இடுகைகள்

கரடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீன வெளியுறவுக்கொள்கையின் அடையாளமாக மாறிய பாண்டா கரடி!

படம்
  பாண்டாவுக்கு பாதுகாப்பு அமெரிக்காவில் உள்ள இரண்டு வனவிலங்கு காட்சி சாலைகளில் பாண்டா பாதுகாப்புக்கென ஒப்பந்தங்களை சீனா செய்துள்ளது. கூடுதலாக ஸ்பெயின் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, சீனாவின் கானுயிர் பாதுகாப்பு சங்கம், ஸ்பெயின் நாட்டின் ஜூ அக்வாரியம், அமெரிக்காவின் சாண்டியாகோ ஜூ வைல்ட்லைஃப் அலையன்ஸ் ஆகிய அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் ஒரு ஜோடி பாண்டா, அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது.  உலகில் பாண்டா கரடிகள் தற்போதைக்கும் சீனாவில் மட்டும்தான் இருக்கின்றன. உலக கானுயிர் நிதியகம் இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில், சீனா, வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த பாண்டா கரடிகள், மனிதர்களின் செயல்பாடுகளால் பெருமளவுக்கு அழிந்துவிட்டன என்று கூறியுள்ளது.  பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் பியர் அர்மாண்ட் டேவிட், சீனாவில் சில காலம் வாழ்ந்தார். விலங்கியலில் ஆர்வம் கொண்டவரான அவரே மேற்குலகைச் சேர்ந்தவர்களில் பாண்டா கரடியைப் பற்றிய குறிப்புகளை எழுதிவைத்து மக்களுக்கு தெரிய வைத்தவர். டேவிட் 1869ஆம் ஆண்டு, சீனாவில் உள

ஆபத்து நாமிருக்கும் சூழல்களால் ஏற்படுகிறதே ஒழிய விலங்குகளால் அல்ல! - காட்டுயிர் ஒளிப்பதிவாளர் கார்டன் புச்சனன்

படம்
  கார்டன் புச்சனன் காட்டுயிர் திரைப்படக்கலைஞரான கார்டன் புச்சனன், கடந்த முப்பது ஆண்டுகளாக உலகின் பல்வேறு கண்டங்களில் அலைந்து திரிந்துள்ளார். சைபீரியாவில் பனிக்கரடிகளை தேடிச்செல்வது, கலாஹரி பாலைவனத்தில் சீட்டாக்களை பின்தொடர்வது என அவரது பணிகளுக்கு எப்போதும் குறைவில்லை. மலையில் ஏறுவது, காடுகளில் நடப்பது என பல இடங்களுக்கு செல்வதில் நிறைய திட்டமிடல்கள் இருந்தாலும் எவையும் நினைத்தது போல நடக்காது. விலங்குகளை படமாக்குவது என்பது எளிதல்ல. அதற்கு காத்திருக்கவேண்டும். மனமும், உடலும் ஒருவருக்கு ஒத்துழைத்தால் மட்டுமே இப்பணி சாத்தியமாகும். பணம் முக்கியம் தேசியப்பூங்காவிற்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், செலவழிப்பதில் கவனம் வேண்டும். தேசியப்பூங்காவிற்கு காசு கட்டியபிறகு உள்ளே செல்லவேண்டும். ஒளிப்படக்கருவிகளை எடுத்துச்செல்லவேண்டும். விலங்குகளை சரியான கோணத்தில் படம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும். நீங்கள் பணம் செலவழிக்கும் நேரத்தில், விலங்குகளை சரியாக படம்பிடிக்க முடியும் என்று உறுதியாக கூற முடியாது. எனது திட்டங்களில் பெரும்பாலும் அதிர்ஷ்டவசமாக நன்றாக நிறைவேறியுள்ளன. உடற்பயிற்சி காட்டுக்

தெரிஞ்சுக்கோ - கரடிகள்

படம்
  தெரிஞ்சுக்கோ – பழுப்பு நிற கரடிகள்   கரடிகள் தனிமையாக வாழ்பவை. மரம் ஏறும் திறன் பெற்றவை. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா தவிர பிற பகுதிகளில் கரடிகளைப் பார்க்கலாம். கரடிகளில் 8 இனங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில் வாழ்ந்த கரடி இனம் ஒன்பதாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கரடி இனம் அழிந்து போனது. துருவக்கரடிகள் வேட்டையாடுவதில் வெற்றிபெறும் சதவீதம் இரண்டு சதவீதத்திற்கும் குறைவு. தென் அமெரிக்காவில் வாழும் ஸ்பெக்டேக்ல்டு பியர் எனும் கரடி இனம், பழம், தாவரங்களை மட்டுமே சாப்பிட்டு வாழ்கிறது. இதன் உணவில் 5 சதவீதம் மட்டுமே இறைச்சி உண்டு. ஜெயண்ட் பாண்டா, தனது உடல் எடையில் 38 சதவீத அளவுக்கு மூங்கில்களை உண்கிறது. இப்படி சாப்பிடுவதை ஒரு நாளில் 10-16 மணிநேரம் செய்கிறது. உலகில் தற்போது 26 ஆயிரம் துருவக்கரடிகள்தான் உயிரோடு உள்ளன. ஸ்லாத் கரடி இனம், இந்தியா, இலங்கையில் வாழ்கிறது. இந்த கரடி இனம், தனது குட்டிகளை ஒன்பது மாதம் வரையில் தனது முதுகில் சுமந்து பராமரிக்கிறது. சன் பியர் எனும் கரடி இனம், 25 செ.மீ நீள நாக்கைக் கொண்டது. எதற்கு இந்தளவு நீளமான நாக்கு? தேன்கூட்டிலிருந்து தேனை

தனது மகனைப்போன்ற சிறுவனுக்காக தனது ஆன்மாவை வாளாக மாற்றும் கரடி! தி பாய் அண்ட் தி பீஸ்ட் - அனிமேஷன்

படம்
  தி பாய் அண்ட் தி பீஸ்ட்  இயக்கம் - மமோரு ஹோசோடா அப்பா, அம்மாவை விட்டு பிரிந்துவிட குடும்பம் சிதைகிறது. அம்மா இறந்துவிடுகிறார். கடனுக்காக உறவினர்கள் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்கிறார்கள். இதனால் க்யூட்டா என்ற சிறுவன் ஆதரவற்று தெருவில் திரியும் நிலை. இந்த நேரத்தில் அவனுக்கு சில விலங்குகள் கண்ணில் படுகின்றன. அவற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான். அது ஒரு விலங்குகள் உலகம். அங்குள்ள கரடி ஒன்று அவனுக்கு ஆதரவளிக்கிறது. அதற்கு வலிமை இருக்குமளவு தற்காப்புக் கலையில் நுட்பம் இருப்பதில்லை. அந்த நுட்பத்தை சிறுவன் எப்படி கற்றுக்கொடுக்கிறான், தற்காப்பு போட்டியில் வெல்ல உதவுகிறான் என்பதே கதை.  இரண்டு உலகம் சார்ந்த கதை. ஜப்பானில் உள்ள தெருக்களில் உணவுக்கு பிறரிடமிருந்து திருடி சாப்பிடும் நிலையில் வாழும் சிறுவன், க்யூட்டா. அவனுக்கு அந்த நேரத்தில் எலி ஒன்று நட்பாகிறது. அவனது துன்பம், துயரம் என அனைத்திலும் உணர்ச்சி ரீதியான ஆதரவாக இருக்கிறது. பிறகுதான் விலங்குகள் உலகத்தில் கரடியை சந்திக்கிறான். அங்குதான், தனது உடலை வலிமையாக்கிக்கொண்டு கரடிக்கும் தற்காப்புக் கலையின் நுட்பங்களை கற்றுத் தருக

காலநிலை மாற்றத்திற்கேற்ப பழக்கவழக்கங்கள் மாறும் விலங்குகள்!

படம்
  காலநிலை மாற்றத்திற்கேற்ப மாறும் விலங்குகள்! உலகமெங்கும் வெப்பநிலை அதிகரிப்பது,வறட்சி, மழைப்பொழிவு கூடி வெள்ள பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கேற்ப விலங்குகளும் தம்மை மாற்றிக்கொண்டு வருகின்றன. அப்படி மாறிய சில விலங்குகளைப் பார்ப்போம்.  சில்லென்ற பாறைக்குகை முயல் போன்ற தோற்றத்தில் பழுப்புநிறம் கொண்ட விலங்கு, பிகா (Pika). அமெரிக்காவின் பசிபிக் கடல்பகுதியின் மேற்குப்புறத்தில் உள்ள பாறைகளில் வாழ்கிறது. பிகா வசிக்கும் பாறைத்திட்டிற்கு டாலுசஸ் (Taluses)என்று பெயர். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சற்று உயரமான பாறைப்பகுதிக்கு சென்றுவிட்டது என ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளனர். இவை,  தனது வாழிடத்திலிருந்து வெளிவருவது உணவிற்கான புற்களையும், காட்டுப் பூக்களையும் சேகரிக்க மட்டுமே. பிகா, தனக்குத் தேவையான உணவுகளை முன்பே சேகரித்து குவித்து வைத்துக்கொள்கிறது. இதை சூழலியலாளர்கள் வைக்கோல் (Haystakes) என அழைக்கிறார்கள். வெளியில் உள்ளதை விட பிகாவின் குகை 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் கூடுதலாக உள்ளது. வாழுமிடத்தில்,  உணவு எளிதாக கிடைப்பதால் இதனையும் சமாளித்து வாழ்கிறது இச்சிறுவிலங்

டேவிட் அட்டன்பரோ ஏற்படுத்திய மாற்றங்கள்தான் எனக்கு ஊக்கமூட்டின! - புகைப்படக் கலைஞர் பெர்சி ஃபெர்னாண்டஸ்

படம்
புகைப்படக் கலைஞர்  பெர்சி ஃபெர்னாண்டஸ்  பெர்சி ஃபெர்னாண்டஸ் கானுயிர் புகைப்படக் கலைஞர் புகைப்படக் கலைஞர்  பெர்சி ஃபெர்னாண்டஸ் கானுயிர் புகைப்படக்கலை மீது எப்படி உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது? தமிழ்நாட்டிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை அருகில் ராணுவப்பள்ளியில் படித்தபோது ஆர்வம் பிறந்தது. நாங்கள் அங்கு தினமும் நீர் குடிக்க வரும் யானைகளைப் பார்ப்போம். அந்த நீர்நிலையில் ஏராளமான முதலைகள் உண்டு. பக்கத்திலேயே முதலைப் பண்ணையும் இருந்தது. சிறுத்தையை அடிக்கடி பார்ப்போம்.  ஒருநாள் மாலைநேரம் நாங்கள் விளையாடிவிட்டு நீர் குடிக்க வரும் இடத்தில் இரண்டு மலைப்பாம்புகளை பார்த்தோம். குடிநீர் குழாய் காவல்நிலையத்தின் அருகில் இருந்தது. மலைப்பாம்புகள், யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் ஆகிய உயிரினங்களை நாங்கள் அடிக்கடி பார்ப்பது பழக்கமாகிவிட்டிருந்தது. கேரளாவில் உள்ள சின்னார், மூணார் ஆகிய இடங்களுக்கு நாங்கள் அடிக்கடி சுற்றுலா செல்வோம். அங்கு நாங்கள் புலி, சிறுத்தைகளை பார்ப்போம். கூடுதலாக ஏராளமான சந்தன மரங்களையும் பார்த்து ஆச்சரியப்பட்டோம்.  பிஹெச்டி படிக்கும்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மயில்களைப

காட்டு விலங்குகளை பாதுகாக்க முயலும் கரடியும் மானும்! - ஓபன் சீசன் -1

படம்
                ஓபன் சீசன்2006 முதல் பாகம் Directed by Roger Allers Jill Culton Produced by Michelle Murdocca Screenplay by Steve Bencich Ron J. Friedman Nat Mauldin Story by Jill Culton Anthony Stacchi Based on An original story by Steve Moore John B. Carls பூக் என்ற கரடிதான் படத்தின் ஹீரோ . வேட்டைக்காரன் ஒருவன் மானை வண்டியை விட்டு ஏற்றி கொலை செய்ய முயல , அதில் மயக்கமுற்று கரடியால் உயிர்பிழைக்கும் மான் , கரடியின் ஒரே ஆத்ம நண்பனாகிறது . கரடிதான் தன் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் இன்சார்ஜ் என்கிறது . மான் அத்தியாயம் பின்னால்தான் வருகிறது . அதற்கு முன்னால் கரடியை ரேஞ்சர் பெண்மணி பராமரித்து வருகிறார் . அவரைப் பொறுத்தவரை அதன் வளர்ப்பு பிராணி போல நடத்துகிறார் . அதை வைத்து வித்தைகாட்டி அவர் சம்பாதிக்கிறார் . ஆனால் கரடிக்கு காட்டில் எப்படி உணவு பெறுவது என்பதைப் பற்றியெல்லாம் தெரியாது . அப்போது கொம்பு உடைந்த மானின் நட்பு கிடைக்க , காட்டுக்குள் கிடைக்கும் சுதந்திரம் கரடிக்கு தேவைப்படுகிறது . மேலும் சாப்பிட நிறைய தீனியை மானும் கரடியும் சென்று வேட்டையாட சூப்பர் மார்க்கெட் சுமார் மார்க்கெ

குடும்பத்தில் ஒன்றாக இணையுங்க ப்ரோ! ஓவர் தி ஹெட்ஜ் 2006

படம்
                ஓவர் தி ஹெட்ஜ் அனிமேஷன்    Director: Tim Johnson, Karey Kirkpatrick Produced by: Bonnie Arnold Screenplay by: Len Blum, Lorne Cameron, David Hoselton, Karey Kirkpatrick     போக்கிரியாக பிறரது உணவைத் திருடி தின்று வாழும் நரி , தனக்கு ஏற்பட்ட வாழ்வா சாவா சூழ்நிலையில் உயிர்பிழைக்க செய்யும் பிரயத்தனங்களே கதை . கதையின் லைன் சின்னதுதான் . நரி கரடிக்கு மக்கள் கொடுத்துள்ள தீனியை திருடுகிறது . போதும்கிற எண்ணம் நரிக்கு வராமல் போக அத்தனை தீனியையும் திருடுகிறது . அதனை கொண்டுபோகும் போது ஏற்பட்ட லாஜிஸ்டிக் பிரச்னையால் கரடி உறக்கம் கலைந்து விழித்துவிட அப்புறம் என்ன சண்டைதான் . இதில் கொள்ளையிட்ட தீனி அனைத்தும் சாலையில் விழுந்து வாகனங்களில் அரைபட்டு நாசமாகிறது . கோபமாகும் கரடி பௌர்ணமி வரை டைம் கொடுத்து ஸ்னாக்ஸை வாங்கித் தரச்சொல்லுகிறது .   அதற்காக நரி அப்பாவி குடும்பம் ஒன்றை பயன்படுத்திக்கொள்கிறது . இதனால் அந்த குடும்பத்திற்கு நேரும் பாதிப்புகள் என்னென்ன என்பதை காமெடி , நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள் . தனியாக இருப்பதை விட குடும்பமாக ஒன்றாக சேர

மிஸ்டர் ரோனி - நான்கு கேள்விகள் - அதிரடி பதில்கள்!

படம்
pixabay மிஸ்டர் ரோனி - பேக் டூ பேக் கேள்விகள் -பதில்கள் புதிய உயிரினங்களை எப்படி வகைப்படுத்துகிறார்கள்? வகைப்படுத்துவது என்பது மிகப்பெரிய நீண்ட பணி. முதலில் ஆராய்ச்சியாளர்கள் தாம் கண்டறியும் உயிரினத்தின் மரபணுவையும், அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் ஆராய வேண்டும். இதுபற்றிய செய்திகளை நன்றாக படித்துவிட்டு மரபணு ரீதியாகவும், பிற உயிரினங்களுடன் உள்ள தொடர்பையும் அறிந்துகொண்டு அப்போதும் அது புது உயிரி என்றால் அறிவியல் இதழ்களுக்கு அறிக்கையாக எழுதி அனுப்பலாம். அப்போதும் அது புதிய உயிரினம் என்பதற்கு உறுதி கிடையாது. பத்திரிகையில் வெளியான பிறகுதான் அதைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலரும் விவாதிப்பார்கள். பின்னர், அதற்கான ஆதாரங்களோடு நாம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தால் அந்த உயிரினம் புதிது என கருதப்பட, நிரூபிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த உயிரினத்திற்கும் நாம் தனுஸ்ரீ என பெயர் வைத்துவிட முடியாது. அதற்கும் உலக ஜூவாலஜிகல் நோமன்கிலேச்சர் என்ற அமைப்பின் அனுமதியும் ஒப்புதலும் தேவை. அப்போது பெயர் சூட்டி ஏ2பி லட்டை பரிமாறி சந்தோஷப்பட முடியும். உலகிலுள்ள ஆக்சிஜன் தீர்ந்துவிட்டால் என்னாகும் ப்ரோ?

அந்த சமாச்சாரத்தைச் சொல்லும் அடல்ட் கரடி! - அம்பு படாத கரடிக்கதை!

படம்
TED 1, TED 2 மார்க் வால்பெர்க் இயக்கம் - சேத் மெக்ஃபார்லென் ஒளிப்பதிவு - மைக்கேல் பாரட் இசை - வால்டர் மர்பி இது வயது வந்தவர்களுக்கான காமெடி படம். அதனை மறக்காதீர்கள். அப்போதுதான் குங்குமம் விமர்சனக்குழு போன்ற லாஜிக் கேள்விகளை எழுப்பாமல் படத்தை ரசிக்க முடியும். அமெரிக்காவில் வாழும் தம்பதி. அவர்களுக்கு தனிமை விரும்பியான சிறுவன். அவனுக்கு பெற்றோர் கொடுக்கும் டெடி பியர் பொம்மை. இவைதான் தொடக்க காட்சிகள். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? ஆம் மற்ற டெடிகளைப் போல அல்ல இந்த டெடி. இது பேட்டரியால் இயங்கும் என்றாலும், மனிதர்களோடு இயல்பாக பேசக்கூடிய திறன் பெற்றது. இதனால் பத்திரிகை,டிவி என அனைத்திலும் பிரபலம் ஆகிறது. ஆனால் அந்த சிறுவனை மறக்கவே இல்லை. அவனோடுதான் கடைசி வரை இருக்கிறது. எல்லோருக்கும் குறிப்பிட்ட வயது வந்தால் அடுத்த பாலினத்தவரை தேடுவோம். பார்ட்டி பண்ணுவோம். பெற்றோர் வீட்டில் இல்லை என்றால் கும்தலக்கடி குஜாலை நடத்துவோம் அல்லவா? அதேதான் இங்கு மார்க் வால்பெர்க்கு முன்னே டெடி செய்கிறது. டார்ச்சர் ஆகும் மார்க்கின் லிவிங் இன் பெண் தோழி மிலா குனிஸ், டெடியை அடித்

திருடித் தேன் குடிக்கும் கரடிகள் - உண்மை என்ன?

படம்
கரடிகளுக்கு தேன் மிகவும் பிடித்தமானதா? கரடிகள் வின்னி தி பூ சீரிஸ் எல்லாம் பார்ப்பதில்லை. அவை தேன் மட்டும் சாப்பிடுவதில்லை. தேன்கூட்டிலுள்ள தேனீக்களின் லார்வாவையும் உண்ணுகின்றன. காரணம், அதிலுள்ள புரதச்சத்து. அதற்காக தேனீக்கள் கரடிகளை விட்டு வைப்பதில்லை. கடிக்கும்தான். கரடியின் அடர்த்தியான முடி, தேனீக்களின் கடியிலிருந்து பெருமளவு காப்பாற்றுகிறது. கடந்த ஆண்டு  ஃபின்லாந்தில் கரடி, 370 பல்வேறு தேனீ பண்ணைகளுக்குள் புகுந்து வேட்டையாடின. இதன் விளைவாக விவசாயிகளுக்கு அரசு, நஷ்ட ஈடு வழங்கியது. இதற்கான தொகை  1 லட்சத்து 43 ஆயிரம் டாலர்கள். காட்டில் உணவின்றி கரடிகள் பண்ணைகளுக்குள் புகுகின்றன. மின்சார வேலி என்பது தற்காலிகமானதே. பசி வரும்போது, வீட்டில் இருப்பதை வைத்து நீங்களே சமைப்பீர்கள். அல்லது எதையாவது எடுத்துப்போட்டு சாப்பிடுவீர்கள். அதேதான் கரடி விஷயத்திலும்  நடந்தது. அது சாப்பிட்டது போக மீதியை நாம் எடுத்துக்கொள்வதே சரியானது. நன்றி: மென்டல் ஃபிளாஸ்

நான் கரடியா, மனிதனா? - கரடிக்கே குழப்பம் - பிராங்க் தாஷ்லின் நூல்

படம்
நீ கரடி என்று யார் சொன்னது? - The bear That Wasnot ஃபிராங்க் தாஷ்லின் மொழிபெயர்ப்பு - ஆதி வள்ளியப்பன் தொழில்யுகத்தில் மனிதர்களை எப்படியெல்லாம் கூலி உயர்வு, உழைப்பு உயர்வானது என்று சொல்லி கசக்கிப் பிழிகிறார்கள் என்பதை அங்கதமாக சொல்லியிருக்கிறார்கள். எழுத்தாளர் ஃபிராங்க் தாஷ்லின் எழுதி வரைந்த நூல் இது. கரடி இரை கிடைக்காத பனிக்காலத்தில் தூங்குவதையும், அப்போது காட்டுக்குள் புகும் மனிதர்களை காடுகளை அழித்து தொழிற்சாலைக்கான மூலப்பொருட்களாக்குகிறார்கள். இதன் விளைவாக கரடி இரைக்கு உணவு இன்றி தவித்துப்போகிறது. பின் வேறு வழியின்றி தொழிற்சாலையில் நுழைய, அவர்கள் கரடியையும் வேலையாள் என நம்ப வைத்து வேலை செய்ய வைக்கிறார்கள். உண்மையில் கரடிக்கே ஒரு நிமிடம் நான் ரோம போர்வை போர்த்திய மனிதன்தானோ என எண்ணத் தொடங்கிவிடுகிறது. பிரமாதமான கதையை தமிழில் அமெரிக்க நூலின் வடிவமைப்பிலேயே செய்திருக்கிறார்கள். வள்ளியப்பனின் மொழி கதையின் போக்குக்கு பேருதவி செய்கிறது. வடிவமைப்பு குணசேகரன். படிக்க வசதியாக இருக்கிறது. நன்றி -பாலகிருஷ்ணன்