இடுகைகள்

எம்ஜிஆர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆறு ஆளுமைகளைப் பற்றிய வசீகர கட்டுரைகள்

படம்
                 தீராக்காதலி - சாரு நிவேதிதா எழுத்து பிரசுரம் இந்த நூல் ஆறு முக்கியமான சினிமா ஆளுமைகளை நம் கண் முன் வைக்கிறது. அவர்களது வாழ்க்கையை நாம் திரைப்படம் போல பார்க்கிறோம். அதற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் எழுத்தும் பேருதவி புரிகிறது. இவரது அற்புதமான எழுத்தாக்கத்தில் தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா, எஸ் ஜி கிட்டப்பா, எம்ஜிஆர், எம்ஆர் ராதா, கேபிஎஸ் ஆகியோரின் வாழ்க்கையை வாசிக்கும்போதே காட்சி கண்முன் விரிகிறது. நூலை படித்து முடித்து பதினைந்து நாட்களுக்கு பிறகு எழுதுவதால் சில விடுபடல்கள் இருக்கலாம். பொறுத்தருள்க. தீராக்காதலி என்பது கொடுமுடி பாலாம்பாள் கோகிலம், எஸ் ஜி கிட்டப்பாவின் மீது வைத்த காதலை அடிப்படையாக கொண்ட தலைப்பு. அதுவே நூல் தலைப்பாக இருப்பது சிறப்புதான். இதற்கான காரணம் கொடுமுடி கோகிலம் பற்றி சம்பவத்தை வாசிக்கும்போது வாசகர்கள் அறிய முடியும். மூன்று ஆண்டுகள்தான் இருவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். ஆனால், கோகிலம் இரண்டாவது மனைவியாக இருந்தாலும் கணவர் மீது பாகுபாடு இல்லாத எந்த இடத்திலும் குன்றாத மரியாதை, அன்பு, காதலை சாருவின் எழுத்த...

தன்னைச்சுத்தி நடக்குறதை கவனிக்கிறதும், திறந்த மனசோட இருக்கிறதும் பத்திரிகைக்காரனுக்கு முக்கியம்!

படம்
  பாலசுப்பிரமணியன், ஆனந்தவிகடன் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன்   பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன் சினிமாவில் இருந்து எது உங்களை பத்திரிகை நோக்கி ஈர்த்தது? எனக்கு சினிமா மேல எப்பவும் ஆர்வம் இருந்தது கிடையாது. சொல்லப்போனா, சினிமால இருந்ததே ஒரு நிர்பந்தம். பத்திரிகைக் கனவுதான் என்னைத் துரத்திக்கிட்டே இருந்தது. உங்களுக்கு பத்திரிகை ஆர்வம் எப்போது வந்தது? சின்ன வயசுலேயே. பனிரெண்டு வயசுலேயே கையெழுத்து பத்திரிகை நடத்தியிருக்கேன். சந்திரிகா அப்படின்னுட்டு. இப்போது வரும் பத்திரிகைகளைப் படிக்கிறீர்களா? இன்றைய தமிழ் இதழியலை எப்படி பார்க்கிறீர்கள்? ம்ஹூம்.. நான் எதையும் படிக்கிறதில்ல. கண்ணு சுத்தமா தெரியலை. எப்பவாது, எதையாவது வாசிக்கணும்னு தோணினா பேரனைவிட்டு வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கிறதோட சரி. வீட்டுல ஹிண்டு மட்டும்தான் வாசிப்பேன். ஆபீஸ்லதான் மத்த பத்திரிகைகள் வாசிக்கிறதெல்லாம். ஆபீஸோட போன பல விஷயங்கள்ல அந்த வாசிப்பும் ஒண்ணு.   ஒரு பத்திரிகை ஆசிரியராக , மிகவும் முக்கியமான தருணம் என எதைச் சொல்லுவீர்கள்? நான் ஆனந்தவிகடனில் இருந்த ஐம்...