இடுகைகள்

புரட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோவியத் யூனியனை கட்டமைத்த லெனினின் வாழ்க்கை வரலாறு!

படம்
  லெனின் மருதன்  கிழக்கு பதிப்பகம் ஸ்டாலின் நூலுக்குப் பிறகு லெனின் நூலுக்கு வந்திருக்கிறோம். இந்த நூல் லெனின், எப்படி ரஷ்யா ஜார் அரசை புரிந்துகொள்கிறார் என்பதில் இருந்து தொடங்குகிறது. பள்ளியில் படிக்கும் அவருக்கு ஆசிரியர் வழியாக செய்தி வருகிறது. அவரது அண்ணன் அரசர் ஜாரைக் கொல்ல முயன்று பிடிபட்டுவிட்டான். கொல்லப்போகிறார்கள் என. அந்த நாள் தொடங்கி அவரும் சகோதரி ஆன்னா, தாயார் ஆகியோர் படாதபாடுபடுகிறார்கள். லெனின், தனது அண்ணன் வழியாக கற்ற வி்ஷயங்களை அசைபோட்டுப் பார்க்கிறார். இந்த வகையில் நூல் சுவாரசியமாகவே உள்ளது.  நூலில், லெனினின் நூல் வாசிப்பு ஆர்வம், பிரசாரம், நாளிதழ் வெளியீடு - இஸ்க்ரா, பிராவ்தா, போராட்டம் என பல்வேறு விஷயங்களைப் பற்றி தெளிவாக கூறப்படுகிறது. சில இடங்களில் ஸ்டாலின் நூலில் வந்துள்ள பகுதிகளை அப்படியே எடுத்து வைத்துள்ளார்களோ என்று கூட தோன்றுகிறது. சம்பவங்கள் ஒன்றாக இருந்தாலும் அதுபற்றிய தோற்றத்தை கோணத்தை சற்றே வேறுபடுத்தி எழுதியிருக்கலாம்.  லெனின் சட்டப்படிப்பு படித்தவர். தன் வாழ்க்கை முழுவதும் அரசின் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டவர். ஸ்வ...

நாட்டை சமூக நீதி பாதைக்கு கொண்டு வரும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்!

      உற்பத்தியைப் பொறுத்தவரையில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள் எனில் பகுதியாக குறையும். பிறகு, முற்றாக நின்றுவிடும். இப்படியான விளைவை தொழிலாளர்கள் முன்னமே அடையாளம் கொண்டு செயல்பட வேண்டும். புரட்சி என்பது முக்கியம். அதேசமயம், மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு தெருக்களில் குழுமுவது தற்காலிகமாகத்தான். அது நிரந்தரமல்ல. புரட்சி என்பது பொது சொத்துக்களை அழிப்பதல்ல. அது மக்களுக்கு உதவும் பெரும் பொறுப்பை தன் தோள்களில் கொண்டுள்ளது. கடின உழைப்பும், சுய ஒழுக்கமும் கொண்டவர்கள்தான் புரட்சியின் பாதையில் பயணிக்க முடியும். முதலாளித்துவவாதிகள், துறையை போட்டியிடும் வகையில் உயர்த்தி வைத்திருக்கிறார்கள். அதிகளவு முதலீடு, அதற்கு கட்டாயமாக கிடைத்தே ஆக வேண்டிய லாபம், இரக்கமில்லாத விலை, விலை வேறுபாடுகள், வாங்கும் கடன்களுக்கு அதிகரிக்கும் வட்டி என முதலாளித்துவ வணிகம் பல்வேறு நெருக்கடிகளை தனக்குள்ளேயே கொண்டது. முதலாளித்து நிறுவனங்கள் ஏற்படுத்தும் போட்டி உள்நாடு, வெளிநாடு என இரண்டு பிரிவுகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தொழில்துறையை ...

சமூகப் புரட்சியை தொடங்கி வெற்றி பெறுவது பற்றி விளக்கும் நூல்!

படம்
   ஏபிசி ஆப் அனார்சிசம் அலெக்சாண்டர் பெர்க்மன் ப.108 அனார்சிசம் என்பதை தலைவர் இன்மை, அல்லது அரசின்மை என்று கூறலாம். அந்த வகையில் அரசு இல்லாமல் நாடு எப்படி செயல்பட முடியும், அதன் சாத்தியங்கள் என்ன என்பதைப் பற்றி இந்நூல் ஆராய்கிறது. பொதுவாக, புரட்சி என்பதை முதலாளித்துவ ஊடகங்கள், குறிப்பாக ஆரியர்கள் நடத்துபவை, தவறாக சித்திரித்து வந்திருக்கின்றன. அப்படியான பல்வேறு பிரச்னைகளை முதல் இரண்டு அத்தியாயங்களில் நூல் எடுத்தாண்டு, பிறகு பேசும் மையப்பொருளுக்கு வேகமாக நகர்ந்துவிடுகிறது. நூலில், அரசின்மை கருத்துகளை விளக்கிய முக்கியமான தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றை வாசகர்கள்தாம் தேடிப் படித்துக்கொள்ளவேண்டும். எடுத்துக்கொண்ட மையப்பொருளை விவரிக்க அதிக நேரம் தேவை என்பதால் எழுத்தாளர் அலெக்சாண்டர், முக்கிய சிந்தனையாளர்கள் பற்றி அதிகம் விளக்கவில்லை. கட்டற்ற ஆராய்ச்சி, ஆய்வு வலைத்தளங்களில் அனார்சிசம் பற்றி தேடினாலே ஏராளமான கட்டுரைகள், நூல்களின் சில பகுதிகள் இலவசமாக வாசிக்க கிடைக்கின்றன. அவற்றைப் படித்து ஒருவர் இத்தத்துவத்தை நன்றாக புரிந்துகொள்ள முடியும். நூலில் தொழிலாளர்கள் மீது அத...

சமூகப் புரட்சியில் அறிவுஜீவிகளுக்கு உள்ள பங்கு!

படம்
  அரசியல் ரீதியான புரட்சிக்கும் சமூகத்தை அடிப்படையாக மாற்றும் புரட்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அரசியல் புரட்சியை ஒருவகையில் ரகசியமாக ஏகபோகமாக கூட நடத்திக் காட்டிவிட முடியும். தொழிற்சாலை தொழிலாளர்கள், வேளாண்மைத் தொழிலாளர்கள் என இருதரப்பும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும். பொருளாதாரம், வாழ்க்கை என்ற இரண்டு அம்சங்களிலும் கூட இருபிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும் முக்கியம். இவர்கள் இல்லாமல் எந்த சமூக மாற்றங்களும் நடைபெறாது. இணையம் வந்தபிறகு போராட்டங்களை ஒருங்கிணைப்பு வேறு ஒரு தளத்திற்கு மாறியுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களை நிர்வகிப்பவர்கள், போராட்டங்களை எளிதாக தடுத்து நீக்க முடியும். எனவே, அவை இல்லாமலும் மக்கள் ஒன்றாக இணைந்து களத்தில் செயல்பட முயலவேண்டும். முதலாளிகளைப் பொறுத்தவரை லாபம் வந்தால்தான் ஒரு பொருளை நிர்வாகம் செய்வார். அரசு எதிர்த்தால், தொழில் இழப்பை சந்தித்தால், அதை எதிர்கொள்ளும்படி நிறைய கட்டுப்பாடுகள், விதிகளை உருவாக்கிக்கொள்வார். அரசுகளின் கருத்தியலுக்கு ஏற்றபடி அல்காரிதங்களை கூட தொழில்நுட்ப நிறுவனங்கள் மாற்றியமைப்பதை இதற்கு உதாரணமாக கூறலாம். உடல் உழைப்பு, மூளை உழைப்பு என...

வன்முறைதான் எங்கள் மொழி!

படம்
  வன்முறை ஒரு தொடர்சங்கிலியைப் போல சமூகத்தை இணைத்துள்ளது. வன்முறைக்கு ஆதாரமே, அரசுதான். சட்டப்பூர்வமாக வன்முறையை அனைவரும் ஏற்கும்படியாக மாற்றுகிறது. அமைதியாக போராடுபவர்களின் மீது துப்பாக்கியால் சுடுவது, லத்தியால் அடித்து துன்புறுத்துவது என அரசு இயங்குகிறது. மக்கள் அதிகாரம் என்பது பலாத்காரம், வலுக்கட்டாயம் இல்லாத அரசில்லாத சமூகம். அங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். மக்கள் சுதந்திரமாக, விடுதலையாக இருக்கலாம். ஒருநாள் நீங்கள் காலையில் எழும்போது உங்கள் நாட்டில் அரசு அமைப்பு இல்லையென்று தெரிகிறது. உடனே என்ன தோன்றும்? அதுநாள் வரை கொல்லலாம் என்று நினைத்த சித்தப்பா மகனை உடனே கொன்று போடலாம் என்றா? இல்லை அது மனச்சிதைவுக்கு உள்ளானவர்களின் செய்கை. இயல்பான மனிதர்கள் அப்படி இயங்க மாட்டார்கள். அரசு இல்லையென்றால், நிறைய கொள்ளை, கொலை நடக்குமோ என்று கூறுவார்கள். கொள்ளை, கொலை செய்பவர்கள் பெரும்பாலும் மனச்சிதைவுக்கு உட்பட்டவர்கள். அதைச் செய்யும்போது ஒருவகை மகிழ்ச்சியை உணர்கிறார்கள். எனவே, அத்தகைய செயல்களை செய்கிறார்கள். அரசு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் கொலை, கொள்ளை என்பது நடந்துகொண்...

மாவோ - ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் - மழைப்பேச்சு பாட்காஸ்ட்

படம்
      https://archive.org/details/mao-communist-history

அரசு, தொழிலாளர் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நூல்!

படம்
        அரசும் புரட்சியும் புரட்சியாளர் லெனின் தமிழில் ரா கிருஷ்ணய்யா சோவியத் யூனியனை மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக ஆண்ட லெனின் எழுதிய நூல். இந்த நூலை கிருஷ்ணய்யா சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நூல் முழுக்க அரசு என்றால் என்ன, அதன் நோக்கம், யாருக்காக செயல்படுகிறது, அதை தொழிலாளர்கள் எப்படி கைபற்றி மக்களுக்காக இயங்க வைப்பது என நிறைய உதாரணங்களோடு எழுதியுள்ளார். நூலில் கூடுதலாக சந்தர்ப்பவாதிகள் பற்றியும் விரிவாக விமர்சனங்களை எடுத்து வைத்து விவாதித்துள்ளார். நூல் எளிதாக வாசித்து யோசித்து புரிந்துகொள்ளக்கூடியதல்ல. மொத்தம் 570 பக்கங்களைக் கொண்டது. மார்க்சிய தத்துவம் சார்ந்த நூல் என்பதால், நூலை அனைவருக்கும் பொதுவான நூலாக கூற முடியாது. நிதானமாகவே படிக்க முடியும். நூலை வாசிப்பதற்கு முன்னர், அதன் பின்னே உள்ள பல்வேறு சம்பவங்களை படித்துவிட்டு வந்தால் நூலை முழுவதுமாக வாசிக்க எளிதாக இருக்கும். ஏராளமான சம்பவங்களை நூல் சுருக்கமாக கூறிச்செல்வதால் சற்று குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. லெனின் எழுதியுள்ள இந்த நூல் முழுக்க மார்க்ஸ், எங்கல்சின் பல்வேறு கூற்றுகள், ஏராளமான நூல்களில் ...

சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியாபோபிங் கடந்த வந்த அரசியல் முள்பாதை

படம்
           book review சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியாபோபிங் கடந்த வந்த அரசியல் முள்பாதை டெங் ஷியாபோபிங் அண்ட் தி சைனீஸ் ரிவல்யூஷன் அரசியல் சுயசரிதை டேவிட் எஸ் ஜி குட்மேன் ரூட்லெட்ஜ் பதிப்பகம் டெங் ஷியாபோபிங்கை முன்னிறுத்தாமல் இன்று ஷி ச்சின்பிங் எந்த உரையையும் தொடங்கி முடிப்பதில்லை. சீனர்களுக்கு தேசியக்கட்சியோடு போரிட்டு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது மாவோ என்றால், அந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை அமைத்தவர், டெங் ஷியாபோபிங். 1976 தொடங்கி 1985ஆம் ஆண்டு வரை சீன அதிபராக இருந்த டெங் செய்த ராணுவ, பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாகவே சீனா, இன்று பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இங்கு கவனிக்க வேண்டியது, சீனா தனது நாட்டை வளர்ச்சிக்காகத் திறந்துவைத்தாலும் அதன் கலாசாரத்தை ஆன்மாவை முழுக்க இழந்துவிடவில்லை. சோசலிசச்தை சீன கலாசாரத்தோடு இணைந்து திட்டங்களை தீட்டி முன்னெடுத்தவர் டெங். இந்த நூல், டெங்கின் அரசியல் வாழ்க்கையை விரிவாக அலசுகிறது. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பெரிதாக பேசவில்லை. ஏனெனில் அங்குள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கம், அ...

இருபதாம் நூற்றாண்டில் தொடக்க கால புரட்சிக்கவிஞர் கு மோரோ! தேவதைகள் - மொழியாக்கம் மு சிதம்பரம்

படம்
              கு மோரோ கவிதைத்தொகுப்பு தேவதைகள் மு சிதம்பரம் சென்னை தமிழாராய்ச்சி நிறுவனம் குமோரோ புரட்சி கவிதைகளை எழுதியவர். எனவே கவிதைத்தொகுப்பில் ஜென், சூபி ரக கவிதைகள் இருக்குமென யாரும் வாசிக்கவேண்டாம். அப்படி நினைத்தால் நீங்கள்தான் ஏமாறுவீர்கள். சீன கவிதைகள் பெரும்பாலும் அந்த நாட்டு புராணத்திலிருந்து உருவானவையாக உள்ளதால் அவற்றை நாம் புரிந்துகொண்டு வாசிப்பது கடினமாக உள்ளது. அடுத்து, கவிதைகளை வரிசைப்படுத்தியுள்ள விதமும் சீராக இல்லை. நூலின் தலைப்பான தேவதைகள் கவிதை ஒரு காதல் கவிதை... அதையடுத்து வரும் சில கவிதைகளும் காதல் சார்ந்தவை. அவற்றை முன்னரே வரிசைப்படுத்தினால் அதை சற்று எளிமையாக படித்துவிட்டு பிறகு ஆழமான கவிதைகளுக்கு செல்ல வசதியாக இருந்திருக்கும். நூலில் மொத்தம் 34 கவிதைகள் உள்ளன. அவை அனைத்துமே சீன நாட்டிற்கும், தேசப்பற்றுக்கும், புராணங்களைக் கூறுவதற்குமானவை. சில கவிதைகள் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட மாவீரர்களைப் போற்றி எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு இங்கிலாந்தை எதிர்த்து எழுபத்தெட்டு நாட்கள் உண்ணாமல் இருந்து உயிர்நீத்த தளபதி பற்றிய கவி...

செவ்வானத்தில் வெள்ளை நட்சத்திரம் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  பீகார், மகாராஷ்டிரா, ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அடர்த்தியான காடுகள் உள்ளன. இங்கு வாழும் பழங்குடிகளின் வாழ்க்கை மோசமாகிக் கொண்டே வருகிறது. கனிமங்களை அகழ்ந்தெடுக்க இம்மக்களை பல்வேறு வசதிகளைத் தருவதாக கூறி வேறு இடங்களுக்கு மாற்ற அரசும், தனியார் அமைப்புகளும், கூலிப்படையினரும் முயன்று வருகின்றனர. அங்கு மக்கள் எப்படி இருக்கிறார்கள் என செருக்குறி ராஜ்குமார் எழுதிய கட்டுரைகளின் சுருக்கமான தமிழாக்கமே இந்த நூல்.  நூலை வாசிப்பதன் மூலம் ஆதிவாசி பழங்குடிகள் எந்தளவு அரச பயங்கரவாதத்தின் பாதிப்பில் உள்ளனர் என்பதை அறியலாம். நூலில் உள்ள இந்து நாளிதழுக்கு செ.ரா அளித்த நேர்காணல் முக்கியமானது. அதில் அவர் வெளிப்படையாக பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார். இதில் கட்சி ரீதியான விமர்சனங்களும் உள்ளடங்கும்.  நூலை ஸ்கேன் செய்தும் வாசிக்கலாம்.... நூல்களை வாசிக்க.... செவ்வானத்தில் வெள்ளை நட்சத்திரம் நூல் https://www.amazon.in/dp/B0BNQFWFL5 நட்பதிகாரம் https://www.amazon.in/dp/B08B14WJ6M நெ.1 சமூக தொழில் அதிபர் https://www.amazon.in/dp/B08CCW8P7F ஜனநாயக இந்தியா ...

வலியால் மரத்துப்போகும் உடல்! - கதிரவனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.7.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  வீட்டில் அப்பாவும் அம்மாவும் நன்றாக இருக்கிறார்களா? வேலை எப்படி போகிறது? தாய் - மார்க்சிம் கார்க்கி நாவலைப் படித்தேன். 1334 பக்கம். தொழிலாளர்களின் போராட்டம்தான் கதையின் மையம். பொதுமக்களிடம் புரட்சி பற்றி நீலவ்னா பாத்திரம் பேசுவது போல அமைந்த பகுதிகள் உணர்வெழுச்சியுடன் அமைந்துள்ளன.  ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி இதழுக்கான வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அப்படித்தான் மேலிடம் கூறியிருக்கிறது. பார்ப்போம். பதிப்பக வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன. இந்தளவு பதிப்பாக வேலைகள் ஜவ்வாக இழுபடுவதை நான் எங்கும் பார்க்கவில்லை. ரூமில் படுத்து தூங்க பாய் இன்னும் வாங்கவில்லை. பிளாஸ்டிக் பாய்தான் என்னுடைய விருப்பம். சாதாரண பாய் வாங்கினால், எளிதாக பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுகிறது. தேவன் எழுதிய சின்னஞ்சிறு கதைகள் எனும் நூல் தொகுதியைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். குறைவான விவரிப்புகளுடன் புன்னகையோடு படிக்கும் சிறுகதைத் தொகுதி இது.  அன்பரசு  2 21.7.2021 மயிலை அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்...

பெண்களின் உரிமைக்காக பாடுபட்ட பெண் செயல்பாட்டாளர்கள்!

படம்
            மாற்றங்களை ஏற்படுத்திய பெண்கள் இளவரசி இசபெல் - பிரேசில் இரண்டாம் பெட்ரோ மன்னரின் மகள்தான் இசபெல் . தந்தை வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தபோது இசபெல் , தங்க சட்டம் என்பதை கொண்டு வந்தார் . இதன்மூலம் பிரேசில் நாட்டில் அடிமை முறையை ஒழித்தார் . இது அடிமை வியாபாரிகளையும் , செல்வந்தர்களையும் கோபப்படுத்தியது . இதனால் இவர்கள் ஒன்றாக சேர்ந்த அரச குடும்பத்தை ஆட்சியிலிருந்து அகற்றும் கலகத்தை தொடங்கினர் . கலகம் தொடங்கியதால் பிரான்சிற்கு சென்ற இளவரசி இசபெல் , தனது 30 ஆண்டுகளை வெளிநாட்டில் செலவழித்தார் . ஹெலன் கெல்லர் பார்வை , பேச்சுத்திறன் , செவித்திறன் இல்லாதவர் . பிரெய்லி முறையில் கல்வி கற்று பட்டம் பெற்ற சாதனையாளர் . சைகை முறையில் பிறருடன் உரையாடினார் . பிரெய்லி முறையில் பனிரெண்டு நூல்களை எழுதியுள்ளார் . ஹெலன் கெல்லர் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு பார்வையற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது . ரேச்சல் கார்சன் இன்றைய சூழலியல் போராட்டங்களுக்கான முன்னோடி . கடல் சார்ந்த உயிரியல் ஆராய்ச்சிகளை திற...

ராப் இசையால் சமூக பிரச்னைகளைப் பேச முடியும்! - பரவும் ராப், ஹிப்-ஹாப் இசைக்குழுக்கள்

படம்
swadesi சமூகப் பிரச்னைகளை தீர்க்கும் இசை ! இன்று திரைப்படங்கள் சமூக பிரச்னைகள் பற்றி பேசுவது குறைந்துவிட்டது . அரிதாகவே சில முதுகெலும்பு உள்ள இயக்குநர்கள் பிரச்னைகளை சந்தித்து படங்களை வெளியிடுகிறார்கள் . அவையும் பார்க்கப்படுவது மக்கள் கையில்தான் உள்ளது . ஆனால் தனியிசை பாடல்களாக இசைக்கலைஞர்கள் வெளியிடும் பாடல்கள் இணையம் வழியாக எளிதாக மக்களைச் சென்று சேர்கிறது . இதனை இந்தி திரைப்படம் கல்லி பாய் முதன்முதலில் தொடங்கி வைத்தது . இப்படத்தில் இசைக்கலைஞர் டிவைனின் வாழ்க்கை சித்திரிக்கப்பட்டது . மேல்நாட்டுப் பாடல்களை பார்த்தால் அழகான செட் , ஃபெராரி காரில் வந்து தன்னை மறந்து போன காதலியைப் பற்றி பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்கள் . இன்று அதற்கு மாற்றாக சமூக பிரச்னைகளைப் பற்றி பாடத்தொடங்கியிருக்கிறார்கள் . தமிழில் அறிவு அப்படியொரு பணியை செய்துகொண்டிருக்கிறார் . ahmer javed வட இந்தியாவில் தாராவி குடிசையில் பிறந்த வளர்ந்த ராப் பாடகர்கள் இனம் , மத வேறுபாடுகள் , ஏழைகளின் பிரச்னை , பாகுபாடு என்ற பல்வேறு விஷயங்களையும் அனைவரும் அறிய பாடி வருகிறார்கள் . அஹ்மர் ஜாவேத் , அர்ஷத் மாலிக் ஆகியோர் இவ...

மக்களுக்கான உரிமைகளைக் கோரும் சுதந்திர புரட்சி நூலகங்கள்!

படம்
ozy சர்வாதிகாரத்தை எதிர்க்கும் நூலகங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியத் தலைநகர் டில்லியில் புரட்சி நூலகங்கள் தொடங்கப்பட்டன. இவை தமிழகத்தில் உள்ள அண்ணா நூலகம் போன்ற பிரமாண்டத்தைக் கொண்டவை அல்ல. ஆனால் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் சுதந்திர மனநிலை கொண்ட மனிதர்களுக்கானவை. இந்த நூலகங்களை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடங்கினர். கொரோனா பீதிக்கும் முன்புவரை இவை சுதந்திர மனநிலை கட்டற்ற பேச்சுரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் மனிதர்கள் வந்து செல்லும் இடங்களாக இருந்தன. அச்சமயத்தில்தான் காவல்துறை டாக்டர். ஜாகீர் உசேன் நூலகத்தில் உள்ளே நுழைந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. மாணவர்களின் மீது அநீதியான முறையில் தடியடி நடத்தியது. இந்திய அரசின் பாரபட்சமான குடியுரிமை சட்டதிற்கு எதிரான போராட்டங்கள் நாட்டில் எங்கெங்கு நடந்தனவோ, அங்கு போராட்டத்தின் ஒரு பகுதியாக புரட்சிகர நூலகங்கள் தொடங்கப்பட்டன. இப்படி கான்பூர், நாக்பூர், சம்பால், உதயகிரி உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களில் புரட்சிகர நூலகங்கள் உருவாக்கப்பட்டடன. நாங்கள் எங்களது நூலகங்களை அரசியல...