இடுகைகள்

கடற்கொள்ளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடற்கொள்ளையர்களுக்கு பணமே முக்கியம்!

படம்
நேர்காணல் பெர்ட்ராண்ட் மோனட் கடந்த ஏப்ரலில், இந்தியர்கள் ஐந்துபேர் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர். பின்னர் 69 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். இவர்கள் எங்கிருந்து திடீரென கிளம்புகிறார்கள்? இக்கொள்ளையர்கள் பெரும்பாலும் நைஜீரியர்கள்தான். இவர்கள் வளைகுடா பகுதியில் வசிக்கிறார்கள். டெல்டா, பேயெல்சா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்ளையர்களாக உருவாகிறார்கள். இவர்கள் குழுவாக வாழ்கிறார்கள். ஐஜா என்பது இவர்களின் இனகுழு பெயர். இவர்களின் குழு கட்டமைப்பு எப்படிப்பட்டது.? இக்குழுக்களில் குறைந்த து 15 பேர் இருப்பார்கள். அதிகபட்சமாக 50 பேர் இருப்பார்கள். குறிப்பிட்ட கப்பல்களைத் தாக்கும் அசைன்மென்டுக்கு கிராமம், நகரங்களிலிருந்து ஒன்று கூடுவார்கள். சில நாட்களுக்கு முன்பே தங்கள் வாழிடத்திலிருந்து வெளியேறி தாக்குதலுக்கான திட்டங்களை வகுப்பார்கள். நைஜீரிய பாதுகாப்பு படையிடம் சிக்கிவிடக்கூடாது என கவனமாக இருப்பார்கள். இக்கொள்ளையர்கள் இருக்கும் பகுதியில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.  நைஜீரிய வீரர்களை பாதுகாப்பு படைவீரர்களாக நீங்கள் முன்கூட்டியே நியமித