இடுகைகள்

எலியட் பரிசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இசையை திட்டமிட்டு உருவாக்குவதில்லை! - ரோஜர் ராபின்சன்

படம்
ரோஜர் ராபின்சன் கவிஞர் ரோஜர் ராபின்சன், தனது கவிதைகளுக்காக (தி போர்ட்டபிள் பாரடைஸ்) டி.எஸ். எலியட் பரிசை வென்றிருக்கிறார். அவரிடம் அவருடைய படைப்பு பற்றி பேசினோம்.  பரிசு வென்றது எப்படியிருக்கிறது? நான் கவிதை எழுதிவிட்டு அதற்கு பரிசுகளை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. கிடைத்திருப்பது மகிழ்ச்சி. முடிந்தளவு என்னுடைய கவிதைகளை மக்கள் வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இப்பரிசு மூலம் கவனம் ஈர்க்கப்பட்டு மக்கள் கவிதைகளை வாசித்தால் நல்லது.  எலியட் கூட அமெரிக்காவில் பிறந்தவர்தான். ஆனால் அவர் வாழ்ந்தது முழுக்க இங்கிலாந்தில். அதேபோல நீங்கள் இங்கிலாந்தில் பிறந்து டிரினாட்டில் சிறுவனமாக இருக்கும்போது சென்றிருக்கிறீர்கள்.  பின்னர், இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறீர்கள். படைப்புக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறது.  படைப்புக்கு டிரினாடுதான் சரியான இடம். ஆனால் இங்கிலாந்தில் வணிகச்சந்தை உள்ளது. பதிப்புக்கான பல்வேறு வாய்ப்புகள் இங்குள்ளன.  உங்களை கார்டியன் பத்திரிகை டப் கவிஞர் என்று அழைத்திருக்கிறதே? முன்னர் சில டப் ஆல்பங்களை நான் செய்திருக்கிறேன். அதனால் மக்கள் என்னை இப்பெயர