இடுகைகள்

வன்முறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாரம் முழுக்க காவல்துறை அதிகாரி, வார இறுதியில் கொலையாளி! விஜிலாண்டே

படம்
  விஜிலாண்டே மாங்கா காமிக்ஸ்  கொரியா இந்தக்கதையில் நாயகன், ரௌடி ஒருவனால் பாதிக்கப்பட்டு தாயை இழந்தவன்.அதாவது, அம்மாவை ரௌடி அடித்து உதைத்து படுகொலை செய்துவிடுகிறான். நீதிமன்றம் குற்றவாளிக்கு மெலிதான தண்டனை கொடுத்துவிட்டு விட்டுவிடுகிறது. இது நாயகனை பாதிக்கிறது. சிறுவனாக இருப்பவன், பெரியவனாகி குற்றவாளிகளை அடியோடு அழிப்பதாக உறுதி எடுக்கிறான். அதற்கு காவல்துறையே சரியான வழி என அங்கு வேலைக்கு சேர்கிறான். அவனது வயதில் உள்ளவர்களில் கராத்தே, ஜூடோ, ஜிஜூட்சு ஆகியவற்றை சிறப்பாக கற்றவர்கள் யாருமில்லை என்று பெயரும் புகழும் எடுக்கிறான். உங்களுக்கு இப்போதே புரிந்திருக்கும். யார் விஜிலாண்டே என்று. நாயகன்தான் குற்றவாளிகளை ஹூடி அணிந்துகொண்டு சென்று கை முஷ்டிகளால் தாடையை பெயர்த்து குத்து குத்தென குத்தியே கொல்கிறான். வேறு எந்த ஆயுதங்களும் கிடையாது. ஒருவகையில் அப்படி கொல்வது நாயகனுக்கு ஆத்ம திருப்தியை தருகிறது.  கொரியாவில் நீதித்துறை கறைபடிந்த ஊழல் புரையோடியது. இதன் காரணமாக பள்ளியில் கேலி சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அடித்து உதைத்தல், குடும்ப வன்முறை என எவற்றுக்கும் நீதித்துறை கடுமையான த...

அதிமேதாவியின் பார்வையில் உலகம்!

படம்
இந்த நாயகன், 12 ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டு கொத்தடிமையாக வேலை செய்ய வைக்கப்பட்டவன். பின்னர், போலீசாரால் மீட்கப்படுகிறான். மெல்ல உலகை புரிந்துகொண்டு சாதுரியமாக வாழத் தொடங்குகிறான். இதற்கு அவன் 12 ஆண்டுகளாக படித்த ஏராளமான நூல்கள் உதவுகின்றன. இக்கொரிய காமிக்ஸில் குழந்தை கடத்தலுக்கு எதிராக நாயகன் போராடுகிறான். நாயகன் வூஜின், ஆளுமை பிறழ்வு கொண்டவன். ஒருவன் இரக்கமானவன். இன்னொருவன் இரக்கமில்லாதவன். குற்றவாளிகளை தண்டிப்பவன். தனது அறிவை பயன்படுத்தி ஜிசாட் தேர்வில் வெல்கிறான். பல்கலையில் வணிக மேலாண்மையில் சேர்கிறான். யூட்யூப்பில் கடத்தப்பட்டு உதவிகோரும் இளம்பெண் பற்றி அதிகாரி கிம்முக்கு தகவல் சொல்கிறான். அவர் அதை விசாரித்து பார்த்து உண்மையை அறிகிறார். அச்சம்பவம் தொடங்கி வூஜின் சிக்கலான குற்ற வழக்குகளில் உதவி செய்யத் தொடங்குகிறான். பதிலுக்கு உணவும், பணமும் கிடைக்கிறது. பல்கலை நண்பனின் உறவினருக்கு உணவக வணிகத்தில் உதவி தன்னுடைய புத்திசாலித்தனத்தை சோதித்து பார்க்கிறான். இதற்காக தனது கதையை பத்திரிகைகளில் வருமாறு செய்கிறான். நாயகனின் நோக்கம், எளிமையாக சாதாரணமாக வாழ்வது.... இதை அவன் கூறுவ...

பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை பற்றிய காரண காரியங்களை விளக்கும் அம்பேத்கர்!

 பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை பி ஆர் அம்பேத்கர் தமிழில் மகாதேவன் கிழக்கு பதிப்பகம் அம்பேத்கர் எழுதிய நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டால் அதற்கு பின்னால் என்ன காரணம் இருக்க முடியும்? முஸ்லீம்களை அவர் விமர்சித்து எழுதியிருக்கக்கூடும். சரிதான். அந்த வகையில் முஸ்லீம்களை விமர்சிப்பதோடு, அவர்கள் படையெடுப்பு வழியாக இந்தியா அடைந்த சேதம், கோவில்கள் இடிப்பு, மக்கள் பலி என பலவற்றையும் அம்பேத்கர் ஆவணப்படுத்தி எழுதியுள்ளார்.  நூலில் அவர் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை தனது போக்கில் அணுகி அதற்கான காரண காரியங்களை விளக்கி எழுதியுள்ளார். இதை ஆதரிக்கும், எதிர்க்கும் தரப்புகளின் உள்நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.  நூலைப் படித்து எழுதும்போது இந்திய ஒன்றியத்தின் சுதந்திர தினம் கடந்துபோய்விட்டது. ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தான் இந்தியா பிரிவினை பற்றி பேச, ஆலோசிக்க, சரியான காலம்தான். நூலில், அம்பேத்கர் முஸ்லீம்கள் ஏன் தனிநாடு கேட்கிறார்கள், அதற்கான தேவை என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். அதேசமயம் இந்து மகாசபையினரின் இந்து அரசு அமைந்தால் ஏற்படும் பாதகங்களையும் அவர் கூறியிருக்கிறார். இந்துக்களின் சா...

குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை!

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி உளவியல் ரீதியான ட்ராமா என்றால் என்ன? ஒருவரின் இளம் வயதில் உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்திருக்கலாம். இப்போது மூன்றாம் உலகப்போருக்கு உலகம் தயாராகி வருகிறது அல்லவா? அதுபோல...தீவிரவாதத்தால் குடும்ப உறுப்பினர்கள் இறப்பு,மோசமான கோர விபத்துகள், உதவிக்கு ஆட்கள் இன்மை, ஆகியவை ஒருவரை உளவியல் ரீதியாக பாதிக்கிறது. ஒருவருக்கு நேரடியாக நடக்கும் சம்பவங்கள் அல்லது மோசமான சம்பவங்களை காண்பதும் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக போர். போரால் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதில் ஈடுபடும் ராணுவ வீரர்களும் வாழ்நாள் முழுக்க மனநல குறைபாடுகளில் சிக்கி சிதைகிறார்கள். இதில் இயற்கை பேரிடர்களும் சேர்த்திதான். சுனாமி, நிலநடுக்கம், நிலச்சரிவு, புயல் ஆகியவற்றையும் உளவியல் பாதிப்பு ஏற்படுத்துவனவற்றில் இணைக்கலாம்.  மோசமான சம்பவங்கள் பற்றி ஆராய்வது அவசியமா? தனிநபராக தேவையா என்றால் இல்லைதான். ஆனால், உளவியல் ஆய்வுக்காக அத்துறையில் ஆர்வம் காட்டுபவர்கள் வரலாற்றை தேடி உளவியல் ரீதியான பிரச்னை கொண்டவர்களை அடையாளம் காண்கிறார்கள். ...

தலித் - உயிர் வாழும் பிணம் மின்னூல் கிடைக்கும் வலைத்தளங்கள்!

      தலித் - உயிர் வாழும் பிணம் பத்திரிகையாளர் விடி ராஜசேகர் எழுதிய ஆங்கில நூலின் தழுவல்.  ஆர்ச்சீவ் தளத்தில் இருந்து நூலை வாசிக்கலாம். தரவிறக்கிக்கொள்ளலாம். https://archive.org/details/20250610_20250610_0146  வீ டிரான்ஸ்பர் தளம் - கோப்பு மூன்று நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். https://we.tl/t-ONNByEgTOx

இந்தியர்களுக்கு முதல் முன்னுரிமை சாதி, துணைச்சாதிகள்தான், பிறகுதான் நாடு!

படம்
பிரிட்டிஷார் இந்தியாவை ஆளும்போது, ஒரே அரசாக மக்களை ஒன்றாக வைத்திருந்தனர். அவர்கள் 1947ஆம் ஆண்டு வெளியேறியவுடன் நாடு இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிந்துவிட்டது. நாகா பழங்குடிகளுக்கு தனி மாநிலம் வழங்கப்பட்டது. தனி மாநில கோரிக்கையை பலரும் கேட்டு வருகிறார்கள். சீக்கியர்கள், காலிஸ்தான் எனும் தனி நாட்டுக்காக போராடி வருகிறார்கள். இந்துமதம், இந்தியர்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்குகிறது. எனவே நாடு, பல்வேறு பிரிவு, துணைப்பிரிவுகளாக பிரிந்து வருகிறது. இந்தியாவில் இப்போது இந்தியர்கள் என யாருமே இல்லை. இந்தியர்களுக்கு முதல் முன்னுரிமை சாதி, துணைச்சாதிதான். இதற்கெல்லாம் பிறகுதான் நாடு வருகிறது. இந்தியாவுக்கும் வெளிநாட்டினர் இதை எளிதாக அறிந்துகொள்ள முடியும். அமெரிக்காவில் உள்ள இந்துகள் கூட தீண்டாமை, சாதி விதிகள், பிரிவினைகளை கடைபிடிக்கிறார்கள். இந்துகள் அவர்கள் போகும் இடங்களிலெல்லாம் அவர்களது சாதியை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்களுக்கு நடக்கும் அநீதி, ஆரியர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு செய்வதை ஒத்தது. 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்க...

இந்து என்பதன் அர்த்தம் அனைத்தையும் தனித்தனியாக பிரிப்பது!

படம்
    இந்து மத அதிசய கொள்கை - ஒற்றுமை அல்ல பிரிவினையை ஊக்குவிக்கிறது! வெளிநாட்டிலுள்ள தோழர்களுக்கு, இந்தியா ஏன் இப்படி இருக்கிறது என்று மனதில் கேள்வி எழலாம். எதனால் இப்படி வினோதமாக நடந்துகொள்கிறார்கள், எதனால் இந்த நாடு அழிந்துகொண்டே வருகிறது என பல்வேறு கேள்விகள் எழலாம். அதற்கு எல்லாம் இந்து மதத்தில் பதில் இருக்கிறது இந்து மனம் அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்துமதம் ஒற்றுமையை விட பிரிவினையை உருவாக்குகிறது. இந்து என்பதன் அர்த்தம், ஒன்றாக கலப்பது அல்ல, அனைத்தையும் தனியாக பிரிப்பது. அதன் முக்கியமான கொள்கையே பிரிப்பதுதான். பிரிவினைக்கு உதவுவதுதான் சாதி, தீண்டாமை ஆகியவை. பிரிவினையை தீவிரப்படுத்த தீண்டாமை உதவுகிறது. இந்த வகையில் பல்வேறு இனக்குழு மக்களையும் உள்ளுக்குள்ளேயே நாம் பிரித்து வைத்துவிட முடியும். இந்து இந்தியா என்பது ஒரே நாடு கிடையாது. அப்படி இருந்ததும் இல்லை. இனிமேலும் ஒரே நாடாக இருக்கவும் முடியாது. சாதி அல்லது அதன் துணைப்பிரிவு என்பது தனிப்பட்ட நாடாக மாறுகிறது. தேசியவாதிகளின் சிறை என்று கூட கூறலாம். மொழி மக்களை பிரிக்கிறது. இந்துக்கள், தீண்டத்தகாதவர்கள் கம்பி வேலியால் ...

இந்து மதத்தை முற்றாக அழித்தால்தான் தீண்டாமை ஒழியும்!

படம்
  இந்து மதத்தை முற்றாக அழித்தால்தான் தீண்டாமை ஒழியும்! தீண்டத்தகாதவர்களை ஆளும் வர்க்கம், அரசு, இடதுசாரிகள் தொடர்ச்சியாக கீழே இழுத்து தள்ளி வருகிறார்கள். இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால், சாதிமுறை அப்படியேதான் உள்ளது. சாதிமுறை தொடரும்போது அதைப் பின்பற்றி தீண்டாமையும் அப்படியே அழியாமல் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆளும் வர்க்கம், இதை அறிந்தும் அதை அழிக்காமல் அப்படியே வளரவிட்டுவருகிறது. சாதிமுறை அழிவது என்றால் இந்துமதம் அழிவது என்றே அர்த்தமாகிறது. ஒரு இந்து, இந்தியாவைக் காக்க இந்துமதத்தை அழிக்க முன்வருவாரா? தீண்டாமையை அப்படியே வளரவிடுவதால், ஆளும் வர்க்கத்திற்கு நிறைய சமூக பொருளாதார பயன்கள் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமாக தீண்டத்தகாத மக்களின் வாக்குகளைப் பெற முடிகிறது. வட்டியில்லாத கடன்களை வழங்குவதைப் போல வாக்கு வங்கியாக மக்கள் இருக்கிறார்கள். தீண்டத்தகாதவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் வறுமையில், பலவீனமானவர்களாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டவர்களாக, ஒருங்கிணைக்கப்படாதவர்களாக உள்ளனர். சாதி, துணைசாதி பிரிவுகள் என பலவும் அவர்களை ...

தீண்டத்தகாதவர்கள் பிறப்பும், வாழ்வும், இறப்பும் என்றும் மாறாதவை!

படம்
  நடைமுறையில் அகிம்சை இந்துக்களின் அகிம்சை முறை எனும் கருத்தில் வெளிநாட்டினர் எளிதாக ஏமாந்துபோய்விடுகிறார்கள். உலகிலுள்ள கொடூரமான வன்முறை கொண்ட சமூகம் இந்துக்கள்தான். இவர்கள்தான் அகிம்சையை உடைத்து எறிபவர்களாக இருக்கிறார்கள். ஒரு உயிரைக் கொல்வது, காயப்படுத்துவது தவறு, அதை செய்யக்கூடாது என்று தொடக்க கால உபநிஷத்தில் கூறப்படவில்லை. விலங்குகளை காயப்படுத்தக்கூடாது என பார்ப்பனர்களில் ஒரு பிரிவு கூறுகிறார்கள். ஆனால், அப்படி கூறுவதன் அர்த்தம் அந்த செயலை எதிர்ப்பதால் அல்ல. அவற்றை தேவையில்லை என்று கருதும் மனப்பான்மையால் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தத்துவவாதி ஆல்பெர்ட் ஸ்வெய்ட்சர் கூறினார். இந்துமதம், சகிப்புத்தன்மை, அகிம்சை ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது என கூறுவது கருப்பு பொய் ஆகும். இந்துக்களின் சகிப்பற்ற தன்மையே தீண்டாமையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. வரலாற்று ரீதியான ஆவணங்களில் இந்து மன்னர்கள், பௌத்தர்களை, சமணர்களை படுகொலை செய்த சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று உயர்சாதி இந்துவும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியருமான ரோமிலா தாப்பர் கூறினார். வரலாற்று அடிப்படையில், அகிம்சை, சகிப்புத்...

சிறுவயது குடும்ப வன்முறையால் உளவியல் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும் உளவுத்துறை அதிகாரி!

படம்
  சிறுவயது குடும்ப வன்முறையால் உளவியல் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும் உளவுத்துறை அதிகாரி! மராஸ்லி துருக்கி தொடர் இருபத்தாறு எபிசோடுகள் யூட்யூப் பழைய புத்தக கடையை முன்னாள் ராணுவ வீரர் நடத்திக்கொண்டு இருக்கிறார். அவர் பெரிதாக யாரிடமும் பேசுவதில்லை. டீ கொண்டு வருபவரிடம் கூட அவர் அதிகமாக பேசுவதால், காசைக் கொடுத்துவிட்டு தன்னுடைய உலகில் மூழ்கிவிடுகிறார். அவர் கையில் நாளிதழில் வெளியான துப்பாக்கிச்சூடு செய்தி இருக்கிறது. அதை படித்துக்கொண்டிருக்கும்போது, இளம்பெண் ஒருவர் வந்து நூல் ஒன்றைக் கேட்கிறார். அதற்கு, ராணுவ வீரர் அதுமாதிரியான நூல் என்னுடைய கடையில் கிடையாது என திட்டவட்டமாக கூறிவிடுகிறார். அந்தப்பெண் எரிச்சல் அடைந்தாலும் சமாளித்து பேசி புகைப்படம் எடுக்க செல்லவேண்டிய இடத்தை அறிந்துகொள்கிறார். அவர் அங்கு செல்லும்போது, அங்கு யாரோ ஒருவரை கட்டி வைத்து சித்திரவதை செய்கிறார்கள். அதை பார்த்து புகைப்பட கலைஞரான இளம்பெண் பதறி ஓடுகிறார். அதேநேரம், அவரைக்கொல்ல கொலைகாரர்கள் துரத்துகிறார்கள். நாயகன், தனது செல்ல நாயை தேடி அங்கு வரும்போது நாயகி மாஹூரைக் காப்பாற்றுகிறான். கொலைகார கூட்டம், முன்னாள் ராணு...

அரசுக்கு ஆதரவான ஊக்கமருந்து செலுத்திக்கொண்டு மண்டியிட்ட இந்திய ஊடகங்கள்!

படம்
      ஆட்சியாளர்கள் வீசும் எலும்புத்துண்டுக்கு மண்டியிட்ட ஊடகங்கள் இக்கட்டுரையின் தலைப்புக்கு இந்திய கேலிச்சித்திரக்கலைஞர் வரைந்த சித்திரம் ஒன்றுதான் காரணம். தொடக்க காலத்தில் இந்தியாவில் கேள்விகளை நேர்மையாக கேட்பதும், புலனாய்வு செய்திகளை வெளியிடுவதும் இயல்பாக நடந்து வந்தது. ஆனால், இப்போதோ ஊடகங்கள் முழுக்க அரசு என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்யும் கைப்பாவையாக, மடியில் அமர்ந்துகொள்ளும் நாய்க்குட்டிகள் போல மாறிவிட்டன. இந்தியாவில் ஒருகாலத்தில் பிரதமர் செய்த ஊழல்களை வெளிப்படையாக பத்திரிகைகளில் எழுதி, அதன் பொருட்டு ஆட்சி மாற்றம் நடந்ததெல்லாம் உண்டு. நடக்கவிருந்த தேர்தலின் முடிவு கூட மாறியது. இதையெல்லாம் அந்தக்காலம் என்று சொல்வதன் அர்த்தம், இன்று ஊடகங்களின் நிலை பரிதாபமாக மாறிவிட்டது. அதை யாரும் நம்புவதும் இல்லை. மரியாதையும்கூட முன்பைப்போல இல்லை. இன்று மதவாத பிரதமருக்கு நெருக்கமாக உள்ள வணிகர், அமெரிக்காவில் லஞ்சம் கொடுத்தார் என குற்றம் சாட்டப்படுகிறார். ஆனால், இந்திய ஊடகங்கள் அதைப்பற்றி எந்தவித செய்தியையும் வெளியிடவில்லை. அப்படியொரு அமைதி நிலவியது. இதையெல்லாம் கடந்த நாற்பது ஆண்டு...

சர்வாதிகார அரசுக்கு எதிரான போராட்டம்!

படம்
      மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள், வன்முறையை கையாளக்கூடியதாக கருதுகின்றன. போராட்டத்தில் அதுவும் ஒருவகை பாணி. மற்றபடி யாராவது தனிநபர்களை படுகொலை செய்வதோ, காவல்துறையை தாக்கி வீழ்த்துவதை அவர்கள் ஊக்குவிப்பதில்லை. பெருநிறுவனங்களை தாக்குவது கூட முதலாளித்துவத்தை எதிர்க்கும் கருத்தை வெளிப்படுத்த மட்டுமே. அதிலுள்ள ஊழியர்களை, தாக்குவதோ கொல்வதோ நோக்கமல்ல. மேலாதிக்கம் கொண்ட அரசுகள், தங்களை விமர்சிக்கும் தனிநபர்கள் அல்லது பத்திரிகை நிறுவனங்களை தாக்குவது, நெருப்பிட்டு எரிப்பது, இணைய இணைப்பை தடுப்பது என பல்வேறு வழிகளில் அச்சுறுத்தலை விடுக்கின்றன. ஆந்திரத்தில் ஆட்சிக்கு வந்த முன்னாள் நடிகர் தொடங்கிய கட்சி, தனது கட்சியை விமர்சித்த ஆங்கிலப் பத்திரிகையை குண்டர்கள் விட்டு தாக்கியது. அச்சு எந்திரங்களை அடித்து உடைத்தது. மேலதிகமாக, அங்குள்ள பெண் பணியாளர்களை மானபங்கம் செய்ய முயன்றது. இதுபோன்ற ஆட்களிடம் நீங்கள் அகிம்சை போராட்டம் சாத்தியம் என நினைக்கிறீர்களா என்ன? இதனால்தான் ரௌடிகளுக்கு புரியும் மொழியில் நாங்கள் பேசுவோம் என காவல்துறையினர் கூறுகிறார்கள். இதில் வெளிப்படும் செய்தி பற்றி சொல்பவருக்...

வன்முறைப் போராட்டத்திற்கான மூல காரணம்!

      வன்முறையைக் கொண்டாடும் திரைப்படங்கள் உலகமெங்கும் உண்டு. ஆங்கிலத்தில் வந்த திரைப்படங்களை அடியொற்றி இப்போது இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கூட அத்தகைய படங்களை உள்ளூர் மொழிகளில் உருவாக்குகிறார்கள். பழிவாங்குவதை, தங்கத்தின் மீது கொண்ட பேராசையை தாயின் கனவு, அண்ணனின் லட்சியம், தம்பியின் வாழ்க்கை என ஏதோ கதை சொல்லி கோடரி, கத்தி, வாள், துப்பாக்கி என பயன்படுத்தி ரத்தம் தெறிக்க கொல்கிறார்கள். இதில் புராண கோட்டிங் அடித்து தாழ்த்தப்பட்ட மனிதர்களைக் கொன்று அவர்கள் மீது சிறுநீர் கழிப்பவர்களை மக்கள் கேள்வி கேட்பதில்லை. பார்ப்பனன் தொந்தி வைத்துக்கொண்டு விளையாட்டை விளையாடுகிறான் என்பதை எதிர்க்கட்சிக்காரர் கூறிவிட்டார் என அதை ஊடகங்கள் ஊதிவிட்டு வெறுப்பை வளர்த்து வருகின்றன. இங்கு இறப்பவன் யார், அவனுக்கு சமூகத்தில் என்ன அந்தஸ்து, என்ன மதத்தைக் கடைபிடிக்கிறான் என்பதை அடிப்படையாக வைத்தே அவன் சாவுக்கான சமதர்ம நீதி தீர்மானிக்கப்படுகிறது. இப்படியான நிலப்பரப்பில் நாம் வன்முறையை கையில் எடுப்பதைப் பற்றி பேசுகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பனன், அவனுடைய ஆதரவு பெற்ற பொறுக்கித்தின்னும் இடைநிலை ச...

மக்கள் அதிகார அமைப்புகளில் அரசியல் வன்முறைக்கான இடம்!

படம்
      அரசின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் மையப்பொருளில், அடக்குமுறையைப் பற்றி பேசிவிட்டோம். ஆனால் அதற்கு பதிலடியாக மக்கள் அதிகாரத்துவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி இன்னும் பேசவில்லை அல்லவா? அதைப்பற்றி இனி பேசுவோம். இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளாகவே போராட்டம் நடக்கிறது. அதில், சில தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தும் போயிருக்கிறார்கள். போராட்டங்களை ஒடுக்க,போராட்டக்காரர்களை இழிவுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை செய்கிறது. காவல்துறையை ஏவி விவசாயிகளை அடித்து உதைக்கிறது. கண்ணீர் புகைகுண்டுகளை வீசுகிறது. சாலையில் வாகனங்கள் வராமல் இருக்க ஆணிகளை பதிக்கிறது. வேலைகளை அமைக்கிறது. இத்தனைக்கும் விவசாயிகள் போராட்டம், சீனாவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம் போன்ற கொரில்லா தாக்குதல் முறைகளைக் கொண்டதல்ல. அகிம்சை போராட்டத்திற்கு இத்தனை எதிர்ப்புகள், ஏளனங்கள், அடக்குமுறைகள். இப்படி அடிபட்டு, உதைபடும் விவசாயிகள் அனைவரும் பொறுமையாக இருப்பார்கள் என நம்ப முடியுமா? காவல்துறை நவீன ஆயுதங்களை வைத்திருக்கலாம். ரஷ்ய, அமெரிக்க, பிரான்ஸ் நாட்டு ஆயுதங்கள் அவர்களுக்க...

சமூகப் புரட்சியை தொடங்கி வெற்றி பெறுவது பற்றி விளக்கும் நூல்!

படம்
   ஏபிசி ஆப் அனார்சிசம் அலெக்சாண்டர் பெர்க்மன் ப.108 அனார்சிசம் என்பதை தலைவர் இன்மை, அல்லது அரசின்மை என்று கூறலாம். அந்த வகையில் அரசு இல்லாமல் நாடு எப்படி செயல்பட முடியும், அதன் சாத்தியங்கள் என்ன என்பதைப் பற்றி இந்நூல் ஆராய்கிறது. பொதுவாக, புரட்சி என்பதை முதலாளித்துவ ஊடகங்கள், குறிப்பாக ஆரியர்கள் நடத்துபவை, தவறாக சித்திரித்து வந்திருக்கின்றன. அப்படியான பல்வேறு பிரச்னைகளை முதல் இரண்டு அத்தியாயங்களில் நூல் எடுத்தாண்டு, பிறகு பேசும் மையப்பொருளுக்கு வேகமாக நகர்ந்துவிடுகிறது. நூலில், அரசின்மை கருத்துகளை விளக்கிய முக்கியமான தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றை வாசகர்கள்தாம் தேடிப் படித்துக்கொள்ளவேண்டும். எடுத்துக்கொண்ட மையப்பொருளை விவரிக்க அதிக நேரம் தேவை என்பதால் எழுத்தாளர் அலெக்சாண்டர், முக்கிய சிந்தனையாளர்கள் பற்றி அதிகம் விளக்கவில்லை. கட்டற்ற ஆராய்ச்சி, ஆய்வு வலைத்தளங்களில் அனார்சிசம் பற்றி தேடினாலே ஏராளமான கட்டுரைகள், நூல்களின் சில பகுதிகள் இலவசமாக வாசிக்க கிடைக்கின்றன. அவற்றைப் படித்து ஒருவர் இத்தத்துவத்தை நன்றாக புரிந்துகொள்ள முடியும். நூலில் தொழிலாளர்கள் மீது அத...