இடுகைகள்

தோல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களைக் கொன்று தோலை உரித்து அறைக்கலன்களை உருவாக்கிய வினோதன் - எட்வர்ட்

படம்
  1957ஆம் ஆண்டு அமெரிக்க காவல்துறையினர் ஒரு அதிர்ச்சியான வழக்கை சந்தித்தனர். அவர்கள் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக வசதியான மனிதர் ஒருவரைப் பார்க்கச் சென்றனர். சென்ற இடம் ஒரு பண்ணை வீடு. 195 ஏக்கர் பரப்பு. அங்கு விசாரிக்க சென்றபோது செல்வந்தர் எட்வர்ட் கெயின் அங்கு இல்லை. ஆள் இல்லையே சுற்றுப்புறத்ததை பார்ப்போம் என காவல்துறை அதிகாரிகள் பண்ணை வீட்டுக்குள் நுழைந்தனர். சமையல் அறையில் ஏதோ ஒரு பெண் தலைகீழாக இருப்பது போல தெரிந்தது. என்னடா இது இப்படியெல்லாம் சீன பொம்மைகள் வந்துவிட்டனவா என்று பாரத்த காவலர்கள் மிரண்டனர். உண்மையில் ஒரு பெண்ணை தலையை மட்டும் வெட்டி முண்டத்தை தலைகீழாக எட்வர்ட் தொங்கவிட்டிருந்தார். இதுதான் டீசர். அப்படி இறந்த பெண்மணி பெர்னிஸ் வார்டன் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மேரி ஹோகன் என இருவரில் ஒருவர் என காவல்துறையினர் முடிவுக்கு வந்தனர். பிறகு வீட்டுக்குள் உள் அறைகளை எட்டிப் பார்த்தனர். வினோதமான நெடி மூக்கை வருடியது. நாற்காலிகளுக்கான குஷன் மனித தோலால் செய்யப்பட்டது. ஒரு சிறு பெட்டியில் பெண்குறி அறுத்து பதப்படுத்தப்பட்டிருந்தது.   குடல்களை குளிர்பதனப் பெட்டியில்

தோலில் உருவாகும் மோர்கன் ஸ்பாட்ஸ், ஆவண வகைப்பாட்டியலின் தந்தை! கேம்ப்பெல் டி மோர்கன், கார்ல் லின்னேயஸ்

படம்
  கேம்பெல் டி  மோர்கன் ( Campbell De Morgan  1811-1876) இங்கிலாந்தின் குளோவெல்லி நகரில் பிறந்தார். லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் மருத்துவம் படித்தார். பிறகு, மிடில்செக்ஸ் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார். இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்ட மருத்துவப் பள்ளிக்கு பல்வேறு உதவிகளைச் செய்ததோடு, பேராசிரியராக செயல்பட்டார்.  1861ஆம் ஆண்டு ராயல் சொசைட்டியில் உறுப்பினரானார்.புற்றுநோய் செல்கள், எப்படி பரவுகிறது என்பதில் ஈடுபட்டார். இதன் மூலமாக, செர்ரி ஆஞ்சியோமா எனும் சிவப்பு நிற தோல் வளர்ச்சி பிரச்னை பற்றி கண்டறிந்தார். மனிதர்களின் தோலில், வட்டமாக சிவப்பு நிறத்தில் சிறு கொப்புளம் போலத்தோன்றும். 30 அல்லது அதற்கு மேல் வயதுள்ளவர்களுக்கு இப்பிரச்னை ஏற்படுகிறது. இப்படி பாதிக்கப்பட்ட இடங்களை கேம்பெல்  டி மோர்கன் ஸ்பாட்ஸ் என்றும் மருத்துவர்கள் அழைக்கின்றனர்.தோலில் உருவான  சிறுகொப்புளம் பெரிதானால் அல்லது உடைந்து ரத்தம் வந்தால், மருத்துவரின் ஆலோசனை பெறுவது முக்கியம்.    https://en.wikipedia.org/wiki/Campbell_De_Morgan 2 கார்ல் லினாயஸ் ( Carl Linnaeus  1707 1778) பிறந்தது: ஸ்வீடன், ஸ்டென்புரோஹல

வயதாகும் போது உடலுக்குள் என்ன நடக்கிறது?

படம்
Illustration -tanga balamurugan   வயதாகும்போது என்ன ஆகிறது? பொதுவாக சிறுமிகள், ஆன்டி, அங்கிள் எனும்போதுதான் பேசிக்ஸ் ஷர்ட்டை ஆபரில் வாங்கி போட்டிருந்தாலும் கூட உள்ளுக்குள் சுர்ரென வலிக்கும். ஆகா, வயசாச்சே என கண்ணாடியைப் பார்த்தால், வடிவேலு கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து குரங்கு பொம்மை என சொல்லுவது போல இருக்கும்.  அந்தளவு குடும்ப சுமை, அலுவலகம் என அனைத்தையும் செய்துவிட்டு வந்தால் வயசாச்சு ப்ரோ, பூமர் அங்கிள் என உலகமே சொல்லிவிட்டு எளிதாக கடந்துபோய்க்கொண்டிருக்கும். டிப்பம் டிப்பம் டிப்பர டிப்பர என ஃபோக் மார்லியின் பாடலைக் கேட்டாலும் கூட உடலுக்குள் வயதாவதால் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொண்டுதான் ஆக வேண்டும்.  பொதுவாக ஒருவருக்கு வயதாகிறது என்றால் கண்ணில் தெரிவது தோல் சுருக்கமும், நரைமுடியும், உடலில் தளர்ச்சியும் வெளிப்படையாக தெரிவதுதான். இதெல்லாம் தாண்டி உள்ளுக்குள் என்ன நடக்கிறது? உறுப்புகளின் செயல்திறன் குறைந்துகொண்டே வரும். ஆத்தோ, சவர்மா சாப்பிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தால் ஐபிஎஸ் அல்லது ஃபேட்டி லிவர் என மருத்துவர பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்து மருந்து வாங்கிச் சாப்பி

மிருதங்க கைவினைஞர்களின் தாழ்வுணர்ச்சி கொண்ட வாழ்க்கை! - செபாஸ்டியன் குடும்பக்கலை - டிஎம் கிருஷ்ணா தமிழில் அரவிந்தன்

படம்
  செபாஸ்டியன் குடும்பக்கலை - காலச்சுவடு செபாஸ்டியன் குடும்பக்கலை டிஎம் கிருஷ்ணா தமிழில் டிஐ அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம் 195 ரூபாய் டிஎம் கிருஷ்ணா புகழ்பெற்ற வாய்ப்பாட்டு கலைஞர். கர்நாடக இசை உலகில் பலரும் இவரது பாடல்களை அறிவார்கள். பாடல்களை சபாக்களைக்  கடந்து பாடும் இடங்களும் கிருஷ்ணாவின் புகழ் பரப்பின. சூழலுக்கு ஆதரவான பாடல்களை பாடும் ஆர்வமும் திறனும் கொண்டவர். அவர், மிருதங்க கைவினைஞர்களைப் பற்றி ஆய்வுகள் செய்து, நான்கு ஆண்டுகள் உழைத்து எழுதிய நூல்தான் இது.  ஆங்கிலத்தில் வெளியான நூலின் தமிழ் வடிவம். நூலின் வெளியீடு மார்ச் 3 அன்று வெளியாகிறது. சென்னை புத்தகத் திருவிழாவில் நூலை வேகமாக அச்சிட்டு கொண்டு வந்திருக்கிறார்கள். நூலின் ஆராய்ச்சி தகவல்கள், ரோஹினி மணியின் ஓவியங்கள், கூறுப்படும் பல்வேறு சாதி பற்றிய ஆய்வுத் தகவல்கள் வாசகர்களை வியக்க வைக்கிறது.  பறையர்கள் எனும் சாதியினர் சாதிக் கொடுமை தாங்காமல் கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள். இவர்கள்தான் மாடு, எருமை, ஆடு ஆகிய விலங்குகளின் தோல்களை வாங்கி மிருதங்கங்களை உருவாக்குகிறார்கள். இதனை வாசிக்கும் பிராமணர்கள், இசைவேளாளர்கள் இதற்கான அங்கீகாரத்தை

ஒவ்வாமை புதிய மின்னூல் வெளியீடு - அமேஸானில் வாசிக்கலாம்

படம்
  புதிய மின்னூல் வெளியீடு ஒவ்வாமை ஒவ்வாமை என்பதை ஆங்கிலத்தில் அலர்ஜி என அழைக்கிறார்கள். இன்று, தொற்றுநோய்கள் பாதிப்பை பற்றி பலரும் பேசினாலும் கூட, அதற்கு நிகராக வளர்ந்து வரும் பிரச்னையாக நோயாக ஒவ்வாமை உள்ளது. இதனை குணப்படுத்த முடியாது. ஒவ்வாமை தரும் பொருட்களை சாப்பிடாமல், உடலுக்குள் செல்லாமல் தடுத்தால் உடல்நலம் சீர்பெறும். உண்மையில் ஒவ்வாமை என்றால் என்ன, அதை ஏற்படுத்துவது என்னென்ன பொருட்கள், நாம் வாழும் இடம், பயன்படுத்தும் பொருட்கள், உண்ணும் உணவு என்னென்ன பங்களிப்பை செய்கிறது என்பதைப் பற்றி நூல் விவரித்துள்ளது. இது சிறிய அளவிலான அறிமுக நூல்தான். ஆங்கிலத்தில் ஒவ்வாமையைப் புரிந்துகொள்ள சிகிச்சை செய்ய ஏராளமான நூல்கள் உண்டு. ஆனால் இந்த வகையில் தமிழில் இது புதிது. தமிழில் ஒவ்வாமையைப் பற்றிய எளிதாக தெரிந்துகொள்ள பாதுகாப்பாக இருக்க இந்த நூல் உதவும். நூலை அமேஸானில் வாசிக்க ஸ்கேன் செய்யுங்க.... வெப்சைட் லிங்கை கிளிக் செய்தும் வாசிக்கலாம்.... https://www.amazon.in/dp/B09TJMVW5W

அலர்ஜியை சோதிப்பதற்கான பல்வேறு சோதனைகளை அறிந்துகொள்வோம்!

படம்
          ஒவ்வாமையைப் பொறுத்தவரை இதனை சாதாரண நோய்களைப் போல மருத்துவச்சிகிச்சை அளிக்க முடியாது . இங்கு நாம் மோதப்போவது நமது உடலின் கவசகுண்டலமான நோய் எதிர்ப்பு சக்தியுடன் . இதனால் மருத்துவர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பார்கள் ஒவ்வாமை என்று வரும் நோயாளியிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்பார்கள் . அவர்கள் வாழும் இடம் , சாப்பிடும் உணவுகள் , டயட் கடைப்பிடிக்கிறார்களா , அவர்களது படுக்கை எப்படி இருக்கிறது , செல்லப்பிராணிகளை படுக்கையில் படுக்க வைத்து உறங்குகிறார்களா , வேறு நோய்க்கான மருந்தை சாப்பிடுகிறார்களா என பல்வேறு விஷயங்களை கேட்பார்கள் . இதில் கிடைக்கும் பதில்களை வைத்துதான் ஒருவருக்கு என்ன மாதிரியான ஒவ்வாமை சோதனை செய்யவேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் . ரத்த சோதனை , தோல் சோதனை என இருவகையில் ஒவ்வாமையைக் கண்டுபிடிக்க சோதனை செய்கிறார்கள் . இதன்மூலம் ஒருவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு பொருட்களையும் , ஒவ்வாமைக்கான பாதிப்பு காரணிகளையும் கண்டுபிடிக்கலாம் . மூன்று ரத்த பரிசோதனை முறைகளை செய்து பார்ப்பார்கள் . முதல் இரண்டும் உடலில் கிருமிகளை எதிர்த்து போராடும் ஆன்ட

மருத்துவத்துறையில் இனவெறி அரசியல் உண்டு! - மலோன் முக்வெண்டே - மருத்துவ மாணவர்

படம்
                    மலோன் முக்வெண்டே இருபத்தொரு வயதான மலோன் முக்வெண்டே , லண்டனில் மருத்துவம் படிக்க சேர்ந்தார் . அங்கு அவருக்கு மருத்துவ ஆராய்ச்சிக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே வெள்ளையர்களைப் பற்றியதே . இதில் மிகவும் குறைவாகவே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் , பழுப்பு நிறத்தவர்கள் இருந்தனர் . இவர்களை கருத்தில் கொள்ளாமல் எப்படி நோய்களைப் பற்றிய முழுமையான முடிவுக்கு வருவது என்று நினைத்த மலோன் , இதற்காக நூல் ஒன்றை உருவாக்கியுள்ளார் . இணையத்தில் வலைத்தளம் ஒன்றையும் ஏற்படுத்தியிருக்கிறார் . அவரிடம் பேசினோம் . மைண்ட் தி கேப் என்ற முயற்சியைப் பற்றி கூறுங்கள் . எங்கள் கல்லூரியில் நாங்கள் தோலில் ஏற்படும் நோய்களைப் பற்றி படித்தபோது கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே வெள்ளை இனத்தவர்களுடையது . எனக்கு அப்போது தோன்றிய கேள்வி , பிற இனத்தவர்களுக்கு இந்த நோய் மாறுபடுமே , அவர்களுக்கும் இதேபோல இருக்குமா என்பதுதான் . இக்கேள்வியை ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்களுக்கு்ம் பதில் தெரியவில்லை . எனவே ஆசிரியர்கள் சிலரின் உதவியுடன் இணைந்து கிடைத்த புகைப்படங்களை இணைத்து கருப்பு நிறத்தவர்களின் தோலின் நி

உடலின் அற்புத பாதுகாப்பு கவசம் - தோல்

படம்
          pixabay           உடலைச் சுற்றிய கவசம் - தோல் நமது உடலிலுள்ள தோல் அளவுக்கு நோயிலிருந்து நம்மைக் காக்கும் கவசம் வேறு இல்லை . நீர் உள்ளே போகாது , புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து காக்கிறது . உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது , வியர்வை மூலம் குளிர்ச்சி செய்வதும் கூட தோல்தான் . பல்வேறு அடுக்குகளாக உள்ள தோல் காயங்களிலிருந்தும் உடலைக் காக்கிறது . வியர்வை , வெளிப்படையாக தெரியும் கவசம் , உறுதித்தன்மை ஆகியவற்றை தோலின் முக்கியமான அம்சங்களாக கூறலாம் . வெளியே ஏப்ரல் மாத வெயில் காய்ந்தாலும் அல்லது எரிமலையே கூட வெடித்து லாவா உருகி ஓடினாலும் உடலின் வெப்பநிலை 36 முதல் 38 டிகிரி செல்சியஸிற்குள்தா்ன் இருக்கவேண்டும் . மூளை புத்திசாலித்திற்கான ஆதாரம்தான் என்றாலும் அதனால் வெப்பத்தை பொறுக்க முடியாது . 42 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை அதிகரித்தால் அது உயிருக்கே ஆபத்து . தோல் முழுக்க பல லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன . இவை எல்லாம் சேர்ந்து வேலைபார்த்துத்தான் தினசரி லிட்டர் கணக்கான வியர்வையை வெளியேற்றுகிறது . சில மனிதர்களுக்கு ஒரு மணிநேரத்தில் மூன்று லிட்டர் வியர்வை

கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் பல்வேறு நிறுவனங்களின் முயற்சி! - உணவு, ஆடை ஆகியவற்றில் பரவும் புதிய பாணி

படம்
                  சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்தும் உலகம் ! கடந்த மார்ச்சில் ஆங்கிலேயரான ஸ்டெல்லா மெக்டார்டினி தன்னுடைய உடையில் மைலோ காளான்களை பயன்படுத்தினார் . இதுதான் உலகில் முதல் சூழலுக்கு உகந்த பொருள் என்று கூறப்படுகிறது . ஆய்வகத்தில் வளர்க்கப்படும் மைசீலியம் என்ற பொருளைப் பயன்படுத்தி தோலுக்கு பதிலாக இதனை உருவாக்கியுள்ளனர் . எதற்கு இந்த முயற்சி , சூழலில் ஏற்படும் மாசுபாடுகளை குறைக்கும் முயற்சிதான் . பெரும் ஃபேஷன் பிராண்டுகளும் இந்த முயற்சியில் இணைந்துள்ளன . பிரெட்டில் பயன்படுத்தும் சீஸைக்கூட பாலிலிருந்து தயாரிக்காமல் அதனை தாவர புரதம் சார்ந்து உருவாக்கி பயன்படுத்தினால் கார்பன் வெளியீடு குறையும் என கண்டுபிடிப்பாளர்கள் மூலையில் உட்கார்ந்து யோசித்து செயல்படுத்தி வருகிறார்கள் . விலை சற்று அதிகமாக இருந்தாலும் சூழலுக்கு அதிக மாசுபாடு ஏற்படுத்தாத பொருள் என்பதில் பெருமை கொண்டவர்களாக இருக்கிறார்கள் . இந்தியாவில் இப்படி சூழலுக்கு உகந்த இறைச்சியை தயாரிக்கும் பல்வேறு பிராண்டுகள் உருவாகியுள்ளன . எவால்வ்டு புட்ஸ் , வெஜ்ஜி சாம்ப் , குட் டாட் , வெஸ்லே , வெஜி

நியாண்டர்தால் மனிதர்களிடமிருந்து நவீன மனிதர்கள் பெற்ற பழக்கவழக்கங்கள்!

படம்
        நாம் தினசரி செய்யும் செயல்பாடுகளை கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா ? அதில் ஒரு தொடர்புத்தன்மை உண்டு . காலையில் எழுவது பல் துலக்காமல் டீ குடிப்பது , பதற்றத்தில் நகம் கடிப்பது , யோசிக்கும்போது ஆட்காட்டி விரலுக்கு அடுத்த நீ்ண்ட விரலை மேசையில் தட்டுவது , தோளை அடிக்கடி குலுக்குவது , கண்களை விரித்து பார்ப்பது , அணிந்துள்ள பிரெஸ்லெட்டை ஜெபமாலை ஆக்குவது இப்படி பலரது மேனரிசங்கள் நெடுங்கால பழக்கத்தில் உருவானவைதான் . இவை ஒருநாளில் உருவாகிவிடவில்லை எனவே மூளையிலிருந்து இதனை நீக்குவதும் கடினம் . நியாண்டர்தால் மனிதர்கள் என்பதை பல்வேறு அகழாய்வு செ்ய்திகளில் படித்திருப்பீர்கள் . இதற்கு நியாண்டர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்கள் என்று பொருள் . இந்தப்பகுதி ஜெர்மனியின் மேற்குப்பகுதியில் உள்ளது . நவீன மனிதர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தவர்கள்தான் நியாண்டர்தால் மனிதர்கள் . இவர்கள் ஐரோப்பாவில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது . இவர்களின் மரபணுக்களில் இருந்துதான் நமது டிஎன்ஏ மாறுதல் ஏற்பட்டு தோலின் நிறம் , முடியின் நிறம் , உறக்கம் , மனநிலை , புகைபி