இடுகைகள்

காமராஜர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதிய உணவுத்திட்டம் - இன்றைய நிலை

படம்
  சேலம் மாவட்ட மதிய உணவு திட்டம், தமிழ்நாடு 1 கர்நாடக மாநிலம் பதிமூன்றாவது மாநிலமாக தனது மதிய சத்துணவு திட்டத்தில் முட்டையை சேர்க்கவுள்ளது. அண்மையில் வெளியான தேசிய குடும்ப நல ஆய்வில், ஐந்து வயதுக்குள் உள்ள சிறுவர்கள் சரியான ஊட்டச்சத்து இன்றி இருப்பதாக கூறியிருந்தது. இந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் 35 சிறுவர்கள் உள்ளனர். இப்பாதிப்பில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இறந்துபோகவும் வாய்ப்புள்ளது. இந்த வகையில் 20 சதவீதம் பேர் உள்ளனர்.  ஆனால் எப்பாடு பட்டாலும் அரசு சத்துணவில் முட்டையை சேர்க்க கூடாது சில கருத்தியல் மதவாத கும்பல்கள் குறுக்கீடு செய்து வருகின்றனர்.  தற்போது உள்ள மதிய சத்துணவு திட்டம்  பிஎம் போஷான் சக்தி நிர்மாண் என்ற திட்டத்தின் கீழ் வருகிறது. 2021ஆம் ஆண்டு அமலான தேசிய திட்டம் இது. இதற்கான மூலத்திட்டம் 1995ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது.  இந்த மதிய உணவு திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட திட்டம் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கானதாக இருந்தது. 2007இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இதனை எட்டாம் வகுப்பு வரை நீட்டித்தது.  1920ஆம் ஆண்டு மெட்ர

இந்தியாவின் முக்கியமான தருணங்கள்! இந்தியா 75

படம்
  இந்தியாவின் முக்கியமான தருணங்கள்  இந்தியா 75 அமைதியான மாநிலங்கள்  பிரிவினை நடந்து ரத்த ஆறு ஓடிய பிறகு, இந்திய மாநிலங்களில் நடைபெற்று முக்கியமான மாற்றம், குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் அதிகம் இருந்தால் அதனை தனியாக பிரிக்கலாம் என்று எழுந்த போராட்டம்தான். ஆனால் பிரதமர் நேரு இதனை ஏற்கவில்லை. தீர ஆலோசித்து மொழி சார்ந்து மாநிலங்களை பிரித்து எல்லைகளை அமைத்தார். எல்லை சார்ந்த பிரச்னைகள் மாநிலங்களுக்குள் ஏற்பட்டால் இந்திய ஒன்றியம் உடையாமல் காப்பாற்றப்பட்டது. இன்று பிரிவினை வாத சக்திகள் அதிகாரத்தைப் பெற்று தேர்தல் ஆதாயங்களுக்காக மாநிலங்களை உடைத்து பிரிக்க முயன்று வருகின்றனர். ஆனால் அன்று நேரு எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் மக்களையும், நாட்டையும் பற்றி மட்டுமே யோசித்தார். அதனால்தான் நாட்டிலுள்ள மாநிலங்கள் அமைதியாக வளர்ச்சியை நோக்கி திரும்பின.  பால் உற்பத்தியில் புரட்சி! வெண்மை புரட்சி என்றுதான் கூறவேண்டும். வர்கீஸ் குரியனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரு, இந்திராகாந்தி என பல்வேறு தலைவர்கள் தந்த ஆதரவு காரணமாக ஆனந்த் நிறுவனம் குஜராத்தில் உருவானது. இந்த கூட்டுறவு நிறுவனத்தினால் அங்கு வறுமையில் வ