இடுகைகள்

விடுமுறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதிற்கு தேவையான விடுமுறை!

படம்
  நிறையபேருக்கு வேலை கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. லிங்க்டு இன் தளத்தில் கூட புலம்பல்கள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் வேலை செய்வதிலும் அதில் உண்டாகும் மன அழுத்தத்தை போக்கிக்கொள்வதும் பெரும் பிரச்னையாகத்தான் இருக்கிறது.   சில நிறுவனங்களில் உலகின் சூழல்களை புரிந்துகொள்ளாமல் ஆறுநாட்கள் வேலை நாட்களாக வைத்திருப்பார்கள். ஞாயிறு என்ற ஒருநாளில் ஒருவர் எங்கு போய்விட்டு வந்து திங்கட்கிழமை வேலைக்கு உற்சாகமாக வர முடியும் என்ற பொது அறிவு கூட இல்லை.   ஞாயிறு நிறைய கடைகள் இயங்காது. அவர்களுக்கும் ஓய்வெடுக்க ஒரு நாள் வேண்டுமே? இதில் அவர்களையும் குறை சொல்ல முடியாது. இந்த லட்சணத்தில் மனதை விடுமுறைக்கு ஏற்றபடியாக மாற்றிக்கொண்டால் என்ன என்பதை அமெரிக்க அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். ஆய்வில், 441 அமெரிக்க பணியாளர்கள் பங்கு பெற்றனர். ஆய்வை கேஸி மோகில்னர் ஹோம்ஸ் என்ற யுசிஎல்ஏ பல்கலைக்கழக பேராசிரியர் நடத்தினார். அதாவது வெளியில் எங்கும் செல்லாமலேயே மனநிலையை விடுமுறையில் இருப்பது போல மாற்றிக்கொள்வதுதான் மையப்பொருள். இப்படி மாற்றிக்கொள்ளும் மனிதர்கள் வேலையில் மன அழுத்தம் கொள்வதில்லை.   தொய்வடையாமல் பணிபுர

மூன்று நாட்கள் வீக் எண்ட் - ஜப்பான் மைக்ரோசாப்ட் சோதனை!

படம்
giphy.com பத்திரிகைகளுக்கு எப்போதுமே லீவு கிடையாது. லீவு விட்டால் செய்தி எப்படி கிடைக்கும் என்பார்கள். ஆனால் புரடக்டிவிட்டி என்று பார்த்து, ஐடியாக்களை தேடினால் மணிக்கணக்கில் நீளும் மீட்டிங்கில் எல்லாரும் தேவாங்கு போல உட்கார்ந்திருப்பார்கள். அடுத்தடுத்த ஐடியா என கேட்கும்போது, முதலில் பேசியவர் போனில் சமூகவலைதளத்தில் உறைந்துவிடுவார். இப்படியே ஆபீஸ் மீட்டிங் அத்தனை கஷ்டங்களையும் சொல்லிவிடும். இதற்கு ஒரே பதில்தான். லீவு வேண்டும். மைக்ரோசாப்ட் - ஜப்பான் இதற்காகவே 2,300 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் வேலை சொல்லி, பிற பஞ்சாயத்துகளை ஆப் மூலம் செய்தி பரிமாறி செய்தனர். என்ன ஆச்சரியம் ஊழியர்களின் பணித்திறன் முன்பை விட 40 சதவீதம் மேம்பட்டிருந்தது. காரணம் மூன்று நாட்கள் வீக் எண்டாக கம்பெனி கொடுத்ததுதான். வொர்க் லைஃப் சாய்ஸ் சேலஞ்ச் என்பதுதான் மைக்ரோசாஃப்ட் இதற்கு சூட்டிய பெயர். தனிநபர்களாக செய்த விற்பனை அளவில் இதனை கண்டறிந்துள்ளனர். 92 சதவீத பணியாளர்கள் நான்குநாட்கள்தான் வேலை என்பதற்கு மகிழ்ந்தனர். பிரிண்ட் எடுக்கும் செலவு 59 சதவீதம் குறைந்தது. மின் செலவு 23 சதவீதம்

மருத்துவர்களுக்கு எதற்கு விடுமுறை? - ஒடிசா பரிதாபம்!

படம்
தோல் பாதிப்புக்காக அருகிலிருக்கும் ஆயுர்வேத மருத்துவமனை கூட வேண்டாம் என்று ஞாயிறு ராயப்பேட்டை கிளம்பினேன். பொதுவாக எங்கள் ஊரில் அனைத்து நாட்களும் மருத்துவமனைகள் உண்டு. கொடுமுடி, சிவகிரி என இரண்டு மருத்துவமனைகளும்தான். ஆனால் ராயப்பேட்டையில் அப்படியில்லை. ஞாயிறு ஒருநாள் மட்டுமே எனக்கு விடுமுறை. நான் மற்ற வேலைநாட்களில் வந்து பார்ப்பது நடக்காத விஷயம். மருத்துவமனையில் பாதுகாவலரை அடையாளம் காட்டச்சொல்லி யோகா இயற்கை வாழ்வியல் மையம் நோக்கிச் சென்றேன். கதவு திறந்திருந்தது. உள்ளே நோயாளிகளின் இருக்கையில் ஒருவர் அமர்ந்து அங்கு பணியாற்றும் பெண் ஊழியருடன் பேசி சிரித்துக்கொண்டிருந்தார். நான் நுழைந்து மருத்துவரைத் தேடினேன். ஏன் என்கிறீர்களா? சித்த மருத்துவரைப் போல அடக்கமான மனிதர்களை எங்குமே பார்க்க முடியாது. அமைதியாக அறையில் சம்மணங்கால் போட்டு அகத்தியர் போல அமர்ந்துவிடுவார்கள். நாள்பட்ட வியாதிக்கார ர்கள் மட்டுமே வருவார்கள். அவர்களும் ஆறு மாதங்களுக்குள் காலாவதி ஆகிவிடுவார்கள்.இவர்களுக்கு வைத்தியம் செய்து அவரும் விரக்தியாகி விடுவார். உடனே ஊழியர் கேட்டார். என்னப்பா வேணும்? சித்தா டாக்டரைப் பார