இடுகைகள்

பணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிடித்த விஷயம் பின்னாளில் தொழிலாக மாறியது!

படம்
  அன்பரசு சண்முகம் மொழிபெயர்ப்பாளர் பிழைப்புக்கான தொழில்! மொழிபெயர்ப்பை பாடமாக பயின்றீர்களா? அப்படி பயின்றிருந்தாலும் சிறப்புதான். எனக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பு, தமிழாக்கம் ஆகியவற்றை நான் சுயமாக கற்றவன். தாளில் எழுதி அதில் உள்ள தவறுகளைக் கண்டுபிடித்து மீண்டும் அத்தவறு நடக்காமல் பார்த்துக்கொண்டுதான் மின்னூல்களை எழுதி வருகிறேன். சுயமாக மொழிபெயர்ப்பை கற்கும் முயற்சியில் வெளியில் இருந்தும் சிலர் உதவி புரிந்தனர். என்னுடைய மொழிபெயர்ப்புகள் புனைவல்ல(சிறுகதை, கவிதை, நாவல்). கட்டுரைகள் சார்ந்தது. அபுனைவு. அதுவே பின்னாளில் பிழைப்புக்கான தொழிலானது. இது பலமா, பலவீனமா என்றால் இரண்டுமே உள்ளது.  இதற்கான தொடக்கம் எது? நெ.2 இதழான குமுதம் வார இதழ்தான். இளமை புதுமை முதன்மை என ஏகத்துக்கும் புதுமை செய்யும் இதழ் இன்றைக்கு வாராவாரம் பக்க எண்களை மட்டும் மாற்றிப்போடும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால், அன்றைக்கு வார இதழ் தனது கதைகள், சிறுகதைகள், பேட்டி என அனைத்திலும் அவர்களின் கேப்ஷனுக்கு ஏற்றாற்போலவே புதுமையாக இருந்தது.  குமுதம் இதழின் அட்டையைப் பார்த்த...

பத்திரிகையாளர் த சக்திவேல் - மன அழுத்தம் குறைத்த மனிதர்

 பத்திரிகையாளர் த சக்திவேல் - மன அழுத்தம் குறைத்த மனிதர் சக்திவேல் அவர்களை நான் அடிமாட்டு சம்பளம் வாங்கிக்கொண்டு நாளிதழ் குழுமத்தில் பணியாற்றும்போது சந்தித்தேன். பொதுவாகவே அந்த நிறுவனத்தில் கலாசாரம் என்னவெனில், வெளி ஊடகம் என்றால் வரவேற்பு, விருந்து சாப்பாடு என மரியாதை அமோகமாக இருக்கும். புதிதாக வருபவர்கள் என்றால் ச்சீ, தூ போ அங்கே உட்கார் என்பார்கள். இப்படியான கலாசாரத்திற்கு அங்கு வேலை செய்தவர்களும் முக்கிய காரணம். பலரும் நிறுவன அடிமைகள். அதாவது நாளிதழ் குழுமம் ஆதரித்த கட்சிக்கு விசுவாசமாக இருந்து பயனை அனுபவிக்க துடித்த கூட்டம். பக்க வடிவமைப்பாளர்கள் பலரும் கல்வி அறிவற்றவர்கள். தேநீர், காபி கொடுக்கும் பணியாளர்களாக இருந்து வடிவமைப்பாளர்களாக மாறியவர்கள். தொழில் இப்படி மேம்பட்டாலும் அவர்களின் குணம் என்பது தெருவோரத்தில் நின்று சண்டைபோடும் ஆட்களைப் போலத்தான் இருக்கும். படித்தவர்கள், நாகரிகமானவர்கள் என யாரை அடையாளம் கண்டாலும் தாழ்வுணர்ச்சியில் வெந்துபோவார்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மரியாதைக் குறைவாக பேசுவார்கள்.  அவதூறு, வதந்தி பரப்புவார்கள். முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள்...

வேலைவாய்ப்பு பற்றி மாற்றி யோசிக்கவேண்டிய நேரமிது!

படம்
  எம்ப்ளாய்மென்ட் இஸ் டெட் ஜோஸ் டிரியன், டெபோரா பெர்ரி பிசியன் ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ பிரஸ் இன்றைய காலத்தில் வேலைவாய்ப்பு சந்தை எப்படி இணையம் சார்ந்ததாக மாறியுள்ளது. அதற்கேற்ப ஒருவர் தன்னை மாற்றிக்கொள்வது, மேம்படுத்திக்கொள்வது எப்படி என இந்நூல் விளக்குகிறது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் வாழ்கிறோம். ஏறத்தாழ அனைத்து டெக் நிறுவனங்களிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணியாளர்கள் நீக்கப்பட்டுக்கொண்டு வருகிறார்கள். மைக்ரோசாப்டில் அண்மையில் ஆறாயிரம் பேர் பணிவிலக்கப்பட்டனர். ஏனெனில் அங்கு கோடிங்குகளில் முப்பது சதவீதத்தை செயற்கை நுண்ணறிவு எழுதுகிறது. பணியாளர்களுக்கான தேவை குறைந்து வருகிறது. ஒருவர் வேலையில் தாக்குப்பிடிக்க வேண்டுமென்றால் வாழ்நாள் முழுக்க கற்க வேண்டிய தேவை உள்ளது. படிப்பு என்பது பள்ளி, கல்லூரியோடு முடிவதில்லை. தொடர்ச்சியாக எந்த வேலை செய்தாலும் மென்மேலும் இணைய படிப்புகள், பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டய படிப்புகளை படித்து தன்னை மேம்படுத்தி்க்கொண்டே இருப்பவர் எப்படியும் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை நூல் விளக்கமாக எடுத்து கூறுகிறது. சாதாரண வாசகர் படிப்பதை விட இணையம் சார்ந்த க...

ஏஐயைப் பயன்படுத்தி வேலையில் சாதிக்கலாம்!

படம்
  இருப்பதிலேயே குறைந்த கூலிக்கு ஆட்களை வேலைக்கு எடுத்து செக்குமாடு போல வேலைவாங்கும் நாளிதழ் நிறுவனம், சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது. அந்த நிறுவனத்திற்கு வேலைக்கு போவது உங்கள் விதியாக இருந்தாலும் ஏஐ பற்றி அறிந்து கொள்வது நல்லது. தெரிந்துகொண்டால் அங்கிருந்து தப்பி நல்ல நிறுவனத்திற்கு வேலைக்குப் போகலாம். உலகம் முழுக்க 300 மில்லியன் வேலைவாய்ப்புகள் ஏஐ மூலம் பாதிக்கப்படவிருக்கின்றன என மெக்கின்சி ஆய்வு நிறுவனம் தகவல் கூறியுள்ளது. இதற்காக வருத்தப்படவேண்டியதில்லை. நீங்கள் எந்த வேலை செய்தாலும் ஏஐ பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றுக்கொண்டால் நல்லது.  டெக் கம்பெனி அல்லாத நிறுவனத்திற்கு சென்றால் கூட ஏஐ பற்றிய அறிவை பணியாளர் கொண்டிருப்பதை வேலைக்கு எடுப்பவர்கள் விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் உதவும் என அவர் நினைக்கலாம். வடிவமைப்பாளராக இருப்பவர்கள், சாட்ஜிபிடி, டால் இ ஆகிய மாடல்களை கற்பது அவர்களின் கிரியேட்டிவிட்டியை உயரே கொண்டு செல்லும். மொத்த வித்தையையும் டிசைனில் இறக்கியிருக்கேன் என காலரை தூக்கிவிட்டுக்கொண்டு முதலாளியிடம் பெருமை பீற்றிக்கொள்ளலாம். உலகளவில் அடிப்படையான ஏஐ பற்றிய படிப்புகள் க...

ஏஐ காரணமாக பிங்க் சிலிப் வாங்கப்போகும் தொழிலாளர்கள்! - முக்கிய தொழில்துறைகள்

படம்
  ஏஐ மூலம் பாதிக்கப்படும் தொழில்துறைகள்  கூகுள், ஏஐ ஆராய்ச்சியில் அதிக காலம் இருந்தாலும் கூட அதை வருமானத்திற்குரிய பொருளாக மாற்றத் தவறிவிட்டது. அந்த தவறை ஓப்பன் ஏஐ செய்யவில்லை. அதனால்தான் எழுத்து, புகைப்படம், வீடியோ என பல்வேறு பொருட்களை சந்தைப்படுத்தி முன்னேறி சென்றுகொண்டிருக்கிறது.  ஏஐ மூலம் நிறைய விஷயங்களை செய்துகொள்ளலாம் சிட்டி வங்கி, ஜே பி மோர்கன் ஆகிய நிறுவனங்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டன. அவற்றுடன் ஒப்பந்தமிட்டு வேலைகளிலும் பயன்படுத்தி வருகின்றன. ஒரேவிதமான வேலையை செய்பவர்களுக்குத்தான் வேலை போகுமே தவிர கிரியேட்டிவிட்டியாக வேலைபார்ப்பவர்களுக்கு ஏஐயால் பாதிப்பு நேராது என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார். முதுகலைப் பட்டம் பெற்றவர்களின், முனைவர் பட்டம் பெற்றவர்களின் வேலைகள் 57 சதவீதம் ஏஐயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஒற்றை டிகிரி வாங்கி கல்யாணப்பத்திரிகையில் போட்டு சந்தோஷப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு அறுபது சதவீதம் பாதிக்கப்படலாம். இதையெல்லாம் இந்திய அரசின் புள்ளிவிவரத்துறை கூறினால் சந்தேகப்படலாம். ஆனால், மெக்கின்சி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. போலிச்செய்தியல்ல உண்ம...

உதவிக்கொள்வதால் உறவு நீடிக்கிறது! - காந்திராமன் கடிதங்கள்

படம்
  நரசிங்கபுரம் 9.10.2022   அன்புள்ள அன்பரசு சார் அவர்களுக்கு வணக்கம். நான் நலமாக இருக்கிறேன். நீங்களும் புத்தகம் சகிதமாக நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இது நான் எழுதும் முதல் கடிதம். தவறு இருந்தால் மன்னிக்கவும். போகப் போக பிழைகளைக் களைய முயல்கிறேன். நம்பிக்கை உள்ளது. முந்தைய வாரம் சென்ற டூர் அனுபவம் சிறப்பாக இருந்தது. அண்ணன், அவரது நண்பர் என ஐந்துபேர் சென்றோம். குற்றாலம், திருநெல்வேலி, நெல்லையப்பர் சுவாமி, திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகிய இடங்களைப் பார்த்தோம். இது எனக்கு வெளியில் அதிக தொலைவு சென்ற முதல் அனுபவம். மாணவர் இதழ் பற்றி பேச ஒன்றும் இல்லை. பீட்டர் அண்ணன் விலகுகிறார். போனமுறை போட்ட போனஸை விட இந்தமுறை அனைவருக்கும் குறைவாகவே வந்துள்ளது. எடிட்டரிடம் முறையிட்டோம். பலனில்லை. இதுபற்றிப் பேசும்போது எடிட்டரைப் பார்த்தால் எனக்கே நம்பிக்கை வரவில்லை.   எழுதிய எழுத்தாளர்களுக்கு இன்னும் காசு போடவில்லை. சிக்கல் நீண்டுகொண்டே இருக்கிறது. எடிட்டர், பீட்டர் அண்ணனுக்கு பதிலாக நாமக்காரர் ஒருவரை அழைத்து வந்திருக்கிறார். அவரை உதவி ஆசிரியராக தேர்வு செய்திருக்கிறார்கள் ...

ஆன்லைன் சேவை நிறுவனங்களோடு சண்டையிடும் சங்கத்தலைவர் - ஷேக் சலாலுதீன்

படம்
  ஷேக் சலாலுதீன் இந்திய ஒற்றுமை பயணத்தில்... ஆன்லைன் சேவை நிறுவனஙளோடு சண்டையிடும்   சங்கத்தலைவர் - ஷேக் சலாலுதீன் பொதுநல விஷயங்களில் உழைக்கும் மனிதர்கள் முதலில் இழப்பது தங்கள் மனநிம்மதியைத்தான் என்று சொன்னவர் பெரியார். அவர் சொன்ன வார்த்தைகள் எதுவும் மாறவில்லை. சலாலுதீன் மீது பெருநிறுவனங்கள் 42 வழக்குகளைத் தொடுத்துள்ளன. வாரத்திற்கு மூன்று நாட்கள்,   வழக்குகளை சந்திக்கவென ஒதுக்கி உழைத்து வருகிறார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக்   சலாலுதீன். எதற்கு அவர் மீது 42 வழக்குகள். அதுவும் பெருநிறுவனங்கள் வழக்கு தொடுத்துள்ளன. எதற்கு என்று   நினைக்கிறீர்கள்? சலாலுதீன் ஆன்லைன் வாகன சேவை மற்றும் உணவு சேவை நிறுவனங்களுக்கான தொழிலாளர் சங்கத்தை நடத்தி வருகிறார். ஊழியர்களை ஒன்று கூட்டி அவர்களின் உரிமைகளைக் கேட்டு வேலை நிறுத்தம் செய்த காரணத்திற்காகத்தான் அவர் மீது நீதிமன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உளவியல்ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டது.   அண்மையில்தான் சலாலுதீன், பிறந்து பதினெட்டு மாதமான மகள் ஜைனப் பேகத்தின் ஹகீக்கா விருந்து விழாவை நடத்தினார். கூட்டு குடும்பமாக வசித்து...

புத்தாண்டு பரிசாக நகுலன் சிறுகதைகள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  22.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமா? ஜனவரி 3 அன்று நாளிதழ் தொடங்கப்போவதாக எடிட்டர் சொன்னார். புதிய பகுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் கவனம் கொடுத்து பல்வேறு இதழ்களைப் படித்து வருகிறேன். பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படுவதற்கு ஆதரவு எதிர்ப்பு என இருவகை தரப்பு உருவாகியிருக்கிறது. ஆதரவை விட எதிர்ப்புகள் அதிகம் உருவாகியிருக்கிறது. பெண்களின் மேம்பாடும், கல்வி அறிவும் மேம்படுவதுதான் சட்டத்தின் நோக்கம் என்று சொல்லியிருக்கிறது. இடதுசாரிகள், வலது சாரி அரசு பெண்களின் திருமண வயது 21 என உயர்த்துவது அவர்களை சாதி மறுப்பு திருமணம் செய்வதிலிருந்து தடுக்க உதவும் என வாதிடுகின்றனர்.  பெண்களை சட்டத்தின் பிடியில் வைத்து, அவள் காதல் திருமணம் செய்வதை எளிதாக தடுக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது. எனக்கு பாஜக தனது சுயநலம் தவிர வேறெதையும் நாட்டுக்காக எதையும் பிடுங்கிக் கூட போடவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவர்களது கட்சியை கருத்தியலை வளர்க்க இத்தகைய சட்டங்கள் உதவும் என நினைக்கிறேன். நன்றி! அன்பரசு  27.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, ...

கிராம மக்களுக்கு சுகாதாரமான நீர் தேவை - நீதா படேல்

படம்
  சுகாதாரமான நீருக்காக போராடும் பெண் செயல்பாட்டாளர்! இந்தியாவில் நீரைப் பாதுகாக்கும் பல்வேறு தொன்மையான முறைகள்  உண்டு. தற்போது குடிநீர் பற்றாக்குறை தீவிரமாக எழத் தொடங்க, தொன்மையான நீர் சேகரிப்பு முறைகள் நடைமுறைக்கு வரத்தொடங்கியுள்ளன. இவற்றை பிரசாரம் செய்பவர்களில் ஒருவர்தான், குஜராத்தைச் சேர்ந்த நீதா படேல்.  குஜராத்தில் பழங்குடிகள் வாழும் மாவட்டங்களாக டங் (Dang), நர்மதா (Narmada), பாருச்  (Bharuch)ஆகியவை கடுமையான நீர்பஞ்ச பாதிப்பு கொண்டவை. இந்த மாவட்டங்கள் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவை. இங்கு, நீர்  மேம்பாட்டு பணிகளுக்காக  நீதா படேல் 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். இதன் விளைவாக, பழங்குடி மாவட்டங்களிலுள்ள 51 கிராமங்களில் வாழும் 30 ஆயிரம் மக்களின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளது.  பழங்குடி கிராமங்களில், மக்களின் ஆதரவுடன் குடிநீருக்கான கைபம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  தினசரி 90 கி.மீ. தொலைவுக்கு பயணித்து, பல்வேறு கிராமங்களுக்கு நீதா சென்றுவருகிறார். அங்குள்ள பெண்களுக்கு நீர் சேமிப்பு பற்றி பிரசாரம் செய்கிறார். இதுபற்றி பஞ்சாயத்துகளில...

பாத்திமா ராணியின் திகைப்பூட்டும் அஞ்சல் பயணம்!

படம்
  பாத்திமா ராணி, தினசரி தபால்களை கொண்டு சேர்க்க காட்டு வழியே சென்று கொண்டிருக்கிறார். இவர் கோதையூர் மேல்திங்கள் பகுதி போஸ்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். அங்குள்ள புனல் மின்சார நிலையத்திலுள்ளவர்களுக்கு வரும் தபால்களை காட்டைத் தாண்டி சென்று கொடுத்து வருகிறார். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் இவர் கடந்து செல்லும் காட்டில் உள்ளது.  இவர் தனது பணியை செய்யும்போது எதிரில் சிறுத்தை, காட்டெருமை, யானை, காட்டுப்பன்றி ஆகியவை எதிர்ப்படுவது சகஜமானது. மழைப்பொழிவு அதிகம் என்பதால், பனி சூழ்ந்த சூழலில் வழியே தெரியாதபோது அங்குள்ள விலங்குகளை எப்படி அடையாளம் காண்பது என பலருக்கும் திகைப்பாக இருக்கும். அதையும் புனல் நிலைய மக்களே உதவி செய்து வழிகாட்டி வருகின்றனர். அவர்களது அறிவுரை மூலம் யானை ஒரு இடத்தில் இருக்கிறதா என அடையாளம் கண்டு கொண்டுகொள்கிறார் ராணி.  ஒருசமயம் இப்படி செல்லும்போது, புலிக்குட்டி ஒன்று வழியில் விளையாடிக்கொண்டிருக்க, அருகில் தாய்ப்புலி இருப்பதை ராணி உணர்ந்தார். எனவே, மரத்தின் அருகில் சென்று அரைமணி நேரம் காத்திருந்துவிட்டு பிறகே தனது வேலையை தொடர்ந்திருக்கிறார். இல்லையெனில் தாய்...

உடலிலுள்ள செல்கள், உறுப்புகள், எலும்புகளின் பணி என்ன?

படம்
              உடலிலுள்ள செல்கள் , உறுப்புகள் , கட்டமைப்பு ஆகியவை உடலின் இயக்கம் தடையற நடைபெற உதவுகின்றன . திசுக்கள் செல்கள் இணைந்து பல்வேறு வித திசுக்களை உருவாக்குகின்றன . நமது குடல் பகுதி , நான்கு வகை திசுக்களால் உருவானது . இதில் செரிக்கப்பட்ட உணவு தவிர்த்த கழிவுகளை குடலுக்குள் தள்ளும் தசைகளும் உள்ளடங்கும் . உடலிலுள்ள செல்கள் அனைத்தும் விதவிதான அமைப்பைக் கொண்டவை . அவற்றின் செயல்பாடும் இதுபோலவே மாறுபடும் . குடலிலுள்ள சில வகை செல்கள் உணவிலுள்ள சத்துக்களை உறிஞ்சுகின்றன . உடலிலுள்ள அனைத்து பாகங்களின் உருவாக்கத்திலும் செல்களின் பங்குண்டு . அதிக எண்ணிக்கையிலான செல்கள் இணைந்துதான் திசு உருவாகிறது . திசுக்கள் ஒட்டுமொத்த உருவம்தான் உறுப்புகள் . உறுப்புகள் உடலின் செயல்பாடுகள் நடைபெற உதவுகின்றன . நரம்பு செல்கள் ஒன்றாக இணைந்திருப்பதால் முக்கியமான சமிக்ஞைகளை உடலெங்கும் கடத்துகின்றன . இவை மூளைக்கு அனுப்பப்படுகின்றன . தசை செல்கள் உடலின் தசைகளை இறுக்கமாக்கி அதனை சுருக்குகின்றன . கால் மற்றும் கைகளின் தசைகளை நீட்டி நெகிழ்த்தவும் உத...

கமலா ஹாரிஸ் மூலம் இந்தியர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்! - மஜூ வர்க்கீஸ், ஜோபிடன் தேர்தல் பிரசார அதிகாரி

படம்
          மஜூ வர்கீஸ் ஜோ பைடன் அரசியல் கூட்டத்திற்கான செயல்பாட்டு அதிகாரி நீங்கள் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் உடன் தேர்தல் பிரசாரத்தில் முதல் நாள் தொடங்கி கூடவே இருக்கிறீர்கள்? பிப்ரவரி 2020 அன்று நாங்கள் ஐயோவா, நியூ ஹாம்ஸையர், அலபாமா ஆகிய இடங்களில் கூட்டங்களை நடத்தினோம். மிக கடினமான நாட்கள் அவை. மெல்ல நாங்கள் இதில் தேர்ந்து வருகிறோம். எங்களிடம் மிகச்சிறிய குழு உள்ளது. குறைவான வளங்கள்தான் உள்ளது. நாங்கள் பராக் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோருடன் பணியாற்றியுள்ளோம். ஜோவின் அனுபவங்கள், பிறருக்காக யோசித்து செயல்படும் தன்மை ஆகியவை முக்கியமாக என்னை ஈர்த்தவை. கோவிட் -19 நோய்த்தொற்றால் இறந்தவர்களுக்கு நாம் இரங்குதலை செலுத்த வேண்டும். இந்திய அமெரிக்கராக செனட்டர் கமலா ஹாரிசை துணை அதிபராக நீங்கள் நிறுத்தியுள்ளீர்கள். இந்த தேர்வு சரியா? அது முக்கியமானதுதான். எங்களுக்கு ஏராளமான இமெயில்கள், போன் அழைப்புகள் இதுதொடர்பாக வந்துள்ளன.  இந்தியர்கள் கமலா ஹாரிசுடன் தங்களை இணைத்துக்கொள்வது எளிதானது. அவர் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படம், இந்தியர்களின் வாழ்க்கையை உணர்த்துகிறது. அரசில் இந்திய...