இடுகைகள்

அப்பா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் யார் என்ற கேள்வியை எழுப்புவதுதான் கலை! - ஸ்டீபன் ஸ்பீல்பர்க்

படம்
  ஸ்டீபன் ஸ்பீல்பர்க், திரைப்பட இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் திரைப்பட இயக்குநர். ஸ்டீபனுக்கு எழுபத்தாறு வயதாகிறது. ஜாஸ்   பாகங்ள், சேவிங் பிரைவேட் ரியான், மைனாரிட்டி ரிப்போர்ட், ஈ.டி எக்ஸ்ட்ரா டெரஸ்டெரியல், ஷிண்ட்லர் லிஸ்ட் ஆகிய திரைப்படங்களை உருவாக்கியவர். இவர் உருவாக்கிய தயாரித்த படங்களின் வணிக லாபம் 38.7 பில்லியன் டாலர்கள்.   சினிமாவின் சக்தியை எப்போது உணர்ந்தீர்கள்? இளமையிலேயே சினிமாவின் சக்தியை உணர்ந்தேன். திரைப்படங்களை பார்ப்பதன் வழியாக என்னுடைய பெற்றோருடனான உறவும் கூட மாறியது. குறிப்பாக என்னுடைய அம்மாவினுடைய உறவு. அவர், அப்பாவைக் கடந்து இன்னொருவரை காதலிப்பதை அறிந்தபிறகு, அவரை நான் என்னுடைய அம்மாவாக கருதவில்லை. ஒரு மனிதராக அவரை அனைத்து பலவீனங்களும் கொண்டவராக என்னை நானே பார்ப்பது போல பார்த்தேன். பத்தாண்டுகளுக்கு   எனது அம்மாவை,   அவராகவே கருதிப் பார்த்தேன். அப்படிப் பார்த்தது குடும்பத்தில் வேறு எவரையும் விட அவரை நெருக்கமானவராக உணரச் செய்தது. உங்கள் குடும்ப வாழ்க்கை பற்றிய சுயசரிதை படங்களை எடுக்க நினைத்துள்ளீர்களா? எனது அம்மா, எப்போது திரைப்படங்களில் நமது கதையைச் சொல

அப்பாவுக்கு கடிதத்தைப் பெற்று படிப்பதில் அதீத மகிழ்ச்சி!

படம்
  நரசிங்கபுரம் 20/12/2022   அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின் கடிதம் கிடைத்தது. அப்பா சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கும் அவரது நண்பர் திருவண்ணாமலையில் இருந்து கடிதம் எழுதி அனுப்பி வந்தார். போன் வந்ததும் கடிதம் நின்றுவிட்டது. எனவே, கடிதத்தை வாங்குவதில் அதீத மகிழ்ச்சி அவருக்கு. எனக்கு முன்பாகவே படித்துப் பார்ப்பார். அவருக்கு நீங்கள் எழுதும் கையெழுத்தில் சில வார்த்தைகள் புரியவில்லையாம். எப்படி படிப்பே? என்று கேட்டார். அன்பிடம் பழகியவர்க்கே அன்பரசு கையெழுத்து புரியும் என்று சொன்னேன். சரிதானே? உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது சார்? மருத்துவ செலவுகள்? பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் சொல்லுங்கள். தயக்கம் வேண்டாம். சென்னை வந்தால் சொல்லலுங்கள். நீங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறேன். கொஞ்சம் முன்கூட்டியே சொன்னால் சிறப்பு. தினமும் விதவிதமான கணித ஸ்டேட்டஸ்களை வாட்ஸ்அப்பில் பதிவிடுகிறேன். மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 17ஆம் தேதி என் குருநாதர் நடத்திவரும் பை கணித மன்றத்தில் இராமானுஜன் பிறந்த நாளையொட்டி நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. ஏஐஆர்எம்சி என்ற அமைப்பிலிருந்து வந

காதலி மீது அவளது அப்பா வைத்துள்ள அதீத பாசத்தை தடுக்க முடியாத காதலனின் கதை - நுவ்வே நுவ்வே - திரிவிக்ரம் சீனிவாஸ்

படம்
  நுவ்வே நுவ்வே  இயக்குநர் திரிவிக்ரம்  தருண், ஸ்ரேயா சரண் அப்பாவுக்கும் மகளுக்குமான பாசத்தில் மகளின் காதலன் சிக்கிக்கொண்டால் என்னவாகும்?  படத்தில் நாயகன் என்பது பிரகாஷ்ராஜ்தான். படம் தொடங்கி இறுதிக்காட்சி வரை உறுதியாக நின்று நடித்திருக்கிறார். இது திரிவிக்ரம் சீனிவாசின் முதல் படம்.  படத்தில் முரணான பாத்திரங்களுக்கு இடையில் வரும் வசனங்கள் கச்சிதமானவை. அச்சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை. கதையைப் பார்ப்போம்.  அஞ்சலி, கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறாள். இவளது அப்பா தொழிலதிபர். அதைத்தாண்டி மகள் மீது பாச வெறி கொண்டவர். மகளுக்கு கொடுக்கும் பரிசு கூட பாசத்தைப் போல ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. மகளுக்கும் அம்மாவை விட அப்பாவே ஆதர்சம். மகளுக்கு, தனது குடும்பத்தினர் ஏன் அவரது மூத்த பையன் பரிசு கொடுக்கும் முன்னரே பரிசு கொடுத்து திகைப்பு ஏற்படுத்துகிறார். இப்படி இருப்பவர், அதீத பாசத்தால் திருமணம் என்று வரும்போது என்ன முடிவு செ்யகிறார் என்பதே கதை.  படத்தின் தொடக்க காட்சியே மது அருந்தியபடி பிரகாஷ் தனது நண்பரிடம் பேசும் காட்சிதான்.  அதில் தனது மகளைப் பற்றி பாசத்தோடு பேசுகிறார். மனம் கனிந்த பேச்சில் ந

கெத்து காட்டும் அப்பா, பம்மி பதுங்கும் மகன் - அந்தாரிவாடு - தெலுங்கு - சிரஞ்சீவி, தபு, ரைமான் சென்

படம்
                  அந்தாரிவாடு சிரஞ்சீவி, ரைமா சென், தபு இந்த படம் சினிமா என்றாலும் கூட பார்க்க சன் டிவி சீரியல் போலவே இருக்கும். கவனம் படத்தில் இரண்டு சிரஞ்சீவி. ஒருவர் மென்மையானவர். இன்னொருவர் அடிதடி, சவுண்டு பார்ட்டி. அப்பா, சிரஞ்சீவி தான் அந்தாரிவாடு. இவர், கட்டிடம் கட்டும் மேஸ்திரியாக இருக்கிறார். தனது மனைவி இறந்தபிறகு, திருமணம் செய்யாமல் மகனை நல்லபடியாக வளர்த்து கல்வியில் உயர உதவுகிறார். அவரும் படித்து முடித்து டிவி ஒன்றில் ஃபேஸ் டு ஃபேஸ் எனும் நிகழ்ச்சி நடத்தும் நெறியாளராக நாட்டுக்கே அறிந்த முகமாக இருக்கிறார். இந்த நிலையில் அப்பா சிரஞ்சீவி, தொழிலாளர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அடிதடியில் இறங்குவது வழக்கம். இப்படி மக்களுக்கு நீர் கொடுக்கும் தண்ணீர் லாரியை பார்ட்டிக்கு பயன்படுத்தும் காண்ட்ராக்டர் ஒருவரின் மகனை போட்டு சாத்து சாத்து என கனல்கண்ணன் உதவியுடன் அடிக்கிறார். இதனால் அவர்கள் கூட்டம் சிரஞ்சீவியை அதாவது கோவிந்த ராசுலுவை தாக்க திட்டம் தீட்டுகிறது. இந்த நேரத்தில் கோவிந்தராசுலுவுக்கு புதிய கட்டுமான வேலை கிடைக்கிறது. அதை கொடுப்பது, வீரேந்திரா எனும் கோவிந்தராசுலுவின் பழைய நண்பர்

தனியே தன்னந்தனியே.... கடிதங்கள் - கதிரவன்

படம்
  28.2.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  எப்படி இருக்கிறீர்கள்? நான் புத்தகத் திருவிழாவில் வாங்கிய நூல்களை இன்னும் படிக்கவில்லை. இப்போதுதான் சுப்ரதோ பக்ஷியை முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். எங்கள் நாளிதழ் அலுவலகத்தில் இருந்து ஒன்றிய அரசு விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதி வெளியேறிவிட்டார். அதாவது, வேறு உயர்ந்த சம்பளம் கொண்ட வேலைக்குப் போகிறார். நான் அவருடன் சில மாதங்களாக பேசுவதில்லை. இறுதியாக இன்று வாழ்த்துச் செய்தி மட்டுமே அனுப்பினேன். நான் ஆபீசில் கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு உதவியவர் அவர். அவர் கவனித்த பக்கங்களை பார்த்துக்கொள்ள புதிய உதவி ஆசிரியர் வருவார். அல்லது இப்போதுள்ள உதவி ஆசிரியர்களே பகிர்ந்துகொள்ளவேண்டும்.  நேற்று குரூப் மலையாளப் படத்தை பார்க்கத் தொடங்கினேன். படத்தை நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். இன்னும் முழுதாக பார்க்கவில்லை.  வீட்டில் அம்மாவுக்கு தைராய்டு பிரச்னை தொடங்கிவிட்டது. அதற்கான மருந்தை அவள் சாப்பிடவேண்டும். சாப்பிட்டு வருகிறாள். ஊரில் இருந்து ஈரோடு டவுனில் தனியாக வீடு எடுத்து தங்குவாள் என நினைக்கிறேன். இனி அப்பா கிராமத்தில் சௌகரியமாக இருப்பா

குழந்தைகளுக்கான வாசிக்க அற்புதமான மர்ம நூல்கள் !

படம்
  குழந்தைகளுக்கான நூல்கள்  பேட் கய்ஸ் ஆரோன் பிளாபே ஸ்காலஸ்டிக் பிரஸ் பதினைந்து புத்தகங்களைக் கொண்ட தொகுப்பு. அனைத்திலும் சுறா தான், குற்றங்களைக் கண்டுபிடிக்கிறது. மனிதர்களைப் போல பேசி பல்வேறு குற்றங்களை கண்டறிந்து தவறை ஏற்க வைக்கிறது.  ஃபிரம் தி டெஸ்க் ஆஃப் ஜோ வாஷிங்டன்  ஜேன் மார்க்ஸ்  காத்தரின் டேகன் புக்ஸ்  12 வயது சிறுமி தன் தந்தை குற்றம் செய்யாதவர் என்பதை நிரூபிக்க என்னென்ன விஷயங்களை செய்கிறாள் என்பதே கதை. உணர்ச்சிகரமான சம்பவங்கள் நூலில் நிறையவே உள்ளன.  தி மேஜிக் மிஸ்ஃபிட்ஸ் நீல் பேட்ரிக் ஹாரிஸ்  ஓவியம் - லிஸி மர்லின், கைல் ஹில்டன் லிட்டில் ப்ரௌன் புக்ஸ் கார்டர் மற்றும் ஐந்த டீனேஜ் மந்திரவித்தை கலைஞர்கள் சேர்ந்து உலகின் பெரிய வைரத்தை கொள்ளையிலிருந்து எப்படி தப்புவிக்கிறார்கள் என்பதே கதை. நிறைய ஜோக்குகள், மந்திர வித்தைகள் என படிக்க சுவாரசியமான கதைகளைக் கொண்டுள்ள நூல் இது.  தி மிஸ்டீரியஸ் பெனடிக்ட் சொசைட்டி டிரென்டன் லீ ஸ்டீவர்ட் ஓவியம் - கார்சன் எல்ஸ்  லிட்டில் ப்ரௌன் புக்ஸ் ஆதரவற்ற சிறுவர்கள், தங்கள் பள்ளியில் முதல்வராக உள்ள தீய சக்தியை எப்படி துப்பறிகிறார்கள், அவர் செய்யும் செயல்க

அப்பாவின் வெறுப்பால் குடும்பத்தை விட்டு தனி மனிதனாகும் சத்யம்! சத்யம் -2003

படம்
  சத்யம் சுமந்த் அக்கினேனி படத்தின் தலைப்புதான் நாயகனின் குணம். அவன் உண்மை சொல்லும் சந்தர்ப்பம் எல்லாம் தவறாகவே போகிறது. இதனால் அவன் வீட்டை விட்டு வெளியே போய் வாழும்படி ஆகிறது. பிறரின் நலனுக்காக தன்னையே தியாகம் செய்யும் குணம், அவனுக்கு நான்கு நண்பர்களை சம்பாதித்துக் கொடுக்கிறது. இருவர் அவனது அறையில் தங்கி நண்பர்களானவர்கள், மீதி இருவர்களில் ஒருவர் ஜோதிடர், மற்றொருவர் இவர்கள் தங்கியிருக்கும் அறைகளின் உரிமையாளர்.  படம் நெடுக நான்கு நண்பர்கள் சுமந்திற்கு எப்பாடு பட்டேனும் உதவுகிறார்கள். அவர்களுக்கும் சுமந்த் பார்ட்டி கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். விடுங்கள் கதை பார்ட்டி பற்றியது அல்ல.  சத்யத்தை நம்பும் ஒரே நபர், அவனது தங்கை மட்டும்தான். சத்யத்தைப் பொறுத்தவரை மனத்திற்கு தோன்றினால் வேலைகளை செய்வது இல்லையெனில் அதை செய்யக்கூடாது அவ்வளவுதான். இது பலருக்கும் புரிவதில்லை. ஏன் அவனது பெற்றோருக்கு கூட. குறிப்பாக அவனது அப்பாவுக்கு அவனை புரிந்துகொள்ள முடியாத இயலாமை மெல்ல கோபமாக மாறுகிறது. சத்யத்தைப் பொறுத்தவரை கவிதை எழுதுவது அதற்கான கவியுலகிலேயே இருப்பது பிடித்தமானது. இப்படி இருப்பவன் நடைமுறை வாழ்க்க

எதன் கேள்வியைக் கேட்பது சமூகமா, மனமா? - கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நன்றாக இருக்கிறீர்களா? இங்கு பனியும் வெயிலுமாக இருக்கிறது. வரும் ஏழாம்தேதி எங்கள் இதழ் சார்ந்த போட்டி ஒன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.  அதற்கு நாங்கள் கட்டாயமாக செல்லவேண்டியுள்ளது. அவசியமில்லைதான். ஆனால் அழைக்கிறார்கள். நிகழ்ச்சியில் முழுக்க விற்பனைப்பிரிவு அதிகாரிகள் முன் நிற்பார்கள். அங்கு நாங்கள் எதற்கு? இதற்கு முன்பே ஒரு விழா கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. நாங்கள் தேமே என்று நிற்கவைக்கப்பட்டோம். முக்கியமான விஷயம், முதலாளி வருகிறார் என்பதுதான்.  ஓல்ட்பாய் என்ற கொரிய படம் பார்த்தேன். படம் பார்த்து அது சொல்லும் விஷயங்களை புரிந்துகொள்வது கடினம்தான். இந்த விஷயத்திலிருந்து வெளியே வருவது சிரமமாகவே இருக்கும். தேவையில்லாமல் ஒருவரின் வாழ்க்கை பற்றி வதந்தி பரப்புவதன் பாதிப்பை ஒருவனுக்கு எப்படி பாதிக்கப்பட்டவன் புரிய வைக்கிறான் என்பதுதான் கதை. அண்ணன், தங்கை, அப்பா, மகள் உறவு அதுபற்றிய உண்மை அறியாமலே காமத்தினால் ஒன்றாக சேர்ந்து ஒன்றாக நொறுங்குகிறது. சமூக விதிகளின்படி வாழ்வதா, மனம் சொன்னபடி வாழ்வதா என்பதுதான் படத்தின் அடிப்படைக் கேள்வி. திகைக்

அமெரிக்கர்களின் தனிமையைப் பேசும் நூல்! - நூல் அறிமுகம் ஜூலை மாதம் 2021

படம்
              ரேஷர் பிளேட் டியர்ஸ் எஸ் . ஏ . காஸ்பை தனது மகன்களையும் , தம்பதிகளையும் கொன்ற கொலைகாரர்களை அவர்களின் தந்தை யர் இருவரும் சேர்ந்து எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதுதான் கதை . நிகழ்கால கதையின் நடுவே பழிவாங்குபவர்களின் கடந்தகால வாழ்க்கையு்ம் வந்துபோகிறது . அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் நடைபெறும் வன்முறையான சம்பவங்கள் கொண்ட கதை . கோஸ்ட் ஃபாரஸ்ட் பிக் சுயன் ஃபங்   அப்பா இறந்த பிறகு அவரைப் பற்றிய இறந்த கால விஷயங்களை மகள் எப்படி தெரிந்துகொள்கிறாள் என்பதைப் பற்றி இந்த நூல் விவரித்துச் செல்கிறது . இந்த கதையில் மகளின் மனதிலுள்ள கேள்விகள் , குடும்பம் , அவளுக்கு கிடைத்த அன்பு பற்றிய ஏராளமான விஷயங்களுக்கு பதில் கிடைக்கிறது . சீக் யூ கிரிஸ்டன் ராட்கே வரலாறு , தனிமை , ஒருவருக்கொருவர் எப்படி தகவல் தொடர்பு கொள்வது என பல்வேறு விஷயங்களை விளக்கி கிராபிக் கட்டுரை நூலாக ஆசிரியர் எழுதியுள்ளார் .

தன்னைதானே உணரவைக்கும் ஒரு நெடும் பயணம்! - கார்வான்

படம்
              கார்வான் துல்கர் சல்மான் பெங்களூருவில் வேலை செய்பவர் . புகைப்படம் எடுப்பதை தொழிலாக வைத்துக்கொள்ள நினைப்பவரின் எண்ணத்திற்கு அவரின் அப்பா சம்மதிப்பதில்லை . இதனால் வேண்டாவெறுப்பாக ஐடி கம்பெனி ஒன்றுக்கு வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார் . அப்போது அவரின் அப்பா இறந்துவிட்டதாக தகவல் வருகிறது . அதனை கார்கோ நிறுவனம் ஒன்றில் அனுப்பி வைக்கிறார்கள் . ஆனால் அதில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது . துல்கரின் அப்பாவுக்கு பதிலாக கொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரின் உடலை அனுப்பிவிடுகிறார்கள் . இவரின் அப்பா உடல் கொச்சிக்கு மாற்றி அனுப்பப்படுகிறது . இப்படி செல்லும்போது இவர்களிடம் உள்ள உடலுக்கு சொந்தக்காரரான தாஹிரா என்ற பெண்மணியின் மகள் , ஊட்டியில் உள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறாள் . அவளையும் அழைத்துச்செல்லும்படி நேருகிறது . இதன்படி வேன் ஓட்டுநரான சௌகத் , துல்கர் , தான்யா என மூவரின் பயணம் தொடங்குகிறது . இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை மூவருமே அப்பாவினால் பாதிக்கப்பட்டவர்கள் , ஒருவருக்கு அப்பா கொடுமைக்காரர் , இன்னொருவருக்கு புரியாத புதிர் , இன்னொருவருக்கு அப்பாவைப் பார்க்கவ

சுயலநலமில்லாத அன்பு அனைத்தையும் சகித்துக்கொள்ளும்! அமரம் அகிலம் பிரேமா - ஜொனாதன் எட்வர்ட்ஸ்

படம்
    அமரம் அகிலம் பிரேமம்         அமரம் அகிலம் பிரேமம் ஜொனாதன் எட்வர்ட்ஸ் தமிழில் நாம் பார்த்து நெகிழ்ந்த அபியும் நானும் படம்தான். தெலுங்கில் வசனங்களை நறுக்கென்று எழுதி, பாசத்தில் சுயநலம் கூடாது என செய்தி சொல்லி படம் எடுத்திருக்கிறார்கள்.   படத்திற்கு பெரும் பலம் அப்பாவாக நடித்துள்ள ஶ்ரீகாந்த் ஐயங்கார். படத்தின் நாயகன் இவர்தான். படம் முழுக்க இவர் வருகிறார். நாயகன் அமர், அகிலாவாக நடித்த விஜய்ராம், சிவ்சக்தி சச்தேவ் ஆகியோர் நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார்கள். படத்தின் முக்கியமான மையம், அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள பாசம். காதல் மகளின் மனதில் பூக்கும்போது காணாமல் போகிறதா இல்லையா என்பதுதான். அருண் பிரசாத் பாத்திரத்தைப் பொறுத்தவரை அவரே அனைத்து முடிவுகளை எடுக்க நினைப்பதில்லை. மகள் தான் செய்யும், செய்யப்போகும் விஷயங்களை தன்னிடம் சொல்லவேண்டும் என நினைக்கிறார். ஆனால் காதல் வரும்போது கள்ளத்தனம் அனைவரின் மனதிலும் குடியேறும்தானே? அகிலாவுக்கும் அப்படியே ஆகிறது. அப்பா அருண், கடும்கோபமாகி இனி அவள் என் மகள் கிடையாது என அனைத்து அன்பையும் வெறுப்பாக்கி காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார். இதனால் எஞ்சினியர் ஆக

ஃபேன்டசி கதைகள் வழியாக முதலாளிக்கு ஐடியா சொல்லி ஹோட்டலை கைப்பற்றும் நாயகன்! - பெட்டைம் ஸ்டோரிஸ் 2008

படம்
        பெட்டைம் ஸ்டோரிஸ்     பெட்டைம் ஸ்டோரிஸ்  Director: Adam Shankman Produced by: Adam Sandler, Andrew Gunn, Jack Giarraputo Screenplay by: Matt Lopez, Tim Herlihy ஸ்டீக்கர் பிரான்சனுக்கு தன் தந்தையின் சிறிய ஹோட்டலை தான் வளரும்போது பெரிதாக மாற்றி கட்டவேண்டும் என்பது கனவு. ஆனால் தந்தைக்கு ஏற்பட்ட நஷ்டத்தால் ஹோட்டல் கைவிட்டு போகிறது. தந்தை அந்த ஹோட்டலை விற்றவரிடம் வைக்கும் ஒரே கோரிக்கை, தனது மகனை அந்த ஹோட்டலுக்கு நிர்வாகியாக நியமிக்கவேண்டும் என்பது. ஆனால் தோற்றுப்போனவர்களின் கோரிக்கை என்றைக்கு கச்சேரி ஏறியிருக்கிறது. எனவே, அவரின் மகன் ஸ்டீக்கர் ஹோட்டல் பணியாளராகவே இருக்கிறான். அதனை முன்னேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறான். ஆனால் அதன் முதலாளி அதனை கண்டுகொள்வதில்லை. கூடவே தனது மகளைக் கட்டிக்கொள்ளவிருக்கும் மணமகனுக்கு புதிய ஹோட்டலுக்கான நிர்வாக பொறுப்பை கொடுக்க நினைக்கிறார். இந்த நிலையில் ஸ்டீக்கர் தனது அக்காவின் குழந்தைகளை பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார். அவருக்கு அது பிடிக்கவில்லை. காலையில் பள்ளி ஆசிரியை ஜில் குழந்தைகளை பார்த்துக்கொள்வார். இரவில் ஸ்டீக்கர் பார்த்துக்

அன்புள்ள அப்பாவுக்கு.... மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு!

படம்
நாம் எப்போதும் அம்மாவிற்கு நன்றி கூறுகிறோம். அவளை நினைவுகூர்ந்து நெகிழ்கிறோம். அவள் அடையாளம் காட்டித்தான் அப்பா என்பவரை அறிகிறோம். வீட்டிற்கு, உறவுகளுக்கு, உணர்ச்சிகளுக்கு அம்மா வழிகாட்டுகிறார். புரிந்துகொள்ள உதவுகிறார்.  சமூகத்திற்கு, வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு அப்பா வழிகாட்டுகிறார். அவர் பெரியளவில் பாராட்டுகளில் பங்குகொள்வதில்லை. வெற்றியிலும் கூட ஒதுங்கியே நிற்கிறார். அப்பாவையே மகன் தன் முன்மாதிரியாக கருதுவது வரம்தான். அப்படி ஒரு அப்பா அனைவருக்கும் அமைந்துவிடுவதில்லை. சில விஷயங்களைப் புரிந்துகொள்ள நாம் உரையாடித்தானே ஆகவேண்டியதிருக்கிறது. அப்படி அதிகம் பேசாத தந்தைக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்த மின்னூல். உங்களுக்கு இந்த நூல் விரைவில் இலவசமாக கிடைக்கும். தரவிறக்கிக்கொள்ளலாம். இப்போது அதன் அட்டைப்படம் மட்டும். படம்:Pixabay

லவ் இன்ஃபினிட்டி: எதிர்த்துப் பேசினா தப்பா?

படம்
freepik லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: மீகா, வில்லி ஜான்சன் எனக்கு தோல்வி பயம்ங்கிறது புதுசு கிடையாது. ஆனால் நடக்கிற சமயம் எனக்கு பயங்கிற டென்ஷன் ஆகும். விரும்பியது கிடைக்கும்போது கரும்பாக இனிக்கின்ற மனமே நினைத்தது நடக்காமல் போனால் நெஞ்சம் கொதிப்பது ஏன்? சொல் மனமே உனக்கு Phone பண்ணலாம்னு நினைத்தேன். நீதான் ஆத்தா வீட்டில் இருக்கிறாய். எப்படி பேச முடியும்னு நினைத்து பண்ணலை. ஏன் அப்பாகிட்ட சண்டை போடற. சண்டை போட்டா. உன் பிரச்னை தீர்ந்திடுமா. (What is the problem? I don't Know) என்னைப் பாரு. எங்கப்பா என்னை கண்டபடி திட்டினாலும் நான் பேசாம அமைதியா இருந்துருவேன். ஏன்னா அவங்க கிட்டதான் பணம் வாங்கணும். நம்ம அப்பாதானே திட்டறாங்க. இதுக்குப் போயி எதுக்கு உன் மனசை கஷ்டப்படுத்திக்கிறே? நான் தனியா இருக்கும்போது நினைப்பேன். என்னடா நாம் இந்த 19 வது வயசுல இந்தளவு கஷ்டத்தை அனுபவிக்கிறோமேன்னு. ஆனால் எந்தவொரு கசப்பான நிகழ்வுகளுக்கு பின்னாடிதான் இனிப்பான நிகழ்ச்சிகள் நடக்கும். எக்சாம்பிளுக்கு என்னையே எடுத்துக்க. என்னைப் பாராட்டுகிற வாயாலேயே திட்டும் வாங்குவேன். ஆ