இடுகைகள்

மதுரை புராஜெக்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சந்த நயம் கொண்ட அழகான காதல் பாடல்கள்! - பாவேந்தரின் காதல் பாடல்கள்

படம்
      பாவேந்தரின் காதல் பாடல்கள் கவிஞர் பாரதிதாசன் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் மதுரை புரோஜெக்ட் என்ற பெயரில் சங்க இலக்கியங்கள் அனைத்தும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கும்படி தன்னார்வலர்கள் செய்திருக்கிறார்கள். அதை வேண்டுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம். பிடிஎப் அதிக நினைவகத்தை பிடிக்கும் என நினைத்தால், ஹெச்டிஎம்எல் கோப்பாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பாவேந்தர் பாரதிதாசனின் காதல் பாடல்கள் அனைத்துமே அழகானவை. சந்த நயமும், எதுகை மோனையும் கூட பாடல்களுக்கு அழகு சேர்ப்பவையாக, அணிகலன்கள் போலவே அமைந்துள்ளது. அதேசமயம், தமிழுக்கு தமிழ்நாட்டிற்கு ஆபத்து எனும்போது எரிமலையின் லாவா குழம்பு கொதிப்பதைப் போல பாடல் வழியாக கொதிக்கிறார். காதல் பாடல்களில் எப்படி அரசியல், புரட்சி, போராட்டம் என வரும் என சிலர் காரண காரியம் கேட்பார்கள். அதெல்லாம் அப்படித்தான். இந்தி திணிப்பு பற்றிக்கூட தீமனத்து வடக்கர், நம் கால்மாட்டில் நிற்கின்றார் என எச்சரிக்கை செய்கிறார். இன்றுவரை வரைக்கும் அந்த தீமனம் வருந்தவில்லை. மனம் மாறவில்லை. அனைத்து பாடல்களுக்குமான தலைப்பு எளிமையானது. பாடல்கள் செந்தமிழில் எழுதப்...

நினைவெனும் பாற்கடலை தோண்டியபோது...- பாற்கடல் - லா.ச.ராமாமிர்தம்

படம்
            பாற்கடல் லா.ச.ராமாமிர்தம் மதுரை புராஜெக்ட் ப. 284 இந்த நூல் இலக்கியம் சார்ந்த தன்மை கொண்டதல்ல என பலரும் விவாதிக்க வாய்ப்பிருக்கிறது. படிக்கும்போது கூட வாசகருக்கு அப்படி தோன்றலாம். ராமாமிர்தத்தின் சுயசரிதை என்று தாராளமாக சொல்லலாம்.  நூலில் ராமாமிர்தத்தின் குடும்ப உறுப்பினர்களின் வினோதமான குணங்கள் பற்றி பகடியாக எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த குடும்பத்திற்கு இந்தளவு கஷ்டமாக எனும்படி நெகிழ்ச்சியாக உள்ளது.  இதில் நினைத்துப் பார்க்கவே ஆச்சரியம் தரும்படி லா.ச.ராவின் அம்மா பற்றி விரிவாகவே பேசப்பட்டுள்ளது. நூலைப் படித்து முடிந்தாலும் கூட அம்மா பற்றி குணம், காட்சி வர்ணனைகள் மனதை விட்டு நீங்கவில்லை. எழுத்துகளில் அதிக விவரிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருவரின் குணத்தை தராசில் இட்டு நிறுப்பது போல கூறும் இடம். உணவு பற்றி எழுதும் இடங்களில் எழுத்து வசீகரம் கொள்கிறது. இது வாசிப்பவரகளுக்கு நேரும் மாயமா, எழுத்தாளருக்கு பிடித்த விஷயம் என்பதால் தனித்துவமாக அந்த பத்தி தெரிகிறதா என்று அறியமுடியவில்லை. எதுவானாலும் வாசிக்க நன்றாக இருக்கிறது. அம்ம...