இடுகைகள்

ஆஷ்ரம் தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நரசிம்மராவ் இந்தியாவை நிறையவே மாற்றியுள்ளார்! பிரகாஷ் ஜா - திரைப்பட இயக்குநர்

படம்
  பிரகாஷ் ஜா  இந்தி சினிமா இயக்குநர்  பிரகாஷ் ஜா, ஓடிடி தளத்திற்காக ஆஷ்ரம் தொடரை எடுத்து வருகிறார்.  ஆஷ்ரம் தொடரின் மூன்றாவது பகுதியை எடுத்து வருகிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருக்கிறது? நான் ஆஷ்ரம் தொடரை எழுதுவது தொடங்கி  அதனை படமாக்குவது, அதன் இறுதிகட்டப் பணிகள் வரை அனுபவித்துத் தான் செய்கிறேன். நான் எப்போதும் ஆஷ்ரம் தொடரின் மையக்கருத்து பற்றி மிகவும் ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை. அப்படி செய்தால், இத்தொடரை உருவாக்கியிருக்க முடியாது. அப்படியே அந்த சிந்தனையில் சிக்கிக் கொண்டிருப்பேன். ஆஷ்ரம் தொடர் வேடிக்கையான ஒன்று. இதில் வரும் பாபாவின் பக்தர்கள் கூடுவார்கள். அவரைச் சேர்ந்த குழுவினர் அதிகரிப்பார்கள். இந்த நேரத்தில் மெல்ல அவரின் வீழ்ச்சி நடைபெறுகிறது. அதுதான் மூன்றாம் பாகத்தின் மையம்.  கடந்த ஆண்டு போபாலில் நீங்கள் படப்பிடிப்பு நடத்தியபோது, பஜ்ரங்தள் அமைப்பினரால் தாக்கப்பட்டீர்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நீங்கள் உங்கள் கதைகளை தணிக்கை செய்துதான் எடுக்கிறீர்களா? தணிக்கையெல்லாம் செய்யவில்லை. மேற்படி நீங்கள் சொன்ன தாக்குதல் நடந்தபிறகு படப்பிடிப்பை முடித்துக்கொண்டோம். என்னுடைய கதைகளை நான்