்கள் அதை வைத்து மக்களுக்கு கெடுதல்களையே செய்வார்கள் என்பதும் கூட ஸ்டான்லியின் அறிக்கையில் தெரிய வந்த உண்மைகளில் ஒன்று. ஒருவகையில் ஒருவரின் அறமதிப்புகளின் எல்லையை சோதிக்கும் விதமாக நடைபெற்ற உளவியல் சோதனை என இதைக் கூறலாம்.  அன்றைய காலகட்டத்தில் ஜெர்மனியின் நாஜிப்படையைச் சேர்ந்த அடால்ஃப் ஐக்மன் என்பவரின் விசாரணை பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருந்தது. ஸ்டான்லி இந்த விசாரணையை ஆர்வமாக கவனித்து வ

தனிநபர்கள் சமூகத்தை எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றிய உளவியல் ஆய்வு - செர்ஜ் மாஸ்கோவிசி

படம்
  உளவியல் ஆராய்ச்சி செய்வதெல்லாம் சரிதான். ஆனால் இதில் பொதுமக்களின் கருத்துகள் பற்றிய அக்கறையே இல்லையே என அங்கலாய்த்த உளவியலாளர்கள் உண்டு. அவர்கள் என்ன கூற நினைத்தார்கள் என்பதைப் பார்ப்போம்.  ஒரு விஷயத்தைப் பற்றி பிறர் கூற அல்லது இணையத்தின் வழியாக கேள்விப்படுகிறோம். உடனே அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள நினைக்கிறோம். அப்படி தெரிந்துகொண்ட விஷயங்களை ஏற்கெனவே தெரிந்தவற்றோடு அல்லது அனுபவத்தோடு இணைக்கிறோம். இப்படி தெரிந்துகொண்ட அனுபவங்களை ஒருவர் உரையாடல் வழியாக பிறருக்கு கடத்துகிறார். பகிர்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். இதற்கு நட்பு, உறவுகள், சமூக வலைத்தளங்கள், மக்கள் பங்கேற்கும் டிவி நிகழ்ச்சிகள் உதவுகின்றன. நிறைய மக்கள் ஒன்றாக அமர்ந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அங்கு கற்பதும், பெறுவதும் நடக்கிறது. இதன்வழியாக சமூகத்தின் மதிப்புகள், ஈடுபாடு தெரிய வருகிறது. மக்கள் உரையாடுவதன் வழியாக ஒருவர் மிகுந்த மேம்பாடு கொண்ட அறிவை அடைகிறார்கள் என்று கூற முடியாது. அது உரையாடலின் லட்சியமும் அல்ல. கலந்துரையாடலின் வழியாக சமூகம் தனக்கான தொலைநோக்கு பார்வையை, பாதிக்கும் விஷயங்களை எப்படி கையாள்வத

அமெரிக்காவின் கல்விக்கொள்கையை மாற்றிய உளவியலாளரின் ஆராய்ச்சி!

படம்
  ஜெரோம் ப்ரூனர் போலந்து நாட்டு அகதிகளாக வந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறந்தவர் ஜெரோம் ப்ரூனர். பிறக்கும்போது இவருக்கு கண்பார்வை இல்லை. பிறகு அறுவை சிகிச்சை செய்து பார்வை கிடைத்தது. இரண்டு வயதில் பார்வை கிடைத்தவர், பனிரெண்டாவது வயதில் தனது தந்தையை புற்றுநோய்க்கு பலி கொடுத்தார். ஜெரோமின் அம்மா, கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீளவில்லை. ட்யூக் பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்த ஜெரோம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை முடித்தார்.  இரண்டாம் உலகப்போரின்போது ஜெரோம் அமெரிக்க அரசின் உளவுத்துறையில் பணியாற்றினார். 1960ஆம் ஆண்டு ஹார்வர்டில் அறிவாற்றல் சார்ந்த ஆய்வு நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். பிறகு, இங்கிலாந்திற்கு சென்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பாடம் கற்பித்து வந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா திரும்பியவர், தொண்ணூறு வயதில் கூட பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வந்தார்.  முக்கிய படைப்புகள் 1960 the process of education  1966 studies in cognitive growth இருபதாம் நூற்றாண்டில் டெவலப்மென்டல் சைக்காலஜி துறை முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

விலங்குகளின் அறிவுத்திறன் அதிகரித்தால், மனிதர்களின் நிலை என்னவாகும்?

படம்
  ஆக்டோபஸ் விலங்குகளின் சிந்தனைத்திறன் வளர்கிறதா?   இன்று மனிதர்கள் முழு உலகையும் ஆளுகிறார்கள். இதை எப்படி செய்கிறார்கள்?. அவர்களுடைய சிந்தனை செய்யும் திறனால்தான். பிற விலங்குகளுக்கு இந்த திறன் குறைவு. இல்லை என்று கூறவில்லை. குறைவு என்றுதான் கருத வேண்டும். அவை பரிணாம வளர்ச்சி பெறும்போது, மனிதர்களோடு போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அரிஸ்டாட்டில் மனிதர்கள் பகுத்தறிந்து செயல்படுவதால் விலங்குகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் இருப்பதாக கூறினார். மனித இனத்திற்கு அறிவியல் பெயராக ஹோமோசெபியன்ஸ் வழங்கப்படுகிறது. புத்திசாலி மனிதன் என்பதுதான் இதன் அர்த்தம். மனித குலம் முழுமைக்குமே இயற்கை வளங்கள் அழிந்து வருவது, அணுகுண்டு வெடிப்பு, போர், வரலாறு தொடர்பான பிரச்னைகள் உண்டு. விலங்குகளுக்கு இயற்கை கொடையாக கொடுத்துள்ள பற்கள், நகங்கள் அவை தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் பயன்படுத்தவே. ஆனால் மனிதர்கள் அப்படியல்ல. போர், படுகொலை, அடிமைமுறை என மனித குலத்திற்கு ஏற்படுத்தும் அழிவு பெரியதாக உள்ளது. அறிவுஜீவிகளை நாம் விரும்புகிற அளவுக்கு நாம் வாழும் பூமி நம்மை நேசிக்கவில்லை என்கிறார் டால்பின்களின் மொ

வாழ்ந்து அனுபவித்தலே உண்மையை புரிந்துகொள்வதற்கான வழி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  வரையறுக்கப்படாதபடி வாழ்க்கையை நிஜத்தில் வாழ்தல் நம்மில் பெரும்பாலானோர் உண்மையான வாழ்க்கை இருப்பதாக நம்புகிறார்கள். அதை அழியாத ஒன்றாக நினைக்கிறார்கள். ஒருவர் , வாழ்க்கையில் அழியாத தன்மை கொண்ட விஷயங்களை உணர்வது அரிதிலும் அரிதாகவே வாழ்க்கையில் நடைபெறுகிறது. என்னைப் பொறுத்தவரை நிஜம் என்பது, கடவுளாக இருக்கலாம். அதை அமரத்துவம், அழியாத தன்மை   அல்லது வேறு எந்த பெயர்களைக் கொண்டும் குறிப்பிடலாம். உயிர்வாழக் கூடிய புதுமைத்திறன் கொண்ட விஷயங்களை வரையறை செய்து குறிப்பிட முடியாது. நிஜ வாழ்க்கை என்பது இந்த வரையறைகளைக் கடந்தது. உண்மையை நீங்கள் வரையறை செய்து கூறினால்,அது நிலையானதாக இருக்காது. வார்த்தைகளைப் பயன்படுத்தி உருவாக்கும் மாயமாகவே இருக்கும். பிறர் கூறும் வார்த்தைகளின் அடிப்படையில் காதலை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. காதலை நீங்கள் அனுபவித்தால்தான் அதை உணர முடியும். உப்பின் சுவையை அறிய, நீங்கள் அதை சுவைத்துப் பார்க்கவேண்டும். நாம் பெரும்பாலான நேரம், உண்மையைத்   தேடி உணர்வதை விட அதைப் பற்றி குறிப்புகளை வரையறைகளையே விரும்புகிறோம்.   நான் அதை வரையறை செய்யப்போவதில்லை. வார்த்தைகளுக்குள்

நாம் வாழும் வாழ்க்கையில் பாதுகாப்பு கிடையாது - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி நாம் உண்மையைத் தேடவில்லை; ஆறுதலைத் தேடுகிறோம் மனம், இதயம் ஆகியவை பற்றி ஆராயத் தொடங்கினால் புதிய சிந்தனை, வாழ்க்கைத் தெளிவு, உணர்வு நிலை ஆகியவற்றைக் கண்டறியலாம். வாழ்க்கையை இந்த வகையில் மாறுபட்டதாக்கி அமைத்துக்கொள்ளலாம்.   நீங்கள் உண்மையில் உங்களுக்கு   மனதில் திருப்தி ஏற்படுத்தும் விளக்கங்களை தேடுகிறீர்கள். உங்களில் பெரும்பாலானோர் உண்மையைப் பற்றிய வரையறையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வரையறையைக் கண்டுபிடித்தவர்கள் தங்கள் வாழ்வை அழியாத பெருஞ்ஜோதியில் ஐக்கியமாக்கிக் கொள்ள முடியும். உங்கள் தேடுதலின் லட்சியம் உண்மைதான் என்றால்,   நீங்கள் தேடிக்கொண்டிருப்பது உண்மையல்ல. ஆறுதல் அல்லது சொகுசான வேறு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் தினசரி வாழ்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள், முரண்பாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைக்கிறீர்கள். உண்மையைத் தேடுவதில் உள்ள கஷ்டங்களைக் கடந்து பார்த்தால், நாம் பிறந்ததே உண்மையைத் தேடி அறிவதற்குத்தான் என புரிந்துகொள்ள முடியும்.   உண்மையைத் தேடுவதில் உள்ள சிரமங்கள், மனநிலையைக் குலைத்து தேடலை

சிந்தனை, காலத்தைக் கடந்தால் காதல் கிடைக்கும் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம் ஒருவரின் மனம், தேடுதலில் வேட்கை கொண்ட மனத்தை பெற்றுத்தராது. காதலைப் பொறுத்தவரை மனம் அதை தேடவேண்டும் என்பதல்ல. தேடாமலேயே அது கிடைத்துவிடும். நாமறியாமல் காதல் கிடைத்துவிடும்.காதல் கிடைப்பது மனிதர்கள்   முயற்சி, செய்து பெறும் அனுபவம் போல இருக்காது. காதலை காலத்தைப் பொறுத்து தேடினால் பெற முடியாது. காதலை ஒன்றாக, பலவாக, தனிப்பட்டதாக, பொதுவானதாக பார்க்கலாம். இதை பூவைப் போல கூறலாம். பூக்களின் மணத்தை, அதை கடந்து செல்பவர்கள் பார்க்கலாம். மணத்தை நுகரலாம். பூக்களை தொல்லையாக நினைப்பவர்களும், அதை மலர்ச்சியாக பார்ப்பவர்களும் உண்டு. பூக்களுக்கு அதைக் காணபவர்கள் அருகில் இருந்தாலும் அல்லது வெகுதூரத்தில் இருந்தாலும்   ஒன்றுதான். பூக்களிடம் நறுமணம் உள்ளது. அதை அனைவருக்கும் பகிர்ந்துகொண்டே இருக்கிறது. காதல் என்பது புதியது, உயிரோடு இருப்பது, உற்சாகம் அளிக்கக்கூடியது. இதில், நேற்று, நாளை என்பது கிடையாது. சிந்தனை என்பதைக் கடந்தது. வெகுளித்தனமற்ற உலகில் வாழும் அப்பாவித்தனமான மனது காதலை தெளிவாக அறியும். தியாகம், வழிபாடு, உறவு, உடலுறவு

மலிவுவிலை ட்ரெட்மில் சாதனை! - ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த காணொலி

படம்
  முக்கியமான கண்டுபிடிப்பு விருதை பல்வேறு தொழில் நிறுவனங்களும் வழங்கத் தொடங்கியுள்ளன. இதற்கு தமிழ்நாட்டில் முக்கியமான உதாரணம். கவின்கேர். இந்த நிறுவனம், சின்னி கிருஷ்ணா என்ற தங்களது குடும்ப தொழில் முன்னோடியின் பெயரில் சுயதொழிலில் சாதிப்பவர்கள், தொழிலுக்கான ஐடியாக்களைக் கொண்டிருப்பவர்களை ஊக்குவித்து விருதுகளை வழங்குகிறார்கள்.இப்படி செய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் உள்ளன.   ஒன்று, சுயதொழில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பண உதவியும், பெரு நிறுவனத்தின் வலைப்பின்னல் வழியாக பொருட்களை விற்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. அடுத்து, பெரு நிறுவனம் பல்லாண்டுகளாக தான் செய்யும் தொழிலில் பணம் சம்பாதித்து இருக்கும். ஆனால் புதிய சிந்தனைகள், பொருட்கள் கிடைத்தால்தான் தொழில் நிறுவனங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும். இதற்கு சுயதொழில் முனைவோர்களின் சிந்தனையும், பொருட்களும் நிறுவனத்திற்கு பேருதவியாக அமையும்.   பெரு நிறுவனங்களுக்கு இப்படி வறுமையான நிலையில் உள்ள சுயதொழில் முனைவோர்களுக்கு உதவுவதன் வழியாக அவர்களுக்கு சமூக அளவில் நல்ல பெயர் கிடைக்கிறது. அதாவது, பெரு நிறுவனத்திற்கு சிறந்த நன்மதிப்பு. பிராண்டிங். அதேசமயம்

எந்திரம் போன்ற மனிதர்களை உருவாக்கும் அரசும், மத நிறுவனங்களும்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  2 சரியான கல்வி ஜே.கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் உள்ள கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் மனதில் ஏராளமான குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அவர்களின் மனதிலுள்ள முன்மாதிரிகளை  குறிக்கோள்களை மாணவர்களுக்கு வலியுறுத்திக் கூறுவது அவர்களின் எதிர்காலத்திற்கு உதவுமா? நிச்சயமாக இல்லை. இது அவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல்பாடாகும். நீங்கள் நேசிக்கும் குழந்தைகளை அன்பும் அக்கறையும் இல்லாத மனிதர்களிடம் ஒப்படைக்கிறீர்கள். அப்படி குழந்தைகள் ஒப்படைக்கப்படும் இடம்தான், பள்ளி. இதனால் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு மனதில் பயம், பதற்றம், குழப்பம் உண்டாகிறது. அவர்களுக்கு வீட்டிலும், பள்ளியிலும் கூட தேவையான அன்பு கிடைப்பதில்லை. இந்த முறையில்தான் மாணவர்கள் மந்தமாக, உணர்ச்சிகள் இல்லாத வணிகம் செய்பவர்களாக உருவாக்குகிறார்கள். இன்றைய பெற்றோர் லட்சியத்தில் உறுதியாக இருந்து தங்களது தேவைக்கு ஏற்ப குழந்தைகளைப் படிக்க வைத்து பட்டம் பெற வைக்கிறார்கள். குறிக்கோள்கள், முன்மாதிரிகள் என வடிவமைத்துக்கொள்ளாமல் மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவது முக்கியம். அப்படி குறிப்பிட்ட முறைகள் நுட்பத்திற்குள் சிக்கினால்

நிறுவனத்தை, ஊழியர்களை உடைத்து நொறுக்கும் எதிர்மறை மனிதர்கள், அவர்களின் உளவியல்

படம்
ஒருவரின் உளவியல் சார்ந்த இயல்பை எப்படி கணக்கிடுவது எப்படி? மேலேயுள்ள அனைத்து அத்தியாயங்களிலும் ஒருவர் நடந்துகொள்வதைப் பார்த்து மற்றொருவர்தான் அவரை சிகிச்சைக்கு தயார்படுத்துவதைப் பற்றி பேசியிருந்தோம். ஆனால் இதெல்லாம் சரி என்றாலும் மருத்துவரே ஒருவருக்கு உளவியல் ரீதியாக பிறழ்வு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பார்? மையர்ஸ் பிரிக்ஸ் டைப் இண்டிகேட்டர் என்ற அளவீடு இதற்கென பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இதை எம்பிடிஐ என குறிப்பிடுகிறார்கள். இதை வைத்துத்தான் ஒருவரின் பாதிப்பு, குண இயல்பு, வரம்பு, வலிமை, பலவீனம் எல்லாவற்றையும் அடையாளம் காண்கிறார்கள்.  எம்பிடிஐ அளவீட்டை மருத்துவர்கள் இசபெல் மையர்ஸ் மற்றும் கேத்தரின் பிரிக்ஸ் ஆகியோர் உருவாக்கினர். இதற்கு கோட்பாடு அடிப்படையில் உதவியது, கார்ல் ஜங் என்பவர். உளவியல் ரீதியாக சிக்மண்ட் பிராய்டிற்கு பிறகு, கவனிக்கப்படும் உளவியல் வல்லுநர், கார்ல் ஜங்.  பிறரது பாராட்டுகள், வாழ்த்துகள் மூலம் ஆற்றல் பெற்று தன்னை வடிவமைத்துக் கொள்பவர் என்றால் அவர் வெளிவயமானவர். சிந்தனைகளை தனக்குள்ளேய உருவாக்கி அதன் வெளிப்பாடுகளை மட்டும் தேவைக்கு ஏற்ப வெளியில் பகிர்ந்துகொள்ளும் மனித

செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிறைய சவால்கள் உண்டு!

படம்
      மேக்ஸ் டெக்மார்க், அறிவியலாளர்       மேக்ஸ் டெக்மார்க் -Max Tegmark   விண்வெளி பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தவர் நீங்கள் . திடீரென எதற்கு செயற்கை நுண்ணறிவு துறையில் ஆய்வு செய்யத் தொடங்கினீர்கள் ? எனக்கு பெரிய கேள்விகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம் . கற்பனைக்கு எட்டாத பெரிய கேள்விகள் , பெரிய , சரியான கேள்வி என்று கூட வைத்துக்கொள்ளலாம் . விண்வெளி உருவாகியது , அதூபற்றி தத்துவங்கள் , அனைத்து விஷயங்களும் எப்படி தொடங்கியிருக்கும் ?, அடுத்து என்ன நடக்கப்போகிறது , இந்த விவகாரங்களுக்கு இடையில் நமது பங்கு என்ன ? என்று இப்படி கேள்விகள் சென்றுகொண்டே இருக்கும் . நான் வானியலில் நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கிறோம் . ஆனால் அதில் புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பது கடினமானதாக இருக்கிறது . மிகவும் அரியதும் கூடத்தான் . எனவே , நான் விடை காண முடியாத சிக்கல்களைக் கொண்ட துறையை தேடினேன் . அப்போதுதான் நரம்பியல்துறை சார்ந்த தகவல்கள் , அதில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி தெரிய வந்தது . இன்று நாம் நுண்ணோக்கிகள் வழியாக நம் முன்னோர்கள் பார்க்க முடியாத அற