இடுகைகள்

பைத்தியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலைமையாசிரியரின் உண்மையான மகனாக மாறும் குற்றவாளியின் மகன்! திலக்கம் - திலீப், காவ்யா மாதவன்

படம்
  திலக்கம் திலீப், காவ்யா மாதவன், நெடுமுடி வேணு, ஹரிஶ்ரீ அசோகன், கொச்சி ஹனீபா கிராமத்திலுள்ள தலைமை ஆசிரியர். சிறுவயதில் தொலைந்து போன உண்ணி என்ற பெயருடைய மகனை பதினேழு ஆண்டுகளாக தேடுகிறார். நாகப்பட்டினத்தில் கிடைக்கும் ஒருவர், தலைமையாசிரியர்   தனது மகன் என கூறி உண்ணியை வரைந்த விதமாகவே இருக்கிறார். ஆனால் சித்த சுவாதீனம் இல்லை. அவரை கிராமத்திற்கு கூட்டி வந்து சிகிச்சை அளிக்க முயல்கிறார். உண்மையில் அவர் கூட்டி வந்த நபர் உண்ணியா இல்லையா, நினைவு திரும்பியதும் எதனால் அவர் அப்படி ஆனார் என தகவல்களை கூற முடிந்ததா என்பதே கதை. ஆற்றுக் கரையோரம், திலீப், இறந்துபோனவருக்கு பிண்டம் வைக்கிறான். அதை ஆற்றில் கரைத்துவிட்டு எழும்போது படிக்கட்டின் மேலே வயதானவர் இளைஞர் ஒருவரோடு நிற்கிறார். அவனைக் கூர்மையாக பார்த்துக்கொண்டே இருக்கிறார். காட்சிகள் பின்னோக்கி நகர்கின்றன. தலைமையாசிரியருக்கு மகள் ஒருத்தி, மகன் ஒருவன். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. வரதட்சணை பிரச்னை மாப்பிள்ளையோடு இருக்கிறது. அதெல்லாம் தாண்டி அவரது வம்சத்தை மகன் உண்ணி நடத்திக்கொண்டு போவான் என மகனைப் பற்றி நாளிதழில் பதினேழு ஆண்டுகளாக விளம்

மனிதனின் நல்லியல்புகளை மறுக்கும் உலகம்! - லியோடால்ஸ்டாயின் ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு

படம்
  லியோ டால்ஸ்டாய் கதைகள் - மூன்று கேள்விகள், ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு ரேவதி கேசவமணி  இதில், மூன்று கேள்விகள் என்பது குழந்தைகளுக்கு சொல்லும் கதைகள் போன்றது. ஆனால் எழுப்பும் கேள்வியும் அதன் தாக்கமும் அபாரமானது. ஒரு விஷயத்தை செய்வதற்கான சரியான நேரம், அதை அடையாளம் காண்பது எப்படி, சரியான மனிதனுக்கு உதவி  செய்வது எப்படி என்பதை மன்னர் அடையாளம் காண்பதுதான் கதை.  நூலின் பக்கம் மொத்தம் 25 தான். மன்னர் பலரிடமும் கேள்விகளைக் கேட்கிறார். ஆனால் இறுதியில் அவருக்கான விடை எங்கு யாரிடம் கேட்கிறது என்பதே முக்கியமான இறுதிப்பகுதி.  நாம் எப்போதுமே பல்வேறு விஷயங்களை யோசிக்கிறோம். ஆனால் இதனால் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறோம். இதைப்பற்றி துறவி தனது செயல்பாட்டின் வழியாக மன்னனுக்கு சொல்லித் தருகிறார்.  ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு, ஒருவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே வந்து வாழ்க்கை நிகழ்வுகள் எப்படி நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என கூறுகிறது.  நல்ல செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவரின் வாழ்க்கையும் அவரை விட கீழான நிலையில் உள்ளவர்களின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து கதை நகர்கிறது.  இயற்கை

தனது காதலியை பறித்த ஊரை வேட்டையாடத் துடிகும் ஷிபு! - மின்னல் முரளி - பசில் ஜோசப் - மலையாளம்

படம்
  மின்னல் முரளி பசில் ஜோசப் மலையாளம்  ஜெய்சனை மின்னல் முரளியாக கண்டுபிடித்துப் பேசும் காட்சி ஒரு கிராமம். அங்கு ஏற்படும் வரலாற்று முக்கியமான கிரக சூழ்நிலையில் மின்னல் தாக்குகிறது. அதன் பாதிப்பில் கிராமத்திலுள்ள இருவர் மாட்டுகின்றனர். இருவரும் அதனால் சக்தி பெறுகிறார்கள். அதனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதே கதை.  ஜெய்சன், ஊரில் டெய்லர் கடை வைத்திருக்கிறார். அவருக்கு ஒரே லட்சியம், பாஸ்போர்ட் வாங்கி அமெரிக்காவுக்கு போவதுதான். தனியாக அமெரிக்காவுக்கு போய் என்ன செய்வது என, அந்த கிராமத்து  இன்ஸ்பெக்டர் பெண்ணையும் காதலிக்கிறார். அதாவது, ஜெய்சனுக்கு அந்தப் பெண் மீது காதல் இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கான பொழுதுபோக்குக்கு ஜெய்சன் உதவுகிறான். ஆனால் அவள், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை  திருமணம் செய்துகொள்ள இசைகிறாள்.  உஷாவை சந்தித்துப் பேசும் நெகிழ்ச்சியான காட்சி... இதனால், ஜெய்சன் கோபம் கொள்ளுகிறான். அதேநேரம், அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்பவன், ஷிபு. இவனை கிராமத்தில் யாருக்கும் பிடிப்பதில்லை. இதற்கு காரணமான காட்சி, தாசனுடன் ஷிபு பேசும் காட்சி.  ஷிபுக்கு ஒரே லட்சியம், பசியைச் சமாளிப்பது

பௌர்ணமி மனிதர்களுக்கு பைத்தியம் பிடிக்கச் செய்யுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி பௌர்ணமி நிலவு நம்மை பைத்தியமாக்குமா? நிலவுக்கும் மனநிலைக்குமான தொடர்பு இன்று தொடங்கவில்லை. குறிப்பிட்ட தினத்தன்று மனநிலை மருந்துகளை சாப்பிடுவது என்பது சிலரின் பழக்கம். ஆனால், கிரேக்கர்கள்தான் இதிலும் முன்னிலை வகிக்கிறார்கள். 2300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் அரிஸ்டாட்டிலின் கருத்தான நிலவு, நம் எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது என்பதை நம்பினர். அதோடு, தொழுநோய் போன்றவற்றுக்கும் நிலவுக்கும் தொடர்புள்ளதாக கூறிவந்தனர். ஆனால் இதற்கு வலுவான எந்த அறிவியல் ஆய்வும் கிடையாது. ஆனால், மூளையிலுள்ள நீர்மத்தில் நிலவின் ஈர்ப்புவிசை பௌர்ணமியன்றி மாறுதல்களை ஏற்படுத்துவது உண்மைதான். ஆனால் அது குணநலன்களில் மாறுபாடு ஏற்படுத்தும் அளவு வலிமையானதல்ல என்கிறது அறிவியல்துறை. தற்போது நடைபெற்றுவரும் ஆராய்ச்சிப்படி, பௌர்ணமி தினத்தன்று ஒப்பீட்டளவில் கொலைகள் குறைந்து வருவதாக கூறுகிறது. எப்படிங்க ப்ரோ என்று கேட்டுவிடாதீர்கள். ஆய்வுகள் அப்படித்தான் டக்கென ஒரு விஷயம் சொல்லிவிட்டு செல்லும். பௌர்ணமி அன்று முடிந்தவரை உற்சாகமாக இருக்க முயற்சியுங்கள். அப்படியாவது பக்கத்து சீட