இடுகைகள்

கர்மா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்துத்துவாவிற்கு ஆதரவை திரட்டுகிற நூல்- நிலைத்த புகழ் இந்தியா - அமிஷ் திரிபாதி

படம்
  நிலைத்த புகழ் இந்தியா அமிஷ் திரிபாதி கட்டுரை நூல் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் தமிழில் மிஸ்டிக் ரைட் இருநூற்று பதினெட்டு பக்கங்களைக் கொண்ட நூலில் அமிஷ், வேதகால இந்தியாவை நவீன காலத்தில் நிதானமாக உருவாக்கவேண்டும் என நயந்து வேண்டியிருக்கிறார். வேதங்களை படிக்கவேண்டும், அதைப்பற்றி தற்பெருமை கொள்ள வேண்டும். மனு ஸ்மிருதிகள் காலத்திற்கேற்ற விதிகளை சட்டங்களை சொல்கின்றன. அதனால் அனைத்து ஸ்மிருதிகளும் தவறில்லை. தலித் மாணவர் ரோஹித் தற்கொலை செய்துகொள்ளப்பட தூண்டிய விவகாரம் பற்றிய கட்டுரையில், தலித்துகள் மட்டுமல்ல பெண்கள் கூட வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என அப்படியே தாவி வேறு மையப்பொருளுக்கு சென்று விடுகிறார். பின்னே யார் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்று சொன்னால் வீட்டுக்கு வருமானவரித்துறை சோதனைக்கு வருமே? அமிஷ், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தொன்மை உலகை தனது புனைவெழுத்தில் உருவாக்கினார். அவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு அதில் லாபம் சம்பாதித்தார். அதோடு நிற்காமல், புனைவாக எழுதியதை பலரையும் நம்ப வைக்க முயன்று வருகிறார். வெறும் எழுத்து மட்டுமல்ல, அரசியல் அதிகாரத்தையும் பெற இந்துத்துவ ஆதரவ...

பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை மீட்க நகைகளை திருடும் நாயகன்!

படம்
            ஊரு பேரு பைரவக்கோணா இயக்கம் வீ ஆனந்த் இசை சேகர் சந்திரா சந்தீப் கிசான், வர்ஷா, காவ்யா கல்யாண வீட்டில் நகைகளை திருடிக்கொண்டு திருடர்கள் இருவர் காட்டில் சென்று கொண்டிருக்கிறார்கள். செல்லும் வழியில், ஸ்கூட்டியில் அடிபட்டுக்கிடக்கும் பெண்ணைப் பார்த்து இரக்கப்பட்டு காரில் ஏற்றிக்கொள்கிறார்கள். நகைத் திருடர்களை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. அந்த நேரம் திருடர்கள், மின்மினிப்பூச்சிகளால் ஈர்க்கப்பட்டு பைரவக்கோணா என்ற கிராமத்திற்கு வருகிறார்கள். அங்கு ஒரே நேரத்தில் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் ஊர் மக்கள் பார்க்க, நால்வரை கட்டி வைத்து சாட்டையால் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த கிராமத்தின் வினோதம் என்ன, நகைகளை திருடிக்கொண்டு உயிரை பணயம் வைத்து நாயகன் செய்யும் சாகச சம்பவம் எதற்காக என்பதே படத்தின் மையக் கதை. வீ ஆனந்த் தெலுங்கில் இதுவரை எடுத்த அனைத்து படங்களிலும் வினோதமான புனைவு மையமாக இருக்கும். இவர், தமிழில் அப்புச்சி கிராமம் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் இயற்கை வளத்தைக் கொள்ளையடிக்க பழங்...