இடுகைகள்

அமைச்சர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் உண்மையைச் சொன்னால் விபத்தில் கொல்லப்படுவேன்! - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு

படம்
              சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்ய வேட்பாளர் , வேளச்சேரி இவர் மாநில அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாரத் நெட் திட்டத்தில் செய்த முறைகேடுகளை தட்டிக்கேடார் . அரசு எப்போதும் போல பாபுவுக்கு நிறைய நெருக்கடிகளைக் கொடுத்தது . இதனால் தனது ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு , கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துவிட்டார் . அவரிடம் பேசினோம் . அரசு பணியை விட்டு நீங்கள் விலக காரணம் என்ன ? ஊழலுக்கு எதிரான கோபம்தான் அரசுப்பணியை விட்டு விலக வைத்தது . உலகளவில் தரம் கொண்ட தமிழ்நாடு , அரசு அமைப்பு நிர்வாகத்தில் எப்படி சீர்குலைவுக்குள்ளானது என்பதை நீங்களே பார்க்கலாம் . கடந்த இருபத்தைந்து ஆண்டுளளாக எந்த ஒரு அமைச்சரும் தனது துறைசார்ந்து திட்டம் சார்ந்து எந்தவொரு கேள்வியையும் என்னிடம் கேட்டதில்லை . அவர்களுக்கு அக்கறை ஏலம் மற்றும் பணிமாற்றம்தான் . தேசிய சிறந்த நிர்வாக கட்சி என்ற அமைப்பை 2026 இல் தொடங்க திட்டமிட்டிருந்தேன் . ஆனால் அதற்குள் பாரத் நெட் பிரச்னை ஏற்பட்டுவிட்டது . எனவே நான் அரசுபணியை விட்டு விலகி அரசியலுக்கு வர நேரிட்டது . ஊழலுக்கு எதிரான