இடுகைகள்

ஏஆர்ஆர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வன்முறை வழியாக அகிம்சையைத் தேடும் கல்லூரி பேராசிரியர்!

படம்
       மனிதா மனிதா இயக்கம் பி கோபால் டாக்டர் ஆர் ராஜசேகர், நக்மா இசை ஏஆர்ஆர் இரண்டு ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் கல்லூரி பேராசிரியரான நாயகன் இறங்குகிறார். அது சாத்தியமானதா என்பதே கதை. படத்தில் ஒரே நல்ல விஷயம், ரஹ்மானின் இசைதான். வேறெந்த விஷயமும் சரியாக இல்லை. இயக்குநர் பி கோபாலைப் பொறுத்தவரை வணிக வெற்றிப்படங்களை சிரஞ்சீவி, பாலைய்யா ஆகியோருக்கு கொடுத்திருக்கிறார். விமர்சன ரீதியாக பார்த்தால் பெண்களை கவர்ச்சிப்பொருளாக, பாதுகாக்க வேண்டியவர்களாக, பிள்ளை பெறும் எந்திரங்களாக பார்க்கும் பார்வையை உருவாக்குகிற காட்சிகளை வசனங்களைக் கொண்ட படங்களை எடுத்திருக்கிறார். கல்லூரியில் பேராசிரியராக உள்ள நாயகனுக்கு, அப்பகுதியில் உள்ள ரவுடியிடமிருந்து சந்திக்க அழைப்பு வருகிறது. அதை மறுக்கிறார். இதனால், கல்லூரியில் அடிதடி தொடங்குகிறது. அந்த ரவுடியின் மகள் கல்லூரியில் படிக்கிறாள். அவளைக் கொல்ல மற்றொரு ரவுடி முயல்கிறான். அதற்கு நிறைய முன்கதைகள் உள்ளன. இதை அறியாத நாயகன் இருவரையும் சமாதானப்படுத்தி சமூகத்தில் அமைதியை ஏற்படுத்த நினைக்கிறான். ஆனால், அ...

கிராமத்து முத்துவீரன் பாம்பேவில் முத்து பாயாக மாறும் கதை! - வெந்து தணிந்தது காடு - கௌதம்

படம்
  வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு இயக்கம் கௌதம் இசை – பாடல்கள் - ஏ ஆர் ஆர்   பாடல்கள்-   தாமரை கதை – ஜெயமோகன் நடுவக்குறிச்சி அருகே கிராமத்தில் முள்வேலிகளை விறகுக்கு வெட்டி பிழைக்கும் முத்துவீரன், மும்பைக்கு பிழைக்கச் செல்கிறான். அங்கு நேரும் சம்பவங்கள் அவனது வாழ்க்கையை மாற்றிப்போடுகின்றன. அப்படி அங்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. முத்துவீரன் பாத்திரம்தான் படத்தில் முக்கியமானது. வன்முறை வழி அவனை பிடிக்கும் என ஜாதகத்தில் சொல்லியிருக்கிறார்கள் அவனது அம்மா, ஊரில் அல்லாமல் வேறு மாநிலத்திற்கு வேலைக்கு அனுப்புகிறாள். சேர்வத்துரை என்பவர்தான் முத்துவை மும்பைக்கு கூட்டிச்செல்வதாக ஏற்பாடு. ஆனால் அவரே கூட எதிர்பாராத சிக்கலால் தனது உயிரை மாய்த்துக்கொள்கிறார். ஆனால் அவர் மூலமாக முத்துவுக்கு துப்பாக்கி கிடைக்கிறது. அதை எடுத்து மறைத்து வைத்துக்கொள்கிறான். ஏன் அப்படி செய்தான் என அவனுக்கு புரிவதில்லை. ஆனால் சேர்வதுரை மாமாவுக்கு கெட்டபெயர் ஆக கூடாது என அந்த நேரத்தில் யோசிக்கிறான். ஊரில் துப்பாக்கி மீது கைவைப்பது அவனது வாழ்க்கையை மாற்றுகிறது. இச...