இடுகைகள்

2023 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுவனபதியின் கீழே ஓடும் ஆறு - இரா.முருகானந்தம்- புதிய மின்னூல் வெளியீடு

படம்
  இரா.முருகானந்தம் (முருகானந்தம் ராமசாமி), சமூக வலைத்தளத்தில் எழுதும் பகிரும் கருத்துகள் முக்கியமானவை. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தொப்பம்பட்டி கிராமத்தில் வாழும் முருகானந்தம், தமிழ் இலக்கியம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் செயல்பாடு என பல்வேறு தளங்களிலும் இயங்கி வருபவர். பல்வேறு டிவி சேனல், யூட்யூப் சேனல்களிலும் கலந்துரையாடல்களில் பங்கேற்று வருகிறார். சமூகம் சார்ந்து முருகானந்தம் வெளியிடும் பதிவுகளைக் கொண்டதே இச்சிறுநூல். இதில், சமூகத்திற்கு முக்கியமான நீங்காத இடம் பிடித்த ஆளுமைகள், எழுத்தாளர்கள் பற்றி எழுதியிருக்கிறார். அதோடு, வாழும் காலத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், அதற்கான எதிர்வினைகளையும் தீர்க்கமாக அவரால் சுட்டிக்காட்ட முடிகிறது. கொண்ட கொள்கையில் உறுதியும், நேர்மையும் முருகானந்தம் அவர்களின் சமூக வலைத்தள பதிவுகளில் எப்போதும் குறையாது நீக்கமற இடம்பெற்று வருகிறது. நூலை வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BTL6KJH1 இரா.முருகானந்தம்