இடுகைகள்

ராணுவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதில் தேங்கியுள்ள மோசமான மனநல குறைபாட்டை, பதற்றத்தை தணிக்கும் உளவியல் சிகிச்சை முறை - ஜோசப் வோல்பே

படம்
  தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர் ஜோசப் வோல்பே. விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். பிறகு ராணுவத்தில்சேர்ந்து பிடிஎஸ்டி குறைபாட்டிற்கு சிகிச்சை அளித்தார். இந்த குறைபாட்டை அப்போது வார் நியூரோசிஸ் என்று அழைத்தனர். நோயின் அறிகுறியை அறியாமல் மனநல குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க முயன்றார். இதற்கான ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டார். பிறகு 1960ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்று வர்ஜீனியா பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு சிறிதுகாலம் பணியாற்றிவிட்டு டெம்பிள் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். குண இயல்பு சார்ந்த சிகிச்சை மையம் ஒன்றை உருவாக்கி எண்பத்திரெண்டு வயது வரையில் இயங்கினார். நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.  முக்கியமான படைப்புகள்  1958 psychology by reciprocal inhibition 1969 practice of behavioral therapy 1988 life without fear இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பல உளவியலாளர்களும் பிராய்ட் கூறிய மனப்பகுப்பாய்வு சார்ந்தவற்றில்தான் இயங்கினர். ஆழ்மனதில் உள்ள முரணான சக்திகளால் மனப்பதற்றம் ஏற்படுகிறது என்று கருதி வந்தனர். ஆழ்மனத்தில் உள்ள தன்ன

ஒற்றை மனிதராக சென்று காஷ்மீர் பிரிவினைவாத தீவிரவாதிகளுடன் மோதி பணயக்கைதிகளை மீட்கும் நாயகன்!

படம்
                தாயகம் விஜயகாந்த், ரஞ்சிதா இயக்கம் ஏ ஆர் ரமேஷ் இசை தேவா பாடல்கள் பிறைசூடன் காயமானால் வெளிவரும் ரத்தம் நொடியில் நின்றுபோகும் வகையில் மருந்து ஒன்றை இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடிக்கிறார். இதைப்பற்றி அவரிடம் உள்ள உதவியாளர் தகவலை பாக். தீவிரவாதிக்கு கசியவிடுகிறார். இதனால் விஞ்ஞானி செல்லும் விமானம் கடத்தப்படுகிறது. காஷ்மீரில் தனி காஷ்மீர் கேட்கும் சிறு தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள் பயணிகள். அவர்களை சக்திவேல் என்ற மீனவர், விஞ்ஞானியின் மகளோடு சென்று தனிமனிதராக மீட்டு வருவதுதான் படத்தின் கதை. படத்தில் முப்பது நிமிடம் கழித்துத்தான் விஜயகாந்த் வருகிறார். அதுவரைக்குமான படத்தின் காட்சிகளை அருண் பாண்டியன் பார்த்துக்கொள்கிறார். அவருக்கு பக்க துணையாக விமான பைலட் பாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார். இன்று ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் நடித்து வரும் ஒன்மேன் ஆர்மி பாத்திரத்தில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் வருகிறார். இது சண்டைப்படம் என்பதால் லாஜிக் பார்க்காதீர்கள். மேஜிக் மிஸ் ஆகிவிடும். படத்தில் வரும் எம்ஏ படித்த பெண் பாத்திரத்தில் வரும் ரஞ்சிதா, ஒன்பதாம் கிளாஸ் படித்த மீனவ

அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தோற்றுப்போவதன் காரணம்! - அமைப்பு முறை இல்லாத மக்கள போராட்டம்

படம்
                  போராட்டத்தின் வீழ்ச்சி 2010 தொடங்கி 2020 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளை போராட்டத்தின் காலம் என்று கூறலாம் . அத்தனை போராட்டங்கள் நடைபெற்றன . இதற்கான விதை துனிசியாவில் விழுந்தது . அங்கு தொடங்கிய போராட்டம் அப்படியே அரபு நாடுகளுக்கும் பரவியது . இதற்கு சமூக வலைதளங்கள் முக்கியமான தளமாக அமைந்தன . குறிப்பாக ஃபேஸ்புக்கைக் கூறவேண்டும் . துருக்கி , உக்ரைன் , ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் நடந்த மக்களின் போராட்டங்கள் ஆட்சியாளர்களை என்ன செய்வதென தெரியாமல் பதைபதைக்க வைத்தன . சூடான் , ஈராக் , அல்ஜீரியா , ஆஸ்திரேலியா , ஃபிரான்ஸ் , இந்தோனேஷியா , லத்தீன் அமெரிக்கநாடுகள் , இந்தியா , லெபனான் , ஹைதி ஆகிய நாடுகள் போராட்டச் சுழலில் மாட்டின . மேற்சொன்ன பத்தாண்டுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராடினர் . போராடியவர்களுக்கு பிற மக்கள் ஆதரவு தெரிவித்தனர் . போராட்டங்களை உலகளவிலான ஊடகங்கள் பதிவு செய்து ஒளிபரப்பின . புகழ்பெற்ற நாளிதழ்களில் கட்டுரைகள் ஏராளமாக எழுதப்பட்டன . போராட்டங்கள் வெற்றிபெற்றன என்பது உண்மைதான் . ஆனால் , போராட்டக்காரர்கள் கோரிய விஷயங்கள் ஏதேனும் நிறைவேற

தாய்லாந்தில் சீர்த்திருத்தங்களை செய்யத்துடிக்கும் இளம் அரசியல் தலைவர் - பிடா

படம்
    pita,move forward party       எங்களுக்கும் நேரம் வரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவ் ஃபார்வேர்ட் கட்சித்தலைவர் பிடா லிம்ஜாரோன்ராட் மேலேயுள்ள தலைப்பைத்தான் தனக்குத்தானே இப்படித்தான் சொல்லிக்கொண்டே பிரசாரம் செய்து வருகிறார் . பிடா செல்வாக்கான பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் . இவரது மாமா பாடுங் , முன்னாள் பிரதமர் தக்‌ஷினின் உதவியாளராக வேலை செய்தவர் . பிடா பாங்காக்கின் தம்மாசாட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் பிறகு மேற்படிப்பை அமெரிக்காவில் ஹார்வர்டில் படித்தார் . பிறகு நாடு திரும்பி குடும்பத்தொழிலான வேளாண்மை சார்ந்த தொழிலில் இயங்கி வந்தவர் , இப்போது அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார் . தாய்லாந்து நாட்டில் ஜனநாயகத்தன்மையை ஏற்படுத்தவேண்டும் . பொருளாதார சீர்திருத்தங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவேண்டும் என தீர்மானமாக பேசுபவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அரசால் பிடுங்கப்பட்டது . அரசு அவைக்குள் வராதபடி தடுக்கப்பட்டிருக்கிறார் . ஆனால் அவர் மக்களை , ஆதரவாளர்களை சந்திப்பை அரசு தடுக்கமுடியவில்லை . அரசியல் எதிரிகள் இவரை அமெரிக்காவின் சிஐஏ

டார்க் வெப்பில் இயங்கும் குற்றவாளிகளை, மக்கள் விடுதலைப் படை வெற்றிகொள்ளும் கதை! மை டியர் கார்டியன்

படம்
  மை டியர் கார்டியன் சி டிராமா 40 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   மக்கள் விடுதலைப்படையின் பிரிவில் இயங்கும் சிறப்பு படையின் அருமை பெருமைகளை பேசும் டிவி தொடர். மேலே சொன்னதுதான் தொடரின் அடிப்படை. எனவே, மற்ற விஷயங்களையெல்லாம் அப்படியே அமுக்கி விடுகிறார்கள். குறிப்பாக உள்நாட்டு காவல்துறையின் செயல்பாட்டையெல்லாம் தாண்டியது மக்கள் விடுதலைப்படை என காட்டுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசம் என்பதை உறுதிமொழி எடுக்கும் காட்சியில் காட்டுகிறார்கள். சீனாவில் ஒரே அரசியல்கட்சிதான் உள்ளது. அதுதான ஆளுங்கட்சி அரசை வழிநடத்துகிறது. லியாங் மூ ஷி, சிறப்பு பிரிவு ராணுவ வீரர்.கேப்டனாக உள்ளவரின் குழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் போதை தயாரிப்பு குழு ஒன்றை உள்நாட்டு காவல்துறையோடு சேர்ந்து வேட்டையாடுகிறது. அதில் ஓல்ட் மாஸ்டர் என்ற முக்கிய குற்றவாளி தப்பி விடுகிறார். அவரிடம் வேலை செய்த சாதாரண மக்கள் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படுகிறார்கள். இதில் ஜூ ரான் என்ற பள்ளிச்சிறுவன், போதைப்பொருள் வியாபாரியான அப்பாவை காப்பாற்றும் முயற்சியில் இறந்துபோகிறான். அவனது அப்பாவும், போதை தொழில் செய்யும் முதலாளி

மணம் செய்துகொண்டு தனித்தனியாக வாழ்ந்து உளவு பார்த்த ரஷ்ய உளவாளிகள்!

படம்
  உலக நாடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து ஒற்றறியும் ரஷ்ய உளவாளிகள்! அண்மையில் பிரேசில் நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் திடீரென காணாமல் போயுள்ளனர். இவர்களைப் பற்றி இரு நாட்டு காவல்துறையும், உளவு அமைப்பும் துப்பு துலக்கியதில் ரஷ்ய நாட்டின் உளவு அமைப்பால் பயிற்சி வழங்கப்பட்டவர்கள் எனவும், ஆண், பெண் என இருவருமே மணமாகி பிரிந்து தனித்தனி நாடுகளில் வாழ்ந்து வந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஜெரார்ட் டேனியல் காம்போஸ் விட்டிச், இவர் பிரேசில் நாட்டில் இருந்து மலேசியாவிற்கு சென்றார். போகும் வரை தனது பெண் தோழிக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர், திடீரென மாயமானார். அவரைப் பற்றிய எந்த செய்தியும் தெரியவில்லை. இதனால், பதட்டமான பெண்தோழி, விட்டிச் பற்றி காணவில்லை என்று புகார் கொடுத்து தேடத் தொடங்கினார். காவல்துறையோடு, சமூக வலைத்தளத்திலும் தேடுதல் நடைபெற்றது. ஆஸ்திரிய – பிரேசிலிய பாரம்பரியத்தைக் கொண்ட விட்டிச், 3 டி பிரிண்டிங் நிறுவனத்தை நடத்தி வந்தார். பிரேசிலிய ராணுவத்திற்கு பல்வேறு கருவிகளை செய்து கொடுத்து ஆயுத வடிவமைப்பில் உதவி வந்தார். இவரது பெண்தோழி, பிரேசில் அரசின் விவ

பெண் தலைவர்களை நம்பாத நாட்டு மக்கள், ஒழுக்கத்தை தூக்கிப்பிடிக்கும் ஊடகங்கள்- பெண் தலைவர்கள் காணாமல் போவது ஏன்?

படம்
  சன்னா மரின் ஜெசிந்தா ஆர்டெர்ன் உலக அரங்கில் பெண் தலைவர்கள் காணாமல் போவது ஏன்? அண்மையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஆஸ்திரேலியா நாட்டில் உரையாற்றினார். அதில், உலக நாடுகளில் ஏற்பட்டு வரும் ஜனநாயக பாதிப்புகளை பற்றி குறிப்பிட்டு பேசினார். ‘’உலக நாடுகளில் பரிசோதனை முறையாக இரண்டு ஆண்டுகள் பெண்களின் கையில் ஆட்சியை ஒப்படைத்தால் உலகம் சரியான திசையில் செல்லத் தொடங்கும்’’ என்று பேசினார். அவரை நேர்காணல் கண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் அதற்கு பதிலாக “ஆறுமாதங்கள் போதும்” என்று கூறினார். பராக் ஒபாமா தனது மனதில் இருப்பதைக் கூறினாலும் அவர் கூறிய விஷயம் நடைபெறுவது மிகவுமதொலைதூரத்தில் இருக்கிறது. ஐ.நா சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில், கடந்த இருபது ஆண்டுகளில்தான் பெண்கள் நாட்டின் அதிபர்களாக வரத் தொடங்கியுள்ளனர். இப்படி அவர்கள் நாட்டின் தலைவர்களாக உருவாகி வளரும் எண்ணிக்கையும் ஆண்களோடு ஒப்பிட்டால் குறைவாக உள்ளது. 2022ஆம் ஆண்டு பதினேழு பெண் தலைவர்கள் ஆட்சியில் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை பனிரெண்டாக சுருங்கிவிட்டது. பாலின பாகுபாடு காரணமாக பெண்களுக்கு அரசியலி

மாஃபியா கேங்கின் கொலை முயற்சியைத் தடுத்து காதலியைக் காக்கும் ராணுவ அதிகாரி! மிஸ்டீரியஸ் லவ் - சீன டிவி தொடர்

படம்
  மிஸ்டீரியஸ் லவ் (2021) சீன டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ருவான் நினான் சூ என்ற நாடக நடிகைக்கும், ராணுவ வீரனுக்கும் உருவாகும் காதல் நிறைவேறியதா இல்லையா என்பதே கதை. ருவான் என்ற நாடக நடிகைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் அடிக்கடி கனவாக வந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில், ருவான் மாஃபியா கும்பலால் கடத்தப்படுகிறார். அவரை, அந்த குழுவில் கருப்பு ஆடாக இருந்த ராணுவ அதிகாரி லீ, காப்பாற்றுகிறார். அதேசமயம் கப்பலில் நடைபெறும் விபத்தில் அவர் இறந்துபோகிறார். அதாவது, ருவான் அப்படி நினைத்துக்கொள்கிறார்.   ருவானுக்கு, ராணுவ அதிகாரி தன்னைக் காப்பாற்றிய காரணத்தால் அவரை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் தனக்கு கொடுத்த பூச்செடியை தொட்டியில் வைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கிறார். இறந்துபோய்விட்டார் என மனது சொன்னாலும், அதே மனதின் இன்னொருபகுதி அப்படி நடந்திருக்காது என கூறுகிறது. பின்னாளில் ருவான், தனது வெய் குழுவினரின் நாடகத்திற்காக முன்னணி விளம்பர மாடல் ஒருவரை அழைக்கப் போகும்போது அவருக்கு பாதுகாவலராக இருப்பவர், ராணுவ அதிகாரி லீ சாயலில் இருப்பதைப் பார்க்கிறாள்.