இடுகைகள்

ஒவ்வாமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விளம்பர இடைவேளை - அமேஸானில் வெளியாகியுள்ள மின்னூல்கள்

படம்
 

பெண்களின் மனதைப் புரிந்துகொள்ள உதவிய எழுத்தாளர்களின் கருத்துகள்! - கடிதம் - கதிரவன்

படம்
  30.10.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. சாலையெங்கும் போக்குவரத்து நெரிசல். தி.நகரில் நல்ல கூட்டம். சூப்பர் மார்க்கெட்டிலும் கூட மக்கள் திரள் அதிகம். இன்று குங்குமம் வார இதழில் தலைமை உதவி ஆசிரியர் த.சக்திவேலைப் பார்த்தேன். வடபழனியிலுள்ள அவரது அறையில் சந்தித்தோம். ஸ்குயிட் கேம் 2 எபிசோடுகளைப் பார்த்தோம். கொரிய இயக்குநர் வெப் தொடரை உளவியல் புரிதலோடு நன்றாகவே எடுத்திருக்கிறார்.  வன்முறை அதிகம் என்பதால் பலரும் பார்க்கத் தயங்கலாம். சக்தி சாருக்கு அலுவலகத்தில் புதிதாக ஹெச்பி கணினி வாங்கித் தந்திருப்பதாக சொன்னார். கடந்த இருவாரங்களாக சனிக்கிழமை மட்டும் கூடுதலாக விடுமுறை எடுத்துவிட்டேன். ஆபீஸ் சென்று மோசமான மனிதர்களை சந்திப்பதே சலிப்பூட்டுகிறது. ஏதாவது படிக்க நினைத்தேன். நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வது முக்கியம் அல்லவா? எங்களது நாளிதழ் எட்டாம் தேதி தொடங்கும் என நினைக்கிறேன். முதல் வாரத்திற்கான வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன்.  இந்த முறை எனக்கு பக்கம் கூடியிருக்கிறது. எனவே, வேலைச்சுமையும் கூடுதல்தான். ஒவ்வா

வயிறு கெட்டுப்போனால் என்ன ஆகும் தெரியுமா?

படம்
    வயிற்றுக்குள் பாக்டீரியா! நமது வயிற்றுக்குள் பாக்டீரியா இருக்கிறது என்றால் பலரும் சிரிப்பார்கள். ஆனால் அவைதான் உணவு செரிமானத்திற்கு பெரிய உதவிகளைச் செய்கிறது. மோசமான உணவுகளால் ஏற்படும் தொற்றுகளை தடுப்பதும் அதுதான். வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை கட் பாக்டீரியா என்று அழைக்கின்றனர். இதுவே, உணவில் உள்ள மூலக்கூறுகளை சிறியதாக உடைத்து அதனை செரிமானத்திற்கு ஏற்றபடி மாற்றுகிறது. குடல் சுவர்களை பாதிக்கும் நுண்ணுயிரிகளை, புரதங்களை கழிவாக மாற்றுகிறது. இவற்றின் பணியால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகிறது. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு புரோபயோடிக் பாக்டீரியா நிறைய நன்மைகளை செய்கிறது. ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும் பொருட்களை முடிந்தளவு செரித்து பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறது. கேண்டிடா ஈஸ்ட், பூ்ஞ்சை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக எதிர்கொள்ள முடிகிறது. கேண்டிடா, கேண்டிடா அல்பிகன்ஸ் என்ற நுண்ணுயிரிகளின் பாதிப்பை ஈஸ்ட் தொற்று என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியல் போட்டால் அடுத்த அத்தியாயமே வந்துவிடும். சுருக்கமாக முக்கியமான அறிகுறிகளை மட்டும் கூறுகிறேன். ஒவ்வாமை, பத

ஒவ்வாமையோடு வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள்- பொருட்களை வாங்கும்போது கவனிங்க!

படம்
              கவனம் கொள்ளாத வேறு சில ஆபத்துகள்! தாலேட்டுகளைப் பற்றி என்னென்ன ஆபத்துகள் என்று பார்த்தோம். அது மட்டும்தானா என்றால் கிடையாது. இது மலையாளப் படம் போல, ஒரே படத்தில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் குணச்சித்திர பாத்திரத்தில் நடிப்பார்கள். அதேபோல நிறைய வேதிப்பொருட்கள் உடலை பாதிக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். அசிடோன் மூச்சுக்குழல், ரத்தம், இதயம், கல்லீரல், சிறுநீரகம், தோல், மூளை, நரம்பியல் அமைப்பு என பாகுபாடில்லாம் நிறைய உறுப்புகளை பாதிக்கிறது. இங்கு குறிப்பிட்ட உறுப்புகள் குறைவுதான். அசிடோன் உள்ளே போகும்போது, உடலிலுள்ள நிறைய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பியூடேன், ஐசோபியூடேன் எடை குறைவான திரவம்தான். ஆனால் மூளையையும், நரம்பு அமைப்புகளையும் கடுமையாக பாதிக்கிறது. உடலில் நடக்கும் வேதிவினைகளை மூளைதான் தீர்மானிக்கிறது. அதுவே சீர்குலையும்போது, உடல் தடுமாறி தளரும். திர்வ பெட்ரோலியம். ஏர் ஃப்ரெஷ்னர் வகைகளில், திரவ பெட்ரோலியத்தை அடிப்படையாக கொண்ட பொருட்களை பயன்படுத்துகிறார்கள். வண்டிக்கு போடுவதை உடலுக்குள் அனுப்பினால் உறுப்புகள் மைலேஜ் காட்டுமோ என நினைக்காதீர்கள். எல்லாம

ஒவ்வாமையை கட்டுப்படுத்துவது எப்படி? சில வழிமுறைகளை அறிவோம் - ஒவ்வாமை நூலிலிருந்து...

படம்
                ஒவ்வாமைக்கு காப்பு! என்னதான் அதிநவீன பூட்டு என்றாலும் அதனை உடைக்கும் நுட்பமான புத்தி கொண்ட திருடனும் இருப்பான்தானே? நோய்க்கும் இது பொருந்தும். என்னதான் ஒவ்வாமை நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தினாலும் மருந்தை விட உணவு மூலமே நிறைய மாற்றங்களை செய்யலாம்., சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தாலே உடல் நலமாகி தேறும். இப்போது உடல்நலம் காக்கும் சில சத்துகள், மருந்துகளைப் பார்ப்போம். கால்சியம் மெக்னீசியம் ஆகிய சத்துகள் உடலுக்கு முக்கியம். இவை தசைகளில் சேருவது அவசியம். தசைகளின் இறுக்கம், நெகிழ்வு ஆகிய இரண்டுக்கும் இந்த சத்துக்கள் தேவை. ஆஸ்துமா பாதிப்பு கொண்டவர்கள் இந்த சத்துகள் கொண்ட பொருட்களை சாப்பிடலாம். அப்படியல்லாதபோது 250 கிராம் கால்சியம், மெக்னீசியம் ஆகிய இரண்டையும் நான்கு முறை தினசரி எடுத்துக்கொண்டால் உடல் நலமாகும். இதில் ஆண்கள், பெண்களுக்கு சாப்பிடும் அளவு மாறும். எனவே மருத்துவரின் பரிந்துரை அவசியம் தேவை. ஆப்பிள், வெங்காயத்தில் உள்ள குயிர்செடின் என்ற வேதிப்பொருள்  உடலுக்கு முக்கியமானது. இது ஆன்டி ஆக்சிடன்டாக உடலில் ஒவ்வாமை பாதிப்பை கட்டுப்படுத்துகிறது. இதனை பைடோநியூட்ரியன்ட் என்று அ

ஒவ்வாமை புதிய மின்னூல் வெளியீடு - அமேஸானில் வாசிக்கலாம்

படம்
  புதிய மின்னூல் வெளியீடு ஒவ்வாமை ஒவ்வாமை என்பதை ஆங்கிலத்தில் அலர்ஜி என அழைக்கிறார்கள். இன்று, தொற்றுநோய்கள் பாதிப்பை பற்றி பலரும் பேசினாலும் கூட, அதற்கு நிகராக வளர்ந்து வரும் பிரச்னையாக நோயாக ஒவ்வாமை உள்ளது. இதனை குணப்படுத்த முடியாது. ஒவ்வாமை தரும் பொருட்களை சாப்பிடாமல், உடலுக்குள் செல்லாமல் தடுத்தால் உடல்நலம் சீர்பெறும். உண்மையில் ஒவ்வாமை என்றால் என்ன, அதை ஏற்படுத்துவது என்னென்ன பொருட்கள், நாம் வாழும் இடம், பயன்படுத்தும் பொருட்கள், உண்ணும் உணவு என்னென்ன பங்களிப்பை செய்கிறது என்பதைப் பற்றி நூல் விவரித்துள்ளது. இது சிறிய அளவிலான அறிமுக நூல்தான். ஆங்கிலத்தில் ஒவ்வாமையைப் புரிந்துகொள்ள சிகிச்சை செய்ய ஏராளமான நூல்கள் உண்டு. ஆனால் இந்த வகையில் தமிழில் இது புதிது. தமிழில் ஒவ்வாமையைப் பற்றிய எளிதாக தெரிந்துகொள்ள பாதுகாப்பாக இருக்க இந்த நூல் உதவும். நூலை அமேஸானில் வாசிக்க ஸ்கேன் செய்யுங்க.... வெப்சைட் லிங்கை கிளிக் செய்தும் வாசிக்கலாம்.... https://www.amazon.in/dp/B09TJMVW5W

அலர்ஜிக்கான மருந்துகளும், இயற்கை மருத்துவ முறையும்!

படம்
  மாஸ்ட் செல் ஸ்டேபிலைசர்ஸ்  உடலில் வீக்கத்தை குறைத்து ஹிஸ்டாமைனின் சுரப்பைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கம். மூக்கில் அதிக சளி உருவாவதை தடுக்கவே பெரும்பாலும் பயன்படுகிறது. குரோமோலின், நெடோகுரோமில், லோடோஸாமினா ஆகியவை இந்த வகையைச் சேர்ந்த மருந்துகளாகும். இவற்றை மூக்கில் இன்ஹேலர் வழியாக உறிஞ்சலாம். அல்லது கண்ணில் மருந்தாக பயன்படுத்தலாம். மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை இரண்டு வாரம் பயன்படுத்தினால் போதும். பயன்களை பார்க்க முடியும். தூக்கம், அரிப்பு, கண்களில் கண்ணீர் அதிகம் வருவது, எரிச்சல் ஆகியவை இந்த மருந்தை பயன்படுத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளாகும்.  ஆன்டிலியோகோட்ரைன்ஸ் இந்த மருந்து மூச்சுக்குழாயில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. இந்த மருந்து ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அவர்களின் நுரையீரலில் உள்ள நீர்மத்தை குறைக்கிறது. இவை மூக்கில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.  புரோன்சோடிலேட்டர்ஸ் ஒருவருக்கு மூச்சு விடுவதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க உதவுகிற மருந்து இது. இதனை காப்பாற்றும் மருந்து என்று அழைக்கின்றனர். அறிகுறி தெரிந்தவுடனே

பருவம் தாண்டியும் பால் குடிக்கும் மனிதர்கள்!

படம்
  பால் எனும் அமுதம்! மனிதர்கள் பாலூட்டி விலங்கினங்களிலேயே பால் குடிக்கும் பருவம் தாண்டியும் அதனை குடித்து வருகின்றனர். பால், தூக்கத்தை வரவைக்கும் சிறப்பு கொண்டதாகவும், பல்வேறு சத்துகள் நிரம்பியதாகவும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது பற்றி பார்ப்போம்.  பால் குடிப்பது காய்ச்சல் காலத்தில் மட்டுமல்ல, பிற நாட்களிலும் நல்லதுதான். இதிலுள்ள கால்சியம், பாஸ்பேட் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இப்போது பால் சார்ந்த பொருட்களின் மேல் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக பாலுக்கு பதிலாக வேறு பொருட்களை சாப்பிட்டு சத்துக்களை நாம் ஈடுகட்ட முடியும்.  பாலில் விட்டமின் சி, ஃபைபர், இரும்புச்சத்து ஆகியவை இல்லை. புரதம், சர்க்கரை, கொழுப்பு நிரம்பியுள்ளது. பசும்பாலில் 3.7 சதவீதம் கொழுப்பு, 3.4 சதவீதம் புரதம், 4.8 சதவீதம் லாக்டோஸ், 87.4 சதவீதம் நீர் உள்ளது.  1860ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயி பாஸ்டர், நுண்ணுயிரிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் அழித்து பொருட்களைப் பதப்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் இன்று பால் தொழிற்சாலைகள் பாலை பதப்படுத்தி விற்பனைக்கு

குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி! - பாதிப்புகளை எப்படி குறைப்பது?

படம்
இன்று குழந்தைகளுக்கு ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்கும் பழக்கம் பின்பற்றப்படுவதில்லை. கிராமம், நகரம் இரண்டிலும் அதிகரித்துள்ள பொருளாதார தேவை, குழந்தை வளர்ப்பையும் பாதித்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஆறுமாதங்களுக்கு உள்ளாக தாய்ப்பால் புகட்டுவதை தவிர்த்து திட  உணவுகளை தரத் தொடங்குகின்றனர். இதனால் குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியை பாதிக்கும் குறைபாடுகள், நோய்கள் ஏற்படுகின்றன. இதில் முக்கியமானது ஒவ்வாமை. இன்று பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் காரணமாக ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னை குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. எக்சிமா என்பது இதில் முக்கியமான பாதிப்பு. இதனை குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஆங்கில மருத்துவமுறையில் ஆயின்மென்டுகள் மூலம் தீர்ப்பதாக கூறினாலும், அது இருக்கின்ற இடத்தில் அதனை உள்ளே அழுத்தி மறைப்பதே.. ஒவ்வாமை ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக இருப்பவை பால் பொருட்கள், வேர்க்கடலை, பாதாம் பருப்பு உள்ளிட்டவை. இவற்றை நேரடியாக எடுத்துக்கொண்டாலும் அல்லது உணவின் பகுதிப் பொருட்களாக இருந்தாலும் ஒவ்வாமை பாதிப்