இடுகைகள்

பணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உதவிக்கொள்வதால் உறவு நீடிக்கிறது! - காந்திராமன் கடிதங்கள்

படம்
  நரசிங்கபுரம் 9.10.2022   அன்புள்ள அன்பரசு சார் அவர்களுக்கு வணக்கம். நான் நலமாக இருக்கிறேன். நீங்களும் புத்தகம் சகிதமாக நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இது நான் எழுதும் முதல் கடிதம். தவறு இருந்தால் மன்னிக்கவும். போகப் போக பிழைகளைக் களைய முயல்கிறேன். நம்பிக்கை உள்ளது. முந்தைய வாரம் சென்ற டூர் அனுபவம் சிறப்பாக இருந்தது. அண்ணன், அவரது நண்பர் என ஐந்துபேர் சென்றோம். குற்றாலம், திருநெல்வேலி, நெல்லையப்பர் சுவாமி, திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகிய இடங்களைப் பார்த்தோம். இது எனக்கு வெளியில் அதிக தொலைவு சென்ற முதல் அனுபவம். மாணவர் இதழ் பற்றி பேச ஒன்றும் இல்லை. பீட்டர் அண்ணன் விலகுகிறார். போனமுறை போட்ட போனஸை விட இந்தமுறை அனைவருக்கும் குறைவாகவே வந்துள்ளது. எடிட்டரிடம் முறையிட்டோம். பலனில்லை. இதுபற்றிப் பேசும்போது எடிட்டரைப் பார்த்தால் எனக்கே நம்பிக்கை வரவில்லை.   எழுதிய எழுத்தாளர்களுக்கு இன்னும் காசு போடவில்லை. சிக்கல் நீண்டுகொண்டே இருக்கிறது. எடிட்டர், பீட்டர் அண்ணனுக்கு பதிலாக நாமக்காரர் ஒருவரை அழைத்து வந்திருக்கிறார். அவரை உதவி ஆசிரியராக தேர்வு செய்திருக்கிறார்கள் என நினைக்கிறேன

ஆன்லைன் சேவை நிறுவனங்களோடு சண்டையிடும் சங்கத்தலைவர் - ஷேக் சலாலுதீன்

படம்
  ஷேக் சலாலுதீன் இந்திய ஒற்றுமை பயணத்தில்... ஆன்லைன் சேவை நிறுவனஙளோடு சண்டையிடும்   சங்கத்தலைவர் - ஷேக் சலாலுதீன் பொதுநல விஷயங்களில் உழைக்கும் மனிதர்கள் முதலில் இழப்பது தங்கள் மனநிம்மதியைத்தான் என்று சொன்னவர் பெரியார். அவர் சொன்ன வார்த்தைகள் எதுவும் மாறவில்லை. சலாலுதீன் மீது பெருநிறுவனங்கள் 42 வழக்குகளைத் தொடுத்துள்ளன. வாரத்திற்கு மூன்று நாட்கள்,   வழக்குகளை சந்திக்கவென ஒதுக்கி உழைத்து வருகிறார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக்   சலாலுதீன். எதற்கு அவர் மீது 42 வழக்குகள். அதுவும் பெருநிறுவனங்கள் வழக்கு தொடுத்துள்ளன. எதற்கு என்று   நினைக்கிறீர்கள்? சலாலுதீன் ஆன்லைன் வாகன சேவை மற்றும் உணவு சேவை நிறுவனங்களுக்கான தொழிலாளர் சங்கத்தை நடத்தி வருகிறார். ஊழியர்களை ஒன்று கூட்டி அவர்களின் உரிமைகளைக் கேட்டு வேலை நிறுத்தம் செய்த காரணத்திற்காகத்தான் அவர் மீது நீதிமன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உளவியல்ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டது.   அண்மையில்தான் சலாலுதீன், பிறந்து பதினெட்டு மாதமான மகள் ஜைனப் பேகத்தின் ஹகீக்கா விருந்து விழாவை நடத்தினார். கூட்டு குடும்பமாக வசித்து வருகிறவர், ஓலா கார் ஓட்டுநரு

புத்தாண்டு பரிசாக நகுலன் சிறுகதைகள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  22.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமா? ஜனவரி 3 அன்று நாளிதழ் தொடங்கப்போவதாக எடிட்டர் சொன்னார். புதிய பகுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் கவனம் கொடுத்து பல்வேறு இதழ்களைப் படித்து வருகிறேன். பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படுவதற்கு ஆதரவு எதிர்ப்பு என இருவகை தரப்பு உருவாகியிருக்கிறது. ஆதரவை விட எதிர்ப்புகள் அதிகம் உருவாகியிருக்கிறது. பெண்களின் மேம்பாடும், கல்வி அறிவும் மேம்படுவதுதான் சட்டத்தின் நோக்கம் என்று சொல்லியிருக்கிறது. இடதுசாரிகள், வலது சாரி அரசு பெண்களின் திருமண வயது 21 என உயர்த்துவது அவர்களை சாதி மறுப்பு திருமணம் செய்வதிலிருந்து தடுக்க உதவும் என வாதிடுகின்றனர்.  பெண்களை சட்டத்தின் பிடியில் வைத்து, அவள் காதல் திருமணம் செய்வதை எளிதாக தடுக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது. எனக்கு பாஜக தனது சுயநலம் தவிர வேறெதையும் நாட்டுக்காக எதையும் பிடுங்கிக் கூட போடவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவர்களது கட்சியை கருத்தியலை வளர்க்க இத்தகைய சட்டங்கள் உதவும் என நினைக்கிறேன். நன்றி! அன்பரசு  27.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  முஸ்லீம்

கிராம மக்களுக்கு சுகாதாரமான நீர் தேவை - நீதா படேல்

படம்
  சுகாதாரமான நீருக்காக போராடும் பெண் செயல்பாட்டாளர்! இந்தியாவில் நீரைப் பாதுகாக்கும் பல்வேறு தொன்மையான முறைகள்  உண்டு. தற்போது குடிநீர் பற்றாக்குறை தீவிரமாக எழத் தொடங்க, தொன்மையான நீர் சேகரிப்பு முறைகள் நடைமுறைக்கு வரத்தொடங்கியுள்ளன. இவற்றை பிரசாரம் செய்பவர்களில் ஒருவர்தான், குஜராத்தைச் சேர்ந்த நீதா படேல்.  குஜராத்தில் பழங்குடிகள் வாழும் மாவட்டங்களாக டங் (Dang), நர்மதா (Narmada), பாருச்  (Bharuch)ஆகியவை கடுமையான நீர்பஞ்ச பாதிப்பு கொண்டவை. இந்த மாவட்டங்கள் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவை. இங்கு, நீர்  மேம்பாட்டு பணிகளுக்காக  நீதா படேல் 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். இதன் விளைவாக, பழங்குடி மாவட்டங்களிலுள்ள 51 கிராமங்களில் வாழும் 30 ஆயிரம் மக்களின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளது.  பழங்குடி கிராமங்களில், மக்களின் ஆதரவுடன் குடிநீருக்கான கைபம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  தினசரி 90 கி.மீ. தொலைவுக்கு பயணித்து, பல்வேறு கிராமங்களுக்கு நீதா சென்றுவருகிறார். அங்குள்ள பெண்களுக்கு நீர் சேமிப்பு பற்றி பிரசாரம் செய்கிறார். இதுபற்றி பஞ்சாயத்துகளில்,  பேசும்படி கோரி வருகிறார். இதன்மூலம்

பாத்திமா ராணியின் திகைப்பூட்டும் அஞ்சல் பயணம்!

படம்
  பாத்திமா ராணி, தினசரி தபால்களை கொண்டு சேர்க்க காட்டு வழியே சென்று கொண்டிருக்கிறார். இவர் கோதையூர் மேல்திங்கள் பகுதி போஸ்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். அங்குள்ள புனல் மின்சார நிலையத்திலுள்ளவர்களுக்கு வரும் தபால்களை காட்டைத் தாண்டி சென்று கொடுத்து வருகிறார். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் இவர் கடந்து செல்லும் காட்டில் உள்ளது.  இவர் தனது பணியை செய்யும்போது எதிரில் சிறுத்தை, காட்டெருமை, யானை, காட்டுப்பன்றி ஆகியவை எதிர்ப்படுவது சகஜமானது. மழைப்பொழிவு அதிகம் என்பதால், பனி சூழ்ந்த சூழலில் வழியே தெரியாதபோது அங்குள்ள விலங்குகளை எப்படி அடையாளம் காண்பது என பலருக்கும் திகைப்பாக இருக்கும். அதையும் புனல் நிலைய மக்களே உதவி செய்து வழிகாட்டி வருகின்றனர். அவர்களது அறிவுரை மூலம் யானை ஒரு இடத்தில் இருக்கிறதா என அடையாளம் கண்டு கொண்டுகொள்கிறார் ராணி.  ஒருசமயம் இப்படி செல்லும்போது, புலிக்குட்டி ஒன்று வழியில் விளையாடிக்கொண்டிருக்க, அருகில் தாய்ப்புலி இருப்பதை ராணி உணர்ந்தார். எனவே, மரத்தின் அருகில் சென்று அரைமணி நேரம் காத்திருந்துவிட்டு பிறகே தனது வேலையை தொடர்ந்திருக்கிறார். இல்லையெனில் தாய்ப்புலியின் தாக

உடலிலுள்ள செல்கள், உறுப்புகள், எலும்புகளின் பணி என்ன?

படம்
              உடலிலுள்ள செல்கள் , உறுப்புகள் , கட்டமைப்பு ஆகியவை உடலின் இயக்கம் தடையற நடைபெற உதவுகின்றன . திசுக்கள் செல்கள் இணைந்து பல்வேறு வித திசுக்களை உருவாக்குகின்றன . நமது குடல் பகுதி , நான்கு வகை திசுக்களால் உருவானது . இதில் செரிக்கப்பட்ட உணவு தவிர்த்த கழிவுகளை குடலுக்குள் தள்ளும் தசைகளும் உள்ளடங்கும் . உடலிலுள்ள செல்கள் அனைத்தும் விதவிதான அமைப்பைக் கொண்டவை . அவற்றின் செயல்பாடும் இதுபோலவே மாறுபடும் . குடலிலுள்ள சில வகை செல்கள் உணவிலுள்ள சத்துக்களை உறிஞ்சுகின்றன . உடலிலுள்ள அனைத்து பாகங்களின் உருவாக்கத்திலும் செல்களின் பங்குண்டு . அதிக எண்ணிக்கையிலான செல்கள் இணைந்துதான் திசு உருவாகிறது . திசுக்கள் ஒட்டுமொத்த உருவம்தான் உறுப்புகள் . உறுப்புகள் உடலின் செயல்பாடுகள் நடைபெற உதவுகின்றன . நரம்பு செல்கள் ஒன்றாக இணைந்திருப்பதால் முக்கியமான சமிக்ஞைகளை உடலெங்கும் கடத்துகின்றன . இவை மூளைக்கு அனுப்பப்படுகின்றன . தசை செல்கள் உடலின் தசைகளை இறுக்கமாக்கி அதனை சுருக்குகின்றன . கால் மற்றும் கைகளின் தசைகளை நீட்டி நெகிழ்த்தவும் உதவுபவரை தசை செல்கள்தான் . உடல்

கமலா ஹாரிஸ் மூலம் இந்தியர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்! - மஜூ வர்க்கீஸ், ஜோபிடன் தேர்தல் பிரசார அதிகாரி

படம்
          மஜூ வர்கீஸ் ஜோ பைடன் அரசியல் கூட்டத்திற்கான செயல்பாட்டு அதிகாரி நீங்கள் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் உடன் தேர்தல் பிரசாரத்தில் முதல் நாள் தொடங்கி கூடவே இருக்கிறீர்கள்? பிப்ரவரி 2020 அன்று நாங்கள் ஐயோவா, நியூ ஹாம்ஸையர், அலபாமா ஆகிய இடங்களில் கூட்டங்களை நடத்தினோம். மிக கடினமான நாட்கள் அவை. மெல்ல நாங்கள் இதில் தேர்ந்து வருகிறோம். எங்களிடம் மிகச்சிறிய குழு உள்ளது. குறைவான வளங்கள்தான் உள்ளது. நாங்கள் பராக் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோருடன் பணியாற்றியுள்ளோம். ஜோவின் அனுபவங்கள், பிறருக்காக யோசித்து செயல்படும் தன்மை ஆகியவை முக்கியமாக என்னை ஈர்த்தவை. கோவிட் -19 நோய்த்தொற்றால் இறந்தவர்களுக்கு நாம் இரங்குதலை செலுத்த வேண்டும். இந்திய அமெரிக்கராக செனட்டர் கமலா ஹாரிசை துணை அதிபராக நீங்கள் நிறுத்தியுள்ளீர்கள். இந்த தேர்வு சரியா? அது முக்கியமானதுதான். எங்களுக்கு ஏராளமான இமெயில்கள், போன் அழைப்புகள் இதுதொடர்பாக வந்துள்ளன.  இந்தியர்கள் கமலா ஹாரிசுடன் தங்களை இணைத்துக்கொள்வது எளிதானது. அவர் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படம், இந்தியர்களின் வாழ்க்கையை உணர்த்துகிறது. அரசில் இந்தியர்கள் மருத்துவர்களாகவோ, பொறிய

2020 இல் விரும்பப்படும் புதிய வேலை வாய்ப்புகள்!

படம்
giphy 2019இல் உற்பத்தி துறை சரிவைச் சந்தித்தது. சேவைத்துறை வளர்ச்சி பெற்றது. இதன் விளைவாக, வேலைவாய்ப்புகள் இல்லாத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. பின்னர், உள்நாட்டு உற்பத்தி குறைந்து பங்குச்சந்தை வீழ்ந்து நாடு 1960 காலகட்ட இந்தியாவாக மாறியது. அதற்கு பல்வேறு சமாதானங்கள் மனதின் குரல் தொடங்கி பேசினாலும் இந்து ராஷ்டிர பணிகள் காரணமாக தொழில் முதலீடுகள் இந்தியாவுக்கு வரவில்லை. அரசும் பொருளாத வளர்ச்சி தவிர்த்த பிற காரியங்களில் அதிக ஈடுபாடு காட்டியது. தற்போதைய பாஜக அரசு, ஒரு தேர்தலை வென்றவுடன் அடுத்த தேர்தலில் ஜெயிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறதே தவிர உருப்படியான எந்த திட்டங்களையும் கொண்டு வர நினைக்கவில்லை. உலகளவில் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய பட்டியல் இது. இவை இந்தியாவில் உருவாகுமா என்று கேட்டால் யாமறியேன் பராபரமே... டேட்டா சயின்டிஸ்ட் - இயந்திர வழிக் கற்றல் அது தொடர்பான அப்ளிகேஷன்களை உருவாக்கும் பணி. ஏஐஆப்ஸ் - AIOps தகவல் தொடர்புக்கான செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தல் தொடர்பான பணிகளை செய்வது. பல்வேறு அமைப்புகளிலுள்ள பிக் டேட்டா விஷயங்களை ஆராய்ந்து பெறுவது. டேவ்ஆ

ஸ்டார்ட்அப் இளைஞர்களின் சூப்பர் சாதனை!

படம்
உலக அரங்கில் சாதிக்கும் இந்தியக் கைத்தறி! செய்தி: நொய்டாவைச் சேர்ந்த கைத்தறித் தொழிலாளர்களுக்கு லால் 10 எனும் ஸ்டார்ட்அப் இளைஞர்கள் உதவி வருகின்றனர். நொய்டாவைச் சேர்ந்த லால்10 எனும் ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்டு நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. தற்போது இந்த ஸ்டார்ட்அப் இளைஞர்கள், கைத்தறித் தொழிலுக்கு உதவி வருகின்றனர். இதற்கு வாட்ஸ்அப் மற்றும் பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். மனீத் கோகில், சஞ்சித் கோவில், ஆல்பின் ஜோஸ் ஆகியோர்தான் அந்த இளைஞர்கள். 2015 ஆம்ஆண்டு பெங்களூரில் தொடங்கப்பட்ட இந்த தொழில்முயற்சியில் 1500க்கும் மேற்பட்ட கைத்தறித் தொழிலாளர்கள், கலைஞர்கள் இணைந்துள்ளனர். சிஆர்எம் எனும் ஆப்பை மேம்படுத்தி, விற்பனை வலைப்பின்னலை வலுப்படுத்தியுள்ளனர்.  மேலும் தேசிய வடிவமைப்பு கல்லூரி மாணவர்கள்  16 பேர், நடப்பு டிரெண்டுகளைக் கண்காணித்து தகவல் கொடுக்கின்றனர். அதைப்பின்பற்றி உடைகளைக்  கைத்தறித் தொழிலாளர்கள் வடிவமைத்து வருகின்றனர். ”தற்போது எங்களுக்கு மாதம் 3 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்கிறார் லால் 10 நிறுவனர்களில் ஒருவரான சஞ