இடுகைகள்

நினைவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலப்போக்கில் காலாவதியாகும் முக்கிய சம்பவங்களின் நினைவுகள்!

படம்
  பெற்றோர் அடித்து உதைப்பது, சகோதரன் குளிக்கும்போது காலை நீருக்குள் இழுத்து மூச்சு திணறச் செய்வது, ஆருயிர் நண்பன் என நினைப்பவன் காசு கையில் வந்ததும், பஸ் செலவுக்கு பணம் கொடுப்பது, நினைத்து பார்க்காத நேரத்தில் கிடைத்த காதலியின் முத்தம் என நிறைய விஷயங்கள் ஒருவரின் மனதில் இருக்கலாம். அதாவது தினசரி வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விஷயங்களும் மூளையில் சேகரமாகாது. அப்படி குறிப்பாக சேகரமாகும் விஷயங்களும் மெல்ல அழிந்துகொண்டே வரும். அப்படி அழிக்கப்பட்டால்தான் புதிய விஷயங்களை சேமிக்க முடியும்.  முக்கியம் என மனதில் நினைத்த விஷயங்கள் திடீரென அழிந்துபோகும்போது, நினைவுக்கு வராமல் போகும்போது சற்று வருத்தமாகவே இருக்கும். நினைவுகள் அழிவது மட்டும் பிரச்னை அல்ல. அவற்றை நீங்கள் சேமித்த வைக்கும் இடங்கள் கூட பிரச்னையானவைதான். இதை உளவியலாளர் டேனியல் ஸ்ஹாக்டர் ஏழு பாவங்கள் என்று கூறுகிறார். நினைவுகளின் தேய்மானம், நினைவுகூர தவறுவது, தடுப்பது, தவறான அங்கீகாரம், தேர்வு, பாகுபாடு, உறுதி ஆகியவற்றைக் கூறலாம்.  உங்கள் வாழ்க்கையின் பின்னே நடந்த விஷயங்களை திரும்ப நினைவுபடுத்துவது காலப்போக்கில், சற்று கடினமாகவே மாறும். பு

குழந்தையின் நினைவுகளில் உள்ள தாயின் உருவம்!

படம்
  1920ஆம் ஆண்டு உளவியலாளர்கள் நினைவு, கற்றல் ஆகியவற்றை பற்றி அறிய நரம்பியல் துறையை நாடினர். எனவே அதுபற்றிய ஆய்வுகளை நடைபெற்றன. இதில் முக்கியமான ஆய்வாளர் கார்ல் லாஸ்லி. இவர்தான் மூளையிலுள்ள செல்கள் பற்றி ஆய்வுசெய்து பிறருக்கான வாசலை திறந்து வைத்தார். அவருக்குப் பிறகு கனடா நாட்டைச் சேர்ந்த உளவியலாளரான டொனால்ட் ஹெப் முக்கியமான பங்களிப்பைச் செய்தார். ஹெப்பியன் கற்றல் அழைக்கப்படும் அவரது முறை இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.  ஒரு குறிப்பிட்ட செயலை திரும்ப திரும்ப செய்யும்போது மூளையிலுள்ள செல்கள் அணியாக திரண்டு நிற்கின்றன. இதன் விளைவாகவே நினைவுகள் உருவாகின்றன என்று டொனால்ட் கூறினார். தனது கொள்கையை விளக்க தி ஆர்கனிசேஷன் ஆஃப் பிஹேவியர்  என்ற நூலை 1949ஆம் ஆண்டு எழுதினார். ஒரு குழந்தை தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டுள்ளது. அப்போது வீட்டு மாடிப்படிக்கட்டுகளில் யாரோ ஒருவர் ஏறி வருகிறார். அதை குழந்தை கேட்கிறது. அப்படி வருபவர் அந்த குழந்தையை தூக்கினால் யார் தன்னை தூக்குவது என குழந்தை கவனிக்கிறது. தன்னை அள்ளி எடுப்பவர்களின் முகத்தைப் பார்க்கிறது. பிறகு தன்னை தூக்கச் சொல்லி சிணுங்குகிறது. இந்த செயல்கள் எப்

குறுக்கே கௌசிக் வந்தாலும் செய்த காரியத்தை கவனத்தில் கொள்வது எப்படி?

படம்
  பாண்டியன் ஹோட்டலுக்கு செல்கிறீர்கள். அங்கு சோற்றை சுண்ணாம்பு போட்டு வடிப்பார்கள். அதை கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு அடைத்துவிடும். அதெல்லாம் இருக்கட்டும். அங்கு இருக்கும் பரிசாரகர் உங்களுக்கு சாப்பிட தயாராக உள்ள பல்வேறு உணவு வகைகளை காட்டுவார். என்னென்ன சாப்பிட்டீர்கள் என்பதை பணம் தராதவரை துல்லியமாக நினைவுவைத்து கல்லாவிலுள்ள முதலாளிக்கு கூறுவார். அப்படி கூறியவுடனே அதை மறந்துவிட்டு அடுத்த ஆளை கவனிக்க போய்விட்டார். ஒருவருக்கு அத்தனை இரைச்சலில், பரிமாறும் வேலைகளை செய்தபடியே அந்தந்த மேசையில் உள்ளவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபடியே என்ன சாப்பிட்டார் என்றும் நினைவு வைத்துக்கொள்கிறார். எப்படி சாத்தியமாகிறது? இதை ஸெய்கார்னிக் விளைவு என்று குறிப்பிடுகிறார்கள்.  அதாவது, நிறைவடைந்த செயலை விட நிறைவடையாமல் தொக்கி நிற்கும் செயலே பலரையும் ஈர்க்கிறது. எனவே, அதை கவனத்தில் கொண்டு நிறைவு செய்ய முயல்கிறார்கள்.  அதாவது ஒருவருக்கு வேலைகளை ஒதுக்கிவிட்டு அதன் இடையில் சில தடங்கல்களை செய்தால் முதலில் ஏற்றுக்கொண்ட வேலைகளை கவனமாக செய்யவேண்டும் என முயல்வார்கள். இதனால் அவரின் மூளை சுறுசுறுப்பாகி நினைவுகளை தீவிர

ஞாபகசக்தியை மேம்படுத்திக்கொள்ள உதவும் வழிகள் சில!

படம்
    மனித கால்குலேட்டர்களுக்கு இன்று பெரிய மரியாதை கிடைக்கப்போவதில்லை. அந்தளவுக்கு சூப்பர் கணினிகள் வளர்ந்துவிட்டன. கூகுளின் தேடலுக்கு பார்ட் எனும் செயற்கை நுண்ணறிவு உதவுகிற காலம் இது. இந்த காலத்திலும் சில விஷயங்களை மூளையில் நினைவு வைத்துக்கொண்டு தேவையானபோது கூறுகிற மனிதர்கள் ஆச்சரியம் தருவதோடு சற்று பொறாமையையும் ஏற்படுத்துகிறார்கள். உணவகங்களில் மெனு கார்டை நாம் பார்த்துக்கொண்டிருக்க சிறப்பு உணவுகளை கூறிவிட்டு, அதன் தயாரிப்பு முறைகளை படபடவென ஒப்பிப்பவர்களை பார்த்தால், உணவை விட அவர் எப்படி இத்தனை விஷயங்களை நினைவில் கொள்கிறார் என்று தோன்றும். ஏனெனில் பலருக்கும் நேற்று காலையில் என்ன சாப்பிட்டோம் என்பதே அண்டன் பிரகாஷ் கட்டுரையை புரிந்துகொள்வது போல கடினமாக, மீள நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது. தேவையானபோது குறிப்பிட்ட விஷயங்களை நினைவில் இருந்து மீள எடுத்து பேசி கைதட்டல் வாங்குவது என்பது பெரிய சாமர்த்தியம். சற்று பொறாமை இருந்தாலும் கைதட்டிவிடுவதுதான் பெரிய மனுஷன் செய்யும் வேலை. மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் பகுதிதான் நினைவுகளை உருவாக்குகிறது. அதுமட்டும்தானா என்றால் அமிக்டால என்ற

அல்சீமர் பற்றிய கல்வி அனைவருக்கும் தேவை - மருத்துவர் சஞ்தீப் ஜாவ்கர்

படம்
  மை ஃபாதர்ஸ் பிரெய்ன் - அல்சீமர் நூல் சந்தீப் ஜாவ்கர் மருத்துவர் சந்தீப் ஜாவ்கர் இதயவியல் மருத்துவர், அமெரிக்கா அண்மையில் மருத்துவர் சந்தீப், தனது அப்பாவிற்கு ஏற்பட்ட அல்சீமர் நோய் பற்றிய தனது கருத்துகளை, தொகுத்து நூலாக எழுதியிருக்கிறார். நூலின் பெயர். மை ஃபாதர்ஸ் பிரெய்ன்   - லைஃப் இன் தி ஷாடோ ஆஃப் அல்சீமர்ஸ். தங்களுடைய   பெற்றோர், மனைவி ஆகியோருக்கு அல்சீமர் ஏற்பட்டிருப்பதை ஒருவர் முதல்முறையாக அடையாளம் காண்கிறார். அவர்களுக்கு ஏற்படும் நினைவிழப்பை எப்படி சமாளிப்பது? குறைந்த கால அளவில் ஏற்படும் நினைவிழப்பு என்பது அல்சீமரின் முக்கிய அறிகுறி. இது நோயாளியை கடுமையான விரக்தியில் தள்ளும். விரக்தியும் கோபமுமாக மாறுவார்கள். மேலும், நோயாளிகளை கவனித்தும்கொள்ளும் குடும்ப உறுப்பினர் அல்லது பணியாளர்களுக்கு பொறுமை தேவை. அல்சீமர் வந்த நோயாளிகளுக்கு மூளையில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் செயல்பாடு குணங்கள் மாறும். எனவே, இதைப் புரிந்துகொள்ள அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு நோய் பற்றிய கல்வி தேவை. அல்சீமர் நோய் வந்தபிறகு நோயாளிகளுக்கு அவர்கள் புரிந்துகொண்டபடியே உலகம் இயங்குமாறு அனுமதிக்

அள்ளிக் கொஞ்சேன் எனது காதலை....

படம்
  பேசணும்போல இருக்கு என்று உன் முதல் செய்தி வந்தது. அழைப்பதற்குள் அடுத்த செய்தி ஆனால் கூப்பிடாதே என்று. இரண்டு செய்திகளுக்கும் இடையிலான உன் தயக்கம் சற்றே தாமதமாக வந்தடைந்தது என் விரல்களுக்கு -முகுந்த் நாகராஜன்   கல்லூரிக்கு நீ பிரயாணிக்கும் அரசுப் பேருந்து நீ ஏறியவுடன் அரசிப் பேருந்தாகிறது -சண்பகீ.ஆனந்த்   எனது காதலை ஒரு குழந்தையாகவோ, பொம்மையாகவோ மாற்றத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும் பார்த்ததும் அள்ளிக் கொஞ்சுவாய்   எனது ஆன்மாவை முட்டை கேக்காகவோ, சாக்லெட்டாகவோ மாற்றத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும் உனக்குப் பிடித்திருந்தால் சாப்பிடுவாய் இல்லையெனில் குப்பைத்தொட்டியில் எறிந்துவிடலாம். -ஜானகிராமன் படம் - பிக்ஸாபே  காப்புரிமை - ஆனந்தவிகடன்

நீ விரும்பி விளையாடும் பொம்மை நான்!

படம்
  காதல் விகடன் கவிதைகள்   உன் கோணல் எழுத்துக்கள் போல இல்லை இந்த நேர்த்தியான எஸ்எம்எஸ்-கள் ஒரு கடிதம் இடேன்   யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் கைதட்டி அழைத்தபோது திரும்பிய உன்னை யாரோ ஒருத்தியாக நினைக்க முடியவில்லை -ஜா.பிராங்க்ளின் குமார் ஒரு சில முத்தங்களிலேயே உதறி விலகினாய் நாணமா என்றேன் நாளைக்கும் கொஞ்சம் இருக்கட்டும் என்றாய். அடிகள்ளி நாளைய முத்தங்களை இன்றுவரையா வைத்திருப்பேன்? -மா.காளிதாஸ் திருக்கல்யாணம் வண்டி கட்டி வந்து குவிகிறது ஊர் மொத்தமும் நம் திருமணத்திற்கு தேர் கட்டி வந்து குவிவார்கள் கடவுள் மொத்தமும் -பொன்.ரவீந்திரன் உன் விழி வில்லால் உயிர் உடைந்திட்ட ராமன் நான்   -ப்ரியன் கனிவானதொரு சொல்லோ நேசம் துளிர்க்குமொரு பார்வையோ சில்லறையற்ற பொழுதில் நீயெடுக்கும் பயணச்சீட்டோ போதுமானதாயிருக்கிறது உன்னை நேசிக்க -யாழினி முனுசாமி உப்பைக் கொட்டியவர்கள் கூட அள்ளிக்கொண்டு போகிறார்கள் ஆனால் நீயோ உன் உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு அள்ளாமலே போகிறாயே -தபூ சங்கர் நீ நடந்த தடங்களின் அடியில்தான் கிடக்கிறது நம்

நுரைத்து ததும்பும் மதுக்குவளையின் ஐஸ்கட்டி நீ!

படம்
  உன் விழிகளில் தேங்கிக் கிடக்கும் ப்ரியங்களின் மகரந்தம் இப்போதெல்லாம் தீண்டுவதே இல்லை என்னை… என்னை ஆற்றுப்படுத்தும் உன் வாஞ்சை மிக்க மொழிகள் மெல்ல மௌனத்தின் வெளியில் உலவிக் கொண்டு இருக்கின்றது. அன்பின் தாவரங்கள் மலர்ச்சியில் பெருகத் தொடங்கியிருந்தது. உன் கருணையினால்… நீ இன்றி அழுகிப் போகத் தொடங்கிவிட்டது செடிகளிலேயே மலர்கள் அழுகிய வாசனை மெல்ல மேலெழும்புகிறது 5.4 முன்னெப்போதோ நான் செய்த பாவத்திற்கு கிடைத்த தண்டனையாய் கருதிக்கொள்ளத்தான் வேண்டும்… ஒரு தேவதையைப் போல என்னோடு நீ வந்து இருந்து, நடந்து அற்புதம் புரிந்ததை இனி எப்போதும் நான் மறக்கவியலாது. ஆனால், நான்தான் சாத்தான் நான் உன்னை நுரைத்து ததும்பும் என் மதுக்குவளையின் ஐஸ்கட்டியாய் இட்டு வைத்தேன். மிக உயர்வானவைகள் எளிமையாகத்தான் இருக்குமென்பது எனக்கு புரியவில்லை இவ்வளவு நடந்தும்… கசப்புகள் மறந்து நான் உனக்காக காத்துக்கொண்டுதான் இருக்கிறேன் நீ மறுபடியும் என்னை மலர்த்துவாய் என்று… நினைவுகள் மீளவும் வழியற்ற பாதையில் நிறைந்து கிடக்கின்றன ப்ரியங்கள்….   தொகுப்பு அன்பரசு

குழந்தைகளை வாடிக்கையாளர்களாக்கி வளைக்கும் பெருநிறுவனங்கள்!

படம்
  லியோ காபி என்றதும் உங்கள் மனதில் என்ன நினைவுக்கு வருகிறது. ஏ ஆர் ஆரின் விளம்பர இசை நினைவுக்கு வந்தால் சிறப்பு. அதைக்கடந்து ஹாரிஸ்   ஏ ஆர் ஆரின் விளம்பர இசையை முதற்கனவே பாடலில் (மஜ்னு) பயன்படுத்தியதும் நினைவுக்கு வந்தால் மிகச்சிறப்பு.   இதேபோல்தான் குஜராத்தில் தயாரிக்கப்பட்டு இந்துஸ்தான் யூனிலீவருக்கு போட்டியாக சலவை சோப், தூளை விற்ற நிர்மா நிறுவனம். இந்த நிறுவனத்தின் விளம்பரம் பலருக்கும் நினைவில் இருக்கும். இப்போதும் இந்த நிறுவனம் போட்டிகளை சந்தித்து சோப்பு, சலவைத்தூளை விற்கிறது. நிறுவனத்தின் ட்ரேட்மார்க்காக பாவாடை பறக்கும் பாப்பா கூட மாற்றப்படவில்லை. நினைவு தெரிந்த நாட்களில் கேட்ட விளம்பர இசை என்பதால் மேற்சொன்னவற்றை ஒப்புக் கொள்ளலாம். இதைக் கடந்து குழந்தை   வயிற்றில் இருக்கும்போதே அம்மாவின் இதயத்துடிப்பு, உடலில் செல்லும் பல்வேறு திரவங்களின் ஒலியைக் கேட்கிறது. கர்ப்ப காலத்தில் அம்மா கேட்கும் கார்த்திக் ஐயரின் ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ பாடலைக் கூட கேட்டு வைப் செய்ய முடியும். இப்படி கேட்டு வளரும் குழந்தை, அம்மாவின் இசை ரசனையை எளிதாக கற்று பின்னாளில் மகத்தான இசைக்கலைஞராக கூட மாறலாம். கர

அம்மாவின் நினைவுகளைக் காப்பாற்ற மகள் செய்யும் போராட்டம்! ஜங்க் இ - கொரியன்

படம்
  காலமான நடிகை கங் சூ இயோன் நடுவில் இயக்குநர் இயோன் சங் ஹோ ஜங் இ கொரிய படம் ஜங்க் இ கொரியப்படம் – நெட்பிளிக்ஸ் ட்ரெய்ன் டு பூசன் படம் எடுத்த இயோன் சங் ஹோ என்ற இயக்குநரின் அறிவியல் புனைகதைப் படம்.   பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், மனிதர்களை பாதிக்கிறது. எனவே, அவர்கள் விண்வெளிக்கு சென்று வசிக்கும் நிலை ஏற்படுகிறது. கூடவே, உள்நாட்டுப் போரும் உருவாகிறது. இதில் அரசு தரப்பு ஏஐ அறிவு கொண்ட வீரர்களை வைத்து போரை நடத்துகிறது. இதற்காக ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் ஒன்றில்தான் கதை நடைபெறுகிறது.   இந்த நிறுவனம் ஒருகாலத்தில் பூமியில் நடைபெற்ற போரில் சாதனை செய்த பெண்மணியான யூன் ஜங்கின் நினைவுகளை எடுத்து செயற்கை அறிவை குளோனிங் செய்கிறார்கள். அதை வைத்து அவரின் உருவத்தில் ராணுவ வீரர்களைத் தயாரிப்பதே நோக்கம். இதை குழு தலைவராக இருந்து செய்வது, சியோ ஹியூன். இவர்தான்   யூன் ஜங்கின் மகள்.   தாய் கோமா நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார். மகள் சியோ ஹியூனின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காகவே, அம்மா யூன் ஜங் போருக்கு போகிறார். போருக்கு சென்றால் அவரது மகளுக்கு சிகிச்சை இலவசமாக கிடைக்கும் என்பதுதான் டீல். ஆனால

மூளையில் ஏற்படும் வினோதமான பிரச்னைகள்!

படம்
  லெதோலாஜிகா (Lethologica) நண்பரை சந்தித்து ஏதாவது பேசிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென இடையில் உங்களால் தொடங்கிய வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. பேச நினைக்கும் வார்த்தை உங்களுக்கு நினைவுக்கு வரமாட்டேன்கிறது. நாக்கில் இருக்கிறது ஆனால் வெளியே வரமாட்டேன்கிறது என்பார்களே அந்த நிலை இதுதான். வார்த்தைகளை சரியாக நினைவுகூர முடியாத நிலைக்கு லெதோலாஜிகா. வயது வந்த ஒருவர் தோராயமாக 50 ஆயிரம் வார்த்தைகளை நினைவுகூர முடியும் என மூளை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  தேஜா வூ (Deja Vu)  தேஜா வூ  என்பதற்கு, பிரெஞ்சு மொழியில் ஏற்கெனவே பார்த்தது என்று பொருள். நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவத்தை ஏற்கெனவே அறிந்தது போலவே தோன்றும் நினைவு தான் தேஜா வூ. உலகிலுள்ள மூன்றில் இருபங்கு ஆட்களுக்கு தேஜா வூ என்ற நிகழ்ச்சி நடந்திருக்கும். மனநிலைக் குறைபாடு கொண்டவர்களுக்கு தேஜா வூ என்பது பதற்றமான சூழலில் ஏற்படுகிறது. புதிய சூழலில் மூளையில் ஏற்படும் தூண்டல் செயல்பாடுகளால் தேஜா வூ ஏற்படுகிறது. இதனால் செயற்கையான நினைவு மூளையில் உருவாகிறது. பொதுவாக தேஜா வூ என்பது புதிய இடங்களுக்குச் செல்லும்போதும் புதிய அனுபவங்களை எதிர்கொள்ளும்போ

பெருந்தொற்று கால வேதனைகளை மறக்கவேண்டும். பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும்! - ஆஞ்சல் மல்ஹோத்ரா

படம்
  ஆஞ்சல் மல்ஹோத்ரா ஆஞ்சல் மல்ஹோத்ரா எழுத்தாளர் இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும் பிரிவினை கலவரங்கள் நடைபெற்றும் 75 ஆண்டுகள் ஆகின்றன. இன்று பிரிவினையால் பாதிக்கப்பட்ட குடும்ப வாரிசுகள் பலரும் வெளிநாடுகளில் பரவி வாழ்கின்றன. எழுத்தாளர் ஆஞ்சல் மல்ஹோத்ரா, தி லாங்குவேஜ் ஆஃப் ரிமெம்பரிங் என்ற நூலை எழுதியுள்ளார். இதில் பிரிவினை பற்றிய பல்வேறு நினைவுகளை பதிவு செய்துள்ளார். அவரிடம் இதுபற்றி பேசினோம்.  நூலில் நீங்கள் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் பேரன்கள் ஆகியோருடன் பேசியுள்ளீர்கள். இந்த சூழல் எப்படியிருந்தது? பிரிவினையால் பாதிக்கப்பட்ட தாத்தா, பாட்டிகள், அவர்களின் வாரிசுகள், பேரன்கள் ஆகியோருடன் நிறைய நேரம் செலவிட்டுத்தான் நூலுக்கான தகவல்களைத் திரட்டினேன். பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் வெளிநாடுகளில் வாழ்கின்றனர் என்றாலும் அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை எளிதாக மறக்கமுடியாது. அதனை எளிதில் அகற்றிவிடவும் முடியாது.  பெரும்பாலான பேட்டிகளை நான் பாதிக்கப்பட்டவர்களின் பேரன்கள், வாரிசுகளிடம்தான் எடுத்தேன்.

வியக்க வைக்கும் புறாக்களின் ஞாபகசக்தி!

படம்
  நினைவுகளை மறக்காத பறவை! தொன்மைக் காலத்தில், புறாக்களை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வந்ததை பலரும் அறிவோம். புறாக்களை அக்கால மக்கள், தேர்வு செய்ததற்கு அதன் திசையறியும் திறன்தான் காரணம். ஒருமுறை பறந்த வழித்தடத்தை புறா, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் வைத்திருப்பது ஆச்சரியம்தானே? இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புறாவின் நினைவுகூரும் திறனை ஆய்வு செய்து வியப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.  மனிதர்கள் அல்லாத உயிரினங்களின் நினைவுகளை சோதிப்பது சவால் நிரம்பியது.  “இப்படி நடைபெறுவது மிகவும் அரிதானது. ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இத்தனை ஆண்டுகள் ஆனபிறகும் கூட தேவைப்படும்போது, அதனைப் புறா மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வது  ஆச்சரியப்படுத்துகிறது” என்றார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக விலங்கியலாளர் டோரா பைரோ.  2016ஆம் ஆண்டு தொடங்கி, புறாவின் நினைவுகள் பற்றிய ஆராய்ச்சியை பைரோ தலைமையிலான ஆய்வுக்குழுவினர் செய்து வருகிறார்கள். இவர்களின் ஆய்வுக்கட்டுரை, புரோசீடிங் ஆஃப் தி ராயல் சொசைட்டி என்ற இதழில் வெளியாகியுள்ளது. இக்குழுவினர் வீட்டில் வளர்க்கும் புறாக்களை 8 கி.மீ. தொலைவிற்கும் அதிகமாக தூரத்திற்கு பறக

கனவுகளின் மீது கவனம் குவிக்கும் மேற்கு நாடுகள்! - கற்றதும் பெற்றதும் என்ன?

படம்
  கனவுகளின் ஆராய்ச்சி! கனவுகளை தானே கட்டமைக்கும் லூசிட் முறையில் கற்றலையும் புதுமைத்திறனையும் அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர்.  விண்வெளிக்கு சுற்றுலா சென்றுவருவது, சூரியனுக்கு விண்கலங்களை அனுப்புவது வரையில் முடியாத விஷயங்களே விஞ்ஞானிகளுக்கு கிடையாது. ஆனால் அவர்களையும் குழப்ப வைக்கும் விஷயம், கனவுகள்தான். நம் அனைவருக்கும் தூங்கும்போது வரும் கனவுகளைத் தான் இங்கு சொல்லுகிறோம். இந்த கனவுகள் அன்றாட நிகழ்ச்சிகள் அல்லது நிறைவேறாத ஆசைகளை அடிப்படையாக கொண்டிருக்கலாம். இவற்றை ஆய்வு செய்து உண்மையான துல்லியத்துடன் கனவுகளை பார்க்க அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர்.  பொதுவாக ஒருவர் கனவுகண்டு காலையில் எழுந்தால் 90 சதவீதம் மறந்துவிடவே வாய்ப்பு அதிகம். அப்படியும் அதனை கூறினால் அதில் நிறைய தவறுகள் இருக்கும். துல்லியமான தன்மை இருக்காது. கனவுகளை நாமே திட்டமிட்டு உருவாக்கினால் எப்படியிருக்கும்? கனவு காணும்போதுகூட நாம் கனவில்தான் இருக்கிறோம் என்ற விழிப்புணர்வையும், அதில்  வரும் சம்பவங்களையும் கூட நம்மால் உருவாக்க முடிந்தால் அதை லூசிட் கனவுகள் என்று கூறலாம். அமெரிக்காவின்

மூக்கைச் சுரண்டி தின்னுவது சரியா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  மியூகோபேஜி - மூக்கைச் சுரண்டி தின்னுவது பதில் சொல்லுங்க ப்ரோ? பட்டாம்பூச்சி தான் புழுவாக இருந்ததை நினைவுகொண்டிருக்குமா? இது அறிவியலாளர்களுக்கே புரியாத புதிர்தான். புழுவாக இருந்து வண்ணத்துப்பூச்சியாக மாறும் நிகழ்ச்சியே வினோதமானது. புழுவை வைத்து செய்த அண்மைய ஆய்வில் வண்ணத்துப்பூச்சியாக ஆனாலும் கூட தான் புழுவாக இருந்த நிலையை மனதில் கொண்டிருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  மூக்கிலுள்ள சளியை எடுத்து தின்பதை நான் ரசித்து செய்கிறேன். இது என் ஆரோக்கியத்தை கெடுக்குமா? மூக்கின் உள்ளே வரும் திரவம், காற்றிலிருந்து மூக்கினுள் செல்லும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை பிற நுண்ணுயிரிகளைத் தடுக்கிறது. அந்த திரட்டை எடுத்து சாப்பிட்டால் அவை உடலுக்குள் சென்றால் ஆபத்துதானே? குழந்தைகள் அறியாமல் செய்யலாம் ஆனால் வயது வந்தவர்கள் இதனை அறியாமலும் செய்யக்கூடாது. சளித்திரட்டை தின்பதை அறிவியல் ரீதியாக மியூகோபேஜி என்பார்கள். இதனை ஒரு பழக்கமாக கைக்கொண்டால் ரைனோடிலேஎக்ஸோமேனியா என்று கூறலாம்.  பிபிசி சயின்ஸ்போகஸ்