இடுகைகள்

வித்யாபாலன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காடுகள் அழிவதை மக்களுக்கு சொல்லவே படம் எடுத்தேன்! - அமித் வி மஸ்துர்கார்

படம்
                        அமித் வி மஸ்துர்கார் இந்தி திரைப்பட இயக்குநர்     ஒரு இயக்குநராக உங்களை எப்படி வரையறுப்பீர்கள் ? நான் எண்ணிக்கை அடிப்படையில் பெரிய இயக்குநர் கிடையாது . நான் திரைப்படம் உருவாகும் முறையை ரசித்து செய்கிறேன் . அதில் அனைத்துமே எனக்கு முக்கியம்தான் . எனக்கு படத்தின் கதைக்கரு பற்றி ஆராய்ச்சி செய்வது பிடிக்கும் . நிறைய விஷயங்களை தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம் . படத்தின் ஒளிப்பதிவு , இசை , படத்தொகுப்பு ஆகியவற்றை நான் விரும்பியே செய்கிறேன் . ஒரு படத்தை உருவாக்க தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டே உருவாக்க நினைக்கிறேன் . திரைப்படம் என்பது காதலுடன் செய்யப்பட வேண்டியது அவசியம் . நியூட்டன் படத்தை உருவாக்கியபிறகு அடுத்து உடனே படம் செய்ய அழுத்தம் இருந்ததா ? ஆமாம் . நியூட்டன் படம் உருவாக்கி வெளியிட்டபிறகு ஓராண்டுக்குப் பிறகு அந்த அழுத்தத்தை எடுத்துக்கொண்டேன் . நிறைய பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வா்ய்ப்பு கிடைத்தது . ஆனால் நான் அவற்றைத் தேர்ந்தெடுக்கவில்லை . நா்ன் அடுத்து எடுக்கப்போகும் படம் ஆழமாக இருக்கவேண்டும் என நினைத்தேன் . எனவே , வ

பெண்கள் கல்வி பற்றி முடிவெடுக்கும் முடிவு எப்படியிருந்தாலும் சரிதான்! - வித்யா பாலன்

படம்
          வித்யாபாலன்     வித்யாபாலன், இந்தி திரைப்பட நடிகை நீங்கள் அடுத்தடுத்து நடித்த மூன்று படங்களுமே வெற்றி பெற்ற பெண்கள் சார்ந்த கதைகள்தான். இக்கதைகளை நீங்களாகவே இப்படி வேண்டும் என்று தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்களா? அப்படிக்கூறமுடியாது. ஆழ்மனதில் இதுபோன்ற படங்களில் நடிக்கும் ஆசை இந்த முறையில் வெளிப்பட்டிருக்கலாம். முன்னர் ஆண்கள் வென்றதை படமாக எடுத்தார்கள். இப்போது பெண்கள் முறை என்று கூட வைத்துக்கொள்ளலாம்.  வெற்றி பெற்ற பெண்கள் என்று நீங்கள் சொன்னாலும் கூட அவர்களுக்கு இடையே ஒற்றுமைகள் அதிகம் கிடையாது. சுலு என்ற பெண்ணுக்கு விண்வெளிக்கு ராக்கெட்டுகள் அனுப்புவதை பற்றி ஏதும் தெரியாது. அவள் சகுந்தலா தேவி அளவுக்கு புத்திசாலியும் கிடையாது. சினிமா என்பதை சூழல்களை பிரதிபலிக்கும் கண்ணாடி என்று பார்க்கலாம். சுலு வெறும் வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவி என்பதைத் தாண்டி வெளியே செல்லவேண்டும் என்பதை விருப்பமாக கொண்டவள். அவள் தனது குடும்பத்தையும், கனவையும் ஒன்றுபோலவே நினைக்கிறாள். அதனை சமநிலையாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறாள். நமது நாட்டில் தாரா ஷிண்டே, சகுந்தலாதேவி, சுலோச்சனா ஆகியோர் எங்கும் நிறைந