இடுகைகள்

பலவீனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூன்றாவது பிறப்பில் எதிரிகளை நாயகன் எதிர்கொண்டு வெல்வானா?

படம்
  அகெய்ன்ஸ் காட்ஸ்  மாங்கா காமிக்ஸ்  மான்வா.காம்.  இதில் நாயகன் பலவீனமானவன். அவனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அந்த திருமணம் கூட ஒரு நன்றிக்கடனை கழிக்கவே செய்யப்படுகிறது. திருமணத்திற்கு மாப்பிள்ளை கழுதையில் உட்கார வைத்து அழைத்து வரப்படுகிறான். அவனது சொந்தக்காரர்கள் இப்படி அவமானப்படுத்துகிறார்கள். மாப்பிள்ளை பலவீனமான உதவாக்கரை என ஊருக்கே தெரிகிறது. அதாவது அவன் தற்காப்புக்கலை கற்க முடியாதபடி உடலில் பிரச்னை இருக்கிறது. மேலும் அவனது அண்ணணுக்கே, தம்பி கட்டிக்கொள்ளும் பெண் மீது பொறாமை உள்ளது. எனவே,  தம்பிக்கு விஷத்தை டானிக் என கொடுத்து குடிக்கச் செய்கிறான். அப்போது அவனது உடலில் வேறு ஆன்மா ஒன்று குடியேறுகிறது.  அந்த ஆன்மாவினுள்ளே பொக்கிஷமாக கருதப்படும் விஷம் உள்ளது. அந்த விஷம் டானிக்கிலுள்ள விஷத்தை முறிக்கிறது. புதிய உடலில் குடியேறிய ஆன்மாவுக்கு இது மூன்றாவது வாழ்க்கை. ஏற்கெனவே இரண்டு வாழ்க்கை வாழ்ந்து இரண்டிலும் தற்கொலை செய்துகொண்டு இறந்த வரலாறு கொண்டிருக்கிறது. இந்த பிறவியில் தன்னைச் சுற்றியுள்ளவர்களை கவனிக்கத் தொடங்குகிறது. இதில் ஆறுதல், அவனுக்கு அத்தை முறை வரும் அவனது வயதுள்ள பெண்ணும்,

முற்பிறப்பில் சிறந்த வாள் வீச்சு வீரன்; மறுபிறவியில் வாள்வீச்சில் தடுமாறுகிற பலவீனமான இளைஞன்!

படம்
  சாவோட்டிக் ஸ்வார்ட் காட் மாங்கா காமிக்ஸ்  ரீட்மாங்காபேட்.காம் 150--- முந்தைய பிறப்பில் வாழ்ந்த சிறந்த வாள் வீரன், ஒரு போரில் எதிரியைக் கொன்றுவிட்டு படுகாயமுற்று இறந்துபோகிறார். அவர் இறக்கும்போதுதான், சோல் ஸ்வார்ட் எனும் புதிய சக்தியைப் பெறுகிறார். அதை முதல்முறையாக பயன்படுத்தி எதிரியை வீழ்த்துகிறார். அவரது ஆன்மா மறுபிறப்பெடுக்கிறது. சாங்கியாங் எனும் அதிக வலிமை இல்லாத குலத்திற்கு செல்கிறது. அங்குதான் வாள் வீரர் குழந்தையாக பிறக்கிறார். பிறந்து சில ஆண்டுகளிலேயே நூல்களை வாசிப்பது. நடப்பது என அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். சிறுவயதில் தீவிரமாக ஆன்ம ஆற்றல் பயிற்சியில் ஈடுபட்டதால், உடலில் வாள் வீச்சுக்கு தேவையான ஆற்றல் குறைந்துபோகிறது. இந்த நிலையில் அவரை வாள் வீச்சுக்கான செயின்ட் ஃபோர்ஸ் இருக்கிறதா என சோதிக்கிறார்கள். அந்த தேர்வில் சாங் தோல்வியடைகிறான். எனவே, அவனை சுற்றத்தார், ஊர், வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் கூட கேலி செய்கிறார்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே சாங் செய்த பல்வேறு பயிற்சிகள் அவனை வலிமை கொண்டவனாக மாற்றுகின்றன. ஒரு மரக்கிளை ஒன்றை ஒடித்து வாள் போல பாவித்து அவனது சகோதரனை தாக்கி மார்ப

திறமையான வீரர்களுக்கு ஓய்வு அவசியம் தேவை! - கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

படம்
  ஹர்பஜன் சிங் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங் நேர்காணல் இந்தியாவுக்கு விளையாட வந்துள்ள ஆஸ்திரேலிய அணிகளில் தற்போதைய அணி, இதுவரை வந்து விளையாடியதில் மிகவும் பலவீனமான அணியாக உள்ளதா? எப்படி சொல்கிறீர்கள்? முன்னர், இந்தியாவில் விளையாடுவதற்கு வந்த ஆஸி. அணியைப் பார்த்தாலே வேறுபாடு தெரியும். அதற்காக முப்பது நாற்பது ஆண்டுகள் பின்னே போகவேண்டாம். எனக்குத் தெரிந்து இப்போது வந்து விளையாடும் அணி மிகவும் பலவீனமாக இருக்கிறது இங்கு நான் கூறுவது திறமையைப் பற்றியல்ல. அவர்களின் மனநிலையைப் பற்றி… முந்தைய அணி வீரர்களைப் போல இவர்களால் களத்தில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை. அதனால்தான் இந்த அணி, ஆஸியைப் போல இல்லை. நாங்கள் விளையாடிய ஆஸி. அணியைப் போல இல்லை என்று கூறுகிறேன். அணியில் என்ன போதாமை இருக்கிறது என கூறுகிறீர்களா?ஆ ஆஸி அணி, எப்போதும் ஒரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் வருவதற்கு முன்னரே பல்வேறு திட்டங்களைத் தீட்டி வைத்திருப்பார்கள். விளையாடும் நாட்டின் தட்பவெப்பநிலை பற்றிய தீர்க்கமான அறிவு ஆஸி அணிக்கு உண்டு. இதனால்தான் அவர்கள் பிற அணிகளை விட அதிக வெற்றிபெற்றவர்களாக இருக்கிறா

புதிய சூப்பர் ஆப்பில் என்ன இருக்கிறது? டாடா நியூ

படம்
  புதிதாக சந்தையில் சூப்பர் ஆப் ஒன்று களமிறங்கியுள்ளது. புதிதாக என்றால் இதற்கு முன்னால் ஏதாவது ஆப் இருக்கிறதா என மிகச்சிலர் கேள்வி கேட்கலாம். நிச்சயமாக.. மைஜியோ, பேடிஎம் ஆப் ஆப்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மை ஜியோ ஆப்பில் நீங்கள் அந்த நிறுவனம் வழங்கும் பல்வேறு தினசரி மளிகை தொடங்கி எலக்ட்ரானிக்ஸ், உடைகள், சினிமா, இணையம் வரையிலான சேவைகளைப் பெறலாம். இதில் பணத்தை பிறருக்கு அனுப்பும் சேவைகளையும் செய்யலாம். பேடிஎம் இந்த வகையில் பிரபலமாக இருந்தது. இப்போதுதான் பங்குச்சந்தை சரிவால் சற்று தடுமாற்றத்தில் உள்ளது. பேடிஎம் ஆப்பில் பேடிஎம் மால் என்ற வசதியைப் பயன்படுத்தி நிறைய பொருட்களை சேவைகளைப் பெறலாம்.  2016இல் அறிமுகமான மை ஜியோவில் 100 மில்லியன் பேர், 2010இல் அறிமுகமான பேடிஎம்மில் 100 மில்லியன் பேர் உள்ளனர். இப்போது அதாவது ஏப்ரல் 2022இல் அறிமுகமான டாடா நியூவில் ஒரு மில்லியன் பேர் உள்ளனர். உள்ளனர் என்ற அர்த்ததை ஆப்பை தரவிறக்கம் செய்தனர் என புரிந்துகொள்ளுங்கள். இன்று வரையில் இந்த ஆப்களை அவர்கள் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்று துல்லியமாக தெரியவில்லை.  சூப்பர் ஆப் என்பதன் அடிப்படையே

ஒருவரை பலவீனங்கள் கொண்ட மனிதராக காட்சிபடுத்தினால் பிரச்னையில்லை! - இயக்குநர் ஷியாம் பெனகல்

படம்
  இயக்குநர் ஷியாம் பெனகல் படம் -  IE ஷியாம் பெனகல் திரைப்பட இயக்குநர் முஜீப் - தி மேக்கிங் ஆப் எ நேஷன் எனும் ஷேக் முஜிபர் ரஹ்மான் சுயசரிதையை படமாக எடுத்துள்ளார். இப்படத்தை வெளியிட தயாராக உள்ளார்.  இயக்குநர் ஷியாம் பெனகல் படம் - இந்தியா டுடே பொதுவாக அரசியல் சார்ந்த ஒருவரின் வாழ்க்கையை சுயசரிதையாக எடுப்பதில் நிறைய ஆபத்துகள் உள்ளன. இதை எப்படி எதிர்கொள்ள நினைத்துள்ளீர்கள்? படத்தில் ஒருவரை மனிதராக பார்க்கும் தன்மையை இழக்கவிட்டுவிடக் கூடாது. அப்படி செய்தால், நீங்கள் உருவாக்கும் படம் சூப்பர்மேன் தனமாக வாழ்க்கையைத் தாண்டியதாக உருவாகிவிடும். ஒரு மனிதரின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவரின் பலவீனங்களையும் பார்க்கத்தான் வேண்டும். அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் பலவீனங்கள் உண்டு. அதைத்தாண்டி அவரின் திறன், பலம் இருக்கிறதா என்பதை பாருங்கள். அதை யாரும் ஒருவரிடமிருந்து அகற்றி விட முடியாது. இதை நீங்கள் மனதில் கொண்டால் எந்த பிரச்னையும் வராது.  ஷேக் முஜிபர் ரஹ்மானிடமிருந்து இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள என்ன விஷயங்கள் இருக்கின்றன? நல்ல பழக்கவழக்கங்களைக் கூறலாம். அவர் தனது மக்களை நேசித்தார். அவர்கள

இரு கார் நிறுவனங்களுக்கு இடையிலான மோதல் எப்படி எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது! மிஸ்டர் சந்திரமௌலி

படம்
      மிஸ்டர் சந்திரமௌலி   மிஸ்டர் சந்திரமௌலி இரு  கார் நிறுவனங்களுக்கு இடையிலான மோதல் எப்படி எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதுதான் கதை. படத்தில் இரண்டு முக்கியமான கதைகள் இருக்கின்றன. ஒன்று, கார் நிறுவனங்களுக்கான போட்டி, அதற்காக அவர்கள் மக்களைக் கூட பலியிட துணிவது. இரண்டு, அப்பாவுக்கும், மகனுக்குமான அந்நியோன்ய உறவு. படத்தில் உருப்படியாக இருப்பது கார் நிறுவனங்களுக்கு இடையில் இரக்கமேயில்லாதபடி நடக்கும் போட்டிதான். சந்திரமௌலி, ராகவ் ஆகிய இருவருக்கு இடையில் பாச நேச காட்சிகள் ரசிக்கும்படி உருவாக்கப்படவில்லை. ரெஜினாவின் கதாபாத்திரத்திற்கும் கூட பெரிய நம்பிக்கை ஏற்படுத்தும் விஷயம் இல்லை. படத்தில் பைரவியாக வரும் வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. இவருக்கும் சந்திரமௌலிக்கும் இடையிலான உரையாடல்கள் பார்க்கலாம். நான் சிவப்பு மனிதன் படம் போல நாயகனுக்கு ஏற்படும் பலவீனத்தை எப்படி சமாளித்து வில்லன்களை நையப்புடைக்கிறார் என்பது இறுதிக்காட்சி. படம் நெடுக ராகவ் பாத்திரம் மீது  நேசம் பிறக்காத காரணத்தால் அவருக்கு விபத்தில் ஏற்படும் பாதிப்பு கூட அப்படியா? என்று மட்டுமே கேட