இடுகைகள்

பௌத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்பேத்கரின் பாதை - பௌத்த மதத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்!

படம்
  அம்பேத்கரின் பாதை - பௌத்த மதத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்! இந்தியாவில் ஆண்டுதோறும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தை தழுவுகிறார்கள் என குஜராத் மாநில பௌத்த அகாடமி செயலாளர் ரமேஷ் பேங்கர் கூறியுள்ளார். 1956ஆம் ஆண்டு, டாக்டர் பி ஆர் அம்பேத்கர், லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து பௌத்த மதத்திற்கு மாறினார். சுதந்திர இந்தியாவில் நடந்த முக்கியமான கவனம் கொள்ளப்பட்ட மதமாற்ற நிகழ்ச்சி எனலாம்.  தற்போதைய நேபாளம்தான் சாக்கிய நாடு. அங்கு, இளவரசராக இருந்த சித்தார்த்தர் உலக உண்மைகளை கண்டறிந்து துறவு மேற்கொண்டார். அவர் ஞானம் பெற்று சீடர்களுக்கு நல்வழியை உபதேசிக்க தொடங்கிய பிறகு உருவானதுதான் பௌத்த மதம். கி மு ஐந்தாம் நூற்றாண்டில் பௌத்தம் உருவாகி வளரத் தொடங்கியது.  இந்த மதம், வேதகால இந்துமதத்திற்கு எதிரான கருத்துகளை, செயல்பாடுகளைக் கொண்டிருந்தது. சிராமணி இயக்கத்தின் விளைவாக தோன்றிய பௌத்த மதம், பிராமண சடங்கு, சமூக அமைப்பிற்கு எதிரானதாக இருந்தது என வரலாற்று வல்லுநர் எல்பி கோம்ஸ் குறிப்பிட்டார்.  சமண மதம், பௌத்தத்தை விட காலத்தே சற்று முந்தியது. இதன்

தெரிஞ்சுக்கோ - மொழி, கொடி, மதம்

படம்
  தெரிஞ்சுக்கோ   - மொழி ஜிம்பாவே நாட்டில் பதினாறு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. ஒரு நாடு அங்கீகரித்துள்ள அதிகாரப்பூர்வ மொழிகளில் இதுவே அதிகம். இருபத்தொன்பது நாடுகளில் பிரெஞ்சு மொழி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. உலகம் முழுக்க உள்ள எண்பது சதவீத பேசப்படும் மொழிகளை ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களே பேசி வருகிறார்கள். உலக மக்கள்தொகையில் பாதிப்பேருக்கு இரு மொழிகளில்   எழுத, பேச தேர்ச்சி உண்டு. கத்தோலிக்க சர்ச்சின் தலைவர் போப் ஃபிரான்சிஸ் தனது செய்திகளை லத்தீன் உட்பட ஒன்பது மொழிகளில் மக்களுக்கு பகிர்கிறார். ஐ.நா அங்கீகரித்துள்ள ஆறு அதிகாரப்பூர்வ மொழிகள் இவைதான். அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிய மொழி. விசில் ஒலிகளைக் கொண்டுள்ள மொழியை சில்போ என்று அழைக்கிறார்கள். கானரி தீவுகளில் உள்ள லா கோமெரா மக்கள்   ஐந்து கி.மீ. அளவில் விசில் ஒலியைக் கொண்டு தகவல் தொடர்பு கொள்கிறார்கள். 12.3 சதவீத மக்கள் சீனாவின் மாண்டரின் மொழியைப் பேசுகிறார்கள்.   கொடி பாரகுவே நாட்டின் தேசியக்கொடி ஓராண்டில் நான்கு முறை மாற்றப்பட்ட வரலாறு கொண்டது. 1811-1812 காலகட்டத்தில் இப்படி சீர்திருத்த

மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் - தீக நிகாயம் - பௌத்த மறைநூல்

படம்
  தீக நிகாயம் நூல் அட்டை தீக நிகாயம் பௌத்த மறைநூல் மு கு ஜெகந்நாத ராஜா தமிழினி விலை ரூ.140 பாலி மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் ஆசிரியர். இதனால் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. பாலி மொழியில் உள்ள சொற்கள், சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்களைப் பற்றி முன்னமே விவரித்துவிடுகிறார்கள். இதனால் நூலை படிக்கும்போது பெரிதாக தடுமாறவேண்டியதில்லை. புத்தர் கூறியது என நிறையப் பேர் எழுதுவார்கள். ஆனால் இந்த நூல் இப்படியாக கேட்டிருக்கிறேன் என்று சொல்லி எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் பௌத்த மறைநூல் என கூறியதற்கு ஏற்பவே உள்ளது. மோசமில்லை. சமண புத்தர் ஓரிடத்தில் தனது சீடர்களோடு அமர்ந்திருக்கிறார். அங்கு அவரைப் பார்க்க பல்வேறு மன்னர்கள், விவசாயிகள், பிராமணர்கள், குறு நில மன்னர்கள், பிற சமயங்களை கடைபிடிக்கும் ஆட்கள் வருகிறார்கள். அங்கு வந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். இந்த முறையில் புத்தர் ஏராளமான சூத்திரங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே வருகிறார். அவர் கூறும் உபதேசங்களை மனம் ஒன்றிக் கேட்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டது போலவே வாசகர்களும் மனம் ஒன்றிப் படித்தால்தான் புத்தரின்

பௌத்தம்/ சமணத்தை போலச் செய்து சைவம் வென்ற வரலாறு - வைத்தியர் அயோத்திதாசர்/ஸ்டாலின் ராஜாங்கம்

படம்
  வைத்தியர் அயோத்திதாசர் நூல் ஸ்டாலின் ராஜாங்கம் வைத்தியர் அயோத்திதாசர் ஸ்டாலின் ராஜாங்கம் நீலம் ரூ.175                                           தமிழன் என்ற நாளிதழை நடத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். இவர், சித்த வைத்தியராக ராயப்பேட்டையில் மருத்துவமனை நடத்தியவர். மருத்துவமனை என்பதை விட வைத்திய சாலை என்று கூறலாம். தனது நாளிதழில் சித்த மருத்துவ சிகிச்சை பற்றியும், உண்ண வேண்டிய பல்வேறு மருந்துகளைப் பற்றியும் எழுதி வந்தார். பௌத்தம்/சமணம் ஆகிய மதங்களிலிருந்து எப்படி சைவம், வைணவம் போலச்செய்தல் முறையில் தன்னை வளர்த்திக்கொண்டது. அதற்கேற்ப திரிக்கப்பட்ட இலக்கியங்கள், பாடல்கள் உருவாக்கப்பட்ட விதத்தை பல்வேறு ஆதாரங்களின்படி நூல் விளக்குகிறது. நூலில் வரும் சிறுவன் ஒருவனுக்கு அயோத்தி தாசர் வைத்தியம் செய்விக்கும் முறை சிறுகதை போல உள்ளது. அந்தளவு நுட்பமான தன்மையில் விளக்கப்படுகிறது. அந்த சிறுவன்தான், வளர்ந்தபிறகு திரு.வி.க என்று அழைக்கப்பட்டவர். நூல் முழுக்க எண்ணெய், பூநீறு எனும் பூமிக்கடியில் உள்ள உப்பு, பத்திய முறைகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பேசப்படுகிறது. பௌத்தம் எப்படி

ஷாவோலின் கோவில் பண்பாட்டை இந்தியாவில் பரப்ப ஆர்வமாக உள்ளோம்!- ஷி யோங்ஷின், ஷாவோலின் கோவில்

படம்
                  ஷி யோங்ஷின் ஷாவோலின் கோவில் சீனா இந்தியாவில் உள்ள தற்காப்புக்கலையின் மற்றொரு பிரதிதான் சீனாவில் தற்போது கற்றுத்தரும் குங்க்பூ என நினைக்கிறீர்களா ? நான் இந்த கோட்பாட்டை நம்பவில்லை . ஷாவோலின் குங்க்பூ என்பது போதிதர்மாவை தனியாக உள்ளடக்கியது அல்ல . சீனாவில் தற்காப்புக்கலைக்கென தனி பாரம்பரியம் உள்ளது . இது இந்தியாவில் பயிலப்படும் தற்காப்புக்கலைகளிலிருந்து மாறுபட்டது . எங்கள் குங்க்பூ பல்வேறு ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி பெற்று மாறுபட்டு வருகிறது .    பல்வேறு நாட்டு தலைவர்களும் ஷாவோலின் கோவிலை பார்வையிட்டுள்ளனர் . இந்திய பிரதமர் மோடி இதனை பார்வையிடவேண்டும் என விரும்புகிறீரகளா ? நாங்கள் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி போதிதர்மா பற்றியும் , அங்குள்ள புத்த நடைமுறைகளை அறியவும் விரும்புகிறோம் . உங்கள் பிரதமர் ஆற்றல் வாய்ந்தவராக உள்ளார் . அவர் புத்தம் பற்றியு்ம் அறிவு கொண்டவராக உள்ளார் . அவர் எங்கள் கோவிலுக்கு வருகை தருவதோடு இந்தியாவிலும் எங்கள் வளர்ச்சிக்கு உதவுவார் என நினைக்கிறேன் .    கோவிலில் மாணவர்களுக்கு என்ன சொல்லித் தருகிறீர்கள் ?

காமம் ஓர் குடும்பத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகள்! - மொபியஸ் - கிம் கி டுக்

படம்
            மொபியஸ் கிம் கி டுக் ஒரு குடும்பத்தில் நடக்கும் மனைவியைத் தாண்டிய செக்ஸ் உறவு அந்த குடும்பத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை படமாக எடுத்துள்ளார் . காமம் எப்படி பல்வேறு உறவுகளை குலைக்கிறது . வாழ்வில் மறக்கமுடியாத வேதனையையும் , குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என்பதை பெரும்பாலும் வசன்ங்களே இல்லாமல் கிம் கி டுக் படமாக எடுத்துள்ளார் . நிறைய இடங்களில் இந்த இடத்தில் வசனங்கள் இருந்திருக்கலாமே என நாடகமயமாக படம் பார்த்த அனைவருக்கும் தோன்றும் . ஆனால் அப்படி நினைக்கும் காட்சிகளில் உடல்மொழியான நடிப்பு மட்டுமே நம்மை கலங்க வைக்கிறது . ஆண்குறியை வெட்டுவது , அதை வாயில் இட்டு மெல்லுவது , இன்னொரு இடத்தில் ஆண் குறி மீது வாகனங்கள் நசுக்கியபடி செல்வது , காமத்தை அனுபவிக்கும்போது வலியை இன்பத்துடன் ஏற்று மார்பகங்களை தடவுவது , காதுகளை நாக்கில் உரசுவது என பல்வேறு காட்சிகள் மிரட்டலாகவே உள்ளது . தந்தை தான் செய்த காரியத்தால் மகன் தண்டனை ஏற்பதை அறிந்து கண்ணீர் விடுவது , அதன் பிறகான அதற்கு பரிகாரமாக அவர் உதவி செய்யும் காட்சிகள் குற்ற உணர்வின் வெளிப்பாட